கவிபாரதீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிபாரதீ |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 08-Aug-1974 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 1068 |
புள்ளி | : 130 |
மத்திமம் தொடும் என் வாழ்வில், நான் நடந்த பாதையில் ஒரு பார்வை.நான் நடந்த சுவடுகள் மட்டும் காணாமல்.சுவடுகள் பதிய மீண்டும் ஒரு புதிய பயணம்.
வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்த அந்த காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ஸ்பரிசமும், ஒருவித ஏகாந்த உணர்வினை பரப்பிக்கொண்டிருந்தன.
முன் வெயிலாய் இருந்ததாலும் கார்கால மாதமாய் இருந்ததால் ஒரு வித கட்டுப்பாட்டுடன் சூட்டினை பரப்பிக் கொண்டிருந்தான் சூரியன். திண்ணையில் ஒரு ஈசி சேரில் சாய்ந்த படி நான்... வலது கையில் பெரிய மாவு கட்டு..ஆமா....அதன் விளைவு நான் கல்லூரி போகாமல் லீவில்...! அது என்ன மாவுகட்டு...? அதை அப்புறம் பாக்கலாம்..முதல்ல உள்ள எங்க வீட்டுக்குள்ள பாருங்க... என்ன நடக்குதுன்னு......
அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க, அம்மா தங
இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -
அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியா
நீக்கமற நிறைந்த
அவள் நினைவுகள்
இயல்பாய் யென்
இதயத் துடிப்பில்
இனிமை கூட்ட
இதமாய் இமை மூடி
இளைப்பாறினேன்
சிறையில்.....
நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...
நிமிடமும் விலகாமல்
பின்தொடர கண்டேன்...
அதுநீயென அறிந்து
மனம் கனிந்தேன்...
நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...
என்தன் ஹிருதயம்
நீயென மகிழ்ந்தேன்...
மனமெங்கும் ஆனந்தம்
திளைப்பதை ரசித்தேன்...
சிறகற்ற பறவையாக
உயரம் பறந்தேன்...
உச்சி வானில்
உலகம் மறந்தேன்...
இதயம் இறகாக
மகிழ்வில் திளைத்தேன்...
உடன் உனைக்காண
மனம் ஏங்கினேன்...
கண்ட நொடியில்
உனை அணைத்தேன்...
நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...
நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...
பூக்கள் விரிந்தால்
---மலர்த் தோட்டம்
தேக்கும் புன்னகை மலர
---இதழ்த் தோட்டம்
பாக்கள் மலருமிடம்
---கவித் தோட்டம்
வாக்கிங் போனால் உள்ளம்
----மனத் தோட்டம்
அன்றொரு நாள்
பஞ்சபூதங்கள் அடங்கிய
ஒர் உருவமது...¡
அழகைக்கண்டு வியந்து,
அறிவிற்ச் சிறந்து
உறவுகளுடன் மகிழ்ந்து
துன்பத்தில் துவண்டு
அழகாய் ஆடித்திரிந்த
ஓருயிர் ஓவியமது...¡
தேகம் இழந்து
இனிது தீதுயாவும்
இழந்து, இவ்வையகத்தின்
தொடர்பு யாவுமிழந்து
உருத் தெறியாது
அழிந்த சித்திரமது...¡
இவற்றின் இருப்பை
நிச்சயிக்க அரங்கேறும்
ஆராய்ச்சிகள் அநேகம்...¡
கண்களால் கண்டறியாத
இறையை உளமார
நம்பிடுவோர் அநேகம்
நம்மில் உள்ளனர்,
காண இயலா
இறையை நம்புகையில்
காண இயலாத
அருவத்தை மட்டுமேன்
நம்ப இயலாது...¡
மனதால் தர்கித்து
அதையே நம்பிடும்
சராசரி நான்...¡
விழிப் பார்வையில்
படும னைத்து
நடை முறைகளையும்
பார்த்து பகுத்தறிந்து
சிந்தனை செய்மனமே...
சமூகச் சக்கரத்தில்
மனிதர்களுல் உயர்ந்தவர்
தாழ்ந்தவ ரென்ற
ஏற்றத் தாழ்வு
ஏன்....?
ஒருபுரம் பத்துவகை
பட்சணங்கள் உண்ணு
வோருக்காக காத்திருக்க
மறுபுரம் பசிக்கு
பழஞ்சோரும் கிட்டாது
உயிர்விடும் கொடுமை
ஏன்....?
மாளிகைகளில் பஞ்சுமெத்தையில்
துயிலுவோருக்கு நடுவே,
குடியிருக்க குடிசையுமற்று
தெருவோரவீதியில் துயிலுவது
ஏன்....?
அறிவைச் செழுமையாக்கும்
கல்வியிலும் ஏற்றத்தாழ்வு,
பணம்படைத்தோர் நலிந்தவ
ரென்ற பாகுபாடு
ஏன்....?
பண்டிகைக்கால ஆடம்பரத்தில்
பலலட்சம் தூற்றுவோர்க்கிடையே
பட்சணத்திர்
தமிழமுதே உன்னை
நான் நாசுழற்றி
பருகும் பொழுது
கொம்புத் தேனை
குறை வில்லாமல்
அருந்திய சிலிர்ப்பை
உணர்கின்றேன் யென்
ஆன்மாவினுள்...¡
தமிழைத் தாய்
மொழியாகப் பெற
நான் செய்த
மாபெரும் பேறு
யாதென்று பரம்
பொருளன்றி யார்
அறிந்திடுவார்...¡
என்தன் ஆன்ம
தாகம் தீர்க்கும்
உன்தன் கருணைக்
கதிரில் ஆட்பட
நான் யென்ன
தவம் புரிந்தேன்
அன்னையே...¡
காலம் கடந்து
நவிழும் நன்றி
ஆயினும் மனம்
நெகிழ்ந்து வேண்டுகிறேன்
தாயே தயைகூர்ந்து
என்னுள் தங்கிவிடு...¡
செஞ்சாந்து பொட்டுவச்சு
செங்கமளம் நீவரும்நிமிடம்
குருட்டுப் பயலோட
கும்மிருட்டும் விலகுமொருநிமிடம்...¡
உன் ஒத்தநடைக்கே
கும்மிருட்டு விலகுதே
ஒத்துகிட்டு நீயேவந்தா
நினைவே சிலுக்குதே...¡
மனமிரங்கி வந்து
என்னைச் சேர்ந்திடு
ஓலைக் குடிசையில்
விளக்கு ஏற்றிடு...¡
தெம்மாங்கு பாட்டுப்பாடி
கூடி மகிழ்வோமடி
ஆத்துமணலில் விதைவிதைத்து
அறுவடை செய்வோமடி...¡
உன்தேகம்பட்டா ஆத்துமணலிலும்
முப்போகம் விளையுமடி
முப்பந்தல்இசக்கியம்மன் கைபட்ட
நெல்லுமணிக்கு இணையடி...¡
ஈராறு புள்ளபெத்து
இன்பமா வாழ்ந்திடுவோம்
இடுகாடு செல்லும்வரை
இணைபிரியாம மகிழ்ந்திடுவோம்...¡
குச்சிஊணும் வயசிலயும்
கைபிடி
கருவறையில் சூழ்கொண்ட நாள்முதல்
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
உன்வரவுக்காக காத்திருந்த நான்,
மகளாக நீஜனித்த நொடிமுதல்
தேவதையே யென்மடி சேர்ந்தமகிழ்வில்
உன்னழகில் மயங்கி மகிழ்ந்தேன்...
நொடியும் கண்சிமிட்டாது உன்
பரிணாம வளர்ச்சிக்கண்டு ரசித்தேன்.
வானவில்லே யென்மடி சேர்ந்தது
போலுனை எழில்கொஞ்சும் வண்ணங்களில் அலங்கரித்ததருணங்கள் பற்பல...கண்களுக்கு மையெழுதி முகம்திருத்தி, பூமுடித்து, பொட்டிட்டுநான்வளர்த்த என்தன் செல்வமகளைகண்கவர் கணவனுக்கு மனமுடித்தஎங்கள் வீட்டு மகாலக்ஷ்மிமணமுடித்து புதுமணம் மாறும்முன்ஏறிய சரடிரக்கி வெற்றுக்கழுத்தும்திலகம் தியாகித்த நெற்றியும்மங்களம் தொலைத்த கைம்பெண்கோலம் பூணும் அவலம்கண்டு
விழிப் பார்வையில்
படும னைத்து
நடை முறைகளையும்
பார்த்து பகுத்தறிந்து
சிந்தனை செய்மனமே...
சமூகச் சக்கரத்தில்
மனிதர்களுல் உயர்ந்தவர்
தாழ்ந்தவ ரென்ற
ஏற்றத் தாழ்வு
ஏன்....?
ஒருபுரம் பத்துவகை
பட்சணங்கள் உண்ணு
வோருக்காக காத்திருக்க
மறுபுரம் பசிக்கு
பழஞ்சோரும் கிட்டாது
உயிர்விடும் கொடுமை
ஏன்....?
மாளிகைகளில் பஞ்சுமெத்தையில்
துயிலுவோருக்கு நடுவே,
குடியிருக்க குடிசையுமற்று
தெருவோரவீதியில் துயிலுவது
ஏன்....?
அறிவைச் செழுமையாக்கும்
கல்வியிலும் ஏற்றத்தாழ்வு,
பணம்படைத்தோர் நலிந்தவ
ரென்ற பாகுபாடு
ஏன்....?
பண்டிகைக்கால ஆடம்பரத்தில்
பலலட்சம் தூற்றுவோர்க்கிடையே
பட்சணத்திர்
மெதுவாய் திற கதைசொல்லி
அமுதூட்டிக் கொண்டிருக்கலாம்
ஒரு தாய் பல்லி
*
பாத்திரம் தேய்க்கத் தேய்க்கக்
கறுத்துவிடுகிறது வேலைக்காரச்
சிறுமியின் முகம்
*
பள்ளிக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு
விழா முடிந்ததும் அதிகாரி
பத்திரத்தில் இட்டார் கைநாட்டு
*
பிறந்தது பெண்குழந்தை
சுரந்தது பால்
கள்ளிச்செடி
*
சிகரட் வாங்கினேன்
பற்றவைத்தாள் தங்கை.
அப்பாவின் காதுகளில்
*
கோழிக்குஞ்சைத் தின்னும்
ஞானமில்லாக் காக்கைக்குப்
போதிமரத்தில் கூடு
*
இருட்டுவதற்குள் தினமும்
வீட்டுக்கு வந்து செல்கிறது
அந்தி வெய்யில்
*
காற்றுப் பிரித்தக் கூரை
வீட்டுக்குள் சிதறிக்கிடக்கிறது
நிலா வெளி
இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்
Pollachi / Denmark

பூக்காரன் கவிதைகள் - பைராகி
நீலகிரி - உதகை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்
Pollachi / Denmark
