கோவை சுபா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோவை சுபா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  12079
புள்ளி:  1171

என்னைப் பற்றி...

சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனை பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ம் வருடம் "மாலை முரசு" பத்திரிக்கையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா

என் படைப்புகள்
கோவை சுபா செய்திகள்
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2023 5:34 am

என் தாய் திருநாட்டில்
மதுவின் போதையில்
ஓர் கூட்டம்
மதத்தின் போதையில்
ஓர் கூட்டம்

இடைப்பட்ட
மனிதர்களின் நிலையோ
போதையின்றி
தள்ளாடிய நிலையில்...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2023 5:28 am

ஆட்டுக்கு வாலை
அளந்து வைத்த இறைவன்
ஆடாத ஆட்டம் ஆடுவோரின்
தலையிலும் அவ்வப்போது
குட்டு வைத்து கொட்டத்தை
அடக்கிதான் வைக்கிறான்....!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2023 8:28 am

குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
ஔவை பாட்டியின் வாக்கு

"குடி" மக்கள் உயர உயர
அரசுக்கு வருமானம்
வளர்ச்சிப் பாதையில் நாடு
வீழ்ச்சிப் பாதையில்
"குடி" மகனின் வீடு.....!!

"குடி" பழக்கம்
குடும்பத்தை அழிக்கும்
அரசின் விளம்பரத்தை
"குடி" மக்கள் மதிப்பதில்லை...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2023 9:12 am

குறள் வெண்பா

நல்லக் கருத்தை நவிலாதே நண்பரே
பொல்லாங்கு சொல்லு முலகு

இந்தப் பொல்லாதபூவுலகில் உலகத்தில் நல்லதைச் சொன்னால்
பொல்லாப்பு செய்யும் தீயவர் கூட்டம்


....

மேலும்

கருத்திட்டமைக்கும் தங்களின் என்னத்திற்கும் நன்றி கோவை சுபா அவர்களே.... நன்றி 25-Jan-2023 11:32 am
வணக்கம் பழனி ராஜன் அவர்களே... தங்கள் கவியின் கருத்து முற்றிலும் உண்மையே... பால் பருகிய பாம்பும் நஞ்சைதானே தரும்...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 25-Jan-2023 10:25 am
கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2023 6:28 pm

இடைத் தேர்தல் வந்தால்
யார் செயிப்பார் என்று
சோதிடம் சொல்வான் செய்தியாளன்
இடை அசைவிற்கு தேர்தல் வந்தால்
இவளைத் தவிர யார் வெல்வார் ?

மேலும்

ஆஹா என்ன தியாக உள்ளம் பாராட்டுக்கள் 24-Jan-2023 9:26 pm
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... என் வாக்கு... என் உரிமை... வெகுமதி எதுவும் தேவையில்லை... அதுபோல் பதவியும்... பட்டமும் எனக்கு வேண்டாம்.. ஜனநாயகம் வென்றிட வாழ்த்துக்கள்...!! 24-Jan-2023 8:17 pm
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 500 ஆயிரம் எல்லாம் தரமுடியாது இவள் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை சுபாவைத் தான் நடைப் பயண தலைவராக நியமித்திருக்கிறேன் . உடன் நடைப் பயயனம் செய்ய மார்கெட்டுள்ள ஒரு நடிகையை நீங்களே நியமித்தக் கொள்ளுங்கள் . Be careful H T !!! 24-Jan-2023 7:15 pm
வணக்கம் கவிஞர் கவின் சாரலன் அவர்களே.... "இடை" த்தேர்தல் வந்தால்.... எனது வாக்கு தப்பாமல், தங்களின் கவிதை நாயகிக்கு தான்... வெற்றியும் நிச்சயம்..!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 24-Jan-2023 6:49 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2023 6:53 am

நினைப்பது நடப்பதில்லை
நடந்தவை நிலைப்பதில்லை
மழைத்துளியில் தோன்றும்
நீர்க்குமிழி போல் தான்
வாழ்க்கை என்பதை
மனம் உணர்வதில்லை....!!
எதிர் நீச்சல் போடவே
மனித மனம் துடிக்குது...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2023 5:18 pm

நீக்கமற நிறைந்த
அவள் நினைவுகள்
இயல்பாய் யென்
இதயத் துடிப்பில்
இனிமை கூட்ட
இதமாய் இமை மூடி
இளைப்பாறினேன்
சிறையில்.....

மேலும்

வணக்கம் கவிபாரதீ அவர்களே... தங்களின் கவியில் கடைசி வரி "அவளின் மனச்சிறையில்" என்று அமைந்திட வாசிப்பின் "சுகம்" கூடும். வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்...!! 19-Jan-2023 5:55 am
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2023 3:32 pm

"பொங்கலோ பொங்கல்" என்று
"பொங்கல்" பண்டிகையை இன்று பலரும் "அடுக்கு மாடியில்" தான்
கொண்டாடுகின்றோம்
இது காலத்தின் கட்டாயம்....!!

ஆனால்....
கிராமத்தில் கொண்டாடிய
"பொங்கல் நினைவுகள்"
மனதிலே பொங்கி வருவதை
தடை போட முடியாமல்
தவிக்கும் தவிப்பு இருக்கே....ம்ம்
என்னவென்று சொல்வது

"பொங்கல்" என்றவுடன் கிராமத்து
"பொங்கல்" நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
அலையென வீசியது

கிராமத்து வீதியெங்கும்
கிராமத்து பெண்கள்
ஒற்றுமையுடன் ஒன்றுக்கூடி
சாணம் தெளித்து
வண்ண கோலம் போட்டு
மாவிலை தோரணம் கட்டி
புதுபானையை அலங்கரித்து
அதிலே புத்தரிசியிட்டு
அடுப்பின் இரு பக்கங்களிலும்
காவல் தெய்வம் ப

மேலும்

வணக்கம் பாளை பாண்டி அவர்களே.... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!! வாழ்க நலமுடன்...!! 14-Jan-2023 10:24 pm
அருமையான கிராமிய மணம் மணக்கும் நிகழ்வுகளை கண்முன் நிறுத்தியமைக்கு நன்றி ஐயா 14-Jan-2023 10:08 pm
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2020 11:03 pm

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

மேலும்

நண்பர் சாரலன் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. 12-Jul-2020 11:02 am
கணக்கு அருமை 100/100 மதிப்பெண் 11-Jul-2020 11:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே