வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
| இடம் | : sydney |
| பிறந்த தேதி | : 17-Mar-1944 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
| பார்த்தவர்கள் | : 89406 |
| புள்ளி | : 8291 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
நமக்கெல்லாம் உருவம் தந்து அதில்
உயிரும் வைத்து உள்ளிருந்து
நம்மை எல்லாம் இயக்கும் இறைவன்
நாம் காணா அருவமாய் இருக்க அவனைத்
நித்தம் நித்தம் மனதில் இருத்தி தொழுது
வேண்டிட அழகாய் பேரழகான தனது
மகள்
அன்பு பரிமாற்றத்தில்
அன்னையை மிஞ்சிய
அழகு தேவதை........
தொட்டால் சிணுங்கும்
தொட்டா சிணுங்கி-
நீ
ஏசுவதற்கு முன்பே
இயேசுவை சிலுவையில் அரையும்போது
உதிரும் குருதியாய்
உமது கண்களில்
கண்ணீர் பெருக்கு .......
உடை அணிவதில்
எளிமை
ஏழை தந்தையின் பொருளாதாரத்தை அறிந்து அல்ல
முள்ளாய் குத்தும்
உயர்விலை ஆடை
உமக்கு -ஒவ்வாது
நீ -செய்யும் குறும்புகள்
குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளத்தில்
என்றும் அழியாத
காலச்சுவடாய் .
அணிகலன் அணிவதில்
ஆர்வம் அதிகம் உமக்கு
அம்மா அணிந்த
அனைத்து நகையையும் அணிந்து அழகு பார்த்த பேராசைக் காரி .
பள்ளிக்குச் செல்ல பயந்து
நீ செய்யும் பாச
சகியே..
என் வாழ்வின் கோடிட்ட இடங்களில்
உன் பெயரையே எழுதுகிறேன்..
இறுதி வரை நீ என் வாழ்வில்
வர வேண்டும் என்பதால்...
அவள் அன்றைய உலகப் பேரழகி
இன்றோ எலும்பும் தோலுமாய் அதோ
மூலையில் ஒடுங்கி கிடக்கிறாள் அன்றைய
கண்ணழகி இன்று ஒளியிழந்த கண்ணினாளாய்
ஆனால் அவள் காதிலும் மூக்கிலும் அணிந்த
வைர அணிகள் நீலக்கதிர்களைக் கொட்டிக்கொண்டு
கொடுக்கத்தான் தெரியும் மழைமேகத்திற்கு
என்றும் கொடை வள்ளல்கள் ....
அன்று அழகப்பர்
எங்கோ வான வீதியில் பறந்து கொண்டிருந்த
பருந்து
இப்போது தரையை நோக்கி இறங்கிவர
விமானம்போல் கீழ்நோக்கி வந்தது
இப்போது ஒரு வட்டமிட்டு சுற்றி சுற்றி
வந்தது
அதன் கண்கள் எங்கோ ஒரு புள்ளியில் ஐக்கியம்
#பார்க்கும் இடமெல்லாம் பாரதி
காணிநிலம் வேண்டி நின்ற
கவிதைக்காரன்
கழனிநிலம் காணும்போது
காட்சி யளிப்பான்
சாதிமத சாத்திரங்கள்
மடமையெல்லாம்
சாகடிக்கும் பேரி லெல்லாம்
நிறைந்திருப்பான்
அடிமைத்தனம் போக்க வேண்டும்
போரதனில்
அன்பர்களின் உருவி லென்றும்
அவனிருப்பான்
கண்ணம்மா என்று ரைக்கும்
அன்பிலெல்லாம்
கண்ணியவான் பாரதி தான்
கனிந்திருப்பான்
வான்நோக்கும் மீசை கொண்ட
ஆணிலெல்லாம்
வலிமையான பாரதியை நாமும்
கண்டோம்
தேன்சொட்டும் கவிதை யெவர்
படைத்தபோதும்
தெள்ளுத்தமிழ் சுப்பிர மணியைக்
கண்டோம்
காஞ்சிப் பேச்சு காசியிலே
கேட்குமென்ற
கவிஞனவன் காட்சி தானே
கைபேசிதன்னில்
மெய்ஞானப் பேச
உருத்திராட்ச மாலை உயர்மார்பில் ஓம்ஓம்
கருநாகப் பாம்புத் திருக்கழுத்தில் நீலம்
திருநீற்று நெற்றி பொறிநெருப்பு செங்கண்
ஒருபாதி அம்மை ஒருபாதி அப்பன்
இருவேறில் லைநீ இயம்பு
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................