மெழுகுவர்த்தி

இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,

பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.

பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே

உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ
மனம் இங்கு வேகுதடா...

எல்லைக்கு உயிர் கொடுத்தேன்
முல்லைக்கு உடல் கொடுத்தேன்
பிள்ளைக்கு ஏக்கம் கொடுத்தேன்
ஈன்றாளுக்கு புகழ் கொடுத்தேன்
இல்லாளுக்கு துயர் கொடுத்தேன்
வறுமை இருளுக்கு ஒளி கொடுத்தேன் -என்போல்
வருவோர்க்கு வழி கொடுத்தேன்
வாழ்க்கைச் சொல்லுக்கு பொருள் கொடுத்தேன்
கொடுக்க கொடுத்த பிறவியினை
கொடுத்தே கொண்டேன் இறைவனடி...

-கல்லறை செல்வேன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (11-May-20, 2:21 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 1191

மேலே