வாழ்ந்தால் உன்னோடு மட்டும் தான் வாழுவேன்

தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே
உன்னுடன் வாழாமல்...
உயிர்விடமாட்டேனே....

எழுதியவர் : கல்லறை செல்வன் (22-Apr-21, 2:23 pm)
பார்வை : 511

மேலே