வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் |
இடம் | : sydney |
பிறந்த தேதி | : 17-Mar-1944 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 83384 |
புள்ளி | : 8090 |
நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .
இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்
அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?
திருடிவெண்ணை யுண்டான் தன்மகன் என்று
கோபியர் கூற .கேட்ட யசோதை
சிறுவன் இவன்என்ப தும்மறந்தே கண்ணனைக்
உரலில் கட்டிவிட்டு இன்றுநீ இங்கேயே
இருஎன்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்
அவளறிந்தா ளல்லள் 'தானேகட்டு உண்டவன்
தன்மகன் அவன் மாயன் மனிதன்
அல்லன் என்பதை யே
மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!
இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்
அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?
மறைநான்கு தந்தளித்தாய் எம்மானே மாதவா - கோவிந்தா
மறையோதும் அந்தணர்க்கு மாறாத காப்பாய்- கோவிந்தா
பறைக்கூட்டி நாராயணா நீதான் தியென்பார்க்கு -கோவிந்தா
குறையொன்றும் இல்லாத எங்கள் குலதெய்வம் -கோவிந்தா
மனதிற்கி நியவனவன் மணிவண்ணன் கண்ணனை
மனத்தால் நினைத்த வனைமனமு ருகிப்பாட
சென்றவினை சேரும்வி னையெலாம் போக்கியே
என்றென்றும் நிரந்தரமாம் பேரின்பம் தந்தருள்வான் கண்ணன்
தாமரைக்கண் ணாஎந்தாய் தாமோத ராகண்ணா
நாமமாயி ரத்தோனே நாரணனே நாதனே
வாமனனாய் வந்து உலகளந்த உத்தமனே
நின்தாள் சரணடைந்தேன் நான்
தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நாவில் தமிழாட நல்விழியில் காதலாட
தேவிநீ என்கவிநெஞ் சில்
தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நன்நாவில் சொல்லாட நல்விழியில் காதலாட
என்நெஞ்சில் ஆடும் இயல்
விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???
நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!
காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................