கோவை சுபா - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கோவை சுபா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 28-Apr-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 12079 |
புள்ளி | : 1171 |
சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனை பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ம் வருடம் "மாலை முரசு" பத்திரிக்கையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா
என் தாய் திருநாட்டில்
மதுவின் போதையில்
ஓர் கூட்டம்
மதத்தின் போதையில்
ஓர் கூட்டம்
இடைப்பட்ட
மனிதர்களின் நிலையோ
போதையின்றி
தள்ளாடிய நிலையில்...!!
--கோவை சுபா
ஆட்டுக்கு வாலை
அளந்து வைத்த இறைவன்
ஆடாத ஆட்டம் ஆடுவோரின்
தலையிலும் அவ்வப்போது
குட்டு வைத்து கொட்டத்தை
அடக்கிதான் வைக்கிறான்....!!
--கோவை சுபா
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
ஔவை பாட்டியின் வாக்கு
"குடி" மக்கள் உயர உயர
அரசுக்கு வருமானம்
வளர்ச்சிப் பாதையில் நாடு
வீழ்ச்சிப் பாதையில்
"குடி" மகனின் வீடு.....!!
"குடி" பழக்கம்
குடும்பத்தை அழிக்கும்
அரசின் விளம்பரத்தை
"குடி" மக்கள் மதிப்பதில்லை...!!
--கோவை சுபா
குறள் வெண்பா
நல்லக் கருத்தை நவிலாதே நண்பரே
பொல்லாங்கு சொல்லு முலகு
இந்தப் பொல்லாதபூவுலகில் உலகத்தில் நல்லதைச் சொன்னால்
பொல்லாப்பு செய்யும் தீயவர் கூட்டம்
....
இடைத் தேர்தல் வந்தால்
யார் செயிப்பார் என்று
சோதிடம் சொல்வான் செய்தியாளன்
இடை அசைவிற்கு தேர்தல் வந்தால்
இவளைத் தவிர யார் வெல்வார் ?
நினைப்பது நடப்பதில்லை
நடந்தவை நிலைப்பதில்லை
மழைத்துளியில் தோன்றும்
நீர்க்குமிழி போல் தான்
வாழ்க்கை என்பதை
மனம் உணர்வதில்லை....!!
எதிர் நீச்சல் போடவே
மனித மனம் துடிக்குது...!!
--கோவை சுபா
நீக்கமற நிறைந்த
அவள் நினைவுகள்
இயல்பாய் யென்
இதயத் துடிப்பில்
இனிமை கூட்ட
இதமாய் இமை மூடி
இளைப்பாறினேன்
சிறையில்.....
"பொங்கலோ பொங்கல்" என்று
"பொங்கல்" பண்டிகையை இன்று பலரும் "அடுக்கு மாடியில்" தான்
கொண்டாடுகின்றோம்
இது காலத்தின் கட்டாயம்....!!
ஆனால்....
கிராமத்தில் கொண்டாடிய
"பொங்கல் நினைவுகள்"
மனதிலே பொங்கி வருவதை
தடை போட முடியாமல்
தவிக்கும் தவிப்பு இருக்கே....ம்ம்
என்னவென்று சொல்வது
"பொங்கல்" என்றவுடன் கிராமத்து
"பொங்கல்" நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
அலையென வீசியது
கிராமத்து வீதியெங்கும்
கிராமத்து பெண்கள்
ஒற்றுமையுடன் ஒன்றுக்கூடி
சாணம் தெளித்து
வண்ண கோலம் போட்டு
மாவிலை தோரணம் கட்டி
புதுபானையை அலங்கரித்து
அதிலே புத்தரிசியிட்டு
அடுப்பின் இரு பக்கங்களிலும்
காவல் தெய்வம் ப
ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !
ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா