செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : செல்வமுத்து மன்னார்ராஜ் |
இடம் | : கோலார் தங்கவயல் - KGF |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 23911 |
புள்ளி | : 1864 |
தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுப் போக்கு...
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டு புதுக்கவிதைகளும் மரபு கவிதைகளும் படைத்து பல விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் மற்றும் நிலாச்சோறு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து இன்னொரு கவிதை நூலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். படிப்பதும் எழுதுவதும் எனக்கு என் சுவாசம் போன்றது...
அலைபேசி எண்: ௯௯௭௨௪௨௪௫௮௯.
மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...
✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...
✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.
ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.
ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!
கவிபாரதீ ✍️
மொழிக்கும் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தான்
அன்பின் ஐந்திணை உலகுக்கு உரைத்தான்
பண்பாடு கலாச்சாரம் நாகரீகத்தில் சிகரம் தொட்டான்
இல்லார்க்கு அள்ளித்தரும் அறத்தை வளர்த்தான்
உழைப்பிற்கு அஞ்சாத உன்னத குணம் கொண்டான்
விருந்தோம்பலுக்கு முன்னோடியாய் வாழ்ந்து காட்டினான்
வீரத்தையும் மற்ற உயிர்மேல் ஈரத்தையும் போற்றி வளர்த்தான்
புறத்திணை போர் யுக்திகளால் உலகை ஆண்டான்
பெண்களை மதிக்கும் பண்பினை வளர்த்தான்
நட்பிற்கும் கற்புண்டு எனும் நட்பிலக்கணம் பாராட்டினான்
தாய்மையே மூலம் என்பதை உலகிக்கிற்கு உணர்த்தினான்
வாய்மையே வெல்லும் எனும் நீதியை புகட்டினான்
மருத்துவத்திலும் அறிவியலிலு
அழகாக இருக்கிறாள்
பொட்டும் பூவும் மெட்டியும்
அவளின் அழகுக்கு அழகு கூட்டுகிறது
தெளிவான தொலைநோக்குப் பார்வையில் நடக்கிறாள்
ஊரார் முகம் சுளிக்கிறார்கள்
புருஷன் போயி சேர்ந்துட்டான்
இவளோட அலங்காரத்தை பாரு...
ஏன்..
என்ன தப்பு
அவளுக்கு இன்னும் இவ்வுலகில் வாழப் பிடித்திருக்கிறது
வாழட்டும்.. விரும்பினால்
மறுமணமும் செய்துக் கொள்ளட்டும்
சாஸ்திரங்களையும் சடங்குகளையும்
தூக்கி எறியுங்கள்
மாறட்டும் விதவைகளும் சுமங்கலிகளாக...
.
மற்றவர்கள் சோறுவைத்தல்
காக்கைகள் வரும்
நீங்க சோறுவைத்தால்
குயில்கள் வரும்
எஸ்.ஜானகி அம்மா...
.
புல்மீது கண்ணாடி
கண்ணாடியில் என் பிம்பம்
பனித்துளி...
.
முதல் இரவு
நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.
தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறை
தூக்கு கயிறு தேவை இல்லை எனக்கு
அவள் துப்பட்டவே போதும் ...
ஹைக்கூ
கார் காலம்
ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.