வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
| இடம் | : sydney |
| பிறந்த தேதி | : 17-Mar-1944 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
| பார்த்தவர்கள் | : 89147 |
| புள்ளி | : 8289 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
கொடுக்கத்தான் தெரியும் மழைமேகத்திற்கு
என்றும் கொடை வள்ளல்கள் ....
அன்று அழகப்பர்
எங்கோ வான வீதியில் பறந்து கொண்டிருந்த
பருந்து
இப்போது தரையை நோக்கி இறங்கிவர
விமானம்போல் கீழ்நோக்கி வந்தது
இப்போது ஒரு வட்டமிட்டு சுற்றி சுற்றி
வந்தது
அதன் கண்கள் எங்கோ ஒரு புள்ளியில் ஐக்கியம்
தீபாவளி எப்போது வரும் என்று
ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் காத்திருப்பான்
அன்றுதான் அவள் முகம் பூரிப்பில்
அன்றலர்ந்த செந்தாமரையாய் ஜொலிக்கும்
'போனஸ் ' பணத்தில் அவன் வாங்கித்தந்த
புத்தம் புது வெள்ளி கொலுசு காலுக்கு
பிறப்பும் இறப்பும் மாறி மாறி
துரத்தும் மானிடரை மண்ணில் பிறந்தபின்
இறத்தல் என்பது உறுதி ஆதலால்
இத்துன்பம் இல்லாதிருக்க எல்லாம்வல்ல
இறைவன் பாதமே துணை என்று
வாழ்நாளில் நமக்கெனும் பணி எதுவோ
அதை ஓர் வே
#பார்க்கும் இடமெல்லாம் பாரதி
காணிநிலம் வேண்டி நின்ற
கவிதைக்காரன்
கழனிநிலம் காணும்போது
காட்சி யளிப்பான்
சாதிமத சாத்திரங்கள்
மடமையெல்லாம்
சாகடிக்கும் பேரி லெல்லாம்
நிறைந்திருப்பான்
அடிமைத்தனம் போக்க வேண்டும்
போரதனில்
அன்பர்களின் உருவி லென்றும்
அவனிருப்பான்
கண்ணம்மா என்று ரைக்கும்
அன்பிலெல்லாம்
கண்ணியவான் பாரதி தான்
கனிந்திருப்பான்
வான்நோக்கும் மீசை கொண்ட
ஆணிலெல்லாம்
வலிமையான பாரதியை நாமும்
கண்டோம்
தேன்சொட்டும் கவிதை யெவர்
படைத்தபோதும்
தெள்ளுத்தமிழ் சுப்பிர மணியைக்
கண்டோம்
காஞ்சிப் பேச்சு காசியிலே
கேட்குமென்ற
கவிஞனவன் காட்சி தானே
கைபேசிதன்னில்
மெய்ஞானப் பேச
உருத்திராட்ச மாலை உயர்மார்பில் ஓம்ஓம்
கருநாகப் பாம்புத் திருக்கழுத்தில் நீலம்
திருநீற்று நெற்றி பொறிநெருப்பு செங்கண்
ஒருபாதி அம்மை ஒருபாதி அப்பன்
இருவேறில் லைநீ இயம்பு
திங்கள் தழுவயிளம் தென்றல் தழுவமென்
மங்கை செழுமுலை மார்பு தழுவிநின்ற
வன்நெஞ்சைக் காற்றுறவு நீக்கி விடைபெறின்
என்செய்யும் பாழும் உடம்பு
புன்னகை ஆறே பொன்னெழி லாளே
புந்தியி லேதோ தகராறே
உன்னெழி லோடே ஒன்றிய தேதோ
உன்னத மாகா துறலாமா
*
முன்னுரை காணா முன்னணி யேடா (ய்)
முன்வரு வாயே முகநூலா
மின்மினி யாளே மென்னிடை யூடே
மின்னலை ஏனோ வரை(ந்)தாயோ
*
கன்னலி னூரே கண்ணகி யாளே
கண்களி னாலே கதைபேசா
கன்னியு(ன்) னாலே கண்ணிமை ஏதோ
கண்டது தானே கனவாயே
*
மன்மத னோதா மந்திர(ப்) பூவே
மன்னவ னோடே வருவாயா
அன்பொடு நாமே இன்புற லாமே
அந்நிய மாகா தழகேவா!
*
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................