செல்வமுத்து மன்னார்ராஜ் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : செல்வமுத்து மன்னார்ராஜ் |
| இடம் | : கோலார் தங்கவயல் - KGF |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
| பார்த்தவர்கள் | : 26313 |
| புள்ளி | : 1883 |
தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுப் போக்கு...
தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டு புதுக்கவிதைகளும் மரபு கவிதைகளும் படைத்து பல விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் மற்றும் நிலாச்சோறு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து இன்னொரு கவிதை நூலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். படிப்பதும் எழுதுவதும் எனக்கு என் சுவாசம் போன்றது...
அலைபேசி எண்: ௯௯௭௨௪௨௪௫௮௯.
தை மகளின் வருகையால்
பொங்கட்டும் பொங்கல் நம் இல்லங்கள் எங்கும்
மகிழ்ச்சி தங்கட்டும் நம் உள்ளங்கள் எங்கும்
உவகையுடன் சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
இந்த நன்னாளில் நம் கலையும் கலாச்சாரமும்
பண்பும் பண்பாடும் பொங்கட்டும் நம் தமிழர் நெஞ்சங்களில்
கரும்பென இனிதே சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
புதுப்பானை புது அரிசி
புதுப்பருப்பு பசும்பால் புது வெல்லம் கலந்து
பொங்கட்டும் பொங்கல் ஊரெங்கும்
சமத்துவமாய் சொல்வோம்
பொங்கலோ பொங்கல்...
இந்த பொங்கல் நன்னாளில்
நிலம் நீர் நெருப்பு காற்று வானம்
மாடு மாட்டுவண்டி உதவியுடன்
தன் அயரா உழைப்பையும் கலந்து
உலகின் பசிபோக்கிய கண்கண்ட தெய
அறம் தவறிய வரிகளையோ
பெண்களை தாழ்த்தும் சிந்தனைகளையோ
சமூக பிரிவினைவாதத்தையோ
என் எழுதுகோல் ஒருபோதும் எழுதுவதில்லை
ஆகவே என் கவிதையில்
கடவுள் வாழ்கிறான்...
பெண்ணியம் போதிக்கும்
பெண் சிறார்களை மதிக்கும்
கலை கலாச்சாரத்தின்
மாண்பை போற்றும்
உழவனின் உழைப்பை
வணங்கும்
இயற்கையை காக்கும் கடமை
என் வரிகளில் உள்ளது ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...
கடவுள் இல்லையென்ற வாதத்தை பரப்பும் சிந்தனையாளர்களின்
வழிநடப்பவன் நான்
ஆனாலும் என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...
கடவுளை நிந்தித்ததில்லை சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக
நல் ஆசானாக
நற்பண்புள்ள நண்பனாக
அறம் செய்ய விரும்பும்
குட
அறம் தவறிய வரிகளையோ
பெண்களை தாழ்த்தும் சிந்தனைகளையோ
சமூக பிரிவினைவாதத்தையோ
என் எழுதுகோல் ஒருபோதும் எழுதுவதில்லை
ஆகவே என் கவிதையில்
கடவுள் வாழ்கிறான்...
பெண்ணியம் போதிக்கும்
பெண் சிறார்களை மதிக்கும்
கலை கலாச்சாரத்தின்
மாண்பை போற்றும்
உழவனின் உழைப்பை
வணங்கும்
இயற்கையை காக்கும் கடமை
என் வரிகளில் உள்ளது ஆகவே என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...
கடவுள் இல்லையென்ற வாதத்தை பரப்பும் சிந்தனையாளர்களின்
வழிநடப்பவன் நான்
ஆனாலும் என் கவிதையில் கடவுள் வாழ்கிறான்...
கடவுளை நிந்தித்ததில்லை சந்தித்திருக்கிறேன்
தாயாக தந்தையாக
நல் ஆசானாக
நற்பண்புள்ள நண்பனாக
அறம் செய்ய விரும்பும்
குட
உலகிலேயே மிக கொடுமையானது பசி
பசியைவிட மிகவும் கொடுமையானது
நமக்குநாமே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்ணும் வாழ்க்கை...
*✍🏿 செல்வா*
அந்தி நேரம்
யுவதிகள் இருவர்
போட்டிப் போட்டுக்கொண்டு
எனை கீழே விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்கள்
ஒரு யுவதி இதமாக முத்தமிடுகிறாள்
இன்னொரு யுவதி
ஆக்ரோஷமாக முத்தமிடுகிறாள்
ஒருமுறை அவளும்
இன்னொரு முறை இவளும் மாறி மாறி
முத்தமிடுகிறார்கள்
ஆனாலும் எனை கீழே
விழுந்துவிடாமல்
தாங்கிக் கொள்கிறார்கள்
நான் வேறாருமில்லை
இலகுவான இறகுப்பந்து...
*✍🏿 கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்*
திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக் கவிதை
அடித்தட்டு மக்களின் வாழ்வு வளம் பெறுமா ?
ஏழைக் குடிசைக்குள் வெள்ளி நிலா வலம் வருமா ?
அங்கே
அடுப்பில் உறங்கும் பூனையை விரட்டி அரிசிப் பானையினைத் தருமா ?
இறைவா இதுதான் இவர்களின் கருமா..
இப்படி ஏங்கிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்
தன்நெஞ்சை நிமிர்த்தி நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறான் மட்டன் குருமா
அதற்கு முதல் காரணம் தலைவர் திருமா
லட்சங்களை விதைத்து ஆடி காரில் (மகிழுந்தில்)செல்பவர் அல்ல நீங்கள்
லட்சியங்களை விதைத்து அம்பேத்காரோடு செல்பவர் நீங்கள் ஆம்
மக்களை வெள்ளத்தில் நீந்த வைக்கும் தலைவர் அல்ல நீங்கள்
மகளைச் சுமந்த
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகள் கனம் அல்ல கனம் என்று...
✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
ஒரு குளிர்க்கால இளங்காலை
மௌனத்தை போர்த்திக்கொண்டு
மெதுவாக நடந்துப் போகிறேன்
எதிரே ஒரு அடர்ந்த பனிக்காற்று
என்னைக் கடந்துப் போகையிலே
என் மௌனத்தை நலம் விசாரிக்கிறது.
.
ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!
கவிபாரதீ ✍️
முதல் இரவு
நாகரீக மனிதன்
கட்டமைத்த கன்னியமான ஏற்பாடு.
இருவரை தனிமை படுத்த ஊர் கூடி உத்தரவாதம் தருகிறது.
இரு உள்ளங்கள் தனியாக பேசி கொள்ள இரண்டு குடும்பம் ஒரு மனதாக சம்மதிக்கிறது.
இரு வேறு பாலித்தனர் உடலால் இனைய திருமண நிகழ்வு அங்கீகாரம் செய்து கணவன் மனைவி என்று பெயர் சூட்டுகிறது.
தேக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அரங்கேற்ற இரு உள்ளங்கள் துடிக்கும் அற்புத இரவு.
இதுவரை கற்பனையில் சஞ்சாரித்த மானுடம் உண்மையான பள்ளி பாடம் படிக்கும் இரவு.
வெட்கத்துக்கு விடை கொடுத்து
விடியல் வரை வினோத பயணம்.
ஆடை குறைப்பு அதிகரித்து
ஆலிங்க நடனம்
உலகம் மறந்து உயிர்கள் உன்னதம் அடையும் இரவு
முதல் முறை
தூக்கு கயிறு தேவை இல்லை எனக்கு
அவள் துப்பட்டவே போதும் ...
ஹைக்கூ
கார் காலம்
ரூபாய் 999/- செலுத்தி
உங்கள் காரை ஓட்டி செல்லுங்கள். 🚘
- பாலு.