கோவை சுபா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோவை சுபா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  15728
புள்ளி:  1292

என்னைப் பற்றி...

சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனைப் பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ஆம் வருடம் "மாலை முரசு" பத்திரிகையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா

என் படைப்புகள்
கோவை சுபா செய்திகள்
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2023 1:50 pm

அன்றும் சரி இன்றும் சரி
மழையே மழையே
வா வா வென்று
அன்பாகதான் உன்னை
அழைக்கின்றோம்

மண்ணில் நீ தங்கி மகிழ்ந்த
இடங்களில் நாங்களும்
அவ்வப்போது வந்து தங்கி
அன்று விளையாடி மகிழ்ந்தோம்
இன்று உன்னைக் காணாமல்
தவிக்கின்றோம்

யார் கண் உன் மீது பட்டதோ
தெரியவில்லை
நீ தங்கி மகிழ்ந்த இடத்தை
யாருக்கும் தெரியாமல் அழித்து
யானை தன் தலையில் தானே
மண்ணை வாரி போடுவது போல
மண்ணைப் போட்டு மறைத்தார்கள்

நாளாக நாளாக மண்ணைப்
போட்டு மறைந்த இடத்தை
பொன்னாக மாற்றுவதற்கு
ஆசைப்பட்ட ஏமாற்றுக்கார்கள்
வீட்டு மனைகளாக மாற்றி
ஊருக்கு இளைத்தவனைத்
தேடி தேடி விற்று மகிழ்ந்தார்கள்

மக்களும் தாங்கள் ஏமாந்து
வாங்கிய

மேலும்

கோவை சுபா - Kannan selvaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2023 2:54 pm

மேகமாக மாறி நானும்
மேலை நாட்டில் பறக்க ஆசை
மேற்கு தொடர்ச்சி மலையிலேறி
மெத்தை இன்றி உறங்க ஆசை

சிட்டுக்குருவி போலே நானும்
சிறகடித்துப் பறக்க ஆசை
சிந்து நதியினைப் போலே
இமயமலையில் பிறக்க ஆசை

அறுஞ்சுவையின் உணவளித்து
அம்மாவினைப் பேண ஆசை
ஆத்திச்சூடி சொல்லி தந்த
ஔவையாரைக் காண ஆசை

எல்லோரா குகைகளிலே
எனதோவியம் வரைய ஆசை
எட்டடியில் நிலவு செல்ல தூரம்
வானில் குறைய ஆசை

எடிசன் பல்பு கண்டறிந்த
நேரம் அருகில் இருக்க ஆசை
ஏகலைவனைப் போலே
ஏழு வித்தை கற்க ஆசை

நியூட்டன் கையில் கிடைத்த ஆப்பிள்
சுவையை நானும் ருசிக்க ஆசை
நியூடெல்லி கோட்டைச் சுவற்றில்
கொடியினை நான் ஏற்ற ஆசை

அட்சரேகை தீர்

மேலும்

நன்றி கவிஞர் அவர்களே தங்கள் கருத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கருத்து சொல்லும் விதம் அழகாக உள்ளது உத்வேகம் கொடுக்கிறது 10-Dec-2023 8:09 pm
வணக்கம் கண்ணன் செல்வராஜ் அவர்களே... தங்களின் "ஆசை" கவிதையை வாசித்து மகிழ்ந்தேன். தங்களின் நியாமான ஆசைகள் அனைத்தும் கிடைத்திட வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!! 10-Dec-2023 6:46 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2023 12:27 pm

உறக்கம் கலைந்து விழித்திடும்
பலருக்கும் பகலவன்
பார்வை சுகம் தந்திடுமே --ஆனால்
அமைதியாக உறங்கும்
"மூடுபனி "க்கோ அஃதே தொல்லை

அழகான நிலப்பரப்பின் மேல்
அமைதியாக உறங்கிடும்
"மூடுபனி " யின் மீது
பகலவன் பார்வைப்பட்டவுடன்
சூடுப்பட்ட குழந்தை
அழுவதுப் போல் அழுதுக்கொண்டே
"மூடுபனி " கலைந்திடுமே ...!!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2023 7:22 am

மன்றங்கள் மன்றாடியும்
மோதல்கள் தீராத
"காவேரி நீர்" பிரச்சனை

ஒவ்வொரு முறையும்
வான் மேகங்களின் மோதலில்
தீர்வு பெறுகின்றது ...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2023 7:31 am

புன்னகைக்குப் புத்தகம் எழுதினேன்
முன்னுரை எழுத உன்னிடம் தந்தேன்
புத்தகத்தை முத்தமிட்டு
நெஞ்சோடு அணைத்து திருப்பித் தந்தாய்
அந்த மௌன முன்னுரையை
நான் முன்னுரையில் எழுதினேன்

மேலும்

ஆஹா அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 26-Sep-2023 7:56 am
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... ஆஹா... தாங்கள் எழுதிய புத்தகத்திற்கு மிக எளிதில்... "முத்தான" முன்னுரை கிடைத்து விட்டதே....!! எனக்கு சற்று பொறாமையாக இருக்கு... ம்ம் வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 26-Sep-2023 7:47 am
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2023 5:32 am

பூந்தோட்டத்தில்
பூக்களின் அழகை
ரசிக்க வந்தேன்

பட்டாம்பூச்சிப் போல்
எங்கிருந்தோ
பறந்து வந்த நீ
எந்தன் கண்களுக்கு
விருந்து கொடுத்து
என் இதய தோட்டத்தில்
காதல் செடியை பதியம் போட்டு
பறந்து சென்று விட்டாய்

பதியம் போட்ட நாள் முதல்
காதல் செடியை வாடாமல்
பாதுகாத்து வருகிறேன்

காதல் ரோஜா மலர்வதற்கு
ராஜா நான் காத்து நிற்கிறேன்
பூத்து குலுங்குவதற்கு
காதல் ராணியே நீ விரைந்து வா.,.!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2023 9:00 pm

தேர் கொடுத்த மன்னனுக்கு
நன்றி நவின்ற முல்லை
சூடிட வந்த உன்னை
சிரித்து மகிழ்ந்து வரவேற்றது
போர் தொடுக்கிறாய் நீ
புன்னகை முலையால்

மேலும்

அருமை அருமை இலக்கிய நயமிக்க கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 12-Sep-2023 7:22 am
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... புன்னகையெனும் போர்வாள் தாக்கிட காயம் கொண்டவர்கள் காதல் களத்தில் வெற்றிக் கொடிப் பிடித்து வீர நடைப் போட்டார்கள்.....!! வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 12-Sep-2023 7:12 am
கோவை சுபா - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2023 5:13 pm

விழித்தேன் கண்டு நானும் விழித்தேன்
குழைந்தேன் குலைந்தேன் வாழ்வினைத் தொலைத்தேன்
காமனனின் மலர் அம்பு துளைத்ததால்
பொல்லாத காதலில் நானும் விழுந்தேன்.

இதழ்தேன் சுவைத்திட அருகினில் அழைத்தேன்
மலைத்தேன் அது சுவை குன்றிட மலைத்தேன்
அலைந்தேன் கலைந்தேன் தேனுண்ட வண்டாய்
மருகினேன் உருகினேன் மடியினில் மயங்கினேன் .

புரண்டேன் புகைந்தேன் மார்பினில் புதைந்தேன்
அரண்டேன் அணைத்தேன் அழகினில் மிரண்டேன்
புகைத்தேன் தவித்தேன் உயிரினில் புதைத்தேன்
கலைத்தேன் களைந்தேன் உறவினில் களைத்தேன்...

எழுந்தேன் புகழ்ந்தேன் ஏங்கியே தவித்தேன்
தமிழில் எழுதி என்னிதய ஏட்டில் பதித்தேன்
காவியமாய் படைத்தேன் க

மேலும்

நன்றி கோவை சுபா அவர்களே... தங்களின் யூகம் சரிதான். கண்ணதாசனைபோல் எளிமையாய் எழுதிட ஒரு முயற்சிதான். அவர் இமயம். நான் எறும்பு. ஊக்கத்திற்கு நன்றி. 06-Sep-2023 9:19 pm
வணக்கம் ஜீவன் அவர்களே.. ரசித்தேன் சுவைத்தேன் நினைத்தேன் கண்ணதாசன் எழுதிய... பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன் என்னும் பாடலையை...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 06-Sep-2023 8:31 pm
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2020 11:03 pm

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

மேலும்

நண்பர் சாரலன் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. 12-Jul-2020 11:02 am
கணக்கு அருமை 100/100 மதிப்பெண் 11-Jul-2020 11:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே