கோவை சுபா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோவை சுபா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2020
பார்த்தவர்கள்:  18932
புள்ளி:  1332

என்னைப் பற்றி...

சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனைப் பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ஆம் வருடம் "மாலை முரசு" பத்திரிகையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா

என் படைப்புகள்
கோவை சுபா செய்திகள்
கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2025 1:44 pm

தன்னை வெட்டி சாய்க்கும்
மனிதர்கள் மீது
மரங்கள்
கோவம் கொண்டு
சூறாவளியெனும்
தீயையை மூட்டி
*உடன்கட்டை*
ஏறிக்கொள்கிறதோ?
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2025 7:55 am

அன்று பாரதி
பொங்கி எழுந்தான்
பெண்களின் விடுதலைக்கு
பாடினான் பாக்கள் ஆயிரம்
அவன் கண்ட கனவு
நிஜமாகிவிட்டது
பாராளும் பெண்களின்
பெருமைகளை
கண்டு மகிழ்ந்திட
இன்று அவனில்லை
இந்நாளில் அவனை
நினைந்து மகிழ்வோம்

பெண்கள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துகள் 🌹🌹
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2025 6:06 am

மாதராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திடல் வேண்டும்
என்றார் கவிமணி.

பெண்களின் விடுதலைக்கு
பாரதி கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாகி கொண்டே இருக்கு
இப்பூவுலகில்

வீட்டுக்கும் நாட்டுக்கும்
பெண்களே இரு கண்கள்
பெண்களை வணங்கி
பெருமைக் கொள்வோம்
வாழ்க பெண்கள் சமுதாயம்...!!
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2024 10:33 pm

வண்ண வண்ண கோலங்களில்
வாழ்த்து செய்திகள்
குவிந்த வண்ணம் குதூகலத்துடன்
*புத்தாண்டு 2025* பிறந்து விட்டது.

இந்த இனிய புத்தாண்டில்
நல்ல எண்ணங்கள் யாவும்
நம் மனதிலே நன்கு உதித்து
நல்ல தீர்மானங்களை எடுப்பதோடு
நின்றுவிடாமல் அதனை
நல்ல முறையில் செயல்படுத்தி
நானிலம் சிறந்து விளங்கிட
நல்ல பாதையில்
பயணம் செய்வோம்.

எல்லோருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துகள்..🌹🌹
--கோவை சுபா

மேலும்

கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2024 6:51 am

புல்லாங்குழல் எல்லோர்
கையில் இருந்தாலும்
எல்லோரும்
கலைஞனாக இயலாது

வாசிக்க தெரிந்தவனே
கலைஞன்
மற்றோரெல்லாம்
ரசிகர்களே....!!
--கோவை சுபா

மேலும்

கவிஞர் கவின் அவர்களே வணக்கம். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. .வாழ்க நலமுடன்...!! 14-Oct-2024 2:00 pm
உண்மை 14-Oct-2024 10:22 am
கோவை சுபா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2024 10:22 am

தென்கடல் முத்தெழுதும் செவ்விதழ்ப் பாடலோநீ
மின்னல் விழியினில் மேனகையும் தோற்றிடுவாள்
புன்னகை பூத்துக் குலுங்கும்பூந் தோட்டமே
தென்றல் தவழும்பூங் கூந்தலாட வந்தென்முன்
நின்றாயோர் தேவதையாய் நீ

மேலும்

அப்படியும் பாட்டிருக்கிறதா கேட்டுப் பார்க்கிறேன் ரசித்துப் படித்து ஒப்பிட்டு எழுதிய அழகிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 10-Aug-2024 8:06 am
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே தங்களின் கவிதையை வாசித்தேன். தேவதையை கண்டேன் காதலில் வீழ்ந்தேன்.... என்ற பாடல்வரிகள் எந்தன் மனதுக்குள் ரீங்காரமிட்டது. வாழ்த்துகள்... வாழ்க நலமுடன்....!! 10-Aug-2024 5:59 am
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2024 7:32 am

மனிதர்கள் ரசித்து மகிழ்ந்திட
இயற்கைச் செல்வத்தை
வஞ்சனை இல்லாமல்
பூமிக்கு அள்ளிக் கொடுத்து
அழகு பார்க்கும் இறைவன்

அழகினை ரசித்து மகிழும்போது
அவனே இயற்கை சீற்றம் என்னும் அரக்கனைப் படைத்து
பேரழிவை தந்து அழித்திடும்போது
ரசித்து மகிழ்ந்த அப்பாவி மக்களையும், உயிரினத்தையும் தண்டித்து உடன் அழைத்து செல்லுவது நியாயமா??

நெஞ்சத்தை அடைக்கும்
துன்பத்தை காணும் போது
இறைவன் இருக்கின்றானா??
என்ற எண்ணம் மனித மனங்களில்
தோன்றுவது நியாயமே....!!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் திரு ஆரோ அவர்களே.. தங்களின் கருத்தும் மிகவும் சரியே. இருந்தாலும் மனம் வலிக்குது. வாழ்த்துகள்.. வாழ்க நலமுடன்..!!😘 03-Aug-2024 10:27 pm
உங்களின் ஆதங்கம் புரிகிறது இருந்தாலும் சக்கையின் உள்ளே தானே சுவையான சாறு இருக்கிறது சக்கை வேண்டாம் என்று சொன்னால் சாறு எங்கே இருக்கும் இறைவனின் படைப்பில் இது வருத்தம் தரும் நிகழ்வாக இருந்தாலும் இயற்கையின் வலிமையை இது போன்ற நிகழ்வுகளை நமக்கு உணர்த்தும் 03-Aug-2024 8:52 pm
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2024 7:37 am

பள்ளிப் பருவத்தில்
பலமுறை கஷ்டப்பட்டு
மனப்பாடம் செய்து
நினைவில் கொண்ட
"காந்த சக்தி" சூத்திரம்

வாலிபப் பருவத்தில்
என் இனியவளே
உன்னைத் தழுவும்போது
மிகவும் எளிதாக
நினைவுக்கு வந்தது...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் திரு ஆரோ அவர்களே... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. வாழ்த்துகள்... வாழ்க நலமுடன்...!! 03-Aug-2024 10:17 pm
சொல்லும் பொழுது நன்றாக இருக்கிறது இன்னும் சற்று நீட்டி எழுதினால் நன்றாக இருக்கும் படைப்பிற்கு வாழ்த்துகள் 03-Aug-2024 8:59 pm
கோவை சுபா - கோவை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2020 11:03 pm

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

மேலும்

நண்பர் சாரலன் அவர்களுக்கு வணக்கம். தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. 12-Jul-2020 11:02 am
கணக்கு அருமை 100/100 மதிப்பெண் 11-Jul-2020 11:05 am
மேலும்...
கருத்துகள்

மேலே