வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்
இடம்:  sydney
பிறந்த தேதி :  17-Mar-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  83384
புள்ளி:  8090

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .

என் படைப்புகள்
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் செய்திகள்

இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்

அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?

மேலும்

ஆம் நண்பரே......இத்தகைய நம்பிக்கைகள் இன்னும் சில கிரமாய் பகுதிகளில் நம் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.....கேட்க கேட்க சுவைத்தான்....தவிக்கும் கிடைத்த புது எண்ணங்கள் இவற்றில் வளர... நன்றி நண்பரே....ஆழ்ந்த கருத்திற்கு 12-Feb-2024 8:31 am
கண்ணாமூச்சி கோலத்தால் கல்யாணம் --நம்பிக்கைகள் கைத்தலம் நான் பற்ற கனாக்க்கண்டேன் தோழி என்று ஆண்டாள் பாடியதுபோல் இதுவும் ஓர் நம்பிக்கை 12-Feb-2024 8:24 am

திருடிவெண்ணை யுண்டான் தன்மகன் என்று
கோபியர் கூற .கேட்ட யசோதை
சிறுவன் இவன்என்ப தும்மறந்தே கண்ணனைக்
உரலில் கட்டிவிட்டு இன்றுநீ இங்கேயே
இருஎன்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்
அவளறிந்தா ளல்லள் 'தானேகட்டு உண்டவன்
தன்மகன் அவன் மாயன் மனிதன்
அல்லன் என்பதை யே

மேலும்

மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!

மேலும்

ஆஹா என்ன அழகான இலக்கிய ரசனை மிகு கருத்து விளக்கம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 11-Feb-2024 9:40 pm
அதனால்தானோ...'மௌன ராகம்' படம் எடுத்தாரா !!! தடாகத்தில் மொட்டாய் இருந்து சூரியனின் கதிர்கள் பட்டு மலரும் மாமலர் தாமரை....மொட்டாய் வந்து மாமலரை மலர்வது...மௌனத்தில்...அங்கு ஏது ஓசை ஆனால் அந்த மௌனத்தில் எழுகிறது ஒரு ராகம்....இயற்கையின் முனை ராகம் அதுபோல் பெண்ணின் மௌனம்... நல்ல கற்பனை நண்பரே கவின் சாரலன் 11-Feb-2024 7:21 pm

இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்

அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?

மேலும்

ஆம் நண்பரே......இத்தகைய நம்பிக்கைகள் இன்னும் சில கிரமாய் பகுதிகளில் நம் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.....கேட்க கேட்க சுவைத்தான்....தவிக்கும் கிடைத்த புது எண்ணங்கள் இவற்றில் வளர... நன்றி நண்பரே....ஆழ்ந்த கருத்திற்கு 12-Feb-2024 8:31 am
கண்ணாமூச்சி கோலத்தால் கல்யாணம் --நம்பிக்கைகள் கைத்தலம் நான் பற்ற கனாக்க்கண்டேன் தோழி என்று ஆண்டாள் பாடியதுபோல் இதுவும் ஓர் நம்பிக்கை 12-Feb-2024 8:24 am

மறைநான்கு தந்தளித்தாய் எம்மானே மாதவா - கோவிந்தா
மறையோதும் அந்தணர்க்கு மாறாத காப்பாய்- கோவிந்தா
பறைக்கூட்டி நாராயணா நீதான் தியென்பார்க்கு -கோவிந்தா
குறையொன்றும் இல்லாத எங்கள் குலதெய்வம் -கோவிந்தா

மேலும்

மனதிற்கி நியவனவன் மணிவண்ணன் கண்ணனை
மனத்தால் நினைத்த வனைமனமு ருகிப்பாட
சென்றவினை சேரும்வி னையெலாம் போக்கியே
என்றென்றும் நிரந்தரமாம் பேரின்பம் தந்தருள்வான் கண்ணன்

மேலும்

தாமரைக்கண் ணாஎந்தாய் தாமோத ராகண்ணா
நாமமாயி ரத்தோனே நாரணனே நாதனே
வாமனனாய் வந்து உலகளந்த உத்தமனே
நின்தாள் சரணடைந்தேன் நான்

மேலும்

நன்றி நண்பரே டாக்டர் கன்னியப்பன் 06-Feb-2024 6:33 am
திருமால் துதி - இன்னிசை வெண்பா தாமரைக்கண் ணாஎந்தாய் தாமோத ராகண்ணா நாமமாயி ரத்தோனே நாரணனே நாதனே வாமன னாய்வந் துலகளந்த உத்தமனே நின்தாள் சரணடைந்தேன் நான்! அருமையான பாடல்; மூன்றாம் அடியைக் கவனியுங்கள். 05-Feb-2024 8:50 pm

தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நாவில் தமிழாட நல்விழியில் காதலாட
தேவிநீ என்கவிநெஞ் சில்

தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நன்நாவில் சொல்லாட நல்விழியில் காதலாட
என்நெஞ்சில் ஆடும் இயல்

மேலும்

சரியான பாடலை நினைவு கூர்ந்தீர்கள் அந்தப் பாடலைப் பற்றி ஒரு குறிப்பு MSV சொன்னது இடையே ஒரு வரி வரும் பச்சரிசிப் பல்லாட என்று MSV கண்ணதாசனிடம் கவிஞரே இளம் பெண்ணுக்கு பல்லாடலாமா என்று கேட்டாராம் அப்படித்தான் இனிமேல் மாற்றமுடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கண்ணதாசன் . அப்படியே விட்டுவிட்டார்களாம் திரைப்பாடல் மேற்கோளுடன் கவிதைக் கருத்து மனமுவந்த பாராட்டுதலில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 01-Feb-2024 9:41 am
"கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீன் ஆட ஆட" என்ற கவிஞரின் பாடல் நினைவுக்கு வந்தது வெளுத்து வாங்கிவிட்டீர் கவின் சாரலன் ....அசாத்திய சொல்லாடல் ...congrats 01-Feb-2024 9:18 am

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

மேலும்

மிகவும் அருமை 14-Apr-2020 8:52 pm

விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???

மேலும்

நன்றி.... 21-Aug-2018 11:34 am
பிரிதலில் கூடும் புரிதலும் தொலைவினில் சேரும் நெருக்கமும் நினைவுகள் மட்டுமே சொல்லி கொண்டே இருக்கும் உணர்வுகளின் தடயங்களை வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் 21-Aug-2018 10:45 am
காதல் அழிவதில்லை- நீ வேண்டாம் என்றவுடன் என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு தூரம் தூரம் என் மனம் மட்டும் நின்றதடி உந்தன் ஓரம் ஓரம் வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம் மாண்டும் மறையவில்லை உந்தன் நினைவே நினைவு நீதானே என் கல்லரையில் நான் காணும் கனவே கனவு - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை காதல் அழிவதில்லை என்று... சாகும் காதலர்க்கு தெரிவதில்லை காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று... ----கல்லரைக் காதலன் 20-Aug-2018 2:44 pm

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி

மேலும்

போற்றுதற்குரிய நிலவு இலக்கியம் --பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இயற்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. . நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட பாரதி . 20-Jun-2018 5:25 pm
எண்சீர் விருத்தங்கள் (காய் காய் மா தேமா அரையடிக்கு) அனைத்தும் இனிமை. 19-Jun-2018 4:16 pm

பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,

பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,


உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,

காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (151)

user photo

வேலணையூர் சசிவா

இலங்கை த/போ பிரான்ஸ்

இவரை பின்தொடர்பவர்கள் (164)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே