மதிபாலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிபாலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2015
பார்த்தவர்கள்:  867
புள்ளி:  365

என்னைப் பற்றி...

வாசனைகளால் பேசும்
மலர்களைப் போல
புன்னகையை வீசும்
இதயங்களைப் பிடிக்கும் !

பூகம்பங்களுக்கும்
அசையாத மலைகளாக
நேசங்களை சிந்தும்
நெஞ்சங்களைப் பிடிக்கும்!

அன்பினால் கட்டிப்போடும் அதிசயங்களைப் பிடிக்கும்!

சந்திக்காமலே சங்கமிக்கும்
சொந்தங்களைப் பிடிக்கும் !

--மதிபாலன்

என் படைப்புகள்
மதிபாலன் செய்திகள்
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 5:25 am

உன் கோபத்தை
ரசிக்கிறேன்

நீ சொல்லும் பொய்
அழகாக இருக்கிறது

உன்மையை சொல்லவேண்டும்
என்னும்
உன் தவிப்பு
பிடித்திருக்கின்றது

பிரபஞ்சம்
அங்கீகரித்த பின்னும்
விலகி நிற்கும்
உன் பிடிவாதம் அர்த்தமற்றது

உன் கண்நீர்த் துளிகள்
என்னைக் கரைக்கின்றன

சூழ்ச்சிகள் தேவையில்லை
ஒரு புன்னகை போதும்
என்னை வெல்ல

இப்போதாவது சொல்லிவிடலாம்
அவர்கள் நினைப்பது
நடக்கப் போவதில்லையென்று !

மேலும்

மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 10:41 pm

நெருங்கி வந்து
விலகி நிற்பது
நீயா இல்லை நானா?

நெருப்பைக் கொட்டி
நெஞ்சை நிறைப்பது
நீயா இல்லை நானா ?

மேலும்

முற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி ! 28-Jul-2018 9:46 pm
காதல் விவாதம் விடை கண்ணீர் ... 28-Jul-2018 9:04 pm
விருப்பத்துடன் விலகல் நிகழவில்லை ! விவரித்து வருத்த நினைக்கவில்லை ! நன்றி ! 27-Jul-2018 4:46 am
காதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா ? நன்றி ! 27-Jul-2018 4:35 am
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2018 10:41 pm

நெருங்கி வந்து
விலகி நிற்பது
நீயா இல்லை நானா?

நெருப்பைக் கொட்டி
நெஞ்சை நிறைப்பது
நீயா இல்லை நானா ?

மேலும்

முற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி ! 28-Jul-2018 9:46 pm
காதல் விவாதம் விடை கண்ணீர் ... 28-Jul-2018 9:04 pm
விருப்பத்துடன் விலகல் நிகழவில்லை ! விவரித்து வருத்த நினைக்கவில்லை ! நன்றி ! 27-Jul-2018 4:46 am
காதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா ? நன்றி ! 27-Jul-2018 4:35 am
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2018 8:06 pm

வார்த்தைகள்
பயனற்றுவிடுகையில்
மௌனம் காக்கிறேன்

மௌனம்
காயப்படுத்தும்பொழுது
வார்த்தையுதிர்க்கிறேன்

அசைகிறேன்
ஒரு
புன்னகைக்காக

உறைய வைப்பதும்
உருகவைப்பதும்
உன்விருப்பம்

வானத்துக்கு
எல்லைகளில்லை
கதவுகளும்தான் !

மேலும்

மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2018 4:25 am

பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள் பேசும் !
பார்க்காமல் இருந்தாலும்
மனக்கண்கள் பார்க்கும் !
தூரத்தில் இருந்தாலும்
எண்ணங்கள் சேர்க்கும் !
தடை கோடி இருந்தாலும்
இதயங்கள் தாண்டும் !

மேலும்

நன்றி ! 12-Jul-2018 8:17 pm
காதல் எனும் அன்பினால் அருமை.... 12-Jul-2018 7:51 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2018 4:25 am

பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள் பேசும் !
பார்க்காமல் இருந்தாலும்
மனக்கண்கள் பார்க்கும் !
தூரத்தில் இருந்தாலும்
எண்ணங்கள் சேர்க்கும் !
தடை கோடி இருந்தாலும்
இதயங்கள் தாண்டும் !

மேலும்

நன்றி ! 12-Jul-2018 8:17 pm
காதல் எனும் அன்பினால் அருமை.... 12-Jul-2018 7:51 pm
மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2018 8:20 pm

வண்ணம் தொடாத தூரிகையால்
ஓவியம் வரையும்
விரல்களின் ஆசை
என்னவென்று சொல்லமுடியும்
மூடிய விழிகளால்

கனவில் வரும்
பறவையின் சிறகசைந்த பாதையை
குறித்துவைக்க
ஆதாரமிருக்கிறதா
வானத்தில்

நிரந்தர மேகத்தின் பின்னால்
ஒளிந்துகொண்டு
கண்சிமிட்டும் வீண்மீனை
எப்படி அறிமுகப்படுத்துவது


உள்ளுக்குள் புன்னகைத்து
வெளியில் இறுகிக் கிடக்கும்
பூவின் வாசனை
ஒளிந்துகொண்டிருக்கிறது
ஒரு புதையலைப் போல

விழியோரம்
துளிர்க்கும் துளியில்
மெல்ல மின்னுகிறது
சொல்ல மறந்த
ஓர் அன்பு !

மேலும்

நன்றி ! 25-May-2018 10:18 pm
அருமை சகோ 25-May-2018 9:34 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2018 2:56 pm

பருந்தின் கண்களுக்கு தப்பிப் பிழைத்த
பறவையொன்று சிறு நிழலில் கண்ணயர்கிறது...
உச்சி வானில் சிறகடிக்கும் பருந்தின் பார்வைக்கு
தற்போது புலப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில்
சிறகுகளை அணைத்தவாறு உறங்குகிறது அப்பறவை...
எனினும் இந்த நிழல்...
நிழல் பாதுகாப்பானதா..
பசிக்கு திருடி பாறையின் பின்னால் ஒளிந்தவனை
பல நேரங்களில் காட்டிக்கொடுப்பது இந்த நிழல்தானே...
முன்னாளில் நிழல் போல் நின்றவர்கள் பின்னாளில்
துரோகம் இழைத்த வரலாறு பலவுண்டு...
அவற்றை இப்பறவை அறிந்திருக்குமா...
நீண்டு குறுகிய நிழலின் இப்பகுதி இயற்கையின் எப்பரப்பு..
வளைந்து விரிந்த நிழலின் இந்த பாகம் எந்த உயிரியினுடையது...
மயிர்

மேலும்

கவிதையில் துளி தத்துவம் உண்டு 24-May-2018 9:15 pm
நிழல்கள் நெருப்பாகலாம் நெஞ்சம் பொய் சொல்லுமா நகரும் பருந்து நிழலில் நகரா பறவை இளைப்பாறுமா ? 24-May-2018 4:39 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 4:58 pm

இப்போதெல்லாம் என் உடலில் ஒரு பிணத்தின் வாடை அடிக்கிறது உங்களுக்கு தெரியுமா..
ஆம்.. என் உடலில் ஒரு பிணம்
இருக்கிறது..
கால்கள் மண்டியிட்டு
கைகள் கூப்பி மன்னிப்பு
கோரிய நோக்கில் மரணித்திருக்கிறது அது..
அதன் கசந்த மனம் சுமந்த வெம்மை இன்னும் என்னை தகிக்கிறது...
நான் கேட்க
துணியாத மன்னிப்பை ஒரு சிலுவையென
சுமந்த நொடியில் மரணம் நேர்ந்தது அதற்கு...

-வித்யா

மேலும்

அருமை 28-Feb-2018 4:21 pm
ஆழமான பார்வையில் செல்கிறது 28-Feb-2018 3:59 pm
மரணம் நிலையில்லை மீண்டும் பிறப்போம் ! கசப்பும் நிலையில்லை மீணடும் இனிப்போம் ! வாழ்த்துக்கள் ! 25-Feb-2018 6:28 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2018 6:28 pm

மலர்களின் உரசல்கள் விளைத்த பூகம்பம்
பறவைகள் மிதித்தபோது கசங்கிய பாறை
வரிசை எறும்புகள் மீது
மலைகளை தழுவிய காற்று நிகழ்த்திய
வன்போர் காதல்...

புதுவெளியின் பெருவெளிச்சம்
ஆதி மரத்தின் நிழலில் உதித்த உயிர்...
உலகின் முதல்மழை காதல்...

வனங்களில் எச்சமிடும் பறவை
மலர்களில் முயங்கும் வண்டு
இயற்கையின் புணர்ச்சி காதல்...

-வித்யா சிவலிங்கம்

மேலும்

மிக இனிமை 28-Feb-2018 3:58 pm
Nice. How r u 23-Feb-2018 11:43 pm
மதிபாலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2012 12:23 am

காலை நேரம்
வீதியை பெருக்கி
கழுவிக் கொண்டிருந்தான்
சோலை
"என்ன காலங் காத்தால
மந்திரி வாராகளா " என்றாள்
"ஆமா சுந்தரி நீ வாரேயிலே
அதான் " என்றான் சோலை
"என்ன கிண்டலா ...
கொஞ்சம் கைல தண்ணி ஊத்து "
என்றாள் அஞ்சலை
"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா "
ன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்
"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு
பல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு
நிக்கனமாக்கும்
ஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்
நனைச்சுப் புட்டியே சீ "
"அட கோயிச்சுகாத அஞ்சலை
ட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்
அந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்
எடுத்து வச்சிருக்கேன் மரத்துக்குப்

மேலும்

சிறப்பாக கருதுரைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தூப்புக்காரி நாவலை படித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி சகோதரி அஜந்தா . ----அன்புடன், கவின் சாரலன் 21-Sep-2014 3:23 pm
மிகவும் நன்றி ரசித்துப் படித்தமைக்கு சந்தோஷ் . இன்று தான் பார்த்தேன் -----அன்புடன் , கவின் சாரலன் 21-Sep-2014 3:14 pm
அருமை. சொல்வளம் உங்கள் விரல்களில் விளையாடுகிறது தோழரே.. நன்றி. இது போல் இன்னும் உங்களின் படைப்பாய் உலாவர, அதை நங்கள் கண்டு பரிமாற தயார். தொடருங்கள். அருமை. தெருவோர மக்களுக்கும் காதல் பூக்கும், அவர்களும் மனிதர்களே என்பதை தெளிவாக சொல்லிவிடீர்கள். நீங்கள் சொன்னது சரியே..... தூப்புகாரி நாவல் கூட இதுபோலத்தான். அனால் அதில் ஒரு தாயின் வலி வெளிபடுகிறது, அதை படியுங்கள் தோழரே. நன்றி. 21-Sep-2014 2:50 pm
கதையா ? கவிதையா என்று என் மனதில் அரங்கேறிய பட்டிமன்றத்தோடுதான் இப்படைப்பை படித்தேன். உங்களின் சொல்லாட்சியில் தமிழ் குடிமகனாக நான் மகிழ்ந்தேன் (( இதுக்குத்தான் நனைச்சியா ?" " அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன் எடுத்தாந்தேன் " )) நனைச்சியா ? நெனைச்சேன் என்ற ஒரு சந்தம் இரு அர்த்தம் .... ஆஹா மிகவும் ரசித்தேன். நான் மெய் மறந்த கதை இது . நன்றி ஐயா ! 26-Sep-2013 11:27 pm
மதிபாலன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 8:26 am

காற்றுக்கும்
கடலலைக்கும்
வேலி போடுவேன்
கடல் மணலில்
நீ நடந்து வந்த உன்
பாதசுவடுகளை
சிதையாமல் பாதுகாக்க...

மேலும்

அன்பின் ஆழத்தில் ஒருத்தி வாழ்கிறாள் 01-Jul-2017 5:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (40)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே