பூக்காரன் கவிதைகள் - பைராகி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பூக்காரன் கவிதைகள் - பைராகி |
இடம் | : நீலகிரி - உதகை |
பிறந்த தேதி | : 14-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 5358 |
புள்ளி | : 1999 |
காலக்கரையில் கால் நனைத்தபடி நீளநடக்கிறேன், அலைத்தொடும் அருகலில் என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக, நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில் என் சுவடுகளில் சில நிலைத்தும் சில அழிந்தும் காண, எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன் "பூக்காரன் கவிதைகள்"
பார்வை மூர்க்கம் - (டைரி)
நான் அந்த வரிகளை எழுதும்போது, அவள் என் அருகில் இல்லை எங்கோ இருந்தாள். அவள் பார்வையிலேயோ
அவள் வார்த்தைகளிலேயோ கூட
நான் இருந்திருக்கவில்லை .
ஏறெடுத்துப் பார்த்த அவள் நகலின் ஒருப்பார்வையை, அதன் நுகருதலை,
என் வரிகள் படம் பிடித்த கள்ளத் தனம்
தவறா ? சரியா ? தெரியவில்லை?
என்முதுகிற்குப் பின்னாலிருந்து
எல்லோரும் அனர்த்திக் கொள்வதைப் போல
நானுமொருப் பார்வைத் திருடன்தான்போல்.!
அந்தப் பார்வைத் திருட்டு
என்னை ஏன் குருடாக்கியது ம் ? .
அவள் பாதங்கள் மிதிபடும் மணற்சாலையில் ஒரு மணற்துகள் நான்.
அவள் பாதங்கள் துள்ளலிடும்
புல்வெளிகளில்
ஒரு புன்னுனி நா
டைரி
அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பாய்!
நான் ஏன் உனக்கு அத்தனை முக்கியமாய்ப் படுகிறேன் என்று.
முக்கியமாய் என்றால் !
நிறைய முக்கியங்களை அடுக்கடுக்காக நிரல் செய்ய நேரிடும்.
என் வாழ்வில்
இதுக்கு முன்பு நான்
அதுவரையும் கண்டிராத, கேட்டிராத, அறிந்துமிராத ஒரு பெண்
சட்டென ஒரு நடு இரவில் பிரச்சனையாகிறாள்.
என் பொறுப்பிற்கும் அந்தஸ்த்திற்கும்
புருஷத்தனத்திற்கும் சேர்த்து அறைகூவல்களாகிறாள்.
மைக்ரேனைவிட
கொடிய தலைவகியாகிறாள் .
கண்களால் காணமுடியாத ஆதர்ஷியமான நூற்கண்டுகளால்
ஏதேதோ கதைகளைக் கூட்டிச் சேர்த்து சிலரை அடுக்கவும்
சிலரை நம்மிடமிருந்து விலக்கவும்
நம் தலைக்கு
தொடக்கம் முதல் தொடரும்வரை.
(தெரியல. தெரியாது. ஒண்ணும் தெரியாது. எதும் கேட்காதே)
----------------------------------------------------------------
(டைரி)
அதிகநாட்கள் கழித்து
அவளிடம் உரையாடுகிறேன்.
ஆம் அவள் சொல்லுவதுபோல்
அவள் எனக்கு
அன்று அத்தனைப் பழக்கமில்லாதவள்தான் .
அவளுக்கு
என்னைப் பிடிக்குமா என்பதுகூட
எனக்குத் தெரியாது.
ஆனால்
எப்போதாவது பேசும் என் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கிறாள்
அதற்காக நிறைய நேரம்
செலவழிக்கிறாள்
என் உணர்வுகளுக்கு
மதிப்புக் கொடுக்கிறாள்.
புரிந்துகொள்கிறாள்.
இதெல்லாம் ஏன் செய்கிறாள் ?
காலத்தால் சில அழகிய நிகழ்வுகளிலிருந்து நான்
இனியவள் சகாப்தம் - (தொடர் 04) (டைரி - 2002)
இப்படி எல்லாம் நடக்குமென நான்
முன் கூட்டியே கருதி இருக்கவில்லை.
செய்ததற்கெல்லாம் உன்னிடம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை.
மன்னிக்கின்ற அளவுகளை என் பாவங்கள் என்றுமுதலோ கடந்துநிற்கின்றன என்று அறிவேன்.
நிறைய அனுபவங்களைக் கண்டப் பிறகும் கூட கொஞ்சம் சமைய மெனக் கெட்டால் எல்லாத்தையும் சரி செஞ்சிடலாமென நினைத்திருந்தேன்.
ஒருகணக்கில் எனக்குனு கொடுக்க இருந்த அருகதையான அதிகப் பட்ச தண்டணையைத்தான் நீ எனக்குக் கொடுத்திருக்கிறாய். எனக்கு அதில் வருத்தமேதுமில்லை.
நம் இருவரின் விஷயத்தில் நிறைய நன்மைகள் இருந்திருந்ததை நான்
மறந்திருந்தேன். அதெ
ப்ரியப்பட்ட டேஷ் - 10
வழி விளக்கின் ஆதிவெளிச்சம்
ஜன்னல் ஊடுருவி சுவர்வரைந்த
நிழல் சித்திரம் பார்த்தவாறு நீ குப்புறக் கிடந்திருந்தாய். தெய்வத்தின் கண்கள் பின்னாம்புறமாய் இருந்திருக்கணும் போல் . காருண்யம் புறமெடுத்து சுரக்கின்ற திவ்யஜுவாலையாய், கேட்கின்ற செவிகளுக்கு சர்வ சாந்தனமாய், தீண்டும் விரல்களுக்கு கனல்சரங்களாய் எல்லாமே என் முன்னில்தான் என நம்பிக்கை வைத்திருந்த ஒரு காலம் இருந்தது.
பின் எங்கிருந்து, எப்போது தெய்வம் உனக்குள்மட்டும் குடியேறி
கம்படித்துக் கொடிநாட்டியது ? தெரியவில்லை.
கேலிகளுக்கு நடு நடுவே ஆரோகணமாய் சிரித்துக் கொல்லுகிறாய். இந்த முகப்ரசாதம்
இனி இப்படியே
அம்மா வந்திருக்கிறாள்
-----------------------------------------------
நவநீதாவை அழைத்திருந்தேன்
வழக்கம்போல வீட்டுக் காரியங்களை,
தோட்டக் காரியங்களைப் பேசி முடிச்சிட்டப் பிறகு அம்மா அன்று சொன்னது நினைவிற்கு வந்தது.
ரமேஷ் அண்ணாவிற்கு பணம் அனுப்பியாச்சா எனக் கேட்டேன்.
இதோ கொஞ்சம் முன்னாடிதான் போன்பே நம்பர் வாங்கி இருக்கேன்
அனுப்பிடறேங்க என்றாள் .
ரமேஷ் அண்ணன்
தாய் தந்தை வைத்தப் பெயர் ஸ்ரீனிவாசன். எனக்கு தாய் மாமன் மகன்.
போனமுறை பெரியம்மாவைப் பார்த்துவிட்டு அதிகநாட்கள் கழித்து அம்மா வந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவள் முகம் ஏதோபோல் இருந்தது.
அவளிடம் அதைப்பற்றிக்
இனியவளுக்கு - தசாப்தம் பிளஸ்
================================
"இதயம் திறந்தநாள் (திருமணநாள்) வாழ்த்து" -
அவளை அதிகம் நேசிக்கிறேன்
அவளை அதிகம் யாருக்கும் அறிமுகப்படுத்தியதில்லை
அவள் அழகிகளின் அழகி
அவள் பூக்களை விரும்புகிறவள் அல்ல
அவளை பூக்களோடு ஒப்பனைச் செய்வதில்லை நான்
அவள் மொத்தப் பூக்களுடைய தனிப் பிரபஞ்சம்
அவள் எல்லாப் பூக்களுடை ஏழு பருவங்கள்
அவளாவன அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
-என் காலத்திற்கு பின்னாலான அவள் நிலை செம்மல்-
அவளுக்கு கவிதைகள் தெரியாது
அவளைப்பார்த்தால் கவிதைகள் விழும்
அவளுக்கு பாடல் வராது
அவளைப்பார்த்தால் இசை அரும்பும்.
அவள் நேசம் சொல்வதறியா
"இஸ்"
======
குட்டி என்ன பண்றீங்க
படுத்துக்கிடக்கேன்
அப்படியா, குட்டி சாப்பிட்டீங்களா
ஆமா ம்ம்
எழுந்திருக்க மடி, உறக்கமே வருது
இப்படியே
தூங்கிட்டிருந்தா
இன்னும் ரெண்டே மாசந்தான்
அப்பறம் குண்டாகிடுவீங்க,
ஆமா
இப்படி தூங்க என்ன சாப்பிட்டீங்க
தயிர்சோறு
ராகிக்கூழ்
உடம்பிளைக்கிறேன் என்றவனுக்கு
ஆசை ஊக்கி ஆகிறாயே
சுடுசோறு மீதும் கெட்டித் தயிர் மீதும்
நாவின் மோகம்
மோசம்போகிறதே
பரவால்லை
நீ கட்டிப்பிடிக்க அதே வயிறு உனக்குக்கிடைக்குமே
என்கிறாய்
காதல் விரும்பும் குழந்தை ஒருத்தி
கோபிக்கத் தெரியாது டா
என்று சொல்லுவதைப்போல
குட்டிக்குட்டியாய், விட்டுவிட்டுக் கோபிக்கிறாள்
நகைப்பூட
கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்
****************************************************************
ஒண்ணு கேக்கட்டா ம்ம்
நான் வடநாட்டுப் பொண்ணு
எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை
ஆனா கட்டத் தெரியாது
எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம்
நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ??
எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,,
நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா
என்னைவிட்டுப் போயிடாதே
என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன
நீ பேச பேச
அவை உன்னையும்
மின்மினிப் போல
வெளிச்சமுள்ள உன் கண்களையும்
என் கனவுக்குள் இழுத்திடும் ம்ம்
என் அசதி இந்த படுக்கையை
மெல்ல அழுத்துது நான் உணருறேன்
என்
ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்
அழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்
அழகில்லாதப் பெண்களை
தங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..
சில வலிகளை சுமந்து கடப்பதைவிட
யாருமற்ற பயணத்தில்
உதிர்த்துப் போகலாம்
அன்றுகாலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்
செல்வியின் இறப்பை அறிவிக்க
அவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை
எவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு
பாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக
இன்னுமொரு
தொட்டக்குறை விட்டக்குறை - 4
==============================
அப்பொழுதெல்லாம் எனக்கு
அதிகமாய்ப் பேசி
பழக்கமில்லை
நீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்
ஏதோ
தனியா பேசணும்னு சொல்லி
அழைத்திருந்தாய்
நீ கூட இருந்தப்போ
அப்பாக்கிட்ட இருந்து
கால் வருது
அன்னைக்குத்தான்
முதல் முதலா
அவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..
பேசி,
செல்ஃபோனை
அணைத்திட்டப் பிறகு
சிரிச்சுகிட்டே
ம்ம் மேல சொல்லுன்னு
சொன்னதும்
நீ ஆச்சர்யமாப் பாத்த,
காஃபி குடிக்கணும்போல இருந்துச்சி,
சின்னதா தூறல் அடித்தது
நாம் இருவரும்
ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்
நம்மைத் தவிர
அங்க யாருமில்லை
நான் ..
அருகில
அனுராகவிலோச்சனதாரி
===========================
பக்கம் வா என்றுவிட்டு,
இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பீய்த்துக்கொன்று வருடி
உயிர்க்கதைக் கொல்லுகிறாய் ..
ஒளிப்பூட்டல் விடுகதைச் சிரிப்பு,
வீட்டுச்சாலை பாததனம்,
ஒளி எழுதிய கனவுக்கண் அனுகவிதை,
வாழ்க்கை இழுக்கும் கால அச்சாணி,
காணாமைத் தளர்வு,
தனிக்காற்றுக்கால சருகுசாதன சாந்திரிகைப் பொலிவு,
//""உன் வெட்கத்தை எல்லாம்
உனக்கேத் தெரியாமல்,
நிறையமுறை என் கவிதைகளில் சேர்த்துவிட்டேன்
ஆதலால்,
அது இப்போது வேண்டாம் ம்
முதல் மோதிரம் விரல் தொடும்போது
முகம் திருப்பிக் கொண்டாய்,
இரவு உடைந்த காதணிப் புலம்பல்கள்
கால்குத்திக் குரலா