மதிபாலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிபாலன்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2015
பார்த்தவர்கள்:  897
புள்ளி:  370

என்னைப் பற்றி...

வாசனைகளால் பேசும் மலர்களைப் போல புன்னகையை வீசும் இதயங்களைப் பிடிக்கும் பூகம்பங்களுக்கும் அசையாத மலைகளாக நேசங்களை சிந்தும் நெஞ்சங்களைப் பிடிக்கும் அன்பினால் கட்டிப்போடும் அதிசயங்களைப் பிடிக்கும் சந்திக்காமலே சங்கமிக்கும் சொந்தங்களைப் பிடிக்கும் !--மதிபாலன்

என் படைப்புகள்
மதிபாலன் செய்திகள்
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2025 12:53 pm

மஞ்சள் நிறத்தழகி மைபூசும் கண்ணழகி
கொஞ்சுமொழி சொல்லழகி கூப்பிட்டாள் - நெஞ்சம்
படபடக்க சென்றேன் பலநூறு பூக்கள்
சுடர்விடும் சொர்க்கம் அவள்!

மேலும்

மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2025 3:31 pm

காதலும் வீரமும் கண்களாய் கொண்டவன்
மீதமே இல்லாமல் மென்மனம் தந்தவன்
உந்தன் பெயரை உருகியே வாசித்து
சிந்தையில் வைத்தேன் சிறை

மேலும்

மதிபாலன் - வசிகரன்க என்கிற சிவகுமார் க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2025 3:24 pm

எதிரெதிரே தொடரிகள்
எதிரெதிரே அருகருகே
அவனும் அவளும்
காட்சி பிம்பமாயவள்
கண்ணீர் தெப்பமாயவன்

அவனின் நினைவலைகள்
அவளுள் வளர்ப்பிறைகள்
அவளின் உணர்விழைகள்
அவனிதயத்தை துளைத்தன
பல முறைகள்

பெண்ணின் வலிகள்
கண்ணீர் துளிகள்
ஆணின் மௌனம்
ஊமை மொழிகள்
உலவும் புலனம்

நகரும் தொடரிகள்
தளரும் முளரிகள்
தகருமா இடறுகள்

மேலும்

அருமை 19-Sep-2025 4:25 pm
மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2025 10:34 pm

பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!

மேலும்

நன்றி 19-Sep-2025 4:21 pm
உண்மை 18-Sep-2025 8:22 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2025 10:34 pm

பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!

மேலும்

நன்றி 19-Sep-2025 4:21 pm
உண்மை 18-Sep-2025 8:22 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2025 1:47 am

கண்ணுக்குத் தெரியாத
எதோ ஒன்று
உனக்கும் எனக்குமிடையில்
ஓடிகொண்டிருக்கிறது. ..

நீ எத்தனை தூரத்தில்
இருந்தாலும்
அது உன் இதயத் துடிப்பை
என் செவியில் ஒலிபரப்புகிறது. ..

நினைவுகளின் தளும்பலில்
விளிம்பு வழிந்து நனையும் என்னை
துவட்டிவிட வா. ..
என் தேவதையே!

மேலும்

மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 10:41 pm

நெருங்கி வந்து
விலகி நிற்பது
நீயா இல்லை நானா?

நெருப்பைக் கொட்டி
நெஞ்சை நிறைப்பது
நீயா இல்லை நானா ?

மேலும்

முற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி ! 28-Jul-2018 9:46 pm
காதல் விவாதம் விடை கண்ணீர் ... 28-Jul-2018 9:04 pm
விருப்பத்துடன் விலகல் நிகழவில்லை ! விவரித்து வருத்த நினைக்கவில்லை ! நன்றி ! 27-Jul-2018 4:46 am
காதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா ? நன்றி ! 27-Jul-2018 4:35 am
மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2018 4:25 am

பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள் பேசும் !
பார்க்காமல் இருந்தாலும்
மனக்கண்கள் பார்க்கும் !
தூரத்தில் இருந்தாலும்
எண்ணங்கள் சேர்க்கும் !
தடை கோடி இருந்தாலும்
இதயங்கள் தாண்டும் !

மேலும்

நன்றி ! 12-Jul-2018 8:17 pm
காதல் எனும் அன்பினால் அருமை.... 12-Jul-2018 7:51 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 4:58 pm

இப்போதெல்லாம் என் உடலில் ஒரு பிணத்தின் வாடை அடிக்கிறது உங்களுக்கு தெரியுமா..
ஆம்.. என் உடலில் ஒரு பிணம்
இருக்கிறது..
கால்கள் மண்டியிட்டு
கைகள் கூப்பி மன்னிப்பு
கோரிய நோக்கில் மரணித்திருக்கிறது அது..
அதன் கசந்த மனம் சுமந்த வெம்மை இன்னும் என்னை தகிக்கிறது...
நான் கேட்க
துணியாத மன்னிப்பை ஒரு சிலுவையென
சுமந்த நொடியில் மரணம் நேர்ந்தது அதற்கு...

