காந்தி ஜெயந்தி
அரை ஆடை உடுத்தி
அகிம்சை முறையில்
வெள்ளையனை எதிர்த்து
போராட்டம் நடத்தி
நம் நாட்டுக்கு சுதந்திரம்
வாங்கி தந்த
காந்தி மகான் பிறந்தநாள்
நாட்டில் எல்லோருக்கும்
மூச்சுத்திணறல் இல்லாத
சுதந்திர காற்று கிடைத்திட
இந்த நாளில் அவரை வணங்கி
சபதம் ஏற்போம் .
-- கோவை சுபா

