கோவை சுபா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோவை சுபா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  14220
புள்ளி:  1171

என்னைப் பற்றி...

சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனை பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ம் வருடம் "மாலை முரசு" பத்திரிக்கையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா

என் படைப்புகள்
கோவை சுபா செய்திகள்
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2023 5:38 am

உந்தன் உதடு உதிர்க்கும்
உவகையை உன்னருகில்
உள்ளோர் அறிவார்

உந்தன் உள்ளம்
சிந்தும் கண்ணீரை
உனையன்றி
யாரும் அறியார்...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2023 5:13 pm

விழித்தேன் கண்டு நானும் விழித்தேன்
குழைந்தேன் குலைந்தேன் வாழ்வினைத் தொலைத்தேன்
காமனனின் மலர் அம்பு துளைத்ததால்
பொல்லாத காதலில் நானும் விழுந்தேன்.

இதழ்தேன் சுவைத்திட அருகினில் அழைத்தேன்
மலைத்தேன் அது சுவை குன்றிட மலைத்தேன்
அலைந்தேன் கலைந்தேன் தேனுண்ட வண்டாய்
மருகினேன் உருகினேன் மடியினில் மயங்கினேன் .

புரண்டேன் புகைந்தேன் மார்பினில் புதைந்தேன்
அரண்டேன் அணைத்தேன் அழகினில் மிரண்டேன்
புகைத்தேன் தவித்தேன் உயிரினில் புதைத்தேன்
கலைத்தேன் களைந்தேன் உறவினில் களைத்தேன்...

எழுந்தேன் புகழ்ந்தேன் ஏங்கியே தவித்தேன்
தமிழில் எழுதி என்னிதய ஏட்டில் பதித்தேன்
காவியமாய் படைத்தேன் க

மேலும்

நன்றி கோவை சுபா அவர்களே... தங்களின் யூகம் சரிதான். கண்ணதாசனைபோல் எளிமையாய் எழுதிட ஒரு முயற்சிதான். அவர் இமயம். நான் எறும்பு. ஊக்கத்திற்கு நன்றி. 06-Sep-2023 9:19 pm
வணக்கம் ஜீவன் அவர்களே.. ரசித்தேன் சுவைத்தேன் நினைத்தேன் கண்ணதாசன் எழுதிய... பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன் என்னும் பாடலையை...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 06-Sep-2023 8:31 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2023 4:19 am

செப்டம்பர் 5ம் தேதி
"ஆசிரியர் தினம்" என்றவுடன்
எந்தன் உள்ளத்திலே
இனம் புரியாத மகிழ்ச்சி

இந்த ஆசிரியர் தின நன்னாளில்
எனக்கு கல்வி போதித்த
ஆசிரியர்களின்
இல்லத்திற்குச் சென்று
அவர்களை வணங்கி
வாழ்த்துக்களைப் பெறுவதில்
பெருமைக் கொள்கிறேன்

மனதிலே உற்சாக அலைகள்
ஆர்ப்பரித்து எழுச்சிக் கொண்டு
பள்ளி பருவத்தை நினைத்துப்
பார்த்து மகிழ்ச்சி கொள்ளுதே

இந்த உற்சாக வெள்ளத்தில்
நீச்சல் அடித்து மகிழ்வதற்கு
என்னுடன் பள்ளியில் படித்த தோழர்களும் இணைந்து
கொள்வது மேலும் சிறப்பாகும்

பள்ளிப் படிப்பை முடித்து,
அரை நூற்றாண்டு காலம்
கடந்துவிட்ட போதிலும்
எழுத்தறிவித்த ஆசான் முன்பு
மா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2023 5:07 am

விண்வெளியில்
நிலவின் ஒளியில்
பாரத தேசத்தின் குழந்தை
"பிரக்யான் ரோவர்"
மெல்ல மெல்ல
தவழ்ந்து விளையாடி
வித விதமாக
புகைப்படமெடுத்து
நிலவில் புதைந்திருக்கும்
ரகசியத்தை எல்லோருக்கும்
வெளிச்சம் போட்டு காட்டி வருது

இந்திய விண்வெளி
விஞ்ஞானிகளின் சாதனையை
உலகமே அண்ணாந்து பார்த்து
மூக்கின் மேல் விரல் வைத்து
வியந்து பாராட்டி வருது

பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம் என்ற
பாரதியின் பாடல்வரிகள்
பொய்யல்ல மெய்யே என்று
பாடி மகிழ்ச்சி கொள்வோம்..!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - துகிபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2023 5:41 pm

விழி ஓரம்
சில துளிகளில்
காதலை சொல்லியவள் !
வலிகளில் கண்ணீராய்
வாடி போனாள் !
-துகிபாண்டியன்

மேலும்

மிக்க நன்றி சுபா நண்பரே ! அருமையாக உள்ளது திருத்தம். அவனும் அவளும் பிரிவை ஏற்கவில்லை எனும் பொருளில் முடித்தேன் . 31-Aug-2023 10:34 am
வணக்கம் துகிபாண்டி அவர்களே... தங்களின் கவிதையை சற்று மாற்றி வாசித்தேன்.... விழி ஓரம் சில நொடிகளில் காதலை சொல்லியவள் பிரிவின் வலிகளில் கண்ணீரில் கரைந்துப் போனாள்....!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 31-Aug-2023 4:36 am
கோவை சுபா - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2023 6:34 am

தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !

நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !

இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !

கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !

தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,

பழனி குமார்

மேலும்

உங்கள் அன்பு என்னை மகிழ செய்தது. நன்றி . 05-Sep-2023 4:35 pm
தங்களுடைய ஆசியும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது . நன்றி 05-Sep-2023 4:33 pm
மிக்க நன்றி 05-Sep-2023 4:32 pm
நன்று 05-Sep-2023 4:17 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2023 4:33 am

நோயற்ற வாழ்வு வாழ்ந்திடவே
எல்லோரும் விரும்புகிறோம்
விருப்பங்கள் யாவும்
நம் எண்ணம் போல்
வாழ்வில் நிறைவேறுவதில்லை

அழையா விருந்தாளியாக
சில நோய்கள் நம்மிடம்
தஞ்சம் கேட்டு வந்து
திண்ணையில் உட்கார்ந்து
சென்று விடுகிறது

சில நோய்களோ
ஆயுட்காலம் முழுவதும்
வண்ண வண்ண
மாத்திரைகளை
உணவுக்கு முன்னும்
உணவுக்கு பின்னும்
சாப்பிட வேண்டுமென்று
மருத்துவர்கள் பரிந்துரைக்க
நம்மோடு ஆரவாரமின்றி
நோய்கள் அமைதியாக அனுமதியில்லாமல்
தங்கி கொள்கிறது.

மனிதனும் வேறு வழியின்றி
"அமைதி நோயாளி" யாக
காலம் முடியும்வரை
வாழ்கின்றான்....!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2023 10:14 am

அன்பே உன்னை ஆசையோடு
காண வரும் நேரத்தில்
"மௌனத்தில்" நீ நிற்க
நானும் ஏக்கம் கொண்டு
உன்னையே "மௌனமாக"
பார்த்து நிற்கிறேன்

"மௌன' மொழியில்
காதலை பேசி மகிழ்வது சுகமே
ஆனால்...இந்த சுகத்தை
புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்
நம்மைப் பார்த்து பைத்தியங்கள்
என்று கைகொட்டி சிரிக்கிறார்கள்

அன்பே "மௌனம்" போதுமே
"மௌனத்தை" கலைத்துவிட்டு
மனம் திறந்து பேசுவோம் வா...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்..!! 22-Aug-2023 9:40 am
மௌனம் அழகு பாராட்டுக்கள் 22-Aug-2023 8:54 am
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2020 11:03 pm

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

மேலும்

நண்பர் சாரலன் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. 12-Jul-2020 11:02 am
கணக்கு அருமை 100/100 மதிப்பெண் 11-Jul-2020 11:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே