கோவை சுபா- கருத்துகள்

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே...
மனம் விரும்பும் நங்கை
அருகினில் இருந்தால்
ஆனந்த வெள்ளம் நெஞ்சினில்
பெருகிடதானே செய்யும்...!!
வாழ்த்துகள்...!! வாழ்க நலமுடன்...!!!

வணக்கம் ஜீவன் அவர்களே...நலம் தானே?
ஒரு டாக்டரிடம் கேட்கும் கேள்வியா? என்று எண்ண வேண்டாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் கவிதையை வாசித்தேன்.
மேடு பள்ளங்கள் இருந்தால்tதான் பயணம் சுகமாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்தில் சமரசமாக வாழலாம்.
ஆனால்.. உப்பு காரமில்லா ஊறுகாய் போல் இருக்கும்.
இரத்தம் கசியாமல் அறுவை சிகிச்சை சாத்தியமா?

வாழ்த்துகள்... வாழ்க நலமுடன்..!!

வணக்கம் கவிஞர் பழனி ராஜன் அவர்களே.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.🌹🌹
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்... 🌹🌹

வணக்கம் கண்ணன் செல்வராஜ் அவர்களே...
தங்களின் "ஆசை" கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.
தங்களின் நியாமான ஆசைகள் அனைத்தும் கிடைத்திட வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!!

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே...
ஆஹா... தாங்கள் எழுதிய புத்தகத்திற்கு மிக எளிதில்... "முத்தான" முன்னுரை கிடைத்து விட்டதே....!! எனக்கு சற்று பொறாமையாக இருக்கு... ம்ம்

வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே...
புன்னகையெனும்
போர்வாள் தாக்கிட
காயம் கொண்டவர்கள்
காதல் களத்தில்
வெற்றிக் கொடிப் பிடித்து
வீர நடைப் போட்டார்கள்.....!!
வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!!

வணக்கம் ஜீவன் அவர்களே..
ரசித்தேன்
சுவைத்தேன்
நினைத்தேன் கண்ணதாசன் எழுதிய...
பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன் என்னும் பாடலையை...!!
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் துகிபாண்டி அவர்களே...
தங்களின் கவிதையை சற்று மாற்றி வாசித்தேன்....

விழி ஓரம்
சில நொடிகளில்
காதலை சொல்லியவள்
பிரிவின் வலிகளில்
கண்ணீரில்
கரைந்துப் போனாள்....!!

வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் கவிஞர் பழனி குமார் அவர்களே....
உங்கள் பயணம் தடையின்றி தொடரும்... கவலை வேண்டாம்...!!
வாழ்வீர் நலமுடன் பல்லாண்டு.. வாழ்த்துக்கள்.. 🌹🌹

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்..!!

வணக்கம் கவிஞர் கன்னியப்பன் அவர்களே.....
உங்களின் எண்ணங்கள் மெய்பட வேண்டும். அதன் பிறகு இன்ப உலகத்தில் எல்லோரும் பவனி வர வேண்டும்... நானும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் கவிஞர் பழனி ராஜன் அவர்களே
தங்களின் பாட்டுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...!
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்....!!

வணக்கம் கவிஞர் பழனி ராஜன் அவர்களே.
சற்று நேரத்திற்கு முன்புதான், தங்களிடமிருந்து பாராட்டுப் பெற்று, பல நாட்கள் ஆகிவிட்டதே என்று நினைத்தேன்.
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் மெய்யன் நடராஜ் அவர்களே..
கள்ளத்தனத்தை கண்டுபிடித்து, மிகவும் அருமையாக கவிக் கூண்டில் ஏற்றி விட்டீர்கள்...!!
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் திரு பழனி ராஜன் அவர்களே...
தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்....!!

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே....
தங்களின் கவிதையில் கடைசி வரிகளை வாசிக்கும் போது என் எண்ணத்தில் உதித்த வரிகள்....

"கவிதையில் என்னியத்தை
உன்னியத்தில் காண்பேன்...."

என்று சற்று மாற்றி வாசித்தேன்... வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் கவிஞர் பழனி குமார் அவர்களே...
மனிதர்களின் வாழ்க்கை "நீர்க்குமுழி"தான்....
ஆனால் வாழும் போது கிடைக்கும் அனுபவங்கள் பொக்கிஷங்கள் என்பது நிதர்சனம்....!!
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் இதயம் விஜய் அவர்களே...
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்....!!

வணக்கம் இதயம் விஜய் அவர்களே...
தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும்
மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!

வணக்கம் கௌசல்யா சேகர் அவர்களே
தங்களின் கவி வரிகள் முற்றிலும் உண்மையே.
காதலையும்... அன்பையும் யாராலும் அளவிட இயலாது. ஆனால் அதே சமயம் போதையை எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!!


கோவை சுபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே