எந்தன் உயிர் நீயன்றோ

உன்னைப் பற்றி
எழுதும் பொழுது மட்டும்
உற்சாகம் கொள்ளும்
பேனாமுனை
வேறு எப்பொழுதும்
இல்லாத வகையில்
வேகமாய் எழுதி நிற்கும்.!!

நீ இல்லாத நாட்களிலும்
நீங்காமல் உடனிருப்பது
உன்
நினைவுகள் மட்டும்தான்.!!

அந்த நாள் முழுவதுமே

அறுதியாய் நீ...
இதழசைத்த வார்த்தையில்தான்
இளைப்பாறிக் கொண்டிருக்கும்.!

கடும் கோடையில்
சாரல் மழையாய்
எதிரில் நீ
எதிர்ப்படுகையில்
ஈர்த்துக் கொள்கிறாய்
என்னை..!!

உன்...
பார்வை ஒளி கீற்றில்
பாதையை தேடுகின்றேன்.!!
நீல மணிக்கண்ணில்
நித்திரை தொலைத்திருப்பேன்.!

நீ கடித்து கொடுத்த கொய்யா
ஞானப் பழம்தான்
எனக்கு.!!

அழகாய் நீ...
வெட்கப் படுகையில்...
பொறாமைப்படுகின்றன
பூக்கள்.!!
பொறுமையாய் அவைகளுக்கு
புரிய வைக்கின்றேன் நான்.!!

என் தூர கனவுகளுக்கு
சொந்தக்காரி
நீ என்றால்..
உன் விழிப்பாவையின்
விழாநாயகன்தான் நான்...

என் வாழ்நாளின் குறிக்கோள்
நீ என்றால்...
உன் வாழ்க்கையின்
உருவம்தான் நான்.!!

நான் இன்றி நீயோ...
நீயின்றி நானோ...
நிச்சயமாய்...
நன்றாக இருந்திருக்காது.!!

கூட்டுப் பொருளாக...
காதல் இருக்கிறது.!!
மீட்க விரும்பாமல்...
தொலைந்து போனோம் அதில்.!!

///---///---///
மருத கருப்பு.

(என் காதல் மனைவிக்கு எழுதியது)

எழுதியவர் : மருத கருப்பு (8-Aug-20, 10:14 am)
பார்வை : 312

மேலே