ஆரோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆரோ |
இடம் | : விழுப்புரம்,(சென்னை) |
பிறந்த தேதி | : 26-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 2212 |
புள்ளி | : 218 |
கவிஞனாக கருவடைந்து கவிதையாய் உருவானவன்..
புத்தகங்கள்
உயிரற்றதாய் தெரிந்தாலும்
கையில் எடுத்து
விரித்த பின் தெரிகிறது
உணர்வுகளால் உயிருடன்
இருப்பது
ஏதோ ஒன்றை பற்றிய
அறிவுடன் இருந்தாலும்
எதுவுமே
கர்வம் கொள்வதில்லை
தன்னை அலங்கரித்து
கொள்வதுமில்லை
பிறரிடம் சென்று
அறிவுரை சொல்வதுமில்லை
அணுகும் மனிதர்களுக்கு
கூட அனுபவத்தின்
அறிவின் உணர்வுகளை
ஊட்டும் மெளன
பெட்டகங்கள்
தோழியே உன்னிடம்,
கலாய்த்த
விடயம் எல்லாம்
இன்று
கவிதைகளாய் தென்படுதே !
காயங்கள் ஆற்றிய
அதே கண்கள்
இன்று - என்னை
களேபரங்கள் செய்கிறதே !
ஒட்டித் திரிந்த
நாட்களெல்லாம்
நட்பைத் தவிர
தோன்றவில்லை,
விட்டு விலகிய
நொடி முதலாய் - எனக்குள்
உன்னைத் தவிர
யாருமில்லை !
மனம்
ஆனந்தம் தேடி
அனிச்சையாய் திரும்புவது
உன் திசை தானடி !
சோகம் ஆறாத
சமயங்களில்
அமைதி கொள்வதும்
உன்னிடம் தானடி !
என் வாழ்வின்
எல்லாப் பக்கங்களிலும்
முதல் வரியை
எழுதி விட்ட நீ,
கிழித்துச் சென்ற
ஒரு பக்கத்தை மட்டும்
நீட்டாமலிருக்கிறாய்
நீண்ட காலமாய் !
ஏன் ?
என்னைப் போல்
பொக்கைவாய் தாத்தா
பல்அச்சு அப்படியே இருக்கிறது
குழந்தையிடம் வாங்கிய கடி
நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்களில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வா
------இன்னிசை வெண்பா
நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்ணிரண்டில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வாசேற்றில் கால்நனைக்க
----எதுகை மோனை எழிலுடன் முற்றிலும் காய்ச் சீரால்
ஆன கலிவிருத்தம்
நீரோடும் நதியினின் நீள்கரையில் நாணலாட
கூரான எழில்விழியாள் விழியிரண்டில் ஒளிமின்ன
ஏரோடும் வயலினில் ஏறிநீந்தும் இளமீனே
வாராளோ அவள்கேட்டு வாசேற்றில் கால்நனைக்க
---காய்முன் நிர
புத்தாண்டே….
புது வரவே….
பன்னிரு திங்கள் சூலில்
உருவாகி பிறந்த உறவே
பன்னிரு திங்கள் திண்று
பெருத்து பருத்து
பனி தொட
பனிக்குடம் தொறந்து
பிறந்த ஆண் டே
என்னே விந்தை!!
பிறக்கும் போதே சூலியாய்
பிறப்பதென்ன நீ....
365நாள் நக்கி திண்று
366ஐ பெத்தேடுக்க
நடக்கும் ஆண் டே
நீ பிறக்கும் நேரம்
எல்லோருக்கும் எப்படி
தெரிந்திருக்கின்றது முன்னாடி...
மனித மனங்களின்
வெப்பம் தணிநிக்கவோ
நல் இரவு பனியில்
குளித்தே வருகிராய் எப்போதும்
எல்லோரை போல உன்னிடமும்
எதிர்பார்க்கிறேன் இன்பங்களை
நீயாவது
இனி நீயாவது இனி
உன்னுடன் மிஞ்சட்டும்
இன்பங்கள்
உன் பிறப்பை கொண்டாடி
உன்னை வாழ்
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின் விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…
ஆற்றில் நீராடி அரைத்த மஞ்சள் பூசி
ஆறடிக் கூந்தலில் பிச்சிப்பூச் சூடி
ஆத்தாள் சீலையில் தாவணிக் கட்டிடும்
அக்மார்க் கிராமத்து அழகு தேவதைகள்
புறக்கடையில் மலர்களிடம் மனம்திறந்த உரையாடல்
முன்கட்டு வாசலில் எட்டும்வரை பார்வை உரசல்
சன்னல் திரையிடையே விண்வெளி அலசல்
நாற்புற அகழிக்குள் நகர்ந்தது இவர்கள் வாழ்க்கை
வியாழன் சந்தை வெள்ளி ஐய்யனார்கோவில்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஊர்த்திருவிழா
அவ்வப்போது கிட்டும் நிபந்தனை பரோல்கள்
அதைத்தாண்டி விரிந்ததில்லை இத்தேவதைகளின் சிறகுகள்
மாற்றங்களின் ஏற்றங்களால் தேவதைகள் சிறகடிக்க
சாதிமதக் கூர்வாளால் ஆணவக்கொலைகள் அரங்கேற
வக்கிர மிருகங்களால் வன்கொடுமைக
எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....
எல்லோருக்கும் வணக்கம்,
என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....