பூக்காரன் கவிதைகள் - பைராகி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பூக்காரன் கவிதைகள் - பைராகி |
இடம் | : நீலகிரி - உதகை |
பிறந்த தேதி | : 14-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 5299 |
புள்ளி | : 1991 |
காலக்கரையில் கால் நனைத்தபடி நீளநடக்கிறேன், அலைத்தொடும் அருகலில் என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக, நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில் என் சுவடுகளில் சில நிலைத்தும் சில அழிந்தும் காண, எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன் "பூக்காரன் கவிதைகள்"
தோழர்
பலரை வைத்து கம்பேர் செய்தபோது.
இங்கு முகநூலில் பெரும்பாலானப் பெண்கள் தங்களைக் குறித்த அனுமானங்களில் தங்களை தனித்துக்
காண்பிப்பதிலோ இல்லை கூடுதல்
அறிவு அழகுப் படுத்திக் காண்பிப்பதிலோ மெனக்கெடவே செய்கிறார்கள். அதில் தவறில்லை.
அதுக்கூட ஓர் அழகான இரசனைத் தின்றத் தவறுகள் தான்.
சிலப் பெண்கள் அவர்களை யாருடனும் ஒப்பிடும் அளவிற்கு ஒப்புக் கொள்ளமாட்டார்கள் . அதுபோல்
அடுத்துப்பேசும் ஆள் பார்த்தேப் பேசுவார்கள் பழகுவார்கள் (அது அவர்களுடைய Safety Measure என்றுக்கூட சொல்லிக் கொள்ளலாம்)
அதுவும் தவறில்லை.
எனக்கு கவிதையில் தவிற பொய் சொல்ல வராது.
நான் இன்றளவு முன்பு எப்போது
என் அம்மா .
அந்த கால அம்மாக்கள் அப்படித்தான்.
அம்மாக்களின் உணர்வுகள் என்ன என்பதை அருகிருந்து கேட்கணும்.
ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து அவளிடம் பேசத் தொடங்கினேன்.
அடுத்திருக்கிற எல்லாருடைய தேவைகளையும் நிறைவு செய்றோம். காதலிச்சா காதலி, மனைவி பிள்ளைங்க ஏன் நண்பர்கள் கிட்டக்கூட கூட பிடித்தத்தை தெரிந்துகொண்டு செய்றோம், போஸ்ட் போடுறோம் .
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைக் கூட விழுந்து விழுந்து உபசரிக்கிறோம்.
ஆனா அம்மாக்களை மறந்திடறோம்.
அந்த கால அம்மாக்கள் இன்ட்ரோவெர்ட்டுகளோ இல்லையோ பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அப்படி நடத்தப்பட்டாள்கள் என்பதே உண்மை.
காரணம் அவள்கள், சுற்றம்
உயிரின் உருமாற்றம்
உற்சாகச் சுடர்
உன் மனமெல்லாம் உற்சாகக் கொடிபோல் எழுந்து வீசும்.
புது ஒளியெனப் பரந்து எங்கும் ஊடுருவும்.
கனவு மின்னல்கள்
மாறி மாறி நெற்றி விளக்காக
இருள் நீக்கி வெளிச்சம் பரப்பும்.
காற்றின் எழுச்சியாய் உதிரம் கொட்டி பறத்தல் கற்றிடு.
நதிபோல ஓடைகளோடு கலந்து பாய்ந்தோட கற்றிடு.
ஒவ்வொரு வேளையும் திருவிழாவாய் அணுகி,
ஒவ்வொரு கணத்தையும்
புதுமையாய் உணர்ந்து மகிழ்ந்திடு.
உன் பார்வையில் ஆச்சரியங்கள் ஒளிர்ந்தால்,
நீ உயிருடன் எழுந்திருப்பாய்.
உன் இதயத்தில் தொடுகருவாய் வேகமாய் அவைப் பாய்ந்தால்,
நீ வாழ்ந்திருப்பாய்.
மௌனத்தின் மர்மம் ஒரு உணர்வு. உதடுகளின் விளிம்ப
நெரிசலில் அலசுகின்ற குரல்களின் நடுவில்
எதையோ அவிழ்க்க எண்ணி
தன்முனைப்பில் விட்டுவிடுகிறேன்.
சிலசமயம் அசைப்போட்டுப் பார்க்கிறேன்.
சந்தித்த துரந்தங்கள்
முன்னால் காண்கிறேன் .
மனசு அதிலுள்ள தளர்ச்சி
நான் உணருறேன்.
எனக்கு அதில் தீராத வேதனை
இருக்கிறது.
யாரிடத்தில் நெருங்கும்போதும்
சத்தியத்தில்
நான் எதிர்ப்பார்த்தது என்று
எதுவும் இருந்ததில்லை
எண்ணப் பாய்ச்சல்களுக்கும் நதியலைகளுக்கும் இடைப்பட்ட கடும்பாறை அறைதல்களில்
நிபந்தனைகளை எப்படி எப்படியோ
சமன் படுத்திவிடுகிறது காலம் .
ஏதும் செய்யாமல்
முள்ளாணியில் பிடைந்த
ஒரு காலகட்டம்
வழிகளுக்கு முன்னால் பாதையிட்டுப் போகிறது
அம்மா வந்திருக்கிறாள்
-----------------------------------------------
நவநீதாவை அழைத்திருந்தேன்
வழக்கம்போல வீட்டுக் காரியங்களை,
தோட்டக் காரியங்களைப் பேசி முடிச்சிட்டப் பிறகு அம்மா அன்று சொன்னது நினைவிற்கு வந்தது.
ரமேஷ் அண்ணாவிற்கு பணம் அனுப்பியாச்சா எனக் கேட்டேன்.
இதோ கொஞ்சம் முன்னாடிதான் போன்பே நம்பர் வாங்கி இருக்கேன்
அனுப்பிடறேங்க என்றாள் .
ரமேஷ் அண்ணன்
தாய் தந்தை வைத்தப் பெயர் ஸ்ரீனிவாசன். எனக்கு தாய் மாமன் மகன்.
போனமுறை பெரியம்மாவைப் பார்த்துவிட்டு அதிகநாட்கள் கழித்து அம்மா வந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவள் முகம் ஏதோபோல் இருந்தது.
அவளிடம் அதைப்பற்றிக்
இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -
அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியா
"இஸ்"
======
குட்டி என்ன பண்றீங்க
படுத்துக்கிடக்கேன்
அப்படியா, குட்டி சாப்பிட்டீங்களா
ஆமா ம்ம்
எழுந்திருக்க மடி, உறக்கமே வருது
இப்படியே
தூங்கிட்டிருந்தா
இன்னும் ரெண்டே மாசந்தான்
அப்பறம் குண்டாகிடுவீங்க,
ஆமா
இப்படி தூங்க என்ன சாப்பிட்டீங்க
தயிர்சோறு
ராகிக்கூழ்
உடம்பிளைக்கிறேன் என்றவனுக்கு
ஆசை ஊக்கி ஆகிறாயே
சுடுசோறு மீதும் கெட்டித் தயிர் மீதும்
நாவின் மோகம்
மோசம்போகிறதே
பரவால்லை
நீ கட்டிப்பிடிக்க அதே வயிறு உனக்குக்கிடைக்குமே
என்கிறாய்
காதல் விரும்பும் குழந்தை ஒருத்தி
கோபிக்கத் தெரியாது டா
என்று சொல்லுவதைப்போல
குட்டிக்குட்டியாய், விட்டுவிட்டுக் கோபிக்கிறாள்
நகைப்பூட
கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்
****************************************************************
ஒண்ணு கேக்கட்டா ம்ம்
நான் வடநாட்டுப் பொண்ணு
எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை
ஆனா கட்டத் தெரியாது
எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம்
நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ??
எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,,
நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா
என்னைவிட்டுப் போயிடாதே
என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன
நீ பேச பேச
அவை உன்னையும்
மின்மினிப் போல
வெளிச்சமுள்ள உன் கண்களையும்
என் கனவுக்குள் இழுத்திடும் ம்ம்
என் அசதி இந்த படுக்கையை
மெல்ல அழுத்துது நான் உணருறேன்
என்
ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்
அழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்
அழகில்லாதப் பெண்களை
தங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..
சில வலிகளை சுமந்து கடப்பதைவிட
யாருமற்ற பயணத்தில்
உதிர்த்துப் போகலாம்
அன்றுகாலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்
செல்வியின் இறப்பை அறிவிக்க
அவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை
எவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு
பாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக
இன்னுமொரு
தொட்டக்குறை விட்டக்குறை - 4
==============================
அப்பொழுதெல்லாம் எனக்கு
அதிகமாய்ப் பேசி
பழக்கமில்லை
நீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்
ஏதோ
தனியா பேசணும்னு சொல்லி
அழைத்திருந்தாய்
நீ கூட இருந்தப்போ
அப்பாக்கிட்ட இருந்து
கால் வருது
அன்னைக்குத்தான்
முதல் முதலா
அவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..
பேசி,
செல்ஃபோனை
அணைத்திட்டப் பிறகு
சிரிச்சுகிட்டே
ம்ம் மேல சொல்லுன்னு
சொன்னதும்
நீ ஆச்சர்யமாப் பாத்த,
காஃபி குடிக்கணும்போல இருந்துச்சி,
சின்னதா தூறல் அடித்தது
நாம் இருவரும்
ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்
நம்மைத் தவிர
அங்க யாருமில்லை
நான் ..
அருகில
அனுராகவிலோச்சனதாரி
===========================
பக்கம் வா என்றுவிட்டு,
இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பீய்த்துக்கொன்று வருடி
உயிர்க்கதைக் கொல்லுகிறாய் ..
ஒளிப்பூட்டல் விடுகதைச் சிரிப்பு,
வீட்டுச்சாலை பாததனம்,
ஒளி எழுதிய கனவுக்கண் அனுகவிதை,
வாழ்க்கை இழுக்கும் கால அச்சாணி,
காணாமைத் தளர்வு,
தனிக்காற்றுக்கால சருகுசாதன சாந்திரிகைப் பொலிவு,
//""உன் வெட்கத்தை எல்லாம்
உனக்கேத் தெரியாமல்,
நிறையமுறை என் கவிதைகளில் சேர்த்துவிட்டேன்
ஆதலால்,
அது இப்போது வேண்டாம் ம்
முதல் மோதிரம் விரல் தொடும்போது
முகம் திருப்பிக் கொண்டாய்,
இரவு உடைந்த காதணிப் புலம்பல்கள்
கால்குத்திக் குரலா
அம்மா நிறம் எனக்குத் தெரியாது, அப்பாவும் அக்காவும் அவள் நிறத்தை எவ்ளோ வர்ணித்தாலும், என் யூகங்களைத் தாண்டி அவளுடைய நிறம் பற்றி எனக்கு திருப்தியே இருந்ததில்லை.. விபரம் தெரியாத வயதின் பகலொன்றில், என் ரூம் படுக்கையில் ..சாஞ்சதுபோல அந்த ஆல்பம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்பா அந்த சோஃபா ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தாரு ..அந்த ஆல்பம தூக்கமுடியாம தூக்கிட்டு போயி .. அவளைக் காட்டி.. ஏன்பா இதெல்லாம் கருப்பு வெள்ளையா இருக்குன்னு கேட்டேன்... அதுக்கு அப்பா சொன்னாரு
"அப்போது நிறங்களெல்லாம் அங்கேயேதான் இருந்தன... நாங்கள்தான் பின்தங்கியிருந்தோம்" ன்னு...
அவரோட கடைசிக்காலம்வரைக்கும் ,,