வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்
இடம்:  sydney
பிறந்த தேதி :  17-Mar-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  84948
புள்ளி:  8163

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .

என் படைப்புகள்
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் செய்திகள்

வானத்தின் ஆழம்
இவர் உள்ளம்-
ஞானியர்

மேலும்

அவன் கன்னத்தில் பதிந்த
முத்துச்சின்னங்கள்
ஆழ்ந்த காதல்

மேலும்

உண்மை இருக்கவேதான்
பொய் என்ற மாயை உலவிவருகிறது
எப்படி பாலையில் நீரும் உண்டு
கூடவே கானல் என்னும் மாயையும் உண்டு
கடவுள் உண்டென்றால் கூடவே
இல்லை என்று கூறும் 'மாயவாதிகள்'

மேலும்

நாணயம், நாணயம், நாணயம்
உண்மை மனிதன் வாழ்க்கையில்
செயலில் சொல்லில் தெரிவது ,,,,,நாணயம்
நாணயம் இன்றி வணிகத்தில்
பரிவர்த்தனை எது சொல்வீர்
'நாணயத்தின்; நாணயத்தில் இயங்கும்
நவீன சக்திவாய்ந்த நாடுகள்

மேலும்

ஆண்டாள் நாச்சியார் கேயென்னார்

அன்பினால் அயனை அடைய முடியும் என்று
அகிலமும் அறிய செய்த ஆரணங்கு அவள்
ஆண்டாள் நாச்சியார் எனப்பெயர் கொண்டு
இயற்றிய பாசுரங்கள் மெய்யன்பின் பிரதிபலிப்பு
ஈசனை அடைய பல வழிகள் உள்ளன என்றாலும்
உண்மை அன்பினால் உன்னையே சமர்ப்பித்தால்
ஊடலின்றி அவனின் கூடல் கிடைக்கும் எனக்காட்டி
எளிய முறையில் எல்லோரும் அறியும் வகையில்
ஏட்டில் எழுதி வைத்து உயர் பொருளை அடைந்து
ஐயனுடன் கலந்து அருள் பாலிக்கும் அன்னையை
ஒருமனதாகித் தொழுது வேண்டிய வரங்களை பெற்று
ஓர் முறையேனும் அவள் பாசுரங்களை பாடி மகிழ்வோமாக

மேலும்

அன்பு ராம் , ............ஆண்டாள் பக்தியால் சரணாகதி செய்தால் நாராயணன் தாள் சேரலாம் என்று அறிவுறுத்திய வைணவ பெண்திலகம் அயனை அல்ல.....அயன்....பிரமன் ஆவார் .....'நாராயணனே நமக்கே பறைதருவான்' என்று 'திருப்பாவை' முதல் பாடலிலேயே சரணாகதி தெளிவாய் போதித்தவர். அவர் பாசுரங்கள்....உபநிஷத்தின் சாரம் என்பர் ஆன்றோர்.....அதனால் அவர் பாடிய....'திருப்பாவை' கோதாபநிஷத் என்றே வழங்கப்படுகிறது..ஆண்டாளின் வடமொழி ஆக்கம்...கோதை ..... 14-May-2024 4:36 pm

ஓரவிழி யினால்பார்த்தாள் ஒருமுறைமா லைப்பொழுதில்
சாரல்மென் மழைதூவும் சந்தியாவே ளைதன்னில்
நீராடும் என்காதல் நன்நெஞ்சம் களிப்பினிலே
மீராவோர் கண்ணனுக்கு மெல்லியலாள் இவளெனக்கோ

யாப்புத் தகவல்கள் :--
---ஓர சாரல் நீரா மீரா ---அடி எதுகைகள்
---ஓ ஒ சா ச நீ ந மீ மெ ---1 3 ஆம் சீரில் மோனை --இது பொழிப்பு மோனை
அடிகள் அனைத்திலும் காய் சீர் வாய்ப்பாடு அமைந்த கலிவிருத்தம்
கம்பன் விஞ்சி நின்ற பாவினம் இது

மேலும்

ரசித்துப் படித்து எழுதிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 02-Apr-2024 8:45 pm
இப்படியும் நாலடிக் கவிதையில் ஒரு காதல் கதையே எழுதி வைத்ததோ சந்தி வேளையில் அவள் ஓரவிழிப் பார்வை ? அழகு காதல் கவிதை கவிஞரே சாரலன் வாழ்த்துக்கள் 02-Apr-2024 5:03 pm
சந்தியா வேளைதன்னில் --சந்தியாவே ளைதன்னில் -- சீர் கருதி வேளை வே ளை என்று பிளவு பட்டது --இதை வகையுளி என்பர் யாப்பில் திருக்குறளில் காணலாம் இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது --சீர் கருதி வழங்குவது வழங்கு வது என்று பிளவு பட்டது 02-Apr-2024 4:39 pm
வரி வரியாய் ரசித்துப் படித்துச் சொன்ன மனமுவந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய பாளை பாண்டி 02-Apr-2024 4:28 pm

கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********

வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 29-Mar-2024 4:25 pm
நல்ல கருத்து, நல்ல வெண்பா வாழ்த்துக்கள்.நண்பரே சக்கரை வாசன் 29-Mar-2024 2:30 pm
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 29-Mar-2024 6:16 am
சரியே 28-Mar-2024 8:19 pm

எனது மாயை
எனது கண்களை
குருடாக்கி விட்டது.

ஏதோவொரு பெயரில்
மனிதனாக ஒளிந்து
கொண்டிருக்கிறேன் என்னும்
அவலமான நம்பிக்கை
அழிந்த கணத்தில்தான்
நான் யாரோ ஒரு
மனிதனொருவனின்
மனதுக்குள் அவன் நிழலாக
அலைந்து கொண்டிருக்கிறேன்
என்பதை உணர்ந்தேன்.

வறுமை மிகுந்த
அந்நகரில்
அக்டோபர் மாதத்தின்
பிந்தைய நாட்களில்
எல்லா கல்லறைகளையும்
மந்திரிக்கப்பட்ட ஒயினால்
சுத்தம் செய்வது என் பணி.

தளர்ந்து சிலும்பும் நதியை
காற்றால் சலித்து அதில்
உதிரும் பனிப்பூக்களை
கல்லறை வாசலின் இருக்கும்
முகப்பு விளக்கின் திரிக்கு
எண்ணையாக்கும் போதுதான்
மாயை என்னை பற்றியது.

மாயை...
என் கண்களை
குருடாகிவிட்டத

மேலும்

பெரும் போராட்டத்திற்குப் பின் காத்திருந்து இன்றைக்கு தான் உங்களுடைய பதிலைப் படிக்க முடிந்தது வாய்ப்பு இருக்கும் பொழுதெல்லாம் வந்து எழுதுகிறேன் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி 24-Jun-2024 6:26 pm
ஆஹா.....ஸ்பரிசம் முத்திரையில் வெகு நாட்களுக்கு பிறகு படித்து ரசித்தேன் ஓர் கருத்துள்ள புது கவிதை... " காயமே இது பொய்யடா,,,,வெறும் kaatradaithap பையடா " என்றார் அதுபோல இந்த மாயையும்....இருப்பதுபோல் தோன்றும் இல்லாமையே....நீலவானம்.....காண முடிகிறது...ஆனால் எது வானம் யாரறிவார்...கானல்....காணமுடிகிறது....வெறும் நிழலே..." இன்னும் எழுதுங்கள் நண்பரே எமக்காக... 23-Mar-2024 10:00 am

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

மேலும்

மிகவும் அருமை 14-Apr-2020 8:52 pm

விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???

மேலும்

நன்றி.... 21-Aug-2018 11:34 am
பிரிதலில் கூடும் புரிதலும் தொலைவினில் சேரும் நெருக்கமும் நினைவுகள் மட்டுமே சொல்லி கொண்டே இருக்கும் உணர்வுகளின் தடயங்களை வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் 21-Aug-2018 10:45 am
காதல் அழிவதில்லை- நீ வேண்டாம் என்றவுடன் என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு தூரம் தூரம் என் மனம் மட்டும் நின்றதடி உந்தன் ஓரம் ஓரம் வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம் மாண்டும் மறையவில்லை உந்தன் நினைவே நினைவு நீதானே என் கல்லரையில் நான் காணும் கனவே கனவு - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை காதல் அழிவதில்லை என்று... சாகும் காதலர்க்கு தெரிவதில்லை காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று... ----கல்லரைக் காதலன் 20-Aug-2018 2:44 pm

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி

மேலும்

போற்றுதற்குரிய நிலவு இலக்கியம் --பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இயற்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. . நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட பாரதி . 20-Jun-2018 5:25 pm
எண்சீர் விருத்தங்கள் (காய் காய் மா தேமா அரையடிக்கு) அனைத்தும் இனிமை. 19-Jun-2018 4:16 pm

பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,

பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,


உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,

காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (151)

user photo

வேலணையூர் சசிவா

இலங்கை த/போ பிரான்ஸ்

இவரை பின்தொடர்பவர்கள் (166)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே