அர்ப்பணிப்போம்
உலக மனித வாழ்வில்
வளர்ந்து வரும் தீவிரவாதங்கள்
வாழும் மக்களின் பயத்தையும்,
எதிர்மறை சிந்தனைகளையும்
உருவாக்கி , மனித இனத்தை
அழித்துவிடும்
வாழும் ஒவ்வொரு மனிதனும்
அடுத்தவரின் உரிமையை பறிக்காமல்
மனிதனாக மதித்து வாழ்ந்தால்
மண்ணில் ஒற்றுமை காணும்
மனித நேயம் சிறக்கும்
மண்ணும் மரியாதை பெறும்
நாடெல்லாம் நலம் பெறும்
நேர்மையான வாழ்வு மலரும்
அறியாமையும்,அடிமைத்தனமும்
அகிலத்தை விட்டு விலகும்,
மத வெறியும், மது வெறியும்
மண்ணில் காணாமல் போகும்
மனித வாழ்வு என்பது
மண்ணில் ஒரு வாய்ப்பு,
மறந்து விடாமல் மக்கள்
கிடைத்த இந்த வாய்ப்பை
நிறைவாக வாழ்ந்து காட்டி
ஆதி பகவனுக்கு அர்ப்பணிப்போம்