umababuji - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : umababuji |
இடம் | : சின்னமனுர் ,தேனி மாவட்டம் |
பிறந்த தேதி | : 24-Jun-1967 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 267 |
புள்ளி | : 24 |
நான் ஒரு இல்லத்தரசி .வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என்று விரும்புபவள். .இறக்கும் தருவாயிலும் இந்த உலகிற்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று விரும்புபவள் .இந்த உலகில் இருப்பவர் ,இல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யுமாறு இறைவனை வேண்டுபவள்
வாழ்க்கையில் நான் அடுத்து அடுத்து எடுத்து
வைக்கும் அடிகள் வெற்றி பாதையில்
பயணிக்க எனக்கு ஆசைதான்
ஆனால் சில பல சமயங்களில் அவை
தோல்விகளை தரும் -அப்போது அவை தரும் வலிகள்
சொல்லி மாளாது -இருந்தாலும்
வலியுடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதில்
கிடைக்கும் ஒரு சுகம் -வெற்றியில்
கிடைக்கும் சுகத்தை விட பல மடங்கு உயர்ந்தது
ஏனென்றால் அந்த வழியில் நான் சோர்ந்து போயிருந்தால்
இந்த வெற்றி எனக்கு கிடைத்திருக்காதே
வெற்றியின் நோக்கம் சந்தோஷத்தில்
திளைக்க அல்ல -தோல்விகளிடம் இருந்து
நான் கற்று கொண்ட பாடங்களுக்காக ....
அரசு பள்ளிகளை மக்கள் ஒதுக்குவதால்தான் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது .அதனால் இதற்கு ஒரே வழி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் .பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும் .ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் .
தாய் என்பவள் கடவுல் நமக்கு தந்த
கற்பக விருட்சம் ...
ஆம் ...நாம் நினைத்ததை கொடுக்கும்
கற்பக விருட்சம்
ஆனால் நினைக்காமலே கொடுப்பவள் தாய்
அவள் கற்பக விருட்சத்திற்கும் மேல்
நாம் ஏன் யோசிக்க வேண்டும்
யாசிக்க வேண்டும்
எதுவுமே வேண்டாம்
நமக்கு என்ன வேண்டும் என்று
நம் முகத்தை பார்த்து தெரிந்து கொள்வாள்
அது மட்டும் அல்ல
அதற்காக தன உயிரையும் கொடுக்க
தயாராக இருப்பாள்
ஆனால் நாம்தான் அவளை
முதியோர் இல்லத்திற்கு அன்பளிப்பாக
கொடுத்து விடுகிறோம்
அவளால் பட்டை தீட்ட பட்டு
வைரமாய் ஆன பின்
அவளை நாம் துச்சமாய் மதிக்கிறோம் ...
அத்தனை தெய்வங்களும் அவள் வடிவில் வந்தாலும்
அதை கொண்
பெண்ணை படைத்த பின்
அவளுக்கு அழகு சேர்க்க இந்த இலைகளை படைத்தான் ....
அப்படித்தானோ என்னவோ தெரியவில்லை ...
இல்லை என்றால் நாணத்தால் சிவக்கும் அவளுக்கு
எதற்கு இந்த மருதாணி சிவப்பு
அது என்னவோ அவளுக்கு மட்டும்தான்
இது அழகாக இருக்கிறது
அது ஏன் தெரியுமா ?
அவளுடைய அழகுக்கு முன் தான்
எம்மாத்திரம் என்று அது
நாணப்பட்டதால்...
ஆம் ... நாணத்திற்கும் நாணம் வந்ததால்
வந்த சிவப்பு ....
தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .
பெண் என்பவள் சமைக்க ,குழந்தை பெற
,ஒரு இயந்திரம் போல் வேலைக்கு சென்று சம்பாதிக்க மட்டுமா ?
இல்லை ....இனி ஒரு மாற்றம் கொண்டு வருவோம்
கல்வி கற்று கொடுப்பது தாய்
அவள்தான் நம் முதல் ஆசிரியர் !
ஆம் பெண்களை இனி கல்வியில் தன்னிறைவு பெற்றவர்களாய்
மாற்றுவோம் ....அவளுக்கு தெரியாத துறைகள் இல்லை
என்று சொல்லும் காலத்தை கொண்டு வருவோம் ..
இப்போது பெண்கள் அது போல் இருக்கிறார்கள் .
ஆனால் நான் சொல்வது கிராமங்களை சொல்கிறேன்
கிராமத்து பெண்கள் வீட்டுவேலைக்கு மட்டும்தான் லாயக்கு
என்னும் நிலையை மாற்றுவோம் .
வீரத்திற்கு பேர் போன எங்கள் கிராமத்து பெண்கள்
மற்ற திறமைகளில் மட்டும் குறைந்தவர்களா என்ன
பிக்பாஸ்#3
U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?
எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
first of all we should improve the teaching level of the teachers.Because i am a tuition taking teacher.So i know lot about this.I would like to share this.many students even don't know to read tamil at all.they are getting compulsory pass upto 9th .In the 10th standard only they are concentrating on them.my only one request is make the teachers to focus their interest on the students from the beginning level.please teachers don't avoid the teaching and dedicate yourself to the teaching.Because dedicated teachers only teach very well.please focus on their ability,weakness,strength and their in
நான் பிறந்த போது கடவுள் கொடுத்த சிறகுகள்
தடவி தடவி பார்த்தேன்
உயர உயர பறந்தேன்
வானம் எட்டும் தூரத்தில் -பந்தம்
என்னும் வலையில் சிக்கினேன் -மனைவி
என்றதால் முடக்கப்பட்டன - சிறகுகள்
அடக்கப்பட்டன கற்பனை என்ற- வானம்
தாய்மை என்றதால் பறிக்கப்பட்டன -கனவுகள்
வாலிபம் கடந்தது -முதுமை
வந்தது மீண்டும் முளைத்தன -சிறகுகள்
ஆம் ,முதுமையும் குழந்தையும் ஒன்றுதான்
யாருக்கும் என்னால் உபயோகமில்லை -அதனால்
விரித்து விடப்பட்டன என் -சிறகுகள்
இனி பறக்க மாட்டோம் என்று நான்
நினைக்கவில்லை -முயற்சி செய்தேன்
இதோ பறந்துவிட்டேன் -முயற்சிக்கு
வயது ஏது-இனி வானம்
எட்டும் தூரம்தான் !
நண்பர்கள் (7)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
