கோ.கணபதி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கோ.கணபதி |
இடம் | : putthakaram(tamil nadu) |
பிறந்த தேதி | : 10-Apr-1943 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 791 |
புள்ளி | : 1110 |
interest to write tamil poems(puthu kkavithai)
பாம்பாட்டியின் மகுடிக்கு
பாம்பு ஆடும், அடங்கும்,
பாம்பாட்டியின் வயிறும் நிறையும்
அடங்காமல் போனால்
அந்த பாம்பு கொடுமையானது
அவனைக் கொல்லவும் செய்யும்
பாம்பை போலத்தான்—கடவுள்
படைத்த மனித நாக்கும்
மானுடத்துக்கு மரியாதை சேர்க்கும்
முரண்பட்டால் உயிரையும் பறிக்கும்
நமக்குக் கட்டுபட்டால் அது நாக்கு
நாம் கட்டுபட்டால் சாக்காடு தான்
ஓற்றை மொழியோடு
ஒற்றுமையாய் உயிர் வாழும்
காட்டு விலங்குகள்
கண்ணியமானது,
அடுத்த விலங்குகளை
ஒருபோதும்
கெடுக்க நினைக்காது
தனது பசி போக்க மட்டும்
தன் நலம் பார்க்கும்,
பழகி விட்டால்
பாசத்தோடு விசுவாசம் காட்டும்
வஞ்சிக்கத் தெரியாத
விலங்குகளிடம் மானுடம்
கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு
சுதந்திரம் பெற்ற மக்கள்
சாதி, மதங்களால் பிரிந்து
சண்டையிட்டு
சாவதை தடுத்து
எல்லோரையும் ஒன்று படுத்தி
ஒரு தாய் பிள்ளைகளாய்
ஒற்றுமையாய் வாழவைக்க
ஒருவர் கூட எண்ணலையே !
இந்திய மண்ணில்
இதிகாச காலம் தொட்டு
இன்று வரை
பங்காளி சண்டைகள் போல்
பரம்பரையாய்
பகைமை தொடர்வதால்
உணவுக்கும், நீருக்கும்
ஊழி அழிந்தாலும்
ஊழல் அழியா தேசத்தில்
வலிமையான வறுமை மட்டும்
வந்தமரும் எப்போதும்—ஏழைகளின்
வயிற்றிலடித்து உயிரை பறிக்க
வெட்டுப் பழி போல
வாட்டிக் கொல்லும்
படுக்க இடமில்லை
பசி போக்க வழியில்லை
பரிதவித்து நிற்கையிலே
பரிவட்டம் கட்டியவர்களும்
படைத்த பரமனும் கூட
கண்டு கொள்ளாதது
கானகம் புகுந்தார்களோ !
குடும்பங்கள் தெருவில் நிற்க
குடி புகுந்த ஆறுகள் எல்லாம்
கிடைத்ததை எடுத்து செல்ல
இருந்ததும் போனது,
என்ன எடுத்து வந்தோம், எடுத்து செல்ல ?
கானல் நீரைத்தேடி ஓடிய
கவரி மான் போலத்தான் வாழ்க்கை.
கை பிடித்து
அழைத்து செல்லும்
அன்னை போல
மரியாதை பார்க்காம
காலை பிடித்து
கூடவே நடந்து வரும் ,
நடக்கும்போது
காலைக் கடித்தாலும்
கற்பைக் காக்க
கை கொடுக்கும்
அன்புக்குள் அதிகாரம்
இருக்கலாம்—ஆனால்
அதிகாரத்திற்குள் அன்பு
இருக்க முடியாது
இதைச் செய்யாதே
என்பது அதிகாரம்
இதைச் செய்யாமல்
இருப்பது நல்லதென்பது அன்பு
இதைச் செய்
அல்லது செத்துவிடு
என்பது அகந்தை
அது அழிவைத் தரும்
அன்பின் வழிபட்ட
அதிகாரத்திற்கு
என்றும் மனிதன்
அடிபணிவான்
நாம் வாழும் நாடுகளும்
நம்பியிருந்த மதங்களும்
இனங்களும்—ஏன்
இறைவன் ஒருவனே என்ற
ஆண்டவனாலும்
இனிமேல் வாழும் மக்களைக்
காப்பது எளிதல்ல என்று
கற்றுக் கொடுத்த கொரோனா
கற்றறிந்த ஆசானானது
அறம் தவறியவர்களென இகழ்தலுக்கு
ஆளான மருத்துவர்களும், காவலர்களும்
உயிரை பணயம் வைத்து மக்களின்
உயிரைக் காக்க போராடுகிறார்கள்,
தாள் பணிந்து
துப்புறவுத் தொழிலாளர்களின்
பாதங்களைக் கழுவி
பாதபூஜை செய்து, வணங்கி
பாராட்டுகிறோம், நன்றிக் கடனாக
எண்ணில் அடங்கா சொத்துக்கள்
ஏராளம் இருந்தாலும்-அவைகள்
ஒன்றுக்கும் உதவாது உனக்கு,
ஒருவரின் உடலில் எவ்வளவு
எதிர்ப்பு சக்திகள் இருக்கிறது
என்பது தான் முக்கியம்
என்று
மாந்தரை படைத்த
மாயவனுக்கு பெரும்
மன உளைச்சல்—படைத்த
மனிதர்கள் அனைவருக்கும்
மனித நேயமும் ,
மற்றவர்களை மதிக்கும்
பண்பும் அறவே இல்லையாம்
காலமெல்லாம் உழைத்தும்
கரும்புள்ளி விழுந்ததென
கடவுள் கலங்கி நிற்கையிலே ,
ஆலயம் வருவோரெல்லாம்
அது வேண்டும் ,இது வேண்டுமென
தொல்லைகள் கொடுத்ததால்
பொறுக்க முடியாமல்
எவர் கண்ணிலும் படாமல்
எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள
எண்ணிய இறைவன்
எங்கேயோ சென்றுவிட—கோயிலிலுள்ள
தெய்வங்கள் கற்சிலையானது
கடவுளுக்குக் கவலையில்லை இப்போ
கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்
நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது
சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்
சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்
தான் உழைத்து சேர்த்த பொருளை
தன்னை விட்டு நீங்காமல்
பாதுகாத்து வாழ்பவன் ஒரு நாளும்
பிறரது பொருளைத் தவறான
முறையில் அபகரிக்க எண்ண
மாட்டான்—அதனால்
மக்களும் அவனை மதிப்பார்கள்
துன்பப்படும் ஏழைகளுக்கு சிலர்
உதவுவது போல் கடன் கொடுத்து
பின்பு தரவேண்டிய
பணத்துக்கு வட்டிக்கு வட்டி போட்டு
அவர்களின் சொத்துக்களை
அபகரிக்கும் நயவஞ்சகர்களும்
நாட்டில் உண்டு
உயிர் பிரிந்த பின்பு—சொத்துக்கள்
உலகம் முழுதும் உனக்கிருந்தும்
என்ன பயன் என்பதை
என்றாவது நினைத்ததுண்டா ?
வாழ்வின் முடிவில் ஆறடி நிலம் தான்
வேண்டுமென்ற நிலையும் மாறி
தேவையில்லை என்றானது இன்று
அடுத்தவர் பொருள் மீது
ஆசைபட்டு அபகரிக
கருணை உள்ளம் உருகிக்
கரையும்போது
இமை ஓரம் ஈரம் கசியும்
பாதை மாறி பாதியிலே
தொலைவதற்கு,
போதை தேடி வீதியிலே
அலைகின்றான்.
சாராயம் வாய் நுழைந்து,
சரம்சரமாய் வயிறிரங்கி,
செங்குருதி ஊடாய் நீந்திப்
போகும்.
செந்நிறப் பாதையில்
நங்கூரமிட்டு,
சிறிது சிறிதாய் நஞ்சு
பாய்ச்சும்.
பயணித்த நஞ்சின் வீரியத்தில்,
பஞ்சான கல்லீரல் கல்லாகும்.
கழிவகற்றும் உறுப்புகளை
களையெடுத்து,
கடைசி நாளைக் கல்லறையில்
குறித்து வைக்கும்.
மங்கையரும் மதுவருந்தி, இந்த
மண்ணின் நியதி மீறுகின்றார்.
காரிகை பருகும் தீங்கான மதுவாலே,
கருவான விதை நெல்லும் பழுதாகும்.
பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்,
இங்கே மண் போட்டு மூடிவிட்டார்.
சீரழியும் பண்பாட்டை சீரமைக்க,
ஓரணியில் ஒன்றுபட்டால் உண்டு.
கள்ளின் ம
தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதர—நம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்
குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்
ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது
தமிழகத்தில் தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!