லீலா லோகிசௌமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : லீலா லோகிசௌமி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 703 |
புள்ளி | : 130 |
இதழிலும் இமையிலும்
இலக்கியம் எழுதும்
இளவேனில் தோட்டத்தின்
நடக்கும் ரோஜா மலரே
சற்று நில் திரும்பிப் பார்
என் கவிதையையும்
கேட்டுச் செல்லடி !
கண்ணை தொடாமல் ஓடி ஒளியும்
தூக்கத்தை
எட்டி பிடித்து...
இமைகளின் இடையில்
பூட்டி வைத்திட ஆசை .....
கண்ணை தொடாமல் ஓடி ஒளியும்
தூக்கத்தை
எட்டி பிடித்து...
இமைகளின் இடையில்
பூட்டி வைத்திட ஆசை .....
மேகம் நீ......
கடல் நான்...
மழையாய்
நீ சிந்திய
துளிகளெல்லாம்
அன்பின்
முத்துக்களாய்..
என்
இதயமென்னும்
சிப்பியில்.....❤
மேகம் நீ......
கடல் நான்...
மழையாய்
நீ சிந்திய
துளிகளெல்லாம்
அன்பின்
முத்துக்களாய்..
என்
இதயமென்னும்
சிப்பியில்.....❤
விதி விலகலில் விலக்கிப்
பார்த்து
வியந்து வேர்த்து விதியின்
விளையாட்டில்
விதிவிலக்காய் விழுந்துவிட்ட
உல்லாச பறவைகளின் எச்சம்
இந்த
மண்ணிற்கு நாங்கள் கிடைத்த
மிச்சம்
காதில் ஏதோ சொல்ல வருகிறாள்
என்று நினைத்தேன்
நெற்றியில் ஒரு பொட்டை வைத்தாள்
இதழ் குவித்து
சந்தோச பரிசாம் எனக்கு சந்தோசம் எதில் என்று தெரிந்தவள்
பொதிகைப்பூந் தென்றலி னில்தவழும் செந்தமிழில்
பொய்யில் ஒருபூங் கவிதைநான் செய்தேன்
அதுவுனது புன்னகை பூவிதழி னில்தவழ்ந்து
முத்தமிழாய் மோகமான தே !
தொட்டு பேசாமலே
என் இதயத்தை
உரசி போகும்
காதல்
மின்சாரம்
உன் இரு விழிகள்......!!
அழகே உருவான என்னவளை
தராசின் ஒரு பக்கம் குந்த வைத்தேன்
மறுபக்கம் நான் அவள் அழகை வருணித்த
கவிதைக்கு கிறுக்கலாம் பக்கங்களை
அடுக்கி அடுக்கி வைத்தேன்
என் கவிதைகள் வான் நோக்கி ...... ஏற
அவள், அழகி அவள் ..இல்லை அவள் அழகு
தரையை நோக்கி......
நாம் ஏமாறுவதற்கு உண்மையான காரணம்?
உனக்காக நான் சிந்தும்
கண்ணீர் துளிகள்
தேவையற்றது என
நீ சொல்கிறாய்...
கண்ணீர்துளிகளை
சிந்த வைக்கும் என்
இதயத்திற்கு தானே
தெரியும்....
உனக்காக
நான் சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும்
எத்தனை உன்னதமானது என்று....
.....லீலாலோகிசௌமி....