எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லோருக்கும் வணக்கம், சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன்,...

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

பதிவு : ஆரோ
நாள் : 7-Feb-19, 1:09 pm

மேலே