meenatholkappian - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : meenatholkappian |
| இடம் | : |
| பிறந்த தேதி | : 05-Feb-1965 |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 10-Jun-2014 |
| பார்த்தவர்கள் | : 257 |
| புள்ளி | : 209 |
.1. கல்லறை மேலிருந்த பூக்கள் பேசிக்கொண்டன..
உயிருள்ள நம்மை சாகடித்து..
உயிரற்ற உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் மனிதர்கள்..
2. மேகங்கள் ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொண்டு அழுதனவோ..
இடியோசைக்கு பின் வான்மழை!
சகியே..
நான் பேச நினைப்பதெல்லாம்..
பேசாமல்..
கோடிட்ட இடங்களாய் விட்டு வைக்கிறேன்...
உன் மனதில்..
உன் விருப்பத்திற்கேற்ப வார்த்தைகளை
நிரப்பி மகிழ்ந்து கொள்ள வேண்டி...
அகவை கூடுவது போல்
அறிவும் கூட வேண்டும்
நான் மாறினாலும்..
மாறாதிருக்க வேண்டும் அன்பு..
நான் மறைந்தாலும்..
மறையாதிருக்க வேண்டும்..
மன்னித்தலும் மறத்தலும்..
இவை அனைத்தும் பிரியாவிடை
பெற்று செல்லும் வருடம்..
காற்றோடு கூறி சென்றது!
மாந்தரின் செவிகளில் சேர்க்க சொல்லி!!
எங்களிடம் பிரியாவிடை பெற்று செல்கிறாய் வருடமே..
உன்னுள் வாழ்ந்த காலத்தில்..
தொலையாத சில நினைவுகளை தந்து விட
வாழ்கிறது மனதின் ஒரு மூலையில் சுமையாய்,.
வலி தரும் நினைவுகளை மறவாமல் களவிச் செல்வாய் வருடமே..
ஏனென்றால் நினைவுகளை அழிக்கும் வல்லமை வாழ்கிறது காலத்திடமே ..
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்தின் முகவரி வாழ்வது உன்னிடமே..
களவிச் செல்லும் நினைவிடங்களை கோடிட்ட இடங்களாய் விட்டு வைத்து..
உன் மறுபிறப்பில் அழகிய தருணங்களாய் மாற்றி அமைப்பாய் புது வருடமே!
1.எப்படித்தான்
சிரித்து கொண்டிருக்கிறாய்
பூவே..
சிறிது நேரத்தில்
மடிய போவதை
மறந்து..
2. பூவே..
அப்படி என்னத்தான்
ரகசியம் பேசுகிறது
காற்று உன்னிடம்?
வானம் கோபம் கொண்டு
சிவக்கிறது?!
3.பூவே..
உன்னோடு போட்டியிட
விருப்பமில்லாத தால்
வருகிறது நிலவு
இரவில்!
4.பூவே..
உன் மென்மையை அறிய
மூலமாகத்தான் பிறக்க வேண்டும்
நானும்!
நதிக்கரையில் நாணல்புல் நாட்டிய மாடும்
***நடைபழகும் தென்றல் நறுமணமாய் வீசும் !
மதிவரவைக் கண்டால் மலர்ந்திடு மல்லி
***மயக்கிடும் நெஞ்சம் மகிழ்வினைச் சொல்லி !
அதியழகு மாலைதான் ஆனந்தம் சேர்க்கும்
***அரும்புகின்ற ஆசையிலே ஐம்புலனும் தோற்கும் !
உதிராத பூவாசம் உள்ளத்தை யள்ளும்
***உணர்வுகளில் ஊற்றெடுக்கும் உற்சாகம் தானே !
( வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம் )
ஏதோ ஒரு தருணத்தில்
தன் தனித்தன்மையை
தவறாமல் உண்ர்த்தும்
தனிமை!
தனிமையை அழிப்பது
நட்பெனும் உணர்வே!
தனிமையே...
தங்கி விடாதே..
உன் ஆசைக்கு
சிறிது நேரம் பிடித்துவிட்டு
சென்று விடு!
எப்போது வந்தாலும்
எத்தனை முறை வந்தாலும்
தனிமை அழையா விருந்தாளியே!
சேர்ந்து நகரும்
கடிகார முட்களை நோக்கி
தனிமையில் நான்..
கண்டேண் உனை நான் ஒரு நாளே..
அதுவே எனக்கு திருநாளே!
மனதில் புகுந்து ஆட்கொண்டாய்..
மணத்திலும் இணைந்து எனைக்கொண்டாய்!
மனதில் உதித்த என் ஆசைகள்..
மௌனத்தில் கலக்கும் அதன் ஓசைகள்!
சொல்லாமல் அடைந்தன. உன்னிடம்..
கேளாமல் நிறைவேற்றுவாய் அவ்விடம்...
கனவுகள் நிஜமாவது கண்டு...
அதிசயித்து நான் நின்றதுண்டு!
ஆல் போல் உறவு கிளைகள்..
வேறூன்றும் உன்னருகே அதன் விழுதுகள்..
முதியோர் தனை பேணிக்காக்க
கற்க வேண்டும் உன்னிடம் வி.ரைவாக!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை..
இனிதாக்கியது உன் சேர்க்கை!
அடைந்தேன் உனை முற்பிறவியின் பயனால்..
அடைவேன் உனை மறுவிலும் புண்ணியத்தால்...
பெயரில் நீ கொண
கார்முகில் நீலவானத்தை மூட..
சில் என வாடைக்காற்று மேனியை தீண்ட ..
மழைத்துளி வேகமாய் மன்னைசேருமே !
மண்வாசம் இதமாய் சுவாசத்தில் ஏறுமே !
மின்னல் மின்னி இடியும் ஒலிக்கும்,
துளிகள் பூமியில் ஜலதரங்கம் வாசிக்கும் !
ஊசியாய் மழைத்துளி மேனியை சீண்டும் ...
தீண்டலின் சுகத்தால் மனமும் வேண்டும்!
மழைத்துளி தொட தொட சிலிர்த்தது மலர்கொடி..
பூமியின் தாகமும் வான்மழையால் தீர்ந்ததடி !
பச்சை கம்பளமும் பாய்ந்தோடும் நீரோடையும்..
சொர்க்கமாய் மாறும் பூமியின் மேலாடையும் !
வான்மழையின் தூதாய் தட்டான்கள் வட்டமிடும்..
வந்த மழை நின்றதும் ஈசல்கள் கொட்டமிடும் !
ஆனந்த வெள்ளத்தில் தவளைகள் கொரகொரக்கும்..
வண
விடிந்தும் விடியாத பொழுதினில் ...
மலர்ந்தும் மலராத மலரினில் ...
அமர்ந்தும் அமராத நிலையினில் ..
ஒரு துளி ! சிறு துளி ! பனித்துளி !
அரும்பே ! அரும்பே ! அருமை அரும்பே !
மலராய் 'மலராய் ' இன்று நீ அரும்பே !
மன்றாடியது பனித்துளி தன் வெட்கத்தை விட்டு !
மலர்வதே அரும்பின் இயற்கை என்பதை மறந்துவிட்டு ?!
இதழ் விரித்து அரும்பு மலர்ந்தது ..
தன் விதியை நொந்து பனித்துளி விழுந்தது ..
மறைய வேண்டாம் மண்ணுள் நட்பு ..
என்று சிறுபுல் தாங்கி தந்தது பாதுகாப்பு !
களைப்பில் ஆழ்ந்தது பனித்துளி நித்திரையில் ..
ஆதவன் அணைக்க கரைந்தது காற்றுதனில் !
ஒவ்வொரு முறை காற்று தன்னை கடக்கும் போதும் ...
தலை வணங்கும
மூன்று எழுத்து தமிழ் வார்த்தையில் ..
மறைந்திருப்பது
வாழ்கையின் அகராதியே!
நுண்ணிய உணர்வுகளின் புரிதலில் நீ ...
புரியாத உணர்வுகளின் சிக்கலில் நான்!
நிகழ்கால நடவுகளில் நீ...
கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் நான் !
அன்பு ,அரவணைப்பு தேடலில் நீ...
பேரும் புகழும் தேடலில் நான் !
வாழ்கிறோம் நன்றாகவே எதிரும் புதிருமாய்...
காலமெல்லாம் ஈர்ப்பது தான் என்னவோ?