வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/tamil_pitthan.png?v=6)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
இடம் | : sydney |
பிறந்த தேதி | : 17-Mar-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 84948 |
புள்ளி | : 8163 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
வானத்தின் ஆழம்
இவர் உள்ளம்-
ஞானியர்
அவன் கன்னத்தில் பதிந்த
முத்துச்சின்னங்கள்
ஆழ்ந்த காதல்
உண்மை இருக்கவேதான்
பொய் என்ற மாயை உலவிவருகிறது
எப்படி பாலையில் நீரும் உண்டு
கூடவே கானல் என்னும் மாயையும் உண்டு
கடவுள் உண்டென்றால் கூடவே
இல்லை என்று கூறும் 'மாயவாதிகள்'
நாணயம், நாணயம், நாணயம்
உண்மை மனிதன் வாழ்க்கையில்
செயலில் சொல்லில் தெரிவது ,,,,,நாணயம்
நாணயம் இன்றி வணிகத்தில்
பரிவர்த்தனை எது சொல்வீர்
'நாணயத்தின்; நாணயத்தில் இயங்கும்
நவீன சக்திவாய்ந்த நாடுகள்
ஆண்டாள் நாச்சியார் கேயென்னார்
அன்பினால் அயனை அடைய முடியும் என்று
அகிலமும் அறிய செய்த ஆரணங்கு அவள்
ஆண்டாள் நாச்சியார் எனப்பெயர் கொண்டு
இயற்றிய பாசுரங்கள் மெய்யன்பின் பிரதிபலிப்பு
ஈசனை அடைய பல வழிகள் உள்ளன என்றாலும்
உண்மை அன்பினால் உன்னையே சமர்ப்பித்தால்
ஊடலின்றி அவனின் கூடல் கிடைக்கும் எனக்காட்டி
எளிய முறையில் எல்லோரும் அறியும் வகையில்
ஏட்டில் எழுதி வைத்து உயர் பொருளை அடைந்து
ஐயனுடன் கலந்து அருள் பாலிக்கும் அன்னையை
ஒருமனதாகித் தொழுது வேண்டிய வரங்களை பெற்று
ஓர் முறையேனும் அவள் பாசுரங்களை பாடி மகிழ்வோமாக
ஓரவிழி யினால்பார்த்தாள் ஒருமுறைமா லைப்பொழுதில்
சாரல்மென் மழைதூவும் சந்தியாவே ளைதன்னில்
நீராடும் என்காதல் நன்நெஞ்சம் களிப்பினிலே
மீராவோர் கண்ணனுக்கு மெல்லியலாள் இவளெனக்கோ
யாப்புத் தகவல்கள் :--
---ஓர சாரல் நீரா மீரா ---அடி எதுகைகள்
---ஓ ஒ சா ச நீ ந மீ மெ ---1 3 ஆம் சீரில் மோனை --இது பொழிப்பு மோனை
அடிகள் அனைத்திலும் காய் சீர் வாய்ப்பாடு அமைந்த கலிவிருத்தம்
கம்பன் விஞ்சி நின்ற பாவினம் இது
கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******
எனது மாயை
எனது கண்களை
குருடாக்கி விட்டது.
ஏதோவொரு பெயரில்
மனிதனாக ஒளிந்து
கொண்டிருக்கிறேன் என்னும்
அவலமான நம்பிக்கை
அழிந்த கணத்தில்தான்
நான் யாரோ ஒரு
மனிதனொருவனின்
மனதுக்குள் அவன் நிழலாக
அலைந்து கொண்டிருக்கிறேன்
என்பதை உணர்ந்தேன்.
வறுமை மிகுந்த
அந்நகரில்
அக்டோபர் மாதத்தின்
பிந்தைய நாட்களில்
எல்லா கல்லறைகளையும்
மந்திரிக்கப்பட்ட ஒயினால்
சுத்தம் செய்வது என் பணி.
தளர்ந்து சிலும்பும் நதியை
காற்றால் சலித்து அதில்
உதிரும் பனிப்பூக்களை
கல்லறை வாசலின் இருக்கும்
முகப்பு விளக்கின் திரிக்கு
எண்ணையாக்கும் போதுதான்
மாயை என்னை பற்றியது.
மாயை...
என் கண்களை
குருடாகிவிட்டத
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................