கல்லறை செல்வன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கல்லறை செல்வன் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 13-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 3473 |
புள்ளி | : 210 |
நான் வாழும்கல்லறை
Agambavam enra sollai pirittu ezhudu
தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,
அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,
எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,
இதுபோல் எனக்கு
தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்
தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது
மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு
தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்
பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது
கனியாவது
கன்னியாவது
இருவருக்கும் உண்டு
மணம்.
இருவரின் முகவரியும்
இதழே
இருவரின் பெயரும்
பூவை
இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை
இருவரும் விரும்புவது
மாலை
இருவருக்கும் சொந்தம்
அழகு
இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை
இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்
சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்
தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது
மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு
தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்
பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது
கனியாவது
கன்னியாவது
இருவருக்கும் உண்டு
மணம்.
இருவரின் முகவரியும்
இதழே
இருவரின் பெயரும்
பூவை
இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை
இருவரும் விரும்புவது
மாலை
இருவருக்கும் சொந்தம்
அழகு
இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை
இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்
நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/
கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/
முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/
சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/
மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/
சித்திரை மாதந்தனில்
சிந்தையும் குளிர்ந்ததோ !
நித்திரைப் பொழுதினில்
நித்தமும் சொப்பனமோ !
கனவில்வந்த காதலனும்
கட்டியணைக்க வாரானோ !
தீட்டியுள்ள திட்டங்களும்
தீஞ்சுவையாய் இனிக்குமோ !
ஆலிங்கனம் புரிந்திடதான்
ஆழ்மனதும் துடிக்கிறதோ !
ஆறப்போட மனமின்றி
ஆசைகளும் கூடுகிறதோ !
தவித்திடும் உன்நெஞ்சம்
தணிந்ததும் துள்ளிடுமோ !
உறக்கத்தில் வந்தவனும்
உன்னவனாய் மாறுவானோ !
பழனி குமார்
09.05.2020
இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.
பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,
பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.
பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே
உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
எண்ணித் தவிக்கிறேன்
என்னுள் நீ இருப்பது தெரிந்தும்
விலகலின் வலி உணர்கிறேன்
மதிதரும் இரவில்
ஆயிரம் கனவுகள்
ஆனந்தம் அதில்
ஆதியும் நீ
அந்தமும் நீ,
ஆயினும் அன்பே
இமையின் பிரிவில்
நீ இருப்பது எங்கோ
என்றத்தேடலின் முடிவில்
தேவதை உந்தன்
பூமுகம் காண்பேனோ
என் இருதயம் உள்ளே
இறங்கிய பெண்ணே
என் இருவிழி முன்னே
தோன்றிடும் கண்ணே
ஒருவழி தந்துவிடு
உன் மனமதியில் புகுந்துவிட
கற்பனைகள் தந்த
கவிதை கண்ணே
கனவினில் எந்தன்
கண்களை திருடி
காதலியென
மனதையும் வருடி
காதலுமொரு காவியமென
கவிபாடிடச் செய்தாய்
பனிவிழும் இரவில்
பகல் நிலவானேன்
என்னை நானே
எங்கெங்கோத் தேடி
உன்னை கண்டு
காதல் வானில்
முழுமதி ஆனேன்
த
புறம் போகாதீர், போமின்
அங்கம் கழுவி அகம் கொள்ளீர்,
எங்கும் இல்லை விடக் கிருமி...
சிங்கமென எண்ணி
சிறுமை எண்ணம் வேண்டாம்
செத்து மடியும் மானிடரில்
சேர்ந்துவிழ வேண்டாம்
சீரழிவின் விளிம்பில்
மீண்டெழுந்திட வேண்டடும்
சீராகும் வரை
பொறுத்திருக்க வேண்டடும்...