செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  செல்வமுத்து மன்னார்ராஜ்
இடம்:  கோலார் தங்கவயல் - KGF
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  26122
புள்ளி:  1882

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுப் போக்கு...
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டு புதுக்கவிதைகளும் மரபு கவிதைகளும் படைத்து பல விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் மற்றும் நிலாச்சோறு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து இன்னொரு கவிதை நூலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். படிப்பதும் எழுதுவதும் எனக்கு என் சுவாசம் போன்றது...
அலைபேசி எண்: ௯௯௭௨௪௨௪௫௮௯.

என் படைப்புகள்
செல்வமுத்து மன்னார்ராஜ் செய்திகள்

அறம் தவறிய வரிகளையோ
பெண்களை தாழ்த்தும் சிந்தனைகளையோ
சமூக பிரிவினைவாதத்தையோ
என் எழுதுகோல் ஒருபோதும் எழுதுவதில்லை
ஆகவே என் கவிதையில்
கடவுள் வாழ்கிறான்...

பெண்ணியம் போதிக்கும்
பெண் சிறார்களை மதிக்கும்
கலை கலாச்சாரத்தின்
மாண்பை போற்றும்
உழவனின் உழைப்பை
வணங்கும்
இயற்கையை காக்கும் கடமை
என் வரிகளில் உள்ளது ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுள் இல்லையென்ற வாதத்தை பரப்பும் சிந்தனையாளர்களின்
வழிநடப்பவன் நான்
ஆனாலும் என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுளை நிந்தித்ததில்லை சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக
நல் ஆசானாக
நற்பண்புள்ள நண்பனாக
அறம் செய்ய விரும்பும்
குட

மேலும்

கவின் சாரலன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. 22-Jul-2025 10:04 am
அன்பு மனம் ஆண்டவன் உறையும் ஆலயம் கவிதை சொன்னவிதம் அருமை 18-Jul-2025 9:56 am

அறம் தவறிய வரிகளையோ
பெண்களை தாழ்த்தும் சிந்தனைகளையோ
சமூக பிரிவினைவாதத்தையோ
என் எழுதுகோல் ஒருபோதும் எழுதுவதில்லை
ஆகவே என் கவிதையில்
கடவுள் வாழ்கிறான்...

பெண்ணியம் போதிக்கும்
பெண் சிறார்களை மதிக்கும்
கலை கலாச்சாரத்தின்
மாண்பை போற்றும்
உழவனின் உழைப்பை
வணங்கும்
இயற்கையை காக்கும் கடமை
என் வரிகளில் உள்ளது ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுள் இல்லையென்ற வாதத்தை பரப்பும் சிந்தனையாளர்களின்
வழிநடப்பவன் நான்
ஆனாலும் என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...

கடவுளை நிந்தித்ததில்லை சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக
நல் ஆசானாக
நற்பண்புள்ள நண்பனாக
அறம் செய்ய விரும்பும்
குட

மேலும்

கவின் சாரலன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. 22-Jul-2025 10:04 am
அன்பு மனம் ஆண்டவன் உறையும் ஆலயம் கவிதை சொன்னவிதம் அருமை 18-Jul-2025 9:56 am

உலகிலேயே மிக கொடுமையானது பசி
பசியைவிட மிகவும் கொடுமையானது
நமக்குநாமே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்ணும் வாழ்க்கை...

*✍🏿 செல்வா*

மேலும்

அந்தி நேரம்
யுவதிகள் இருவர்
போட்டிப் போட்டுக்கொண்டு
எனை கீழே விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்கள்
ஒரு யுவதி இதமாக முத்தமிடுகிறாள்
இன்னொரு யுவதி
ஆக்ரோஷமாக முத்தமிடுகிறாள்
ஒருமுறை அவளும்
இன்னொரு முறை இவளும் மாறி மாறி
முத்தமிடுகிறார்கள்
ஆனாலும் எனை கீழே
விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்கள்
நான் வேறாருமில்லை
இலகுவான இறகுப்பந்து...

*✍🏿 கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*

மேலும்

அன்பே...
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் மெல்லியப் புன்னகை...

அன்பே...
எத்தனை பேர்
என்மீது நடந்தாலும் நான் கரையாகவே இருக்க விரும்புகிறேன்
அலையாக நீ வந்து என்னை முத்தமிட்டு செல்வதால்...

அன்பே...
உன்னை முத்தமிடவும்
தயங்குகிறது என் மனசு என் அருவா மீசை
உன் மெல்லிய இதழ்களை காயப்படுத்திவிடுமோ என்பதனால்...

அன்பே...
இந்த மழைத்துளிகளின்
மீது எனக்கு பொறாமையாக உள்ளது உன் அழகிய மேனியோடு
ஒட்டி உரசுகிறதே என்பதனால்...

அன்பே...
உனக்குத் தாலி கட்டுவதை நிறுத்தி
ஒரு தூளி் கட்டவேண்டும்
உன்னிடம் இன்னும் அந்தக் குழந்தைத் தனம் மாறவேயில்லை....

அன்பே...
உன் கூந்தலி

மேலும்

செல்வமுத்து மன்னார்ராஜ் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2024 10:02 am

திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை


அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம் பெறுமா ?

ஏழைக் குடிசைக்குள் வெள்ளி நிலா வலம் வருமா ?
அங்கே
அடுப்பில் உறங்கும் பூனையை விரட்டி அரிசிப் பானையினைத் தருமா ?
இறைவா இதுதான் இவர்களின் கருமா..

இப்படி ஏங்கிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்

தன்நெஞ்சை நிமிர்த்தி நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறான் மட்டன் குருமா
அதற்கு முதல் காரணம் தலைவர் திருமா

லட்சங்களை விதைத்து ஆடி காரில் (மகிழுந்தில்)செல்பவர் அல்ல நீங்கள்
லட்சியங்களை விதைத்து அம்பேத்காரோடு செல்பவர் நீங்கள் ஆம்

மக்களை வெள்ளத்தில் நீந்த வைக்கும் தலைவர் அல்ல நீங்கள்

மேலும்

வணக்கம் நண்பரே... அருமையான வரிகள் அண்ணலின் வழியைக்காட்டி இன்னலைப் போக்கும் வல்லமை படைத்த மாபெரும் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்.. உங்களின் கவிதை வரிகள் அதை மெய்பித்துள்ளது...நன்றி. நண்பர் புதுவைக் குமார் அவர்களே தொடரட்டும் உங்களின் மகத்தான மக்கள் சேவை அது என்றென்றும் புதுவைக்குத் தேவை... வாழ்த்துகள் கவிஞரே... 19-Nov-2024 11:30 am

மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

மேலும்

ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா... 07-Dec-2023 7:14 pm
மௌனம் இனிமை 07-Dec-2023 10:10 am
செல்வமுத்து மன்னார்ராஜ் - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2023 9:57 am

ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!

கவிபாரதீ ✍️

மேலும்

வணக்கம் கவிஞரே.. ஹைக்கூ கவிதைகள் எழுதும் போது முழுவதுமாக விவரிக்க தேவையில்லை சற்று அசைகளின் அளவை குறைத்தே எழுதவேண்டும். சிலவற்றை வாசகனின் புரிதலுக்கு விட்டுவிடவேண்டும். மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்றும் இதுவே. ஈரோடு தமிழன்பன் அவர்களின் ஹைக்கூ கவிதைகளை படித்துப் பாருங்கள்... உங்களின் கவிதையும் வளமாகவே உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். 05-Dec-2023 8:51 am
ஒலியும் ஒளியும் சங்கமிக்கும் நாள் தீபாவளி சரியா சகோ? 04-Dec-2023 10:38 pm
அருமை.. இன்னும் குறைத்து எழுதலாம்.. 29-Nov-2023 12:17 pm
செல்வமுத்து மன்னார்ராஜ் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2020 8:29 am

முதல் இரவு

நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.

தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறை

மேலும்

தூக்கு கயிறு தேவை இல்லை எனக்கு
அவள் துப்பட்டவே போதும் ...

மேலும்

செல்வமுத்து மன்னார்ராஜ் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2019 4:04 pm

ஹைக்கூ

கார் காலம்

ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே