சுரேஷ்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ்குமார் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 1040 |
புள்ளி | : 344 |
சமூகத்தில் மாற்றம் தேடிடும் ஒரு சராசரி தமிழன்... 💐
எங்கோ சுற்றி
எதையோ உமிழ்ந்து
வாழ்க்கையெனும்
நீரோடையில்
மழைத்துளி.....!
நினைவும்
மனதும்
மொழியும்
பொழியும்
மழையின்
நிறம்.... !
அதே நிலா?
அதே கனா?
ஒரே வினா?
விடையின்
மொழிதான்
எங்கோ?
ஓடையின்
பெயர் தான்
ஏதோ?
எங்கோ சுற்றி
எதையோ உமிழ்ந்து
வாழ்க்கையெனும்
நீரோடையில்
மழைத்துளி.....!
நினைவும்
மனதும்
மொழியும்
பொழியும்
மழையின்
நிறம்.... !
அதே நிலா?
அதே கனா?
ஒரே வினா?
விடையின்
மொழிதான்
எங்கோ?
ஓடையின்
பெயர் தான்
ஏதோ?
பற்பசை
விளம்பரங்கள்
எத்தனை தான்
கூப்பாடு
போட்டாலும்.....
புன்னகை என்பது
தனி!
அழகுதான்
பொக்கை வாய்
மழலையும் !
கிழவியும்!
காகிதங்கள்
இங்கும் அங்கும்
பறக்கட்டும்....!
தூசி நாசி
துளைத்தபின்
ஊறும் உணர்வுகளில்
மொழியும் இலக்கணனும்
ஊமைதான்.....
அடங்கா...?
மௌனம்!
காது கோணாத
ஊசிகள்
இடற் படற்
அறிந்து
சொரிந்து கொள்கின்றன
இதயத்தின்
துடிப்புகளில்....
கணக்கு மெய்க்குமோ?
தோற்க்குமோ?
இதோ
எதிற் வரும்
நொடியினின்
துடிப்புகளில்...
டிக் டிக்
டிக் டிக் டிக்....
உடைந்திட்ட
கண்ணாடி துகள்களில்தான்
எத்தனை உலகங்கள்...
உனையும் எனையும்
அப்படியே
அச்சு பிசிறாமல்
எச்சமாய்
உமிழ்கையில்...
கிளை விறித்திடும்
நொடி முள்
மீண்டும் மீண்டும்
அது சுழன்றாலும்
இல்லை வாழ்வையே
சுழற்றிடினும்
நொடிகளை பிறிக்க
தெறியாமல் ஓய்ந்து
போகட்டும்
ஓர்
உள் வட்டத்தில்....
இருந்தும்
நகைக்கும் பொழுதெல்லாம்
சிரிப்பதில்லை...
சில கண்ணாடி
சில்கள்....!
உன் பிம்பங்கள்
சிதறிய தினம் இன்று.
அதே ஓடை
அதே பாதை
பூக்கள் இடையறாது
காற்றை வெட்டுகிறது.
காகங்கள் வருமோ
தேன் அருந்த...?
ஒற்றை மரமும்
ஓலமிடும் தனிமையும்
அரைத்து தின்னும்
மிச்ச நாட்களில்
என் பெயரையாவது
நினைவு கொள்
கிழிந்த இரவுகளில்.
நானோடும் நகரத்தில்
தொலைந்த என் முகமும்
தொலையாத உன் நினைவும்
சந்தி பெருக்கி சாகும்.
சொல்லாத கவிதைகளை
நில்லாது கொல்லட்டும்
பெய்யும் மழையின் எச்சில்.
தோழி...
விலகாத வியப்பொன்று...
எங்கு கற்றாய்
மலர் கொல்லும் வித்தை?
மடல் விரித்து
இடை மீறி
ததும்புகிறது...
தனித்தனியாய்
காற்றில் மிதந்தாலும்
திடுமென மனதை
சூல்கொண்டு
பொழிகிறது...
கூடிய கார்மேகத்தில்
உதித்திட்ட மின்னலாய்
முடியாமல் நீ
அவிழ்த்துவிட்ட
கூந்தலின் உச்சியில்
மல்லிகைச்சரம்....
ஒற்றை மின்னலின்
வாசம்
என் சுவாசத்தில்...
சில ...சிற் சில...
சில தான்...
இந்த கவிதையில்
கவிதையென்றால்
பெரிதாய் புதிதாய்
விஷயமேதுமில்லை
விஷமமுமில்லை...
அரசியல் நமக்கு
அப்பாற்பட்டவை...
நொடியில் தோன்றி
அந்த நொடியிலேயே
மரித்து போகிறது
நம் ரோசங்கள்
அரிசியிலலில்...
வரிசையில் நின்று
வெறும் பையுடன்
வீடு திரும்பினாலும்
மீண்டும் வரும்
அடுத்த வியாழன் என...
வளைந்து போக தெறியும்
சாலைகளில் எனக்கு
என் நேர்மை செல்லரித்தபின்
தாரில் தரம் தேடுவது எப்படி...?
மரமும் இயற்கையும்
மட்டுமா...?
வாரத்திற்கு ஒருமுறையென்ன
வருடத்திற்கு ஒருதடவை
வரட்டுமே நீர்..
எவ்வளவு அழகாய்
ஆக்சிஜனை பிரசவிக்கிறது
தெரு பைப்புகள்...
நேராய்தான் நீட்டினேன
சில ...சிற் சில...
சில தான்...
இந்த கவிதையில்
கவிதையென்றால்
பெரிதாய் புதிதாய்
விஷயமேதுமில்லை
விஷமமுமில்லை...
அரசியல் நமக்கு
அப்பாற்பட்டவை...
நொடியில் தோன்றி
அந்த நொடியிலேயே
மரித்து போகிறது
நம் ரோசங்கள்
அரிசியிலலில்...
வரிசையில் நின்று
வெறும் பையுடன்
வீடு திரும்பினாலும்
மீண்டும் வரும்
அடுத்த வியாழன் என...
வளைந்து போக தெறியும்
சாலைகளில் எனக்கு
என் நேர்மை செல்லரித்தபின்
தாரில் தரம் தேடுவது எப்படி...?
மரமும் இயற்கையும்
மட்டுமா...?
வாரத்திற்கு ஒருமுறையென்ன
வருடத்திற்கு ஒருதடவை
வரட்டுமே நீர்..
எவ்வளவு அழகாய்
ஆக்சிஜனை பிரசவிக்கிறது
தெரு பைப்புகள்...
நேராய்தான் நீட்டினேன
விலக்குற்ற விதி
அறிவாயோ..!
மதிப்பற்ற சூன்யத்தின்
மையம் தேடுவாயடி...
எதுவுமற்று போகலாம்
எல்லாவும் ஆகலாம்
இடுவது உன்
விருப்பம்...
ஒன்று நீயெனில்
பூஜ்யமாய் இருக்கிறேன்
ஒன்றிர்க்கு முன்
ஒன்றுமேயில்லை
பிணைந்து வந்தால்
இலக்கமேயில்லை
அறிவாயோ...?
எல்லைகள் அற்றும்
எல்லைக்குள்ளும்
நீ அற்றும்
உனக்குள்ளும்
நிற்க்கும்....
நான் ஓர் பூஜ்யமே!
... கண்களுக்கு
புலப்படாத
உயிரின்
நிர்வாணம்
பசி..!
இரண்டு ஆயுள்
தண்டனைகளை
முடித்து கொண்டுவிட்டது
என் காதல்!
எங்கே இருக்கிறாய்?
என்னவளே..
தேடல்கள் சுகம்தான்
இருப்பினும்
விடுதலை கொடுக்க
வாயேன் என் மனதிற்கு
காத்திருக்கிறேன்....
நண்பர்கள் (39)

வேலு ரௌத்திரம் பழகு
காஞ்சிபுரம்

முப்படை முருகன்
கமுதி

சத்யா
Chennai

கிருஷ்ணநந்தினி
சென்னை
