balu - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : balu |
இடம் | : திருவொற்றியூர் |
பிறந்த தேதி | : 17-Apr-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 4193 |
புள்ளி | : 813 |
என்னை பற்றி, நான் டிப்ளமோ மின்னணு பொறியாளர். தனியார் நிறுவனம் ஒன்றில் மூன்று வருடங்கள் பணி புரிந்து, தொழில் கற்று கொண்டு, பின் சுயமாக, சென்னை திருவல்லிக்கேணியில், ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனை, மற்றும் அதனை பழுது பார்த்தல் தொழிலை கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தமிழ் மீது எனக்கு ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்தே காதல் தொடங்கியது. காரணம் எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த ஆசிரியர் திரு. புலவர் ஆறுமுகம் அவர்கள். மிக அருமையாக தழிழ் பாடம் நடத்துவார். பின் டிப்ளமோ படிக்கும் போது ஏறகுறைய தமிழை மறந்தே விட்டேன் என்று கூட சொல்லலாம். பிறகு வேலை, அதன் பின் வியாபாரம் என்று வாழ்க்கை பயணிக்க, திரும்பவும் தமிழ் மீது அக்கறை, என்னுடைய கைபேசியால் வந்தது. பட்டிமன்றம், கவியரங்கம், விவாதமேடை இப்படி பல தமிழ் அறிஞர்களின் அபார பேச்சு என்னை கவர்ந்தது. மிகவும் ஈர்த்தது. ஞாயிறு மாலை வேளையில் தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, தமிழில் எழுத தொடங்கினேன். எழுதுவதற்கான தளத்தை தேடினேன். எழுத்து.காம் என் எண்ணத்தை பூர்த்தி செய்தது. தமிழ் மிக பெரிய சமுத்திரம். நான் கற்ற தமிழ் துளி கூட இல்லை. அந்த துளியை கடலாக நினைத்து ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் இந்த தளத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், மற்றும் கவிதையை படிக்கும் அன்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். என் எழுத்துகளை உலகறிய செய்த எழுத்து.காம் க்கு என் நன்றிகள். வாழ்க தமிழ். தமிழால் அனைவரும் இனைந்தோம். தமிழை காப்போம்.
-பாலு
பண்பாடு
மரகொத்தி பறவைகளின்
மாநாட்டிலே கூட பண்பாடு
பற்றி தான் பேச்சு.
சுவர் பல்லிகள் கூட
பண்பாடு பற்றி
சுழன்று, சுழன்று
பேசுகின்றன.
விடுபட்ட வால்களை பற்றி
அவை கவலை பட்டதே
இல்லை.
பல்லி விழுவது பற்றி
பலன் சொல்லும்
இவர்களுக்கு தான்
பெரும் கவலை.
தான் கிழே விழுந்தால்
சமாதி கிட்டுமா
இது பல்லிகளின்
கவலை.
எது பண்பாடு.
தவறு செய்தால்
வருத்தம் தெரிவிப்பது
பண்பாடு.
தெரிந்து தானே
தவறே செய்கிறார்கள்.
வருந்துகிறோம்
என்ற தமிழ் வார்த்தை
ஒரு காயடிக்கப்பட்ட
காமதேனு.
இது பிழை திருத்தும்
பகுதியில் பிழைப்பு
நடத்திக்கொண்டிருக்கிறது.
ஏசு நாதரே! ஏசு நாதரே!
நீர் அன்று பூமையை
தைக்க வ
சமுதாயம்
நாம் அறுந்த கயிற்றில்
பொத்த தோண்டியில்
தண்ணீர் இறைக்கும்
கிணற்று தவளைகள்.
நாம் காதுகளை இழந்த
கத்திரிகோல்கள்.
பசுக்களின் காம்புகளை வாடகைக்கு விட்டுவிட்டு
தினம் ஆவின் பாலுக்காக
அலையும் ஆயர்பாடி கண்ணண்கள்.
வெக்கம், மானம், ரோஷம்
மறந்துவிட்ட மானுட பதர்கள்
நகரத்தில் வீடு கேட்டு
வீதிவீதியாக திரியும்
எட்டு கால் பூச்சுகள்
எட்டாய் வெட்டின சமயங்கள்
சமுதாயத்தை
பதினாறாய் பிளந்தன அரசியல்
கட்சிகள்
நூறாய் நொய்ய புடைத்தன
சாதிகள்
தான் படைத்த கடவுளுக்கே
பக்தன் ஆனான்
தான் கண்டுபிடித்த பணத்துக்கே தினம்
விலை போனான்
அரசாங்கத்தை நிறுவி
தவனை முறையில் அதற்கே அடிமையானான்
எந்திரம்
ஆசையுள்ள பொம்மைகள்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். கதை 'செல் போன்' பயன்பாட்டில் இல்லாத காலம்.
"ரமேஷ், எனக்கு ஆப்டர்நூன்( after noon) பிராக்டிகல் கிளாஸ் இருக்கு ரெண்டு நாளா வீட்ல போன் அவுட் ஆஃப் ஆர்டர் அதனால வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியல, நீ உங்க வீட்டுக்கு போற வழியில் தானே எங்க வீடு, ப்ளீஸ் ஈவினிங் 5'o' கிளாக் மேல தான் நான் வீட்டுக்கு வருவேன்னு எங்க வீட்ல இன்பார்ம் பண்ணிடு... என்ன"
" கண்டிப்பா வைசாலி. நீ வர லேட்டாகும்ன்னு உங்க வீட்ல சொல்லிட்டு தான் எங்க வீட்டுக்கு போவேன், சரி யார் உங்க வீட்ல இருப்பாங்க"
" அம்மா இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லை. ஏன
காதல் பறவைகள்
கண்ணீரில் கரையும்
காதல் பறவைகள்
சோகத்தில் மிதக்கும்
சொக்க தங்கங்கள்
வேதனையில் வாடும்
காதல் பூக்கள்
சூழ்நிலை கைதியான
தியாக சீலர்கள்
மணகோட்டை கட்டிய
மணல் பொம்மைகள்
மாசுயில்லா காதல் செய்த மாணிக்கங்கள்
காதல் புறாகள்
காலத்தால் அழிக்க முடியாத காதல் சிற்பங்கள்
மூக்கோடு மூக்கு உரசிய
உள்ளங்கள் இணைந்தாலும்
ஊர் இடம் கொடுக்கவில்லை
அங்கங்கள் அணைத்தாலும்
அகிலம் விடவில்லை
பறவைகள் சிறகடித்து
பறந்தாலும்
பாச அம்பு பாய்ந்து
சிறகொடித்து சின்னாபின்னம் ஆக்கியதே
காதல் கோட்டை
அந்தஸ்து பீரங்கியால்
சுக்குநூறு ஆனது
சாதி அணுகுண்டால்
தரைமட்டம் ஆனது
ஏழை காதல்
எள்ளி நகையாட
பனையோலை ஏடெடுத்து,
பைந்தமிழை விரலுடுத்தி,
பாகு தமிழ் வகிடெடுத்து,
பாற்கடலோன் புகழ் சொல்ல
பல நூறு பாட்டெடுத்தான்,
பாருள்ளோர் வியந்த நிற்க.
வல்லின தாடகை
வதம் முடித்து,
இடையின அகலிகை
கல்லிடை மீட்டு,
மெல்லின சீதையின்
நுண்ணிடை சேரும்,
ஒப்பற்ற காவியத்தின்
ஓட்டத்திலே,
ஓங்கு மொழிச் சிறப்பை
ஒட்டியிருந்தான்.
வில்விடு அம்பின் வேகம் காட்ட,
சொல்லில் சுடுசரம் கட்டுகிறான்.
சொல்லென உட்புகும் கூர்அம்பு
பொருளெனப் போகும் வேளை,
சொல்லுக்கும் பொருளுக்கும்
எல்லை வகுத்துச் சொன்னான்,
சொல்லின் சுரங்கத்து
சொந்தக்காரன்.
சரயு நதி உலகுக்கு கொடுப்பது
நீரில்லை, அது
பரவும் நீராய்ப் பாருக்குத
உன்னைப் பற்றிஎழுதும் பொழுது மட்டும்உற்சாகம் கொள்ளும்பேனாமுனைவேறு எப்பொழுதும்இல்லாத வகையில்வேகமாய் எழுதி நிற்கும்.!!நீ இல்லாத நாட்களிலும்நீங்காமல் உடனிருப்பதுஉன்நினைவுகள் மட்டும்தான்.!!அந்த நாள் முழுவதுமேஅறுதியாய் நீ...இதழசைத்த வார்த்தையில்தான்இளைப்பாறிக் கொண்டிருக்கும்.!கடும் கோடையில்சாரல் மழையாய்எதிரில் நீஎதிர்ப்படுகையில்ஈர்த்துக் கொள்கிறாய்என்னை..!!உன்...பார்வை ஒளி கீற்றில்பாதையை தேடுகின்றேன்.!!நீல மணிக்கண்ணில்நித்திரை தொலைத்திருப்பேன்.!நீ கடித்து கொடுத்த கொய்யாஞானப் பழம்தான்எனக்கு.!!அழகாய் நீ...வெட்கப் படுகையில்...பொறாமைப்படுகின்றனபூக்கள்.!!பொறுமையாய் அவைகளுக்குபுரிய வைக்கின்றேன் நான்.!!என்
மகளிர் தினம் கவிதை 💥
பெண்னே! வீர நடை பழகு💪
அது என்ன சம உரிமை.
பெண்களுக்கு சம உரிமை.
இன்னும் எத்தனை காலங்களுக்கு
இப்படி பேசுவீர்கள், ஏமாற்றுவீர்கள்.
ஆண் ஆதிக்க சமூகம் என்று
வெற்று பேச்சு வேறு.
எல்லாம் மாறிப்போச்சு.
காலம் எங்கள் கையில்.
எங்களை அடைக்கி வைத்த காலம் மலையேறி போச்சு.
புராண கதைகளை சொல்லி
சாஸ்திர சம்பரதாய முறைகள் சொல்லி
எங்களை இனி மேல் ஒடுக்க முடியாது, அடக்க முடியாது.
மகப்பேறு அடையும் பெண் பல மடங்கு ஆணை விட சக்தி வாய்ந்தவள்.
இது விஞ்ஞான உண்மை.
பல துறைகளில்
சாதித்து விட்டோம், இனியும் நிறைய சாதிப்போம்,
சுதந்திரமாக.
பெண் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவள்
என் காதலி. 🌹
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
காதல் வந்தது
அது ராமாயணம்.
அவளும் நோக்கினாள்
நானும் நோக்கினேன்
எங்கள் காதல் பிறந்தது.
பிறை நிலா
அவள் புருவம்.
வண்ண மீண்கள்
அவள் கண்கள்.
என் நெஞ்சை தைக்கும்
அம்பு
அவள் பார்வை.
காந்த விழியாளின்
கண்ணம்
இரண்டும் சந்தன கிண்ணம்.
அவள் இதழ்கள் கொவ்வை பழம்.
கொடியிடையாளின் நடை அழகோ
மான்களின் ஒட்டம்.
அவளை தாவணியில்
பார்க்க வேண்டுமே
காண
கண்கள் கோடி வேண்டும்
ரசிப்பதற்கு
அதுவும் அந்த மஞ்சள் நிற
தாவணியில்
அற்புதம்.
அவளே இனி
தரணியில் ஒரே அழகி.
ரதிக்கும் மன்மதனுக்கும் கடுமையான
சண்டையாம்.
இவள் அழகில்
மயங்கி மன்ம
இரவு💕
நிலவே நீ
நீல வான நீச்சல் குளத்தில் நீந்தியது போதும்.
எழில் நிலவே
எழுந்து வா
மிகவும் குளிர் இருந்தால்
அந்த வென் மேகத்தை
எடுத்து போர்த்தி கொள்.
ரொம்பவே சிரிக்கும்
நட்சத்திர கூட்டமே
என்னவள் சரிப்புக்கு
நீங்கள் எம்மாத்திரம்.
கண்களால் கவிதை சொல்லும்
இளம் பாவையே வா
உன் சிங்கார
சிரிப்பை
கொஞ்சம்
அவிழ்த்து விடு
அந்த நட்சத்திர கூட்டம்
அவ்வியம் அடையும்.
என் அழகிய இளவரசியே
அந்த நிலவிடம்
நேரடியாக கேட்கவா
நீ அழகியா
அல்லது வென்னிலவா என்று.
எங்கே அந்த நிலவை
காணவில்லை
உன் எழில் வடிவத்தை
கண்டு நாணி
கரு மேகத்திடையே மறைந்து கொண்டது.
என் எதிரில் நிற்கும்
மழையில் நினைந்த புறாக்கள். 🌧
மழையில் நினைத்த இரண்டு புறாக்கள்.
தஞ்சம் அடைந்தது ஓர் அறையில்.
இரண்டும் குளிரில் நடுங்கியது.
மழை விட்டபாடில்லை.
இரண்டும் வெளியே செல்ல வாய்ப்பில்லை.
ஆடை முழுவதும் நினைந்த புறாக்கள்.
வேறு ஆடைகளுக்கு எங்கு செல்லும்.
ஆண் புறாவின் கண்கள் பெண் புறாவின் கழுத்துக்கு கீழே ஒரு நொடி சென்றாலும், சின்னதாக துளிர்விட்ட
காமத்தை விழுங்கி
கண்ணியத்தை இயல்பாக கடைபிடித்தது.
பயம் ஒரு பக்கம்,
வெட்கம் ஒரு பக்கம்,
எப்படியோ ஆடையின் ஈரத்தை உலர்த்தியது பெண் புறா.
நன்றி என்றது பெண் புறா.
எதற்கு என்றது ஆண் புறா.
எதற்காக திரும்பி திசை மாறி நின்றீர்களோ அதற்காக.
ஏன் பதில்