-வித்யா

மேலும்

அருமை 28-Feb-2018 4:21 pm
ஆழமான பார்வையில் செல்கிறது 28-Feb-2018 3:59 pm
மரணம் நிலையில்லை மீண்டும் பிறப்போம் ! கசப்பும் நிலையில்லை மீணடும் இனிப்போம் ! வாழ்த்துக்கள் ! 25-Feb-2018 6:28 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2018 6:28 pm

மலர்களின் உரசல்கள் விளைத்த பூகம்பம்
பறவைகள் மிதித்தபோது கசங்கிய பாறை
வரிசை எறும்புகள் மீது
மலைகளை தழுவிய காற்று நிகழ்த்திய
வன்போர் காதல்...

புதுவெளியின் பெருவெளிச்சம்
ஆதி மரத்தின் நிழலில் உதித்த உயிர்...
உலகின் முதல்மழை காதல்...

வனங்களில் எச்சமிடும் பறவை
மலர்களில் முயங்கும் வண்டு
இயற்கையின் புணர்ச்சி காதல்...

-வித்யா சிவலிங்கம்

மேலும்

மிக இனிமை 28-Feb-2018 3:58 pm
Nice. How r u 23-Feb-2018 11:43 pm
மதிபாலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2012 12:23 am

காலை நேரம்
வீதியை பெருக்கி
கழுவிக் கொண்டிருந்தான்
சோலை
"என்ன காலங் காத்தால
மந்திரி வாராகளா " என்றாள்
"ஆமா சுந்தரி நீ வாரேயிலே
அதான் " என்றான் சோலை
"என்ன கிண்டலா ...
கொஞ்சம் கைல தண்ணி ஊத்து "
என்றாள் அஞ்சலை
"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா "
ன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்
"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு
பல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு
நிக்கனமாக்கும்
ஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்
நனைச்சுப் புட்டியே சீ "
"அட கோயிச்சுகாத அஞ்சலை
ட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்
அந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்
எடுத்து வச்சிருக்கேன் மரத்துக்குப்

மேலும்

சிறப்பாக கருதுரைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தூப்புக்காரி நாவலை படித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி சகோதரி அஜந்தா . ----அன்புடன், கவின் சாரலன் 21-Sep-2014 3:23 pm
மிகவும் நன்றி ரசித்துப் படித்தமைக்கு சந்தோஷ் . இன்று தான் பார்த்தேன் -----அன்புடன் , கவின் சாரலன் 21-Sep-2014 3:14 pm
அருமை. சொல்வளம் உங்கள் விரல்களில் விளையாடுகிறது தோழரே.. நன்றி. இது போல் இன்னும் உங்களின் படைப்பாய் உலாவர, அதை நங்கள் கண்டு பரிமாற தயார். தொடருங்கள். அருமை. தெருவோர மக்களுக்கும் காதல் பூக்கும், அவர்களும் மனிதர்களே என்பதை தெளிவாக சொல்லிவிடீர்கள். நீங்கள் சொன்னது சரியே..... தூப்புகாரி நாவல் கூட இதுபோலத்தான். அனால் அதில் ஒரு தாயின் வலி வெளிபடுகிறது, அதை படியுங்கள் தோழரே. நன்றி. 21-Sep-2014 2:50 pm
கதையா ? கவிதையா என்று என் மனதில் அரங்கேறிய பட்டிமன்றத்தோடுதான் இப்படைப்பை படித்தேன். உங்களின் சொல்லாட்சியில் தமிழ் குடிமகனாக நான் மகிழ்ந்தேன் (( இதுக்குத்தான் நனைச்சியா ?" " அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன் எடுத்தாந்தேன் " )) நனைச்சியா ? நெனைச்சேன் என்ற ஒரு சந்தம் இரு அர்த்தம் .... ஆஹா மிகவும் ரசித்தேன். நான் மெய் மறந்த கதை இது . நன்றி ஐயா ! 26-Sep-2013 11:27 pm
மதிபாலன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 8:26 am

காற்றுக்கும்
கடலலைக்கும்
வேலி போடுவேன்
கடல் மணலில்
நீ நடந்து வந்த உன்
பாதசுவடுகளை
சிதையாமல் பாதுகாக்க...

மேலும்

அன்பின் ஆழத்தில் ஒருத்தி வாழ்கிறாள் 01-Jul-2017 5:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (40)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே