வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
இடம் | : sydney |
பிறந்த தேதி | : 17-Mar-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 79603 |
புள்ளி | : 7033 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
கண்ணனின் இனிய குழலோசை என்காதில்
வந்து விழுந்தது உள்ளம் எல்லாம்
பக்தி பரவசம் ஆனது எண்ணமெல்லாம்
சத்தியமாய் அவனை மட்டுமே நினைத்தது
என்னுள் இறைவன் இருப்பதை நான்
இப்போது உணர்ந்தேன் அறிந்தேனே
சுவரில் இருந்த புத்தரின் ஓவியம்
முகத்தில் அசாத்திய பேரொளி
மூடிய வாய்வழியே ஓர் அனாதிப் புன்னகை
கண்கள் ஆழ்ந்த த்யானத்தில் ஆனால்
அதில் ஓர் அற்புத கருணை
கைகள் கூப்பியிருந்தன
கடவுள் இவர் யாருக்கு கைகளால்
நதிகளின் தஞ்சம்-
கடலில்.
ஜீவாத்மா பரமாத்மாவை தஞ்சம்
அவள் முதல் முதலாய்
மலரும் விழியால் எனைப்
பார்த்தாள் அந்த பார்வை
என்னுள்ளத்தில் மின்னலாய்ப் பாய்ந்தது
பொங்கிடும் காதலால் என்னுள்ளம்
இன்பத்தின் எல்லையைத் தொட்டது
பொங்கும் பால் தித்திப்பதுபோல்
இப்போது அவள் பார்வையோடு
திருமால் துதி
---------------------
தனக்குவமை இல்லாதான் திருமால் எம்மான்
தன்னிகர் இல்லா தெய்வம் தேவதேவன்
தேனேந்தும் மாமலர்க் கண்ணன் மாயோன்
தாள்வணங்கு முக்திதரும் அது
உன்னை நான் கண்ணே முழுமதியோடு
ஒப்பிடவா மதிபோல் நீயும் உந்தன்
விழிப்பார்வையால் என்னுள்ளத்தில் தன்னொளி
பெருக்கி என்னை ஆட்கொள்கின்றாய் அந்த
நிலவைக் காட்டிலும் நீஅழகு நங்கை
ஏனெனில் களங்கம் ஏதுமில்லையே உன்முகத்தில்
எங்கும் எதிலும் எல்லாமாய் இருப்பவனே
எங்கள் மாலே மணிவண்ணா கண்ணா
பங்கயர்க் கண்ணா உன்துதி பாடியாடி
என்றும் உன்னடி என்றே இருந்திட
வேண்டுகின்றேன் அருள்வாய் நீ
(டாக்டர் கன்னியப்பன் அவர்கள் கவிதையின் இறுதி
அடி.....சுனைநீ ரறுந்தச் சுவைத்து''''' கொண்டு நான் எழுதியது)
கானல் நீரை நீரென நினைத்து
மானது துள்ளித் துள்ளி தேடியலைந்து
மாய்ந்து முடிவில் பாலையில் மெய்த்தேடு
சுனைநீ ரருந்துச் சுவைத்து
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................