விடியாமலா போய்விடும்
செக்கு மாடு போல
சுத்தி சுத்தி வந்து
நாளெல்லாம் உழைத்தாலும்
சுத்தி வந்த மாடு போல
சுகமா இல்லையடி மனசு
செல்வம் இருப்பவரும்
சேர்க்கத்தான் துடிக்கிறார்கள்,
உழைப்புக்கு ஏத்த
ஊதியம் இல்லைன்னா
வயித்துக்கு வழி ஏது ?
நாடு முன்னேறுவதா
நாளெல்லாம் பேச்சு
நம்பிக்கை வைப்போம்
நாளை விடியாமலா
போய் விடும்?