கீத்ஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்து குழுமம்
இயற்பெயர்:  கீத்ஸ்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  26-Sep-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Dec-2009
பார்த்தவர்கள்:  19227
புள்ளி:  1013

என்னைப் பற்றி...

பிசினஸ் அனலிஸ்ட்
Hiox Softwares Pvt Ltd

என் படைப்புகள்
கீத்ஸ் செய்திகள்
கீத்ஸ் - ஜான் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2018 9:23 am

சரியாக செயல்படாத அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும், தேவைப்பட்டால் அரசை கலைக்கவும் மக்களுக்கு அதிகாரம் அல்லது உரிமை வழங்கப்பட வேண்டும்..

மேலும்

கீத்ஸ் - umababuji அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 7:55 pm

அரசு பள்ளிகளை மக்கள் ஒதுக்குவதால்தான் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது .அதனால் இதற்கு ஒரே வழி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் .பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும் .ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் .

மேலும்

சரியான மனு ..உண்மையில் இது சாத்தியம் என்றால் அரசு பள்ளிகளுக்கு வீழ்ச்சி இல்லை ... 03-Jul-2019 2:52 pm
அருமையான நல்ல சிந்தனை வரவேற்கிறேன் ,வாழ்த்துக்கள் 06-Jul-2018 10:55 pm
இது சரியான மனு. அரசுப் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களுக்கே அரசு பணிகள் அனைத்தையும் வழங்கவேண்டும். 06-Jul-2018 10:10 pm
கீத்ஸ் - umababuji அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 6:32 pm

எங்கே போகிறது நம் நாகரீகம் .நெற்றி நிறைய குங்குமம் ,காலில் கொலுசு ,மூக்குத்தி ,கை நிறைய வளையல் என இருந்த நாம் இன்று நாகரீகம் என்ற பெயரில் தலை விரி கோலமாய் ,பூ இல்லாமல் ,பொட்டு இல்லாமல் ,அரை குறை ஆடைகளுடன் பலர் பார்க்க செல்வது என்ன நாகரீகம் .படிப்பில் பின் தங்கி இருந்தாலும் ,நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது என்ன நியாயம் .இனியாவது நம் அறிவிற்கு மதிப்பு கொடுப்போம் .அழகிற்கு அல்ல .

மேலும்

ஆண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை .ஏனென்றால் இன்று பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகள் இந்த மனித சமுதாயம் காணாதது .சிறு பெண் குழந்தைகளும் இன்று பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைமை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாதது .நாகரீகம் என்பது உடுத்தும் உடையில் இல்லை என்னும் எண்ணத்தில்தான் என்பதை ஏன் நாம் உணர மறுக்கிறோம் .மேலை நாட்டினரை போல் உடை உடுத்துவது அவர்களுடைய கலாச்சாரத்துக்கு உகந்தது .ஆனால் நம் கலாச்சரத்துக்கு உகந்தது அல்ல .இதை சொல்வதால் நான் பிற்போக்கான எண்ணம் கொண்டவள் இல்லை என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் .பெண் என்பவள் இன்று ஒரு அலங்கார பாவை ஆக மட்டுமே பார்க்க படும் நிலைக்கு நாமும் ஒரு காரணம் .ஏன் ஒரு ஜான்சிராணியாய்,சரோஜினி கவிக்குயில் போல் மாற நாம் நம் எண்ணத்தில் எழுச்சியை கொண்டுவர முயற்சி செய்வதில்லை .இதை நாம் செய்து விட்டு பிறகு நாம் பேசலாம் .நன்றி சகோதரியே ! 18-May-2018 8:23 pm
நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது வெகு குறைவே. பெரும்பாலானோர் அனைவரையும் ஒரே மாதரி தான் அணுகுகிறார்கள். நாகரிகம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இதை செய்யமாட்டார்கள். 17-May-2018 10:15 am
நாகரிகம் என்பது ஒருவர் பார்க்கும் கண்களில் உள்ளது. தோன்றும் எண்ணங்களில் உள்ளது. ஏன் நாகரிகம் என்பது பெண்கள் சார்ந்ததா? அது மனிதனை சார்ந்தது. இந்த கால ஆண்கள் கூடத்தான் கமல் அணிகிறார்கள், அரைகுறை ஆடை அணிகிறார்கள், உள்ளாடை தெரியும் படி ஜீன்ஸ் போட்டால் தான் பேஷன் ஆம்? அன்றெல்லாம் பெண்கள் முன் ஆண்கள் மேலாடை இல்லாமல் வர தயங்குவார்கள் அனால் இன்று... 17-May-2018 10:13 am
கீத்ஸ் - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2017 7:52 am

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
துன்முகி ஓடுது
ஹேவிளம்பி வருகுது
ஓஹோன்னு வாழ்க்கை
மாறப்போகுது
பஞ்சம் மறையுது
வஞ்சம் தீருது
மாரி பொழியுது வளத்தை
வாரி கொடுக்க போகுது
மகிழ்ச்சி நுழையுது
மலர்ச்சி வரப்போகுது
ஜக்கம்மா சொல்றா
சத்தியமா சொல்றா

மேலும்

அருமை 11-Apr-2018 3:26 pm
கீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Apr-2018 10:59 am

உங்களில் எத்தனை பேர் தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்களை கலந்து கொண்டு நமது உரிமைக்காக போராடுறீங்க? என்ன மாதிரி போராட்டம்? இல்ல உங்க வேலைய மட்டும் பார்க்குறீங்களா?

மேலும்

அப்படினா தமிழ்நாட்டுல அது கூட நடக்குதா போராட்டமெல்லாம் ... 12-Apr-2018 10:59 am
கீத்ஸ் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
11-Apr-2018 10:55 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு?

மேலும்

சரியான ஒன்று 19-Apr-2018 6:05 pm
விளையாட்டை அரசியல் ஆக்கக்கூடாது சரிதான். விளையாட்டு அவசியம் தான் அனால் இங்கு உணவிற்கும் நீருக்குமே பிரச்சனை.அத்யாவசியத்திற்கே பிரச்சனை என்னும்பொழுது அவசியம் எதுவென கூறுங்கள் நண்பர்களே. இது அரசியல் அல்ல அந்த அரசினால் வந்த பிரச்சனை. இது அரசியல்வாதிகள் நடத்தும் பிரச்சனை அல்ல அந்த அரசுக்கே அரசனாய் விளங்கும் மக்களின் பிரச்சனை 12-Apr-2018 7:01 am
கீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Apr-2018 6:29 pm

அடுத்த படைப்பு.. முந்தைய படைப்பு சரியான தமிழ் சொல் தருக?

மேலும்

இரண்டும் ஏற்கனவே சரியான சொற்கள்தாமே? 03-Apr-2018 12:44 am
PREVIOUS NEXT என்பதின் தமிழ் முந்தைய அடுத்த முந்தைய எதிர்ச் சொல் பிந்தைய ---அடுத்த என்ற பொருள் தராது முன்னது பின்னது முன் படைப்பு அடுத்த படைப்பு என்று எழுதலாம் . முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரீகர் ----பழைய சொல்லாட்சி . முந்தைய என்பதிலிருந்தும் சாலச் சிறந்த சரியான தமிழ்ச் சொல் இருக்க முடியுமா ? தமிழ் சொல் --சந்திப்பிழை திருத்தவும். 02-Apr-2018 10:37 pm
கீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Apr-2018 6:21 pm

கிரிக்கெட் IPL தொடர் மூலம் போராடும் இளைஞர்களை திசைதிருப்புகிறதா மத்திய அரசு?

மேலும்

கீத்ஸ் - கீத்ஸ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 1:06 pm

மீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா?

மேலும்

ஆம் 18-Apr-2018 7:03 pm
நம்ம அரசு ( தமிழக அரசு )அந்த வேலைய பார்த்துக்கும் ....பார்த்துகிட்டு தான் இருக்கு 08-Apr-2018 11:52 am
தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற மத்திய அரசு பார்க்கிறது என்றால் அதற்கு துணை புரிவது மாநில அரசாக (தமிழ்நாடு அரசு) இருக்கின்றது . . . . 04-Apr-2018 11:49 pm
அப்படிப் பிரிவினைவாதிகளும் மத வெறியர்களும்தான் கூறுவார்கள்; கூறுகிறார்கள். 03-Apr-2018 12:50 am
கீத்ஸ் - Thuraivan N G அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2018 6:58 am

மதிப்பு

மேலும்

கீத்ஸ் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 3:04 pm

உங்கள் வாழ்க்கையில் அதிகம் நேசித்து கிடைக்காத விடயம் எது??

மேலும்

பலருக்கு கிடைக்காத ஒரு அழகான விடயம் நன்றி 27-Oct-2017 7:06 pm
முதல் காதல் 27-Oct-2017 6:35 pm
பெற்ற தந்தையின் இழப்பை ஈடு கட்ட யாராலும் முடியாது.நன்றி 26-Oct-2017 6:04 am
எனது அன்பு தந்தை! என் 14 வயதில் காலமாகிவிட்டார். என் வாழ்க்கையில் நான் எவ்வளவு உயரம் சென்றாலும் எனக்கு ஈடுசெய்ய முடியாத நான் நேசித்த இழப்பு அது ஒன்றேதான்.! 26-Oct-2017 1:28 am
கங்கைமணி அளித்த எண்ணத்தில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2017 1:42 am

வணக்கம்!

நமது எழுத்துத்தள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோல்.எனது முதல் பாடல் இன்று YouTube channel ல் வெளியிடப்பட்டுள்ளது .அப்பாடலை கண்டு கேட்டு இரசித்து .தாங்களின் கருத்துக்களை பதிவிட்டால் நான் மகிழ்வேன் . நன்றி
-கங்கைமணி
எனது பெயரில் search செய்யவும் 

மேலும்

மிக்க நன்றி.மனம் மகிழ்ந்தேன் 29-Sep-2017 7:43 am
மனமார்ந்த வாழ்த்துகள் ! 29-Sep-2017 1:19 am
நன்றிகள் ஐயா 28-Sep-2017 12:58 pm
வணக்கம்! நிச்சயமாக தங்களது கருத்தை ஏற்க்கிறேன் . ஆனால் இந்த பாடலை எவ்வாறு இத்தளத்தில் video வாக பதிவிடுவதென்று தெரியவில்லை 28-Sep-2017 12:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே