பொதிகை முசெல்வராசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பொதிகை முசெல்வராசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  02-Feb-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2015
பார்த்தவர்கள்:  2163
புள்ளி:  181

என்னைப் பற்றி...

கவிஞர், எழுத்தாளர்

என் படைப்புகள்
பொதிகை முசெல்வராசன் செய்திகள்
பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2024 6:34 pm

காலை சிற்றுண்டியும், மதிய சாப்பாட்டிற்குத் தேவையான உணவையும் ஆக்கி வைத்து விட்டு, சோற்றுக்கு வழிவகுக்கும் தரும் கைத்தொழிலாம் பீடி சுற்றும் வேலையைத் தொடங்க வேண்டும் என்னும்
அவசரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மீனாட்சியால், படுக்கை அறையில் ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியின் ஓசையினைக் கேட்க முடியவில்லைதான். வேலைகளை முடித்து , அதனை அதன்அதன் இடத்தில் மூடி வைத்துவிட்டு, வெளியே வந்தபொழுதுதான் அந்த அலை பேசிக் குரல் காதில் விழுந்தது.
‘யார் ‘ இந்த நேரத்தில் கூப்பிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டே, சற்று வேகமாக நடந்து சென்று, செல்லை எடுத்து காதில் வைத்து
‘யாரு ‘ என்றாள் மீனாட்சி.
‘அம்மா ! நான்தா

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2024 6:29 pm

.

அம்மா இறந்து ஒரு வருடம் கழித்து, தான் பிறந்த வீட்டிற்கு வருகிறாள் செல்வி. கதவு பூட்டிக் கிடந்தது. ‘வந்துட்டியா செல்வி ! ‘ என்று ஓடி வந்து வரவேற்கிற அம்மா இல்லை . உள்ளே நுழையும் போதே ‘ கம கம’ வென மணக்கும் ஊதுவத்தி வாசனை இல்லை.கையினை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு ,
‘வீட்டுக்காரர் எப்படி இருக்கிறார். பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள் ?’ என்று கேள்விகளை அடுக்கிக் கிட்டே போகும் அம்மா இல்லை.
‘கைகாலை கழுவிட்டு வா, சூடா கொஞ்சம் காப்பித் தண்ணிக் குடி. களைப்பெல்லாம் பறந்து போயிடும் ‘ என்று உபசரிக்கின்ற அம்மா இல்லை.
செல்வியின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடு

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2024 6:27 pm

மனைவியின் அக்கா பொண்ணுக்கு கல்யாணம் பேசிக்கொண்டு இருந்தார்கள். காதல் திருமணந்தான் என்றாலும், முறைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக இருவீட்டாரும் பேசினார்கள். செல்போனில் அவ்வப்போது , என்ன நடக்கிறது, என்ன பேசினார்கள் என்னும் விபரங்கள் வந்து கொண்டே இருக்கும்.
‘ஏங்க! கல்யாணம் முடிவு பண்ணி தேதியும் குறித்து விட்டார்களாம் ‘ என்றாள் முகம் நிறைய மகிழ்வோடு. மனைவிக்குக் கல்யாண வீடுகளுக்குச் செல்வதென்றால் அத்தனை மகிழ்ச்சி எப்போதும். அதுவும் இது அக்கா பொண்ணு கல்யாணம் கேட்கவா வேண்டும்.
‘ஏங்க இரண்டு நாள் முன்னாடியே போயிடலாம். ஏன்னா நான்தான் உறுதுணையா இருந்து எல்லாம் செய்யணுமுன்னு அக்கா சொல்லிட்டாள் ‘ என்ற

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2024 6:19 pm

கண்ணாகும் பெண்ணவளை கடைச்சரக்காய் ஆக்கும்
கேடிகளின் கொட்டமதை ஒழித்திடவே வாரீர் !
புண்ணாக்கி போதைதரும் பொருளாக்கும் நோக்கம்
பாழ்குழியில் வீழ்ந்திடவே படைதிரட்டி வாரீர் !
எண்ணிடவே இன்பந்தரும் இனியவளாம் பெண்ணை
ஏற்றமுடன் வைத்திடவே எல்லோரும் வாரீர் !
பண்ணாகி பாசத்தின் வேராகும் பெண்ணை
பார்போற்ற வைத்திடவே முயன்றிடுவீர் இங்கே !


மனைவியாகி மகிச்சியினைப் பெருக்கிடுவாள் என்றும்
மக்களினை ஈன்றெடுத்து மனையறத்தைப் பேணி
கனவுதனை நனவாக்கி பார்போற்ற வைக்கும்
காரிகையின் தியாகமதை தினமெண்ணிப் பார்பீர் !
பணத்துக்காய் பாசமதை காட்டாது நல்ல
பண்போடு என்றென்றும் யாவரையும் காக்கும்

மேலும்

பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:03 pm

உழவாலே உயர்ந்திங்கு நிற்கின்ற நாடு –இவ்
உலகத்துக்கும் உணவுதனைத் தந்துதவும் நாடு.
பழமையினால் பெருமைபல பெற்றிருக்கும் நாடு-தினம்
பல்லோரும் பாராட்டும் கலைவளர்த்த நாடு !

காந்திமகான் பிறந்திங்கு வாழ்ந்திருந்த நாடு-ஒரு
கத்தியின்றி அந்நியனை விரட்டிவிட்ட நாடு
வேந்தர்பலர் ஆண்டிருந்த எல்லைகொண்ட நாடு.
வேற்றுமையில் ஒன்றிணைந்து வாழுகின்ற நாடு.

மதம்பலவும் தோன்றியிங்கு வளர்ந்திருந்த நாடு-நல்
மாந்தரினை படைத்ததனால் புகழ்பெற்ற நாடு.
உதவிஎனில் ஒடிவந்து முன்நிற்கும் நாடு –உயர்
உண்மைக்கு உயிர்கொடுப்பார் வாழுமிந்த நாடு.

அகிம்சையெனும் தத்துவுத்தை எடுத்துரைத்த நாடு-அது
அகிலமெல்லாம் பரவியதால் பு

மேலும்

நன்றி ஐயா. 28-Feb-2022 11:03 pm
நன்றாய் புனைந்துள்ளீர் அருமை ஐயா 28-Feb-2022 10:51 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:00 pm

விதியென்று கிடந்துவிட்டால் வழிமூடிப் போகுமன்றோ ?
சதியென்று எண்ணிவிட்டால் சங்கடத்தால் தள்ளுமன்றோ ?

விழிதிறந்து நின்றுவிடின் வழியொன்று தோன்றுமன்றோ ?
பழிகொண்ட வாழ்வதுவும் பதம்பெற்று நடக்குமன்றோ ?

கரையேற முடியாமல் கலங்கியலைக் கிடப்பதில்லை
முயலாமல் என்றென்றும் மூழ்கியது ஓய்வதில்லை !

தேய்ந்துவரும் மதிகூட தளர்ந்தென்றும் போவதில்லை
வளர்பிறையை அதுதேடி வானமெங்கும் நடைபோடும் !

தாழ்வதுவும் எழுவதுவும் அலையினுக்கு வாடிக்கை
அதைக்கண்டு மகிழுவதோ மனிதனுக்கு வேடிக்கை !

மறைந்துவிடும் பகலவனும் மறுபடியும் தோன்றிடுவான்
மறைவதனை விதியென்று மனந்தளர்ந்து போவதில்லை !

மதிகொண்டு முயன்றுவிடின் ஆமை

மேலும்

நன்றி ஐயா. 28-Feb-2022 11:01 pm
நடப்பதெல்லாம் விதிவழிதான் எனும் பொய்யை நம்பாதே ...பட்டுகோட்டையாரை நினைவுபடுத்தியதற்கு நன்றி. 28-Feb-2022 10:42 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:07 pm

எத்தனையோ கனவுகளை இளமையிலே கண்டு
ஏமாந்த நிலையதுவும் பலவகையாய் உண்டு !
வித்தகனாய் நான்மாறி வெற்றிபெற எண்ணி
விழுந்துவிழுந்து நான்படித்த காலமதும் உண்டு !
புத்தகங்கள் வாங்கிடவும் பொருளற்ற போதும்
பொறுமையுடன் நான்படித்த காலமதும் உண்டு !
சொத்தாக எனைஎண்ணி வளர்த்துவிட்ட பெற்றோர்
சுகப்படவே நானுழைக்கும் சுதந்திரமும் பெற்றேன் !

தூங்காமல் நான்கண்ட கனவுகளைத் நாடி
தொடர்தன்று சென்றிடவோ வழியேதும் இல்லை !
ஏங்கிஅன்று கிடந்தாலும் அணைத்திடுவார் இல்லை !
ஏமாற்றம் பலவந்து அணைத்ததுதான் மிச்சம் !
வாங்கிவந்த வரமென்று காலமதைத் தள்ளி
வாழ்ந்திருந்தேன் வறுமையெனும் நோயதனைக் கிள்ளி !
தாங்கிதாங்கி வ

மேலும்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா ! பொதிகை 28-Feb-2022 10:44 pm
நல்ல கனவு... அப்துல்கலாம் சொன்னதுபோல் கனவு காணுங்கள்.கனவு நனவாக வாழ்த்துக்கள் 28-Feb-2022 10:36 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:16 pm

விழியினை மூடிக் கிடந்தது போதும்
வெற்றியை த் தழுவிட உயர்த்திடு தோளும் !
விழித்து எழுந்து வீரத்தைக் காட்டு
வீழினும் எழுவோம் என்பதை நாட்டு !
பழிப்பவர் தம்மை விழித்துநீ பாரு
பார்தவன் தாழ்த்துவான் விழியினை கீழு!
இழிசெயல் செய்வான் செயலினைத் தூற்று
எழுந்து ஓடுவான் எதிரியும் தோற்று !

அன்பை விதைத்து அறுவடை பண்ணு
அறமதும் உன்னை அணைத்திடும் கண்ணு !
பண்புடன் நின்றால் பாரே போற்றும்
பாதகம் செய்யின் புல்லும் தூற்றும் !
கண்ணாய் பாரதம் காத்து நில்லு
காலமும் அதற்கென உழைத்து வெல்லு !
எண்ணம் தன்னை உயர்வாய் கொள்ளு
என்றும் ஏற்றம் பெறுவதால் துள்ளு !

மூடத் தனத்தை மூலையில் கொட்டு
மூள

மேலும்

ஐயா, தங்களின்லபாரட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி. பொதிகை மு.செல்வராசன் 27-Feb-2022 11:49 pm
அன்பு பொதிகையாரே...வாழ்த்துக்கள். ' உழைத்தால் மட்டுமே பிழைப்பென எண்ணு' மற்றும் 'பள்ளம் பார்த்து பயணம் செல்லு...பகைவனும் பதுங்குவான் பார்த்துநீ வெல்லு' நன்று. தொடர்ந்து எழுதவும்.தொடர்பில் இருக்கவும் . 27-Feb-2022 9:23 pm

நாட்டுக்கு நாளும் உழைத்தவர்-பல
நன்மைகள் நாட்டிலே விதைத்தவர்
வீட்டையும் மறந்து வாழ்ந்தவர்-பல
விந்தைகள் செய்தே உயர்ந்தவர்.

கல்விச் சாலைகள் அமைத்தவர்-நல்
இலவசக் கல்வியும் தந்தவர்
கொல்லும் பசியினைப் போக்கிட-மதிய
உணவுத் திட்டமும் அளித்தவர்.

தொழிலால் நாடு உயர்ந்திட –தொழிற்
சாலைகள் பலவும் அமைத்தவர்
வழிவழித் தொழிலை மாற்றிட-பல
வழிவகை அமைத்துக் கொடுத்தவர்.

பதவி ஆசையைத் துறந்தவர்-வரும்
பணத்தையும் வாழ்வினில் மறந்தவர்
உதவிடும் எண்ணங்கள் கொண்டவர்-அந்த
உணர்வினை மனத்தினில் நிறைத்தவர்.

படிக்காமல் மேதை ஆனவர்-பலர்
படித்திட வழிவகைச் செய்தவர்.
துடித்திடும் இளைஞர்கள் முன்னேற-பல
திட்டங்கள்

மேலும்

தஙுகள் பாராட்டுக்கு நன்றி அன்பரே! 17-Mar-2016 6:27 pm
அருமை, தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் - 15-Mar-2016 5:15 pm
மிக நல்ல படைப்பு 24-Feb-2016 2:30 pm

என்னையே நானிங்கு நினைத்தேன்-அதில்
உன்னையும் துணையென இணைத்தேன்
அன்பினால் இங்குனைப் பிணைத்தேன்-அந்த
உணர்வினால் உன்னையும் அணைத்தேன்.

சொல்லிடச் சொல்லிட இனிக்கும்-அந்த
சொர்க்கமே வந்திங்கு கிடக்கும்
மெல்லிடை தன்னையும் அணைக்கும்-ஒரு
மோகமே சூழ்தங்கு பிணைக்கும்.

கண்ணோடு கண்ணங்கு பேசிடும்-அந்தக்
காதலால் பெண்ணங்கு கூசிடும்
பண்போடு பாசத்தைக் காட்டிடும்-ஒரு
பரிவோடு உறவினைக் கூட்டிடும்.

இன்பத்தேன் என்றென்றும் பொழியும்-அந்த
இனிமையில் பெண்னென்றும் நெழியும்
துன்பங்கள் எல்லாமும் அழியும் -தினம்
திகட்டாத சுக மதுவும் வழியும்.

மேலும்

உண்மைதான் .அனுபவத்தால் சில உண்மைகள் பேசப்படும் பாராட்டுக்கு நன்றி 29-Dec-2015 10:46 pm
திருமணத்திற்கு முன் காதலித்திருந்தால் உம்மால் இவ்வரிகள் வடித்திருக்க இயலாது இல்லறம் புகுந்து காதலித்ததால் உம்மை பெற்றதில் அன்னையாரும் வரம் பெற்றவர் அன்பரே....... வாழிய பல்லாண்டு இல்லறக் காதல் அதுவும் நிலைத்திடவே..... 29-Dec-2015 11:26 am
ஆஹா வியந்தேன் மயங்கினேன் அழகான சொல்லாட்சி இக்கவிக்குள் தமிழ் பானம் பருகினேன் காதல் எனும் சக்கரை போட்டு இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 11:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (4)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஆ க முருகன்

ஆ க முருகன்

சவூதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே