கவிபாரதீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிபாரதீ |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 08-Aug-1974 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 2199 |
புள்ளி | : 349 |
மத்திமம் தொடும் என் வாழ்வில், நான் நடந்த பாதையில் ஒரு பார்வை.நான் நடந்த சுவடுகள் மட்டும் காணாமல்.சுவடுகள் பதிய மீண்டும் ஒரு புதிய பயணம்.
சுமந்த கருவறை
கனன்றது நெருப்பில்
காக்கவியலாது கனன்று
நின்றேன் நிற்கதியாக.....
நிலவைக் காட்டிப்பசி
யாற்றிய தில்லையவள்,
காத்திருந்த தில்லை
நானும் அதுவரை.....
பசித்துப் புசித்த
தில்லை நானிதுவரை,
பசியறியாது பார்த்துக்
கொண்டாள் என்தாய்.....
தந்தையின் முகமது
நினைவில் இல்லை,
நினைவுற அவளெனை
விட்டதும் இல்லை.....
படிக்காத மேதையவள்
எங்களை படிக்க
வைத்த மேதையும்
அதே தெய்வம்தான் ......
தூணாக துணைநின்று
காத்த தெய்வமவள்
தெரியாமல் இழைத்தாலும்
தவறு தவறுதானெனும்
நீதி தேவதையவள்......
தனக்காக அவள்வாழ
பார்த்ததில்லை நான்,
நாங்கள் வாழ்ந்திட
தன்
உற்றமும் சுற்றமும்
காத்திருக்கு வழியனுப்ப,
காலன் வந்தழைக்காம
பயணம் போவதெப்படி??
அறியாத பாதையில
அழைக்காம போவது
ஆதிகாலம் தொட்டு
பண்பாடு இல்லையே....
நித்தம் நித்தம்
கண் விழித்தால்
காத்திருக்கும் கூட்டம்
கிசு கிசுங்கும்....
தெளிவாத்தான் இருக்கா
இன்னும் எத்தனை
நாள்? காத்திருக்கு
காடுகரை எல்லாம்....
பயணப் பட்டுநாங்
காத்திரு ந்தாலும்
எருமை மீதேறி
காலன் வராமல்.....
கடைசி மூச்சை
நிறுத்துவ தெப்படி?
ஊர்வாய் பேசும்
ஓர்ஓரமா நின்று,
பேத்தியவிட்டு பால்
ஊத்திச் சொல்லு
ஆன்மா அடங்கிடும்
ஆசையை விட்டு....
தலைச்சன் புள்ளை
இன்னும் வந்துசேரல
அதான்தாய் உசுரு
காத்துக் கெடக
20. பிரியமான தோழி
மூன்று நான்கு படுக்கைகள் போடக்கூடிய அளவிலான அறையில் ஒரு ஓரமாக மரத்தினால் ஆன சோஃபா செட்டை பிரித்து நீண்டதை நடுவிலும் இரு ஓற்றை சோஃபாவை அதன் இருபுறமுமாக போட்டு அலங்கரித்து வைத்திருந்தனர். ஒரு சிறிய மீன்கள் வளர்க்கும் கண்ணாடி தொட்டி ஒருபுறம் சிறிய மேஜை மீது வைக்கப்பட்டு இருந்தது. அறையின் நடுவில் சிவப்பு நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டு அந்த அறையை அழகு படுத்த முயன்று கொண்டிருந்தது. சுவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக க்ரேயான்களால் கிறுக்கியது போன்று வரையப்பட்ட ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
பாரதியின் கண்ணம்மா
மதி மயங்கச் செய்யும் மந்திரப் புன்னகையில் முகமே பிரகாசிக்க எதிரில் வந்த ப்ரியம்வதாவை பார்த்து நெருப்பில் விழுந்த புழுவாக தவித்தாள் திலோத்தமா.
சட்டென்று துளிர்த்த கண்ணீரை வழிய விடாமல் உள்ளிளுக்க இயலாது சட்டென்று முகத்தை திருப்பி, ப்ரியா பார்த்து விடாமல் மறைத்தாள்.
அதைப் பார்த்து புன்னகையுடன் திலோத்தமாவை நெருங்கி மிக மிக மென்மையாக அவள் வலது கரத்தை பற்றி லேசாக அழுத்தி அவளை தன் புறம் திருப்பினாள் ப்ரியம்வதா.
அவள் முகம் அணிந்து இருந்த புன்னகையில் ஒரு மாற்றுக் கூட குறையாமல் நிமிர்ந்து திலோத்தமாவின்
ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!
கவிபாரதீ ✍️
நிலைமாறா விலைமதிப்பற்ற
பொக்கிஷம்
பழம்பெருமை!!!
கவிபாரதீ ✍️
-------------------
வலிகள் தந்த நேர்
வழிகள் என்றும்
வலிமை சேர்ந்து
வளமை பெற்ற
வாழ்வாய் சிறக்கும்..
--------
சாம்.சரவணன்
—————
என்னுடன் இணைந்து
பதினேழாண்டுகள் இருக்கும்..
சில சமயங்களில்
என் தோள்களில்..
சில சமயங்களில்
என் மடியில்..
வெகு நேரங்களில்
என் எதிரில்..
கருத்த மேனியெனினும்
கைப்பட்ட உடன்
முகம் மிளிரும்..
என் விரல்கள்
பட்டதும் அவளினுள்
அணுக்கள் நகரும்..
அவள் உடலிலும்
உஷ்ணம் கிளம்பும்..
தலை நிமிர்ந்தால்
தினம் ஒளிர்வாள்..
தலை குனிய
தன்னுள் அடங்கிடுவாள்..
இன்று இரவேனோ
எங்கள் இருவருக்கும்
நீல வண்ண
சிறு படுக்கை..
சுவரோரம் அவளை
அமரச் செய்து..
ஜன்னல் ஓரமென்றும்
நான் சொல்லலாம்..
சிறிய தலையணை
எனக்கு மட்டும்..
சிறிய போர்வையும்
எனக்கு மட்டும்..
ஆணாதிக்கமென்று கூட
நினைக்க தோன்றும்.
தென்றல் நான் தெவிட்டாதவள்
மனிதன் ஆனந்திக்கும் சுகம்
நொடிப் பொழுதும் நில்லாமல்
பயணிப்பேன்....
பாற் கடலையும் கடந்திடுவேன்
கடலுடன் உறவாடிக் கவிழ்த்து
கலங்காமல் கரை தொடும்
பேரலை நான்...
இழிவாய் பேசும் மனிதா
அழுத்தி நினைவில் பதி,
சுவாசத்தால் சுகம் கூடும்
வாழ்வு செழித்திடும்...
இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், மனதில் மருகும்
இழந்ததை அறிந்து இறுதியில்....
எந்தன் உடன்பிறப்பை வீழ்த்திப்பின்
உறுத்து விழித்து முறைத்தாலும்
துள்ளலுடன் தென்றல் - நான்
தோன்றுதல் இயலாது...
தவற்றைத் திருத்தி தவறாமல்
நட்டு வளர்த்திட நானும்
தோதாக தினம் தினம்
தவறாமல்
நித்தம் என் முகத்தில்
புத்தம் புதிதாக "மலர்ச்சி"
மலர்ந்து விகசிக்கின்றது...!!!
என் கற்பனை வானில்
எழும் சீரிய சிந்தைதனை
கவிதையாய் பிரசவிக்கும்போது...!!!
முத்தம் ஒன்று தந்தெனது
மலர்ச்சி கொண்டாட படும்
பிரசவித்த கவிதைக்கு பிரசுரிக்குமுன்...!!!
கவிபாரதீ ✍️
சிறகடித்து பறக்கும் வயதில்
செல்லமாய் ஓர் வார்த்தை
செவி வந்து சேர்ந்தாலும்
மனம் மயங்கி மகிழும்....
பதின் வயதில் பள்ளியில்
சிதறிய கவனம் குவிந்தது
பள்ளித் தோழன் மீது,
ஆசை மிக வரைந்தேன்
ஒர் கடிதம்....
தூரிகை கொண்டு தூரலாய்
வண்ணம் தூவி தீட்டினேன்,
ஆடவன் கைபற்றிய காரிகையும்
இடையினில் இருவரின் துடிக்கும்
இதயம் ....
என் மன வானின்
எண்ணங்களை துரிதமாக
தூவினேன் தூரிகை கொண்டு
ஓவிய காரிகையினுள்...
பின் குறிப்பினில், "யென்னிதயச் சொற்களை அறிந்திட யெனை
ஊன்றி கவனித்தால் மட்டுமே
விழிகளுக்கு தென்படும்".....
இதயத்துடிப்பு மிக கடிதம்
கை மாறியது என்னவனிடம் ,
மனம் கவர்ந்தவன் மன
5 . காதலில் கரைந்த நொடிகள்
திலோத்தமா பைக்கில் இருபுறமும் கால்களை வைத்தபடி ஏறி அமர்ந்து அவன் தோள்களை பற்றிக் கொண்டாள்.
மெதுவாக பைக் கிளம்பியது. திலோ வெகு மகிழ்ச்சியாக உணர்ந்தாள். இயல்பாகவே திலோவுக்கு பைக் இல் செல்வது மிகவும் விருப்பமான ஒன்று அதுவும் மனம் கவர்ந்த நாயகனுடன் செல்லும்போது கசக்குமா என்ன என்று மனதில் நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.
இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட்டினால் சூப்பரா இருக்கும் ரகு என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டு உதடுகள் பிரியாது புன்னகைத்தான் ரகுராமன். இன்று திலோ மிகவும் ஆனந்தமாக இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்