பூக்காரன் கவிதைகள் - பைராகி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பூக்காரன் கவிதைகள் - பைராகி
இடம்:  நீலகிரி - உதகை
பிறந்த தேதி :  14-Feb-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2012
பார்த்தவர்கள்:  5156
புள்ளி:  1976

என்னைப் பற்றி...

காலக்கரையில் கால் நனைத்தபடி நீளநடக்கிறேன், அலைத்தொடும் அருகலில் என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக, நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில் என் சுவடுகளில் சில நிலைத்தும் சில அழிந்தும் காண, எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன் "பூக்காரன் கவிதைகள்"

என் படைப்புகள்
பூக்காரன் கவிதைகள் - பைராகி செய்திகள்

இனியவள் சகாப்தம் - 4
(நிற இரவுகள்)

அவளை
என் தோட்டத்திலிருக்கும்
அத்தனைப் பூக்களுக்கும் பிடித்திருந்தன.
ஆனால் அவளுக்கு
பூக்களைப் பிடித்ததாக தெரியவில்லை.
இன்றெப்போதோ
நான் பேசத் தவரிய இடைநாட்களில்
சில பூக்களை
அவளுக்குப் பிடித்திருக்கலாம்
அதையும், நான்தான்
அவளிடம்
கேட்க வேண்டுமாய் இருக்கும்.

மேக்கப் பிடிக்காது
சராசரி இரண்டாந்தர வார்த்தைகளை வேறு யாரும் சொல்லும்போது
அவள் முகத்தில்
அனுக்கங்களே இருக்காது.

என்கூட மட்டும் ஒரு ஆண் ரேஞ்சுக்கு
உட்காந்திருந்து பேசும்போது
அந்த இரண்டாம் தர வார்த்தைகளை
வெறும் நகைச்சுவையாகவே
கருதி சிரிப்பா.

இரவுகள் எனக்கு ஏன் புடிச்சதுன்னு கேட்ட

மேலும்

மறு அலை - சிறுகதை

சந்திரலேகாவின் மனம் கனல் விழுங்கியதைப் போல் கனன்றுக் கொண்டிருந்தது. எத்தனைக் கண்ணீர்த் துளிகள் கொண்டும் அக்கங்குகளை ஆற்றுப் படுத்தமுடியவில்லை.

மணியம்மாள் இறந்த மறுநாள் அன்று
அவளின் பீரோவைத் திறக்கவேண்டும் என்று ஈஷ்வரன் பிடிவாதமாக தன் அத்தையின் மகன் ரவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

இழவு விழுந்த வீட்டில் அண்ணன் தம்பிகள் பங்குப்போட்டு வாங்கி வந்த மளிகைக் காய்க்கறிகளை தன் கண்களால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் மூத்தமருமகளான
ஈஷ்வரனின் மனைவி விஜயா

அம்மா சொன்னதாக தன் மனைவியின் ஐந்து சவரன் நகையை குடும்ப சொத்து பராமரிப்பிற்கென அடமானம் வைத்திருந்ததை திருப்ப மறந

மேலும்

வீற்றிருப்பு (சிறுகதை)

பெரியப்பா சொன்ன அந்த வார்த்தை சிறுகாஞ்சொறிச் செடியைப் போல நிரஞ்சனின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

தந்தைவழி பாட்டி மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டதனால் அம்மாவும்
அப்பாவும் அவரைப் பார்க்கும் அவசரத்தில் இருந்தார்கள்.

நிரஞ்சன் வேதிப் பொறியியல் இரண்டாம் ஆண்டில் இருந்தான்

இதன் காரணமாக அவனுக்கு தன் தந்தைத் தாயுடன் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை.

தற்காலிகமாக பெரியம்மா வீட்டில் தங்கி கல்லூரி செல்லும் சூழலில் தள்ளப்பட்டிருந்தான். அவனுக்கு அதில் துளிகூட விருப்பம் இருக்கவில்லை.
.

பெரியம்மாவின் அன்பும் அமைதியுமே
அவனை பெரியம்மா வீட்டை சார்ந்த பி

மேலும்

ப்ரியப்பட்ட டேஷ் - 07

சூரிய சந்தியைகளில் மஞ்சள்மறைக் கொந்தவெளிக் கீழ்வானம் ஒன்று
முந்தாணையிட்ட புகைக்கோலம் தான்.
நீ வந்தது.

முதல் காணலில் கனவுகள் பிறப்பது
ஆகாயகமனத்தில் பறப்பது என
பிஞ்சுநேசங்களில் திளைத்திருக்கவில்லை

என் ப்ரியங்களுக்கான முதிர்ச்சி என்பது,
என்‌குரல்
இளையதாயொரு புன்னகை
கண்களில் காணும் அமைதி பேரொளி
நெருப்பில் வார்த்தெடுக்கப்பட்ட
இரும்பு
இவற்றைப்போல கனம் நிறைந்தது.

நாளங்களில் உறைந்து கிடக்கும்
இரத்தம்.
இரணங்களின் நடுவில் உருளாமல் கிடக்கும் கட்டி.
காற்றில் கலந்த உன் சினுங்கல் சப்தம்.
செவி அறைகின்றன.

எப்போதும் அழைத்துவிடவேண்டுமாய்
ஒருச் செல்லப் பெ

மேலும்

அம்மா வந்திருக்கிறாள்
-----------------------------------------------

நவநீதாவை அழைத்திருந்தேன்

வழக்கம்போல வீட்டுக் காரியங்களை,
தோட்டக் காரியங்களைப் பேசி முடிச்சிட்டப் பிறகு அம்மா அன்று சொன்னது நினைவிற்கு வந்தது.

ரமேஷ் அண்ணாவிற்கு பணம் அனுப்பியாச்சா எனக் கேட்டேன்.

இதோ கொஞ்சம் முன்னாடிதான் போன்பே நம்பர் வாங்கி இருக்கேன்
அனுப்பிடறேங்க என்றாள் .

ரமேஷ் அண்ணன்

தாய் தந்தை வைத்தப் பெயர் ஸ்ரீனிவாசன். எனக்கு தாய் மாமன் மகன்.

போனமுறை பெரியம்மாவைப் பார்த்துவிட்டு அதிகநாட்கள் கழித்து அம்மா வந்திருந்தாள்.

வந்ததிலிருந்து அவள் முகம் ஏதோபோல் இருந்தது.

அவளிடம் அதைப்பற்றிக்

மேலும்

பெண்குழந்தைகளுக்கு பிறந்தவீட்டின் சுவரின் ஒற்றை செங்கலையும், அத்தனை ஏன் இது என்வீடு என்று உரிமைக் கோரிக்கொள்ளமுடியாத நிலையும் காலமும் மாறணும் என அப்பா இருந்தவரை அம்மாவை மனதில் வைத்தே சொல்வார். அம்மாவிற்கு அத்துணை ஆறுதலாக இருப்பார். அப்பாவின் இருப்புதான் அம்மாவின் பிறந்தவீட்டு அசைவுகளால் அவளுக்கு ஏதும் நேர்ந்துவிடாமல் சமனித்து வைத்திருந்தது. அப்பாவின் மறைவு அம்மாவை அசைத்துப் பார்த்தது சத்தியமென்றே சொல்லுவேன். அத்தனையும் தளர்ந்துவிட்டாலும் எல்லோர் முன்னாலும் அதே தைரியமாய் இருப்பதைப்போல் பாவித்து நடமாடுகிறாள். 03-Nov-2023 1:27 am

இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -

அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியா

மேலும்

ம்ம் நன்றி 28-Feb-2023 4:48 pm
இதயம் தொட்ட அற்புதம் நன்றி 🙏 28-Feb-2023 7:07 am

"இஸ்"
======

குட்டி என்ன பண்றீங்க
படுத்துக்கிடக்கேன்
அப்படியா, குட்டி சாப்பிட்டீங்களா
ஆமா ம்ம்
எழுந்திருக்க மடி, உறக்கமே வருது
இப்படியே
தூங்கிட்டிருந்தா
இன்னும் ரெண்டே மாசந்தான்
அப்பறம் குண்டாகிடுவீங்க,
ஆமா
இப்படி தூங்க என்ன சாப்பிட்டீங்க
தயிர்சோறு
ராகிக்கூழ்
உடம்பிளைக்கிறேன் என்றவனுக்கு
ஆசை ஊக்கி ஆகிறாயே
சுடுசோறு மீதும் கெட்டித் தயிர் மீதும்
நாவின் மோகம்
மோசம்போகிறதே
பரவால்லை
நீ கட்டிப்பிடிக்க அதே வயிறு உனக்குக்கிடைக்குமே
என்கிறாய்

காதல் விரும்பும் குழந்தை ஒருத்தி
கோபிக்கத் தெரியாது டா
என்று சொல்லுவதைப்போல
குட்டிக்குட்டியாய், விட்டுவிட்டுக் கோபிக்கிறாள்
நகைப்பூட

மேலும்

Nice... 06-Aug-2022 5:27 am

கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்
****************************************************************

ஒண்ணு கேக்கட்டா ம்ம்
நான் வடநாட்டுப் பொண்ணு
எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை
ஆனா கட்டத் தெரியாது
எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம்
நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ??
எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,,

நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா
என்னைவிட்டுப் போயிடாதே
என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன
நீ பேச பேச
அவை உன்னையும்
மின்மினிப் போல
வெளிச்சமுள்ள உன் கண்களையும்
என் கனவுக்குள் இழுத்திடும் ம்ம்

என் அசதி இந்த படுக்கையை
மெல்ல அழுத்துது நான் உணருறேன்
என்

மேலும்

நன்றி நண்பரே 07-Aug-2022 10:27 am
நன்றி‌ நண்பரே 07-Aug-2022 10:27 am
உங்கள் கவிக்குள் அழகிய காதல் விதைகள் தினம் விளைகின்றன.. 16-Jul-2016 2:01 pm
அருமை! வாழ்த்துக்கள் .... 16-Jul-2016 12:31 pm

ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்

அழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்
அழகில்லாதப் பெண்களை
தங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..

சில வலிகளை சுமந்து கடப்பதைவிட
யாருமற்ற பயணத்தில்
உதிர்த்துப் போகலாம்

அன்று‌காலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்
செல்வியின் இறப்பை அறிவிக்க

அவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை
எவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு
பாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக
இன்னுமொரு

மேலும்

தொட்டக்குறை விட்டக்குறை - 4
==============================
அப்பொழுதெல்லாம் எனக்கு
அதிகமாய்ப் பேசி
பழக்கமில்லை
நீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்
ஏதோ
தனியா பேசணும்னு சொல்லி
அழைத்திருந்தாய்
நீ கூட இருந்தப்போ
அப்பாக்கிட்ட இருந்து
கால் வருது
அன்னைக்குத்தான்
முதல் முதலா
அவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..
பேசி,
செல்ஃபோனை
அணைத்திட்டப் பிறகு
சிரிச்சுகிட்டே
ம்ம் மேல சொல்லுன்னு
சொன்னதும்
நீ ஆச்சர்யமாப் பாத்த,
காஃபி குடிக்கணும்போல இருந்துச்சி,
சின்னதா தூறல் அடித்தது
நாம் இருவரும்
ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்
நம்மைத் தவிர
அங்க யாருமில்லை
நான் ..
அருகில

மேலும்

அனுராகவிலோச்சனதாரி
===========================

பக்கம் வா என்றுவிட்டு,
இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பீய்த்துக்கொன்று வருடி
உயிர்க்கதைக் கொல்லுகிறாய் ..
ஒளிப்பூட்டல் விடுகதைச் சிரிப்பு,
வீட்டுச்சாலை பாததனம்,
ஒளி எழுதிய கனவுக்கண் அனுகவிதை,
வாழ்க்கை இழுக்கும் கால அச்சாணி,
காணாமைத் தளர்வு,
தனிக்காற்றுக்கால சருகுசாதன சாந்திரிகைப் பொலிவு,

//""உன் வெட்கத்தை எல்லாம்
உனக்கேத் தெரியாமல்,
நிறையமுறை என் கவிதைகளில் சேர்த்துவிட்டேன்
ஆதலால்,
அது இப்போது வேண்டாம் ம்
முதல் மோதிரம் விரல் தொடும்போது
முகம் திருப்பிக் கொண்டாய்,
இரவு உடைந்த காதணிப் புலம்பல்கள்
கால்குத்திக் குரலா

மேலும்

அம்மா நிறம் எனக்குத் தெரியாது, அப்பாவும் அக்காவும் அவள் நிறத்தை எவ்ளோ வர்ணித்தாலும், என் யூகங்களைத் தாண்டி அவளுடைய நிறம் பற்றி எனக்கு திருப்தியே இருந்ததில்லை.. விபரம் தெரியாத வயதின் பகலொன்றில், என் ரூம் படுக்கையில் ..சாஞ்சதுபோல அந்த ஆல்பம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்பா அந்த சோஃபா ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தாரு ..அந்த ஆல்பம தூக்கமுடியாம தூக்கிட்டு போயி .. அவளைக் காட்டி.. ஏன்பா இதெல்லாம் கருப்பு வெள்ளையா இருக்குன்னு கேட்டேன்... அதுக்கு அப்பா சொன்னாரு

"அப்போது நிறங்களெல்லாம் அங்கேயேதான் இருந்தன... நாங்கள்தான் பின்தங்கியிருந்தோம்" ன்னு...

அவரோட கடைசிக்காலம்வரைக்கும் ,,

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (301)

கவிபாரதீ

கவிபாரதீ

தமிழ்நாடு
பிரியா

பிரியா

பெங்களூரு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (305)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (305)

 பால கிருஷ்ணா

பால கிருஷ்ணா

அறந்தாங்கி
Danisha

Danisha

Chennai
Nithu D

Nithu D

nelliady

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே