கோ.கணபதி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோ.கணபதி
இடம்:  putthakaram(tamil nadu)
பிறந்த தேதி :  10-Apr-1943
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2011
பார்த்தவர்கள்:  935
புள்ளி:  1291

என்னைப் பற்றி...

interest to write tamil poems(puthu kkavithai)

என் படைப்புகள்
கோ.கணபதி செய்திகள்
கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2024 8:42 am

நீண்ட பயணத்தின் போது
நீரை சுமந்து வந்துத்
தொண்டையை நனைத்துத்
தாகம் தணித்து
உயிரைக் காக்கும் பிளாஷ்டிக்கை
உள்ளம் நினைத்து பார்க்காமல்

வாழும் மனித உயிர்களுக்கும்
விலங்குகளுக்கும்
ஒவ்வாமை ஏற்பட்டு
உயிரிழக்க நேரும் என்பதால்
கால் பதித்த பிளாஷ்டிக்கை
கழிவுப் பொருளெனக் கூறி
கடையாந்தரமாக்கினார்கள்

வேண்டாத பிளாஸ்டிக்கை
உருக்கி சாலை போட
உபயோகித்தால்
போடப்படும் சாலைகளும்
பாமர மக்களுக்கு உதவும்
உருமாறிய பிளாஸ்டிக்கும்
அநுதினமும் பாமர மக்களின்
பாதம் தொட்டு வணங்கும்

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2024 10:17 am

வருமானம் போனதென
வருத்தம் கொள்வதும்
வருமானம் தேடித்தேடி
தன் மானம் இழத்தலும் வேண்டா,
உழைத்து சம்பாதித்து
ஊதியம் ஆயிரம் பெற்றாலும்
ஊழலில் பணம் பெற
ஊன்றுகோள் தேடாதே

காலத்தையும் , உழைப்பையும்
காலத்தே செய்து விடு,
காலத்தைக் காசாக்கியவனை
கடவுளுக்கும் பிடிக்கும்
வெற்றிடத்தை நிரப்பு
வெற்றி இடமாக அது மாறும்

உண்மையோடு உனக்காக
உழைத்து முன்னேற
முயற்சித்தால்
காலம் கைகொடுக்கும்,
தாகம் தீர்க்கும் தண்ணீராயினும்
காலம் சென்று கொடுத்தால்
காலம் சென்றுவிடும்-இல்லை
காலமாகிவிடும்

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2023 11:57 am

கூட்டுப் பறவைகள்

கணவன் மனைவிக்கு
சோடிப் புறாக்களே
எடுத்துக் காட்டு ,
கூடு கட்டுவதும்
முட்டைகளை அடை காப்பதும்
குஞ்சுகளுக்கு உணவூட்டுவதும்
பேடைக்கு நிகராக
ஆண்புறாவும் பங்கேற்கும்,
ஒன்று மற்றொன்றின் வரவை
ஆவலோடு எதிர்பார்த்து
காத்திருக்கும்

மானிட வாழ்க்கைக்
காலத்தால் மாறுபட்டாலும்,
காலம் காலமாய் மாறாமல்
கூடி வாழும் புறாக்கள்
வியக்க வைக்கும்
விசித்திரமல்லவா!
வாழும் காலமுழுதும்
கோர்ட்டுக்குப் போகாத
கூட்டுப் பறவைகள்

மேலும்

கோ.கணபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2023 7:42 am

சமூகத்தின் அவலத்தால்
நீ அழுதால்
உன் கண்கள் சுத்தமாகும்
சமூகம் தான்
அசுத்தமாகும்,
வெட்கப்பட வேண்டியது
நீ அல்ல
அசுத்தமானதற்கு சமூகம்
அசிங்கப்படாதபோது

மனிதன் படைத்தவற்றில்
சட்ட நடைமுறையில்
இல்லாமலிருப்பது
மனிதாபிமானம் மட்டுமே !
விதைகளையே
வேடிக்கையாக நினைக்காத
வயல்கள் இருக்கும்போது
மனிதனையா பாரமென்று
பூமி நினைக்கும் !

மேலும்

கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2023 1:29 pm

பருவம் அடையும்போது
பாவையர் கூடி--- சமஞ்ச
பொண்ணுக்கு
புனித நீராட்டு விழா
படைப்பது போல்


மண்மகளும் சமஞ்சது போல்
பதினெட்டாம் பெருக்கில்
புனித நீராடினால்
மக்கள் மகிழ்வார்கள்
மண்ணும் மரியாதை பெறும்

மேலும்

ஏதோ ... ஒட்டாதது போல இருக்கு 19-Jan-2023 5:25 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 8:16 am

தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதர—நம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்

குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்

ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது

தமிழகத்தில் தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Jun-2022 9:28 am
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2020 3:11 pm

நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது

சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்

சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Jun-2022 9:25 am
சாப்பாட்டில் ஒரு முடி கணவன் சினம் கொள்ளாமல் முடியைக் கையிலெடுத்து மனைவியிடம் சொன்னான்—“உன் தலையிலிருந்தாலும் அழகு இலையிலிருந்தாலும் அழகு “ என்றான் அருமை, ஐயா. தங்கள் தாள் பணிகிறேன் 25-Jun-2022 12:14 am
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2022 2:14 pm

எது நல்லது, எது கெட்டது என்று
எதனையும் சொல்ல முடியாது
ஆசை தான் அதனை நிர்ணயிக்கும்

அழியக்கூடிய மண்ணுலகிலிருந்து
அழிவற்ற விண்ணுலகத்திற்கு
செல்லும் பயணம் தான் மனித வாழ்க்கை

நேர்மையும், மனசாட்சியும்
நிறைந்த நல்லவன் ஒருவனுக்கு
அரசியல் எப்போதும் உதவாது

கருக்கலில் எழுந்து,கடவுளை துதித்து
கடும் உழைப்பை காணிக்கையாக்கினால்
கைவிடுவானா இறைவன்

படிக்காமல் இருப்பதை விட
பிறக்காமல் இருப்பதே மேல்
அறியாமை உயிரை பறித்து விடும்

சிந்தனையும், செயலும்
ஒன்று பட்டால் தான்
மாற்றத்தை உருவாக்க முடியும்

நல்ல பழக்க வழக்கங்கள்
நற்பண்புகளை நமக்கு தந்து
நம்மை மேன்மையடையச் செய்யும்


பழக்கங்க

மேலும்

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. 26-Jun-2022 9:12 am
தெளிவுடன் கோர்க்கப்பட்ட வார்த்தைகளும், வாக்கியங்களும். அருமையான பதிவு 24-Jun-2022 11:59 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2022 1:15 pm

உலக மனித வாழ்வில்
வளர்ந்து வரும் தீவிரவாதங்கள்
வாழும் மக்களின் பயத்தையும்,
எதிர்மறை சிந்தனைகளையும்
உருவாக்கி , மனித இனத்தை
அழித்துவிடும்

வாழும் ஒவ்வொரு மனிதனும்
அடுத்தவரின் உரிமையை பறிக்காமல்
மனிதனாக மதித்து வாழ்ந்தால்
மண்ணில் ஒற்றுமை காணும்
மனித நேயம் சிறக்கும்
மண்ணும் மரியாதை பெறும்

நாடெல்லாம் நலம் பெறும்
நேர்மையான வாழ்வு மலரும்
அறியாமையும்,அடிமைத்தனமும்
அகிலத்தை விட்டு விலகும்,
மத வெறியும், மது வெறியும்
மண்ணில் காணாமல் போகும்

மனித வாழ்வு என்பது
மண்ணில் ஒரு வாய்ப்பு,
மறந்து விடாமல் மக்கள்
கிடைத்த இந்த வாய்ப்பை
நிறைவாக வாழ்ந்து காட்டி
ஆதி பகவனுக்கு அர்ப்பணிப்போம்

மேலும்

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. 26-Jan-2022 9:01 am
மிக நன்றாகச் சொன்னீர்கள். வாழ்த்துகள். 25-Jan-2022 3:26 pm
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2020 3:11 pm

நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது

சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்

சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Jun-2022 9:25 am
சாப்பாட்டில் ஒரு முடி கணவன் சினம் கொள்ளாமல் முடியைக் கையிலெடுத்து மனைவியிடம் சொன்னான்—“உன் தலையிலிருந்தாலும் அழகு இலையிலிருந்தாலும் அழகு “ என்றான் அருமை, ஐயா. தங்கள் தாள் பணிகிறேன் 25-Jun-2022 12:14 am
கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2020 3:14 pm

தான் உழைத்து சேர்த்த பொருளை
தன்னை விட்டு நீங்காமல்
பாதுகாத்து வாழ்பவன் ஒரு நாளும்
பிறரது பொருளைத் தவறான
முறையில் அபகரிக்க எண்ண
மாட்டான்—அதனால்
மக்களும் அவனை மதிப்பார்கள்

துன்பப்படும் ஏழைகளுக்கு சிலர்
உதவுவது போல் கடன் கொடுத்து
பின்பு தரவேண்டிய
பணத்துக்கு வட்டிக்கு வட்டி போட்டு
அவர்களின் சொத்துக்களை
அபகரிக்கும் நயவஞ்சகர்களும்
நாட்டில் உண்டு

உயிர் பிரிந்த பின்பு—சொத்துக்கள்
உலகம் முழுதும் உனக்கிருந்தும்
என்ன பயன் என்பதை
என்றாவது நினைத்ததுண்டா ?
வாழ்வின் முடிவில் ஆறடி நிலம் தான்
வேண்டுமென்ற நிலையும் மாறி
தேவையில்லை என்றானது இன்று

அடுத்தவர் பொருள் மீது
ஆசைபட்டு அபகரிக

மேலும்

கோ.கணபதி - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2020 3:15 pm

கருணை உள்ளம் உருகிக்
கரையும்போது
இமை ஓரம் ஈரம் கசியும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே