ஜவ்ஹர் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஜவ்ஹர்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  01-May-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  1029
புள்ளி:  1031

என்னைப் பற்றி...

கவி படிக்கவும் படைக்கவும் ஆர்வமாயுள்ளேன்.
தொடர்பு-0773717482
மின்னஞ்சல் -mhjawhar @gmail.com

என் படைப்புகள்
ஜவ்ஹர் செய்திகள்
ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2023 8:18 pm

வெயிலாய் கொட்டுகிறது
வானம்
நிழலை போர்வையாய் போர்த்தினாலும்
அகல மறுக்கிறது வெம்மை!

தண்மை இழந்த காற்றும்
உடன் சேர்ந்து
என்னுடலை தீய்த்து
சுகம் காண்கிறது
கருணையே
இல்லாமல்!

உச்சிப் பொழுது உச்சம்
காண்கிறது
இச்சை தீர்த்து கச்சை கட்டி
என் மேல் விழுந்து
கட்டிப் பிறழ்கிறது
இரக்கமே இல்லாமல்!

ஜவ்ஹர்

மேலும்

ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2023 7:55 am

பாழ் நிலமாய்க் கிடந்த இவனிதயம்!
பணிந்தேயேங்கும் மேகம் மறைத்த உதயம்!

பாசக்காரி உன் வரவால் தொலைந்ததென் காயம்!
உனைக் கண்ட நாள் முதலாய் சொப்பனங்கள் ஆயிரம்!

கற்பனையில் வாழ்வதுதான் சுகங்கள் பல்லாயிரம்!
நாமிருவம் கை பிடித்துப் பாவிசைத்தேயாகனும்!

விழி வழியே இதயம் நிறைந்தாய்!
விதி நமை சேர்க்க இறை பணிந்தாய்!

வாவென் கண்ணே கதைகள் பல பேசிடலாம்!
வானவர்கள் நமை வாழ்த்தி
பூமலை சொரிந்திடலாம்!

மேலும்

ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2023 11:19 am

தூக்கம் தொலைத்த மின்சாரம்

மின் விசிறிக்கு
வீட்டம்மாவின் தடை உத்தரவு
மீறினால் சூரசம்காரமாகி
சம்சாரம்
மின்சாரமாகிறாள்!

பழகிப் போன
பாழாய்ப் போன விசிறியால்
உசிரே போகிறது
வெக்கையில் உடல் தகிக்கிறது!

தூக்கம் தொலைத்த
மின்சாரம் ராவெல்லாம்
மின் விசிறியை ஏக்கமாய்
பார்க்கச் செய்திருக்கிறது!

தட்டு முட்டுச் சாமான்களோடு
சேர்த்து வைத்து
அழகு பார்க்க விருப்பமாம்
மனையாள் என் காதுபடச் சொல்வது கேட்கிறது!

இப்போதெல்லாம் இரவுகள்
என்னைப் பார்த்து
ஏலனமாய் சிரிக்கிறது
நானும் சேர்ந்து நீண்ட இரவுகளோடு ஆற்றாமல் சிரிக்கிறேன்!

ஜவ்ஹர்

மேலும்

ஜவ்ஹர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2023 5:10 pm

மணமகன் வீட்டாரின் மிடுக்கும், பெண் வீட்டாரின் கடுப்பும்!

கல்யாண வீடென்றால்
கலகலப்புக்குப் பஞ்சமில்லை
மாப்பிள்ளை வீட்டாருக்கு
எக்ஸ்ட்ரா
கிளுகிளுப்புக்குக் குறையில்லை!

மிடுக்கும் அவர் முறுக்கும்
பெண் வீட்டாரைக் கிலிகொள்ளச் செய்துவிடும்
சிறு குறையும் குரலோங்கித்
தெருவரையும் பரந்துவிடும்!

வாவென்று அழைக்கவில்லை
புன்முறுவல் பூக்கவில்லை
கறி சரியாய் வைக்கவில்லையென்றெல்லாம்
ஏதொன்றும் குறையாய்
பாவம் பெண் வீட்டார்!

சம்மந்திக்குத் தனியோர் வாகனம்
சம்மந்தர் மனைவி சொல்லே மந்திரம் தலையாட்டி பொம்மை
மணவீடு இவர் ஆணைக்கு அடிமை
கோபித்துச் சென்றுவிடுவார் என்ற
பயத்தில் தடபுடலான வரவேற்பிவ

மேலும்

ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2023 6:50 am

அங்கீகரிக்கப்பட்ட
அடிமை
சீடன்

கொலைகளை
பயமின்றிச் செய்பவன்
வேடன்

கருங் கற்களின்
அழகை சிதைக்கிறான்
சிற்பி

செய்யாத பாவத்திற்காய்
நெருப்பில் வேகுறது
களிமண் பாண்டங்கள்

தூரங்களை
விரட்டிச் செல்கிறது
வண்டிகள்

தன்னையே ஏமாற்றிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறது
ஒப்பாரி

மேலும்

மிக்க நன்றி தோழமையே 17-Feb-2023 5:05 pm
ஐயா உங்கள் கவிதையை படிக்கும் போது... " உலகம் இதில் அடங்கிது, உண்மையும் பொய்யும்...என்ற படப் பாடல் வரிகளே என் மனதில் ஞாபகம் வந்தது. உங்கள் கவிதை உண்மையை அழகாக சொல்லி நிற்கிறது. அதுவும் ஒப்பாரி பலே பலே. 16-Feb-2023 8:13 am
ஜவ்ஹர் - ஞானபிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2023 12:37 pm

மனிதர்கள் யாரும் அறிந்திடாத மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோஅதில் பூத்தோட்டங்களை விஞ்சும் மணத்தைக் கொண்டாளோதேனின் சுவைக் கலந்து உதட்டுச் சாயம் பூசினாளோஇரு சிறகுகள் கூட தேவையில்லை இரு இதழ்கள் போதும் பறப்பதற்கு

மேலும்

காதலியின் இதழ் தந்த சுகம்,சுகமானது 12-Feb-2023 6:31 am
மிக்க நன்றி! 11-Feb-2023 6:27 pm
மனிதர்கள் யாரும் அறிந்திடாத மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோ! அதில் பூத்தோட்டங்களின் மணத்தை விஞ்சும் வாசனையைக் கொண்டாளோ! தேனின் சுவைக் கலந்து உதட்டுச் சாயம் பூசினாளோ! இறக்கைகள் கூட தேவையில்லை இரு இதழ்கள் போதும் பறப்பதற்கு.. இப்படி அடுக்கி இருந்தால் நன்றாக இருக்கும். உங்களின் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது ; வாழ்த்துகள் 11-Feb-2023 4:03 pm

கொஞ்சும் பைந்தமிழ்ப் பேசி வந்தாள்
வஞ்சி கொஞ்சம் ஓரக் கண்ணால்
மிஞ்சும் காதல் பார்வைத் தந்து
மஞ்சு தங்கம் தாமரை முகத்தாள்
என்னுள்ளத்தில் பரவி நிறைந்தாள்
இனியென் நெஞ்சிற்கு இவளே என்றும்
இவள்தான் எல்லா மே

மேலும்

காதல் பேசுகிறது 12-Feb-2023 6:29 am

பனிமலைக் கரைந்து மலை மடியிலிருந்து
ஜீவ நதியாய்ப் பிறந்து விரைகிறது
கீழே பள்ளத் தாக்கில் புனித
கங்கை நதியாக அதுவே மாறி
இங்கேயோ தாயிவள் நெஞ்சம் கரையலையே
தன்பிள்ளை காதலிக்கும் பிள்ளைக்கு
மனம் முடிக்க ஒப்புதல் தந்திட
'தாய் இரங்கா விடில் சேய்
உயிர் வாழுமோ சொல்'

மேலும்

கவிதை சிறப்பு 12-Feb-2023 6:28 am
மலர்91 அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Jul-2016 7:28 am

உம் பேத்திக்க என்ன பேருடா வச்சிருக்க, தம்பி?


நம்ம பாட்டி பேரத்தான் வச்சிருக்கென்.


ஓ ....நம்ம கஸ்தூரி பாட்டி பேரா?


ரொம்ப நல்ல பாட்டிடா அவுங்க.



அவுங்க பேருக்கு என்ன அர்த்தம்னெ தெரில உனக்குத் தெரிஞ்சா சொல்லு.

அண்ணே, கஸ்தூரி மான் -னு கேள்விப்பட்டிருக்கறிங்களா?

ஆமாம கேள்விப்பட்டிருக்கேன்.

அந்த மானிலிருந்து சுரக்கும் ஒரு பொருள்ல இருந்து ஒரு வகையான வாசனை திரவியம் தயாரிக்கலாங்க. அதுக்குப் பேரு தான் கஸ்தூரியா இருக்கும்.

ஓ....அப்பிடியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிரிக்க அல்ல.

மேலும்

ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 4:53 pm

அவள் எண்ணம் சுட்ட
விழி நீர் வெந்நீராகி
கொதி நீராய் கிணறு பொங்கி
வழிந்து ஆறாய் ஒட்டுகிறாள்!!

அவள் எண்ணச் சிறகடித்து
வண்ணக் கனவுக்காய்
விழி மூட மறுத்து
அடம்பிடிக்கும் அவளுள்ளம்

பட்டாம் பூச்சியாய் இனம் சேர்த்து
பறக்கும் அவள் பருவம்
ஒற்றையாய் நின்றவள்
ஊமையாய் அழுகிறாள்

துணைக்காய் பிடித்த தலையணை
நனைத்தே கண் சிவந்து
காளையவன் நினைவாய்
காலத்தை ஓட்டுகிறாள்

கருமுகில் களைந்து
ஆதவன் தன் முகம் காண
விட்டத்தை வெறித்தே
வான் முகில் வெறுக்கிறாள்!!

மேலும்

மிகச் சிறப்பு காலத்தை வெறுக்கும் மனதின் குமுறல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 5:20 pm
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2015 10:06 pm

குட்டை ஊரிய மட்டைகள்!!!
**************************************
ஆப்பிழுத்த குரங்காகி
அவமானம்தோள் சுமந்து
நகைக்க இடம் தந்து
நடைப் பிணமாய் இப்பூமி!!

வாழ வழி வகுத்திருந்தும்
வாள் பலி கொள்வதற்கும்
இனம் பிரித்துப் பார்ப்பதற்கும்
இரண்டாய்க் கிடக்கிறது இப் பூமி!!

சமூகம் பல இயக்கமாகி
சந்தி பிரித்துப் பார்த்து
சாலைககோர் வழிபாடு செய்து
சந்தி சிரிக்க அழுகிறது இப் பூமி!!

தன் தலையில் மண் வாரி
தலையுசுப்பி அது களைந்து
தனை நொந்து கொள்ளாமல்
தலைவன் ஏசும் இப்பூமி!!

திரை மறைவில் தீதுகளும்
தேவைக்காய் புகழ்ச்சிகளும்
செயற்கை பூசிய உணர்வுகளும்
அரங்கேற்றம் செய் இப் பூமி!!!

பிணம் தின்னிக

மேலும்

மிக்க நன்றி தோழமையே! 09-Dec-2015 8:21 am
கவிதை நன்று. கவிதையில் சொன்ன கருத்துக்கள் இன்னுன் நன்று 08-Dec-2015 10:32 pm
மிக்க நன்றி தோழமையே 01-Dec-2015 8:50 pm
பணி நிமிர்த்தும் சற்று தாமதங்கள் எற்படுகின்றன.நன்றி தோழரே 01-Dec-2015 8:50 pm
ஜவ்ஹர் - ஜவ்ஹர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 10:11 am

ஆழமான சிந்தனை!
அரவனைத்துச் செல்லும்
உன் விடிவுக்காய்!!!
தேடல் இன்றி
தேனாய் சுவைக்கும்
எதுவும் நிலைக்காது
அறிவாய் நீ!!
வானைத்தைத் தொட முடியாது
முடியும் முயன்று பார்!!
அறிவில் முதுமை
உனை வாழ்த்தும்!!
முடியாது எனும் வார்த்தை!
முதுகெலும்பில்லாதவன் கொண்ட
நஞ்சான வாக்கு!!
கல்வியைப் போற்று
கயவரைத் தூற்று
அவரை திருத்திப் பார்
திரும்பிப் பார்ப்பார்
பலபேர் உன்னை!!
உதவு
ஊழல் அற்ற அப்பாவிகளுக்கு!
அவர் மனதில் வாழ்வாய்!
அவணி போற்றும் உன்னை!!
என்றும் மாற்றான்
மனம் குளிர வாழ்வாய்!!
மலராய் புத்தெழுச்சி பெறுவாய்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (115)

Narthani 9

Narthani 9

Toronto ,Ontario
சத்தியா

சத்தியா

மலேசியா
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF

இவர் பின்தொடர்பவர்கள் (136)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (115)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே