கோவை சுபா - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : கோவை சுபா |
| இடம் | : கோவை |
| பிறந்த தேதி | : 28-Apr-1953 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
| பார்த்தவர்கள் | : 20162 |
| புள்ளி | : 1358 |
சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் என்ற எனது இயற்பெயரை "சுபா" என்றுதான் என்னுடய தமிழ் ஆசான் மறைந்த திரு.சர்வோத்தமன் அவர்கள் என்னை அழைப்பார். அவரது நினைவாக எனது பெயரை, எனது ஊரான கோவை மாவட்டத்துடன் இணைத்து "கோவை சுபா" என்று புனைப் பெயராக வைத்து கொண்டேன்.
நான் 1970--ம் வருடத்தில் இருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய "மனம் மறப்பது இல்லை" என்ற சிறுகதை 28.04.1973- ஆம் வருடம் "மாலை முரசு" பத்திரிகையில் வெளிவந்தது..அன்று தான் எனது 20 வது பிறந்தநாள். அதன் பிறகு பல கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன்.
தொலைபேசி துறையில் (BSNL) 1976-ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அந்த துறையின் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டம் கொண்டேன். எனவே எழுத்து உலகில் இருந்து சற்று விலகி இருந்தேன். 2010-ம் வருடம் ஓய்வு பெற்றேன். தற்போதும் BSNL Pensioners Assn. செயலாளராக இன்று வரை என்னால் முடிந்த உதவிகளை, எனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இந்த "கொரோனா" ஊரடங்கில், உறங்கி கிடந்த என் இலக்கிய ஆர்வத்தை துயில் எழ செய்து, பல கிறுக்கல்களை கவிதையாக படைத்து வருகிறேன் உங்கள் வரவேற்புடன்.
நன்றி...வாழ்க நலமுடன்.
--கோவை சுபா
நல்லதை மட்டும் நெஞ்சில் நிறுத்தி
கசப்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு
2025 ஆம் ஆண்டிற்கு
பிரியா விடை கொடுப்போம்.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்னும் எண்ணம் கொண்டு
மனதிலே வண்ண கோலமிட்டு
உற்சாகம் பொங்கிட
மேளதாளம் கொட்டி
2026 புத்தாண்டை
சிவப்பு கம்பளம் விரித்து
சிறப்பாக வரவேற்போம்.
அனைவருக்கும் அன்பான
புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
--கோவை சுபா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
--,இது கண்ணதாசன் பாடல் வரிகள்
படம் மன்னாதி மன்னன் (1960)
மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
--- இது வாலியின் பாடல் வரிகள்
படம் என் கடமை (1964)
ஆம்...
இருவரும் சொன்னது உண்மையே
எம்ஜிஆர் என்னும் மூன்றெழுத்து
விண்ணும் மண்ணும் இருக்கும் வரை
வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
-- கோவை சுபா
காதல் தோல்வியின்
காயத்தால்
மனம் வருந்தி
சிந்திய கண்ணீர்
காதல் கடலில்
பெருங்காயம் போல்
கரைந்தது....!!
-- கோவை சுபா
இன்றையக் குழந்தை நாளையச் சிறுவன்
நாளையச் சிறுவன் மறுநாளைய இளைஞன்
மறுநாளைய இளைஞன் ஓர்நாள் கிழவன் !
முதியவன் ஓர்நாள்
மாசிலா மணிக்கதவம் தாள்திறக்கும்
முதியோர் இல்லலத்தில் மாண்புமிகு உறுப்பினன் !
கோவை முதியோர்களின் உதகை !!!
A home away from home
Retirees joyful Resort
Delicious food delighting Taste
Spiritual Hut for peace and Rest
Old soul's Gentle Walking Space !
பிராந்தி கடையில்
தள்ளாடும்
குடிமகன் கையில்
காந்தி படம் போட்ட
ரூபாய் நோட்டும்
தள்ளாடுதே....
-- கோவை சுபா
எழுத்து.காம் வலைத்தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் கோவை சுபாவின் இனிய வணக்கம்.
நான் எனது கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு 02.07.2020 அன்று இந்த வலைத்தளத்தில் இணைந்தேன். இன்றுவரை (14.11.2025) 1146 கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எனது கவிதைகளை 20000 பேர் பார்த்துள்ளார்கள் . நூற்றுக்கும் மேற்பட்வர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
எனக்கு ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்ய விரும்பும் கோவை சுபா.
கண்ணில் கவிஞன்
------எழுதும் காதல்
கண்ணின் அசைவில்
-------கயலின் துள்ளல்
பின்னல் கருமையில்
------பிங்க்நிற ரோஜா
புன்னகை நீஎழுதும்
----ஓவியம் செவிதாழ்த்திரையில்
#கவிதை வருமா…? எப்போதெல்லாம்..?
நிலம் நோக்கா நீள் விழியாள்
கணம் நோக்கும் பார்வையிலே
உளம் புகுந்த நொடி தன்னில் - விரல்
பிடித்து வரும் கவிதையடி..!
அழும் மழலை அடக்கிடவே
சேர்த்தணைக்கும் வேளையிலும்
தூளியிலே ஆட்டுகையில்
துள்ளலுடன் தாலினிலே
ஆடிவரும் கவிதையடி..!
ஆண்டவனின் அருள் கோலம்
ஆலயத்தில் கண்டுவிட்டால்
வேண்டுதலை வழி மறித்து - மெய்
சிலிர்க்க வரும் கவிதையடி..!
ஏமாற்றம் துரோகமெல்லாம்
சூழ வரும் வேளையிலே
மையம் கொண்ட புயலைப்போல்
சுழன்று வரும் கவிதையடி..!
நீண்ட வானம் நிலவு காண
கண்சிமிட்டும் மீன்கள் காண
சிந்தையிலே சந்தம் கூட்டி -தாள்
பந்தியிலே படையலிடும் கவிதையடி..!
ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !
ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா