வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்
இடம்:  sydney
பிறந்த தேதி :  17-Mar-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  79603
புள்ளி:  7033

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .

என் படைப்புகள்
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் செய்திகள்

கண்ணனின் இனிய குழலோசை என்காதில்
வந்து விழுந்தது உள்ளம் எல்லாம்
பக்தி பரவசம் ஆனது எண்ணமெல்லாம்
சத்தியமாய் அவனை மட்டுமே நினைத்தது
என்னுள் இறைவன் இருப்பதை நான்
இப்போது உணர்ந்தேன் அறிந்தேனே

மேலும்

சுவரில் இருந்த புத்தரின் ஓவியம்
முகத்தில் அசாத்திய பேரொளி
மூடிய வாய்வழியே ஓர் அனாதிப் புன்னகை
கண்கள் ஆழ்ந்த த்யானத்தில் ஆனால்
அதில் ஓர் அற்புத கருணை
கைகள் கூப்பியிருந்தன
கடவுள் இவர் யாருக்கு கைகளால்

மேலும்

நதிகளின் தஞ்சம்-
கடலில்.
ஜீவாத்மா பரமாத்மாவை தஞ்சம்

மேலும்

அவள் முதல் முதலாய்
மலரும் விழியால் எனைப்
பார்த்தாள் அந்த பார்வை
என்னுள்ளத்தில் மின்னலாய்ப் பாய்ந்தது
பொங்கிடும் காதலால் என்னுள்ளம்
இன்பத்தின் எல்லையைத் தொட்டது
பொங்கும் பால் தித்திப்பதுபோல்
இப்போது அவள் பார்வையோடு

மேலும்

திருமால் துதி
---------------------

தனக்குவமை இல்லாதான் திருமால் எம்மான்
தன்னிகர் இல்லா தெய்வம் தேவதேவன்
தேனேந்தும் மாமலர்க் கண்ணன் மாயோன்
தாள்வணங்கு முக்திதரும் அது

மேலும்

மிக்க நன்றி ஐயா என் படைப்பை படித்து தந்த இனிய கருத்திற்கு 22-Aug-2023 4:31 pm
வணக்கம் ஐயா! நல்ல முயற்சி; இனிய கருத்துள்ள பாடல்! வெண்பா இலக்கணத்திற்காக சில மாற்றங்கள். திருமால் துதி இன்னிசை வெண்பா தனக்குவமை இல்லாத் திருமாலே எம்மான் தனக்குநிகர் இல்லாத தெய்வமாம் தேவதேவன் தேனேந்தும் மாமலரோன் கண்ணனை மாயோனைத் நானேத்த முக்திதரும் நன்று! 22-Aug-2023 8:17 am

உன்னை நான் கண்ணே முழுமதியோடு
ஒப்பிடவா மதிபோல் நீயும் உந்தன்
விழிப்பார்வையால் என்னுள்ளத்தில் தன்னொளி
பெருக்கி என்னை ஆட்கொள்கின்றாய் அந்த
நிலவைக் காட்டிலும் நீஅழகு நங்கை
ஏனெனில் களங்கம் ஏதுமில்லையே உன்முகத்தில்

மேலும்

மிக்க நன்றி கவி சாரலன் தங்கள் இனிய படித்து மகிழ்ந்து தந்த கருத்திற்கு 22-Aug-2023 4:29 pm
யாப்பு நிகர் வரிகள் எதுகை மோனைக்கு அப்பாலும் புதுக்கவிதையில் சொல்லலாம் 22-Aug-2023 9:09 am

எங்கும் எதிலும் எல்லாமாய் இருப்பவனே
எங்கள் மாலே மணிவண்ணா கண்ணா
பங்கயர்க் கண்ணா உன்துதி பாடியாடி
என்றும் உன்னடி என்றே இருந்திட
வேண்டுகின்றேன் அருள்வாய் நீ

மேலும்

மிக்க நன்றி ஐயா டாக்டர் கன்னியப்பன் இன்னும் பாக்கள் வரும் 20-Aug-2023 7:22 am
வணக்கம் ஐயா! நல்ல விருப்பமும், முயற்சியும்! வெண்பா இலக்கணத்தை google ல் பதிந்து தெரிந்து கொள்ளுங்கள். கண்ணன் கீதம் - பஃறொடை வெண்பா எங்கும் எதனிலும் எல்லாமாய் ஆனவனே எங்களின் மாலே மணிவண்ணா கண்ணனே பங்கயர்க் கண்ணனே உன்துதி பாடியாடி என்றுமே உன்னடி என்றே இருந்திட வேண்டுகின் றேனருள்வாய் நீ! 20-Aug-2023 6:39 am

(டாக்டர் கன்னியப்பன் அவர்கள் கவிதையின் இறுதி
அடி.....சுனைநீ ரறுந்தச் சுவைத்து''''' கொண்டு நான் எழுதியது)


கானல் நீரை நீரென நினைத்து
மானது துள்ளித் துள்ளி தேடியலைந்து
மாய்ந்து முடிவில் பாலையில் மெய்த்தேடு
சுனைநீ ரருந்துச் சுவைத்து

மேலும்

மிக்க நன்றி மீண்டும் டாக்டர் ஐயா....நிச்சயம் நீங்கள் அனுப்பிய கவிதைத் தொகுதிகளை படித்து மகிழ்வேன் இனிய காலை வணக்கம் 20-Aug-2023 1:09 am
மிக்க நன்றி ஐயா! எழுத்து.காம் கட்டுரை பிரிவு பகுதியைத் தட்டினால் வரும் பக்கத்தில், அ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன தருமதீபிகை (1006) நாலடியார் (395) பழமொழி நானூறு (372) அறநெறிச்சாரம் (219) கவி காளமேகம் (218) குமரேச சதகம் (103) நான்மணிக்கடிகை (102) நீதிநெறி விளக்கம் (101) திரிகடுகம் (100) மருத்துவ வெண்பா (99) முதுமொழிக் காஞ்சி (98) ஆசாரக் கோவை (79) ராகங்கள் (73) வளையாபதி (71) தெய்வத்தன்மையும் வாழ்த்தும் (69) அணியறுபது (60) தியாகராஜ கீர்த்தனை (53) கணவன் மனைவியர் இயல்பு (48) நீதி வெண்பா (46) இனியவை நாற்பது (42) இன்னா நாற்பது (42) கணிகையரியல்பு (40) நல்வழி (39) நன்னெறி (38) ஏலாதி (38) இன்னிலை (36) மூதுரை (31) திரைப்படப் பாடல் (29) முத்தொள்ளாயிரம் (28) நறுந்தொகை (27) சிறுபஞ்ச மூலம் (27) அறஞ்செயல் (25) உண்மை விளக்கம் (24) சேத்திரத் திருவெண்பா (24) இன்னிசை இருநூறு (23) கைம்மாறு கருதா உதவி (22) இவை அனைத்தும் நான் பதிவு செய்தவை! தாங்களும் வாசித்து மகிழலாம். வணக்கம் ஐயா! 19-Aug-2023 6:45 pm
மிக்க நன்றி டாக்டர் ஐயா, தங்கள் ஊக்குவிப்பில் இன்னும் பல கவிதைகள் இயற்றிட முயல்வேன் .......என் ஆசிரியன் பேராசிரியர் நன்னனை நீர் நினைவு படுத்துகிறீர்கள் இங்கு தந்த தங்கள் கவிதை அருமை மீண்டும் வணக்கம் 19-Aug-2023 6:30 pm
டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம் நல்ல கற்பனை சேர்த்து எழுதியுள்ளது ஐயா.மிக அருமை 19-Aug-2023 12:45 pm

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

மேலும்

மிகவும் அருமை 14-Apr-2020 8:52 pm

விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???

மேலும்

நன்றி.... 21-Aug-2018 11:34 am
பிரிதலில் கூடும் புரிதலும் தொலைவினில் சேரும் நெருக்கமும் நினைவுகள் மட்டுமே சொல்லி கொண்டே இருக்கும் உணர்வுகளின் தடயங்களை வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் 21-Aug-2018 10:45 am
காதல் அழிவதில்லை- நீ வேண்டாம் என்றவுடன் என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு தூரம் தூரம் என் மனம் மட்டும் நின்றதடி உந்தன் ஓரம் ஓரம் வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம் மாண்டும் மறையவில்லை உந்தன் நினைவே நினைவு நீதானே என் கல்லரையில் நான் காணும் கனவே கனவு - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை காதல் அழிவதில்லை என்று... சாகும் காதலர்க்கு தெரிவதில்லை காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று... ----கல்லரைக் காதலன் 20-Aug-2018 2:44 pm

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி

மேலும்

போற்றுதற்குரிய நிலவு இலக்கியம் --பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இயற்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. . நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட பாரதி . 20-Jun-2018 5:25 pm
எண்சீர் விருத்தங்கள் (காய் காய் மா தேமா அரையடிக்கு) அனைத்தும் இனிமை. 19-Jun-2018 4:16 pm

பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,

பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,


உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,

காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (151)

user photo

வேலணையூர் சசிவா

இலங்கை த/போ பிரான்ஸ்

இவரை பின்தொடர்பவர்கள் (164)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே