கவிபாரதீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிபாரதீ
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  08-Aug-1974
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2021
பார்த்தவர்கள்:  2689
புள்ளி:  375

என்னைப் பற்றி...

மத்திமம் தொடும் என் வாழ்வில், நான் நடந்த பாதையில் ஒரு பார்வை.நான் நடந்த சுவடுகள் மட்டும் காணாமல்.சுவடுகள் பதிய மீண்டும் ஒரு புதிய பயணம்.

என் படைப்புகள்
கவிபாரதீ செய்திகள்
கவிபாரதீ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2025 10:35 pm

முண்டாசு கவிஞனின்
நூற்றாண்டுகள் கடந்த
மூலமந்திரங்கள் நம்முள்
உலாவினாலும்.....


சகமனிதர்கள் யாவரும்
சகோதர சகோதரியென்ற
பண்புகள், முளைவிட்ட
உடனே மூளையில்
பதிவிடப் பட்டிருப்பினும்.....


ஒரே கருவறையின்
சக பயணியாயினும்
முன்பின் பயணித்திருப்பினும்
பாசமிகு போர்களம்
யாவுமின்று பயனற்று
போனதுவே.....


ஆயிரம் பண்பாடுகள்
பண்பட்ட பாரதத்தில்
இன்று பெண்னென்ற
உரு மறைந்து
பெற்றவன் பார்வைக்கும்,
மகளே வடிவுகள்
நிறைந்த சதைப்
பிண்டமாய் மட்டும்.....


மாசற்ற மனங்கள்
மறைந்துப்பல மாமாங்கம்
கடந்தாயிற்று, மிருகமாய்
மாறி உலாவுகின்றான்
சகமனி தனென்ற
போர்வையிலே......


மேலும்

கவிபாரதீ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2024 9:29 am

எதிர்பாராத ஸ்பரிசத்தில் பயந்து அலறிய திலோத்தமாவின் இதயத் துடிப்பின் ஓசை அவள் எதிரில் நின்ற யசோதம்மாவிற்கே கேட்கும்படி இருந்தது.


பயந்திட்டியாம்மா ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது அதான் பார்க்கலாம் என்று வந்தேன் என்றபடி அங்கு மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அவளிடம் குடிக்க சொல்லி கொடுத்தார்.


அதை வாங்கி மடக் மடக் என்று முழு டம்ளர் நீரையும் குடித்து முடித்தபின் தான் அவளின் சுவாசம் ஒரு நிலைப் பட்டது.


மன்னிச்சிடும்மா, இங்க ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது அதான் என்று அவர் ஆரம்பிக்கும் போதே....


ஐய்யய்யோ ஆண்ட

மேலும்

கவிபாரதீ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2024 4:09 pm

நேரம் நல்லிரவு 11.30 கடந்து அந்த நாளின் கடைசி சில நிமிடங்களை கடத்திக்கொண்டு இருந்தது.


காலையில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதில் உருவேற்றி சொல்ல இயலாத உணர்வுக்கு ஆட்பட்டிருந்தாள் திலோத்தமா.


இன்று காலை என்றும் போல் தான் அலுவலகம் நோக்கி மனதில் ஆயிரம் கனவுகளுடன் பயணித்தாள், ஆனால் விதி வேறு விதமாக விளையாட்டு காட்டுகிறது அவளிடம்.


உறக்கம் வராமல் விழிகளை கொட்ட கொட்ட விரித்து வானில் உலாவும் வெண்ணிலாவை ஜன்னல் வழியாக பார்த்தவாறு படுத்திருந்தாள் .


பால் நிலவை பார்க்கும் போது இவள் மனதில் அன்றைய நிகழ்வுகளால் எழுந்த அதிர்ச்சி சிறிது சிறிதாக

மேலும்

கவிபாரதீ - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2024 11:14 am

அழியும் தசை கூலங்கலை
அழகென்று நினைந்து மயங்கி
கருத்திழந் தலைந்து திரியும்
கலியுகக் கண்ணா.... நீநீநீ,
அரூபமாகிய உயிரே உன்னதமென
உணர்ந்தால் உணர்வாய் தன்னை..!!!

கவிபாரதீ ✍️

மேலும்

கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2024 9:10 pm

உயிர் தீண்டி
உள்ளம் உறைந்த
உத்தமனின் விழியோடு
விழி கோர்த்த
நங்கை நாணி
இமை கவிழ்த்தாள்
நிமிடத்தில்.....

கவிபாரதீ ✍️

மேலும்

வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி 21-Oct-2024 2:52 pm
அருமை காதலினிமை 19-Oct-2024 2:12 pm
கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2023 9:57 am

ஒலியும் ஒளியும் சங்கமித்து
மகிழும் நாள்
தீபாவளி!!!

கவிபாரதீ ✍️

மேலும்

வணக்கம் கவிஞரே.. ஹைக்கூ கவிதைகள் எழுதும் போது முழுவதுமாக விவரிக்க தேவையில்லை சற்று அசைகளின் அளவை குறைத்தே எழுதவேண்டும். சிலவற்றை வாசகனின் புரிதலுக்கு விட்டுவிடவேண்டும். மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்றும் இதுவே. ஈரோடு தமிழன்பன் அவர்களின் ஹைக்கூ கவிதைகளை படித்துப் பாருங்கள்... உங்களின் கவிதையும் வளமாகவே உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள். 05-Dec-2023 8:51 am
ஒலியும் ஒளியும் சங்கமிக்கும் நாள் தீபாவளி சரியா சகோ? 04-Dec-2023 10:38 pm
அருமை.. இன்னும் குறைத்து எழுதலாம்.. 29-Nov-2023 12:17 pm
கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2023 7:46 am

நிலைமாறா விலைமதிப்பற்ற
பொக்கிஷம்
பழம்பெருமை!!!

                  கவிபாரதீ  ✍️

மேலும்

நன்றி அண்ணா 🙏 13-Oct-2023 9:13 pm
சகோதரி.....இது குறுங்கவிதை ஹைக்கூ அல்ல 11-Oct-2023 11:03 pm
கவிபாரதீ - Sam Saravanan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2021 8:39 am

-------------------
வலிகள் தந்த நேர்
வழிகள் என்றும்
வலிமை சேர்ந்து
வளமை பெற்ற
வாழ்வாய் சிறக்கும்..
--------
சாம்.சரவணன்

மேலும்

உண்மை தான் 27-Sep-2023 7:02 pm
கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2023 3:15 pm

தென்றல் நான் தெவிட்டாதவள்
மனிதன் ஆனந்திக்கும் சுகம்
நொடிப் பொழுதும் நில்லாமல்
பயணிப்பேன்....

பாற் கடலையும் கடந்திடுவேன்
கடலுடன் உறவாடிக் கவிழ்த்து
கலங்காமல் கரை தொடும்
பேரலை நான்...

இழிவாய் பேசும் மனிதா
அழுத்தி நினைவில் பதி,
சுவாசத்தால் சுகம் கூடும்
வாழ்வு செழித்திடும்...

இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், மனதில் மருகும்
இழந்ததை அறிந்து இறுதியில்....

எந்தன் உடன்பிறப்பை வீழ்த்திப்பின்
உறுத்து விழித்து முறைத்தாலும்
துள்ளலுடன் தென்றல் - நான்
தோன்றுதல் இயலாது...

தவற்றைத் திருத்தி தவறாமல்
நட்டு வளர்த்திட நானும்
தோதாக தினம் தினம்
தவறாமல்

மேலும்

நன்றி 🙏 15-Jun-2023 6:31 pm
சிறப்பு 15-Jun-2023 5:53 pm
நன்றி 🙏. 25-May-2023 10:06 am
அழகு 20-May-2023 3:03 pm
கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2023 4:01 pm

நித்தம் என் முகத்தில்
புத்தம் புதிதாக "மலர்ச்சி"
மலர்ந்து விகசிக்கின்றது...!!!

என் கற்பனை வானில்
எழும் சீரிய சிந்தைதனை
கவிதையாய் பிரசவிக்கும்போது...!!!

முத்தம் ஒன்று தந்தெனது
மலர்ச்சி கொண்டாட படும்
பிரசவித்த கவிதைக்கு பிரசுரிக்குமுன்...!!!

கவிபாரதீ ✍️

மேலும்

கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2023 5:54 pm

சிறகடித்து பறக்கும் வயதில்
செல்லமாய் ஓர் வார்த்தை
செவி வந்து சேர்ந்தாலும்
மனம் மயங்கி மகிழும்....

பதின் வயதில் பள்ளியில்
சிதறிய கவனம் குவிந்தது
பள்ளித் தோழன் மீது,
ஆசை மிக வரைந்தேன்
ஒர் கடிதம்....

தூரிகை கொண்டு தூரலாய்
வண்ணம் தூவி தீட்டினேன்,
ஆடவன் கைபற்றிய காரிகையும்
இடையினில் இருவரின் துடிக்கும்
இதயம் ....

என் மன வானின்
எண்ணங்களை துரிதமாக
தூவினேன் தூரிகை கொண்டு
ஓவிய காரிகையினுள்...

பின் குறிப்பினில், "யென்னிதயச் சொற்களை அறிந்திட யெனை
ஊன்றி கவனித்தால் மட்டுமே
விழிகளுக்கு தென்படும்".....

இதயத்துடிப்பு மிக கடிதம்
கை மாறியது என்னவனிடம் ,
மனம் கவர்ந்தவன் மன

மேலும்

கவிபாரதீ - கவிபாரதீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2023 7:26 am

5 . காதலில் கரைந்த நொடிகள்


திலோத்தமா பைக்கில் இருபுறமும் கால்களை வைத்தபடி ஏறி அமர்ந்து அவன் தோள்களை பற்றிக் கொண்டாள்.

மெதுவாக பைக் கிளம்பியது. திலோ வெகு மகிழ்ச்சியாக உணர்ந்தாள். இயல்பாகவே திலோவுக்கு பைக் இல் செல்வது மிகவும் விருப்பமான ஒன்று அதுவும் மனம் கவர்ந்த நாயகனுடன் செல்லும்போது கசக்குமா என்ன என்று மனதில் நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட்டினால் சூப்பரா இருக்கும் ரகு என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு உதடுகள் பிரியாது புன்னகைத்தான் ரகுராமன். இன்று திலோ மிகவும் ஆனந்தமாக இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

Sam Saravanan

Sam Saravanan

Bangalore
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Sam Saravanan

Sam Saravanan

Bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Sam Saravanan

Sam Saravanan

Bangalore
மேலே