ஆரோ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆரோ
இடம்:  விழுப்புரம்,(சென்னை)
பிறந்த தேதி :  26-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2012
பார்த்தவர்கள்:  2212
புள்ளி:  218

என்னைப் பற்றி...

கவிஞனாக கருவடைந்து கவிதையாய் உருவானவன்..

என் படைப்புகள்
ஆரோ செய்திகள்
ஆரோ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2024 9:54 am

புத்தகங்கள்
உயிரற்றதாய் தெரிந்தாலும்
கையில் எடுத்து
விரித்த பின் தெரிகிறது
உணர்வுகளால் உயிருடன்
இருப்பது

ஏதோ ஒன்றை பற்றிய
அறிவுடன் இருந்தாலும்
எதுவுமே
கர்வம் கொள்வதில்லை
தன்னை அலங்கரித்து
கொள்வதுமில்லை


பிறரிடம் சென்று
அறிவுரை சொல்வதுமில்லை

அணுகும் மனிதர்களுக்கு
கூட அனுபவத்தின்
அறிவின் உணர்வுகளை
ஊட்டும் மெளன
பெட்டகங்கள்

மேலும்

ஐயா வணக்கம், உங்களுடைய கவிதை திறமை பற்றி எனக்கு மிகவும் நன்றாக தெரியும். புத்தகங்களைப் பற்றிய உங்களுடைய இந்த கவிதை இன்னும் நீட்டி எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். புத்தகங்களைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன, உங்களுடைய அடுத்த அடுத்த படைப்புகளில் அவற்றை எதிர்பார்க்கிறேன் உங்களின் இந்த கவிதை நல்லா இருந்தது 21-Feb-2024 3:53 pm
ஆரோ - நா முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2024 8:51 am

தோழியே உன்னிடம்,
கலாய்த்த
விடயம் எல்லாம்
இன்று
கவிதைகளாய் தென்படுதே !

காயங்கள் ஆற்றிய
அதே கண்கள்
இன்று - என்னை
களேபரங்கள் செய்கிறதே !

ஒட்டித் திரிந்த
நாட்களெல்லாம்
நட்பைத் தவிர
தோன்றவில்லை,

விட்டு விலகிய
நொடி முதலாய் - எனக்குள்
உன்னைத் தவிர
யாருமில்லை !

மனம்
ஆனந்தம் தேடி
அனிச்சையாய் திரும்புவது
உன் திசை தானடி !

சோகம் ஆறாத
சமயங்களில்
அமைதி கொள்வதும்
உன்னிடம் தானடி !

என் வாழ்வின்
எல்லாப் பக்கங்களிலும்
முதல் வரியை
எழுதி விட்ட நீ,
கிழித்துச் சென்ற
ஒரு பக்கத்தை மட்டும்
நீட்டாமலிருக்கிறாய்
நீண்ட காலமாய் !

ஏன் ?
என்னைப் போல்

மேலும்

நன்றி ஆரோ 14-Feb-2024 6:19 pm
முரளிதரன், உங்களின் இந்த கவிதை எளிமையாக இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் இந்த கவிதைக்கு என் வாழ்த்துகள் 14-Feb-2024 11:31 am
ஆரோ - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2024 1:27 am

பொக்கைவாய் தாத்தா
பல்அச்சு அப்படியே இருக்கிறது
குழந்தையிடம் வாங்கிய கடி

மேலும்

மிக்க நன்றி 31-Jan-2024 1:28 am
அடடே.... நல்லாருக்கே 30-Jan-2024 1:47 pm
ஆரோ - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2023 8:13 am

நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்களில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வா

------இன்னிசை வெண்பா

நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்ணிரண்டில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வாசேற்றில் கால்நனைக்க

----எதுகை மோனை எழிலுடன் முற்றிலும் காய்ச் சீரால்
ஆன கலிவிருத்தம்

நீரோடும் நதியினின் நீள்கரையில் நாணலாட
கூரான எழில்விழியாள் விழியிரண்டில் ஒளிமின்ன
ஏரோடும் வயலினில் ஏறிநீந்தும் இளமீனே
வாராளோ அவள்கேட்டு வாசேற்றில் கால்நனைக்க

---காய்முன் நிர

மேலும்

நீரில் மீன் துள்ளுவது அழகு நிலத்தில் ....பாவம் ....என் செய்வது ? அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய ஆரோ 30-Nov-2023 5:50 pm
தகவல் சொல்ல போன மீனு தவாவில் வெகுதாம்....; நல்லாருக்கு இந்தப்பாடல் 30-Nov-2023 4:36 pm
ஆரோ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2023 1:46 pm

புத்தாண்டே….
புது வரவே….
பன்னிரு திங்கள் சூலில்
உருவாகி பிறந்த உறவே
பன்னிரு திங்கள் திண்று
பெருத்து பருத்து
பனி தொட
பனிக்குடம் தொறந்து
பிறந்த ஆண் டே

என்னே விந்தை!!

பிறக்கும் போதே சூலியாய்
பிறப்பதென்ன நீ....

365நாள் நக்கி திண்று
366ஐ பெத்தேடுக்க
நடக்கும் ஆண் டே

நீ பிறக்கும் நேரம்
எல்லோருக்கும் எப்படி
தெரிந்திருக்கின்றது முன்னாடி...

மனித மனங்களின்
வெப்பம் தணிநிக்கவோ
நல் இரவு பனியில்
குளித்தே வருகிராய் எப்போதும்

எல்லோரை போல உன்னிடமும்
எதிர்பார்க்கிறேன் இன்பங்களை

நீயாவது
இனி நீயாவது இனி
உன்னுடன் மிஞ்சட்டும்
இன்பங்கள்

உன் பிறப்பை‌ கொண்டாடி
உன்னை வாழ்

மேலும்

நன்றி கவியே 27-Feb-2023 12:31 pm
ஆரோ - ஆரோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2019 3:09 pm

எல்லோருக்கும் வணக்கம், 
 எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
 சரி,  அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு  இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
 சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின்  விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…

சென்னையில் இருக்கும் நம் தளத்தின் எழுத்தாளர்கள் எல்லோரும் நேரில் சந்திக்கலாமா…? வாருங்கள்.

மேலும்

சென்னையில எங்க இருக்கீங்க...? 29-Aug-2019 5:13 pm
சந்திக்கலாமே 28-Aug-2019 7:58 pm
ஆரோ - எண்ணம் (public)
17-Aug-2019 3:09 pm

எல்லோருக்கும் வணக்கம், 
 எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
 சரி,  அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு  இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
 சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின்  விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…

சென்னையில் இருக்கும் நம் தளத்தின் எழுத்தாளர்கள் எல்லோரும் நேரில் சந்திக்கலாமா…? வாருங்கள்.

மேலும்

சென்னையில எங்க இருக்கீங்க...? 29-Aug-2019 5:13 pm
சந்திக்கலாமே 28-Aug-2019 7:58 pm
ஆரோ - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2019 8:02 am

ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்

புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை

வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்

மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைக

மேலும்

அருமையான படைப்பு தொடர்ந்து எழுதுங்கள் 10-Jun-2019 12:11 pm
வார்த்தைகள் கோலமிடும் கிராமத்து அழகு . வாஞ்சையோடு விசாரிக்கும் பெண்களின் கட்டுப்பாடுகள் . இயல்பான பெண்ணிய. அரவணைப்புக் குரல் ..... 03-Mar-2019 9:42 am
அருமையான கவிதை. இன்றைய சூழலை அழகாக உங்கள் கவிதையில் குறிப்பிட்டுள்ளீர்கள். 01-Mar-2019 9:13 pm
அருமை அருமை....... மிகவும் சிறப்பாக உள்ளது; அக்மார்க் ஐ தவிர்த்திருந்தால் முழு மதிப்பெண் கொடுத்திருக்கலாம்..... நல்ல படைப்பு , தொடர்ந்து எழுதுங்கள். 01-Mar-2019 4:18 pm
ஆரோ - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2019 4:28 am


ABOUT WEBSITEதமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.ஹயாக்ஸ் (Hiox) இணையதளங்களில் ஒரு தமிழ் தளம் கூட இல்லையே என்று எண்ணியதன் விளைவாக எழுத்து.காம் (எழுத்து தளம், எழுத்து இயக்குனர் திரு. ராஜேஷ்குமார் தன் கவிதைகளை வெளியிடவே துவங்கப்பட்டது. நாளடைவில், நண்பர்களும் தங்கள் கவிதைகளை வெளியிட விரும்பியதால், எழுத்து.காம் விரிவடைந்தது. இன்று, எழுத்து தமிழில் படிக்க, படைக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கவிஞர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எழுத்து பெருமகிழ்ச்சி அடைகிறது. கவிதை மட்டுமின்றி கதை, கட்டுரை, நகைச்சுவை, எண்ணம், அகராதி, தமிழ் படி, திருக்குறள், கேள்வி பதில், கருத்து கணிப்பு, மனு, வாழ்த்து அட்டைகள், நூல் மற்றும் சினிமா விமர்சனம், போட்டிகள், விளையாட்டுகள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது. பல நல்ல கவிஞர்களை ஊக்கப்படுத்த எழுத்து போட்டிகளும் நடத்தி அதற்கு பரிசும் வழங்குகிறது.

MORE TAMIL WEBSITES LISTINGvenmathi.com - Venmathimunnetram.in - Munnetramthamilartimes.com - TAMILAR TIMESnammatrichyonline.com - நம்ம திருச்சி வார இதழ்brinthanonline.com - BrinthanOnlinesivanagri.com - Sivanagrisiluvai.com - சிலுவை டொட்கொம்tamilstories.com - tamilstorieswww.tnsocialscience.com/ - TN SOCIAL SCIENCEekanyakumari.com - Kanyakumari Tourkelvipathil.com - kelvi pathilpsvptamil.com - PsvpTamil - பல்சுவை வலைப்பூyaavarum.com - யாவரும்omgtamil.com - OMG TAMILamrithaam.com - அம்ரிதா ஏயெம் பக்கங்கள்tamilmoviesdatabase.com - Tamil Movies Databasejobmelaka.com - job recurit in malaysiamanojebooks.online - Free eBooks Onlinesirunathi.com - சிறுநதிtnasri.com - tnasriartistkidworld.com - Artist Kid Worldadhisankara.com - Adhisankarahealthcareall.org - Healthcare Allpalsuvai.net - Palsuvaitnvelaivaaippu.gov.in - TNVelaivaaippu.gov.inADD YOUR WEBSITE WEBSITE TYPES  WORDPRESS  WORDPRESS (543)  WEBSITE  WEBSITE (376)  BLOGGER  BLOGGER (16635)  TN GOVT.  TN GOVT. (0)  INDIA Govt.  INDIA Govt. (0)WEBSITE CATEGORY  INDIA Govt.  Religious (0)  INDIA Govt.  Life (0)  INDIA Govt.  Philosopy (0)  INDIA Govt.  Politics (0)  INDIA Govt.  Yoga Meditation (0)  INDIA Govt.  Cinema (0)  INDIA Govt.  Education (0)  INDIA Govt.  Medicine (0)  INDIA Govt.  News (0)  INDIA Govt.  Tamil News Daily (0)  INDIA Govt.  Tamil Magazine (0)  INDIA Govt.  Blogger (0)  INDIA Govt.  Government (0)  INDIA Govt.  Agriculture (0)  INDIA Govt.  Tamil Art and Culture (0)  INDIA Govt.  Uncategorized (0)  INDIA Govt.  Tamil ebooks (0)  INDIA Govt.  Tamil Language -Literature (0)  INDIA Govt.  Tamil Language (0)  INDIA Govt.  

மேலும்

எழுத்து ஆண்ட்ராய்ட் App செயல்பாடுகளை சற்று மேம்படுத்துங்கள் அது எல்லா ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கும் சரியாக பொருந்துவதில்லை. அந்த ஆப் மூலம் நம் கருத்துக்களை பதிவிடுவது கடினமாக உள்ளது அதை சரிசெய்து வழங்கினால் என்னை போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். 01-Mar-2019 12:20 pm
ஐயா வணக்கம் நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்; தமிழ் படைப்பாளிகளுக்கு எழுத்து வலைத்தளமானது ஒரு நல்ல கொடையே மற்ற வலைத்தளங்களில் எழுத்து அதைவிட சிறப்பான செயல்பாடுகள் இருந்தாலும் அவை சமூக வலைதளங்கள் ஆகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் எழுத்து தளமானது எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் தடை செய்ய முடியாத ஒரு வலைதளம் ஆகவே இயங்குகிறது அதனாலேயே என்னைப் போன்று தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அவர்களின் ஓய்வு நேரங்களை நம் வலை தளத்தில் பயன்படுத்த முடிகிறது எழுதுதலும் தனது சிறிய சிறிய குறைபாடுகளை சரி செய்து கொண்டால்இன்னும் சிறப்பாக ஒளிரும். இந்த வலைதளதை எங்களுக்கு உருவாக்கி தந்த தளத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் குமார் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். திரு ராஜேஷ் குமார் அவர்களே இதற்கு முன்பு தாங்கள் காதல்குழுமம் என்ற ஜிமெயில் குரூப்பில், இருந்தவர் என்றால் நாம் இருவரும் இதற்கு முன்பே நண்பர்கள் தான்; அவர் தாங்கள் தான் என்றால் அதனை உறுதிப்படுத்தவும்; நன்றி. 01-Mar-2019 12:15 pm
உண்மைதான் எழுத்து.காம் ஒரு வரப்பிரசாதம் நமக்கு .ஆரம்பத்தில் ஒரு சில வலைத்தளங்களை உபயோகித்தேன் எனது கவிதைங்களை பதிவிட .அந்த அளவிற்கு வரவேற்பும் இல்லை ஊக்கப்படுத்தவும் எவரும் இல்லை ஆனால் இங்கே வந்தபோதுதான் தகுந்த மரியாதை கிட்டியது நம்மையும் ஊக்கப்படுத்தியது பல கவிஞர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது .மிகவும்நன்றி ராஜேஷ் குமார் அவர்களுக்கும் தளத்தின் நிர்வாகிகளுக்கும் 01-Mar-2019 7:16 am
ஆரோ அளித்த எண்ணத்தை (public) தமிழ் ப்ரியா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Feb-2019 1:09 pm

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

மேலும்

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து. 13-Feb-2019 3:03 pm
உங்கள் சுவை பற்றி சிறு கோடிட்டுக் காட்டுகள் . முயன்று பார்க்கிறேன் . 13-Feb-2019 2:23 pm
"எழுத்துத் தளத்திற்கு வருவதை நாட்கடனாக வைத்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் பதிவுகளை விரும்பும் சுவைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே" ----இளைய தோழமையின் இக்கருத்தில் எனக்கும் மகிழ்ச்சி 13-Feb-2019 2:20 pm
உங்களிடத்து தான் கேட்கிறேன் எங்கே எனக்கான சுவையான பதிவுகள்....? 13-Feb-2019 12:32 pm
ஆரோ - எண்ணம் (public)
07-Feb-2019 1:09 pm

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

மேலும்

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து. 13-Feb-2019 3:03 pm
உங்கள் சுவை பற்றி சிறு கோடிட்டுக் காட்டுகள் . முயன்று பார்க்கிறேன் . 13-Feb-2019 2:23 pm
"எழுத்துத் தளத்திற்கு வருவதை நாட்கடனாக வைத்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் பதிவுகளை விரும்பும் சுவைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே" ----இளைய தோழமையின் இக்கருத்தில் எனக்கும் மகிழ்ச்சி 13-Feb-2019 2:20 pm
உங்களிடத்து தான் கேட்கிறேன் எங்கே எனக்கான சுவையான பதிவுகள்....? 13-Feb-2019 12:32 pm
ஆரோ - எண்ணம் (public)
26-Nov-2018 5:35 pm

நமது படைப்புகளை புத்தகமாக வெளியிடலாம் வாருங்கள்

எல்லோருக்கும் வணக்கம்,
         நான் இன்று சொல்லப்போகும் தகவலானது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத இந்த அற்புதமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் மீது  மிகுந்த பற்று கொண்ட தமிழ் அன்பர்கள் பலர் சேர்ந்து ஒரு வலை தளத்தை நடத்தி வருகின்றனர்; தமிழ் விரும்பிகளுக்கான தேடலின் விடையாக அவர்கள் நடத்திவரும் வலைதளம் அமைகிறது.

     அந்த வலைதளத்தில் நாம் விரும்பி படிக்க வகைவகையான நல்ல தமிழ்  நூல்கள் விலை இல்லாமல் கிடைக்கின்றன. அவர்களின் அற்புதமான முயற்சிக்கு தமிழ்  தாயின் குழந்தையான என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும். இதை நான் நமது எழுத்து தளத்தில் பதிவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் நமக்கு தேவையான ஒரு வாய்ப்பையும் அளிக்கின்றார்கள்.

   நம்மில் பலருக்கு நமது படைப்புகளை புத்தகமாக வெளியிட விருப்பம் இருக்கும் அப்படி இருந்தும் அதற்கான பொருட் செலவினால்  அந்த முயற்சியை பலர் கை விட்டிருப்போம். அந்த உள்ள ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் நல்ல வாய்ப்பு தருகிறார்கள், அதாவது நமது படைப்பினை விலையில்லா காப்பு  உரிமத்தின் கணினி வழி படிக்கும் மின்புத்தகமாக வெளியிடுகின்றனர், அதற்காக அவர்கள் எந்த ஒரு பணமும் பெறுவதில்லை. நாம் நாமாக முன்வந்து நமது படைப்புகளை அவர்களுக்கு அனுப்பினாலே போதும் அவற்றை கையடக்கக் கருவிகளில் படிக்கும் வகையில் கணிப்பொறியில் படிக்கும் வகையில் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் படிக்கும் வகையிலும் அமைத்து அதனை தரவிறக்குவதற்கான வசதியும் செய்து கொடுக்கின்றனர்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நமது தளத்தில் இருக்கும் நல்ல எழுத்தாளர்கள் தங்கள் படைப்பினை புத்தக வடிவில் வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகத்தில் உங்களின் இருக்கையை பதிவு செய்து கொள்ளுங்கள்; இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பல நல்ல எழுத்தாளர்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்; நன்றி. 

வலைதளத்தின் பெயர்.
freetamilebooks.com

இந்த வலைதளத்தில் சென்று அவர்களை தொடர்பு கொள்ளும் வழி வகைகளை தெரிந்து கொண்டு, அவர்களை தொடர்புகொண்டு உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள்.

மேலும்

தகவலுக்கு நன்றி 26-Nov-2018 7:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (997)

THISAI SANKAR

THISAI SANKAR

திருநெல்வேலி
பபரமகுரு பச்சையப்பன்

பபரமகுரு பச்சையப்பன்

செஞ்சிக்கோட்டை
அ முகுந்தன்

அ முகுந்தன்

அய்யூர் அகரம், விழுப்புரம
மல்லி

மல்லி

சிங்கார சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (1004)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (1003)

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே