கோவை சுபா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோவை சுபா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  19673
புள்ளி:  1340

என்னைப் பற்றி...

சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனைப் பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ஆம் வருடம் "மாலை முரசு" பத்திரிகையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா

என் படைப்புகள்
கோவை சுபா செய்திகள்
கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2025 11:17 am

மின்னிடும் மேனியில் மின்னல் ஒளிக்கீற்று
மின்னும் விழிகளில் மீனினம் துள்ளுது
கன்னங் கருங்குழலில் கெட்டிமல்லிப் பூச்சரம்
கன்னங்கள் செம்மங் கனி

மேலும்

மனமுவந்து சொன்ன கருத்தில் பாராட்டில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 16-Sep-2025 9:44 pm
கவிஞர் கவின் அவர்களே வணக்கம். ஆஹா மிகவும் அருமையான வர்ணனை. செந்தமிழ் சொற்களில் கரும்பின் சுவை இருப்பது நிஜமே. வாழ்த்துகள் . வாழ்க நலமுடன். 16-Sep-2025 8:06 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2025 4:09 am

அடுத்தவரை ஏமாற்றி
நீ பெறுகின்ற வெற்றி
உன் மனதை உறுத்தும்
அதே சமயம் நீ போராடி
அடைகின்ற தோல்வியால்
உன் மனதில் வருத்தமிருக்கும்
நிச்சயம் உறுத்தல் இருக்காது ...
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2025 1:56 pm

ஒன்று சேர்ந்த
அன்பு உள்ளத்தில்
காதல் நதி
சீராகப் பாயும் வரை
சோலைவனமாக
செழிப்பாக வளரும்

பாதை மாறி பயணம் செய்யும் போது
உணர்வுகளின் வெளிப்பாட்டில்
உஷ்ணங்கள் தோன்றும் போது
உள்ளத்தில் காதல் நதி வற்றிப்போய்
பாலைவனமாக காட்சி தரும் ...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2025 8:04 am

கண்ணாடி முன் நின்றேன்
கற்பனை பிம்பங்களை காண்பதற்கு
எவ்வளவு முயற்சித்தும்
காண இயலவில்லை
கண்மூடி அமர்ந்து சிந்தித்தேன்

மனமெனும் கண்ணாடியில்
மாயா ஜாலம் போல்
பிம்பங்களின் நடமாட்டம்
தெளிவாகத் தெரிந்தது
நாலும் தெரிந்தவர்கள்
சிந்தனையை தான்
"ஞானம்" என்கின்றார்களோ?
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2025 9:13 am

விம்மி வெடித்து
சிந்திய கண்ணீரில்
மனித மனதின்
துன்பங்கள் யாவும்
கரைந்தது ....
- - கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2025 7:21 pm

தேநீர்நற் கோப்பையில் தென்றல் தவழ்ந்திட
தேனித ழைப்பதித்து தேநீர் பருகிடும்நீ
மானின் விழியினால் மௌனமாய் பார்த்தபோது
தேனோடை பாயுதுநெஞ் சில்

மேலும்

ரசித்துப் படித்து படத்தையும் கவிதையையும் பாராட்டிச் சொன்ன கருத்தில் மிக்க மகிழ்ச்சி மனமுவந்த நன்றி கவிப்பிரிய கோவை சுபா 25-Aug-2025 10:32 am
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே வண்ண மயில் கையில் தேநீர் கோப்பை எதை ரசிப்பது? எதை ருசிப்பது ? அருமை. வாழ்த்துகள் . வாழ்க நலமுடன்..!! 24-Aug-2025 7:02 am
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2024 6:51 am

புல்லாங்குழல் எல்லோர்
கையில் இருந்தாலும்
எல்லோரும்
கலைஞனாக இயலாது

வாசிக்க தெரிந்தவனே
கலைஞன்
மற்றோரெல்லாம்
ரசிகர்களே....!!
--கோவை சுபா

மேலும்

கவிஞர் கவின் அவர்களே வணக்கம். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. .வாழ்க நலமுடன்...!! 14-Oct-2024 2:00 pm
உண்மை 14-Oct-2024 10:22 am
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2020 11:03 pm

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

மேலும்

நண்பர் சாரலன் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. 12-Jul-2020 11:02 am
கணக்கு அருமை 100/100 மதிப்பெண் 11-Jul-2020 11:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே