பொதிகை முசெல்வராசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பொதிகை முசெல்வராசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  02-Feb-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2015
பார்த்தவர்கள்:  2226
புள்ளி:  187

என்னைப் பற்றி...

கவிஞர், எழுத்தாளர்

என் படைப்புகள்
பொதிகை முசெல்வராசன் செய்திகள்
பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2025 8:39 pm

போர்! போர்! என்று வெறி பிடித்து அலைந்த சோழன் முடித்தலைக் கோப்பெருஞ் நற்கிகள்ளி ,தனது பெரும் படையுடன் சென்று , சேர நாட்டின் ,தலைநகர் கரூரை முற்றுகை இட்டிருந்தான். தனது படைவீரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பாசறைக்கு நடுவில் இருந்த பாசறையில் தங்கி இருந்தான். முற்றுகை இட்டு பல நாட்கள் ஆனபின்னும், எந்த ஒரு அசைவும் சேரனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சேர மன்னன் போருக்கு அஞ்சும் கோழையும் அல்லன். அவனும் ஒரு போராளிதான். போர்களம் என்றாலை பாய்ந்து சென்று தாக்கும் வேங்கைதான். அந்த வேங்கையோடு மோதிப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு படைஎடுத்து வந்தவனுக்கு ஏமாற்றம் தான் என்றால் அது எத்தனை வேதனையா இருக்கும்

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2025 8:36 pm

கவிதாவின் நீண்ட நாள் கனவு, ஆசை இப்போது நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
ஆமாம் ! திருமணம் ஆன்வுடன் தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு ,தனது கணவன் குழந்தைகளோடு பிக்கல் பிடுங்கல் இன்று மகிழ்வோடு வாழ வேண்டும் என்பதே அந்தக் கனவு. தன்னுடைய தோழிகள் பலபேர் கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக்கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தபோது இப்படி ஒரு ஆசை அவள் உள்ளத்தில் எழுந்தது என்றால் அது நியாயம் தானே ?
அந்தக் கனவு திருமணம் முடிந்து ,இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னால் நிறைவேறும் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை தான். அதுமட்டுமல்ல தனது கணவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான் என்பதும், மா

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2025 8:28 pm

சென்ற காலம் திரும்பாது
சிறகை விரித்துப் பறக்காது
துன்பம் தன்னை மறந்துவிடு
தொடர்ந்து வாழப் பழகிவிடு
வன்மம் தன்னை ஒழித்துவிடு
வாழ்வின் நெறியில் நடந்துவிடு
அன்பே உயர்வாய் கொண்டுவிடின்
அழகாய் வாழ்வும் ஆகிவிடும் !.

உன்னை நம்பி வாழ்ந்துவிடு
உயர்ந்த எண்ணம் கொண்டுவிடு
உண்மை உள்ளம் கொண்டுவிடு
உலகில் உயர்ந்து நின்றுவிடு
பண்பும் பணிவும் உடன்கொண்டு
பாங்காய் வாழப் பழகிவிடு
என்றும் வாழ்வாய் புகழோடு
இன்பம் தொடரும் மகிழ்வோடு !

அளவாய் சொல்லைச் சொல்லிவிடு
அடுத்தவர் உணர்வைப் புரிந்துவிடு
களவு எனும்சொல் மறந்துவிடு
கருணை உள்ளம் கொண்டுவிடு
பள்ளம் பார்த்து நடந்துவிடின்
பங்கம் என

மேலும்

பொதிகை முசெல்வராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2025 8:25 pm

வளநாடு வயநாடு இன்றங்கே இடுகாடாய்
ஆன தய்யா !
களிப்போடு கனிந்திருந்த வாழ்வதுவும் மறைந்தங்கு
போன தய்யா !
எழில்பொங்கி விருந்தளித்த மலையதுவும் மண்ணாகி
கரைந்த தய்யா !
தொழல்பலவும் துணையாகி இருந்தநிலை அத்தனையும்
தொலைந்த தய்யா !

பெண்டீரும் பிள்ளைகளும் பெருமழையில் வீழ்ந்தங்கே
போன தய்யா !
மண்வளத்தைப் பெருக்கிவைத்த மானுடமே மண்ணுக்குள்
புதைந்த தய்யா !
கண்டகண்ட இடமெங்கும் காட்டுவெள்ளம் கண்மூடிப்
புகுந்த தய்யா !
புண்பட்டு துன்புற்று பேரழிவில் மலையூர்கள்
கிடக்கு தய்யா !

ஊரிருந்த இடமெல்லாம் மண்மூடி கல்நிறைந்து
போன தய்யா !
பேராசை கொண்டமழை பேரிடரைத் தந்துவிட்டு
போன தய்யா !
கூறி

மேலும்

பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:03 pm

உழவாலே உயர்ந்திங்கு நிற்கின்ற நாடு –இவ்
உலகத்துக்கும் உணவுதனைத் தந்துதவும் நாடு.
பழமையினால் பெருமைபல பெற்றிருக்கும் நாடு-தினம்
பல்லோரும் பாராட்டும் கலைவளர்த்த நாடு !

காந்திமகான் பிறந்திங்கு வாழ்ந்திருந்த நாடு-ஒரு
கத்தியின்றி அந்நியனை விரட்டிவிட்ட நாடு
வேந்தர்பலர் ஆண்டிருந்த எல்லைகொண்ட நாடு.
வேற்றுமையில் ஒன்றிணைந்து வாழுகின்ற நாடு.

மதம்பலவும் தோன்றியிங்கு வளர்ந்திருந்த நாடு-நல்
மாந்தரினை படைத்ததனால் புகழ்பெற்ற நாடு.
உதவிஎனில் ஒடிவந்து முன்நிற்கும் நாடு –உயர்
உண்மைக்கு உயிர்கொடுப்பார் வாழுமிந்த நாடு.

அகிம்சையெனும் தத்துவுத்தை எடுத்துரைத்த நாடு-அது
அகிலமெல்லாம் பரவியதால் பு

மேலும்

நன்றி ஐயா. 28-Feb-2022 11:03 pm
நன்றாய் புனைந்துள்ளீர் அருமை ஐயா 28-Feb-2022 10:51 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:00 pm

விதியென்று கிடந்துவிட்டால் வழிமூடிப் போகுமன்றோ ?
சதியென்று எண்ணிவிட்டால் சங்கடத்தால் தள்ளுமன்றோ ?

விழிதிறந்து நின்றுவிடின் வழியொன்று தோன்றுமன்றோ ?
பழிகொண்ட வாழ்வதுவும் பதம்பெற்று நடக்குமன்றோ ?

கரையேற முடியாமல் கலங்கியலைக் கிடப்பதில்லை
முயலாமல் என்றென்றும் மூழ்கியது ஓய்வதில்லை !

தேய்ந்துவரும் மதிகூட தளர்ந்தென்றும் போவதில்லை
வளர்பிறையை அதுதேடி வானமெங்கும் நடைபோடும் !

தாழ்வதுவும் எழுவதுவும் அலையினுக்கு வாடிக்கை
அதைக்கண்டு மகிழுவதோ மனிதனுக்கு வேடிக்கை !

மறைந்துவிடும் பகலவனும் மறுபடியும் தோன்றிடுவான்
மறைவதனை விதியென்று மனந்தளர்ந்து போவதில்லை !

மதிகொண்டு முயன்றுவிடின் ஆமை

மேலும்

நன்றி ஐயா. 28-Feb-2022 11:01 pm
நடப்பதெல்லாம் விதிவழிதான் எனும் பொய்யை நம்பாதே ...பட்டுகோட்டையாரை நினைவுபடுத்தியதற்கு நன்றி. 28-Feb-2022 10:42 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:07 pm

எத்தனையோ கனவுகளை இளமையிலே கண்டு
ஏமாந்த நிலையதுவும் பலவகையாய் உண்டு !
வித்தகனாய் நான்மாறி வெற்றிபெற எண்ணி
விழுந்துவிழுந்து நான்படித்த காலமதும் உண்டு !
புத்தகங்கள் வாங்கிடவும் பொருளற்ற போதும்
பொறுமையுடன் நான்படித்த காலமதும் உண்டு !
சொத்தாக எனைஎண்ணி வளர்த்துவிட்ட பெற்றோர்
சுகப்படவே நானுழைக்கும் சுதந்திரமும் பெற்றேன் !

தூங்காமல் நான்கண்ட கனவுகளைத் நாடி
தொடர்தன்று சென்றிடவோ வழியேதும் இல்லை !
ஏங்கிஅன்று கிடந்தாலும் அணைத்திடுவார் இல்லை !
ஏமாற்றம் பலவந்து அணைத்ததுதான் மிச்சம் !
வாங்கிவந்த வரமென்று காலமதைத் தள்ளி
வாழ்ந்திருந்தேன் வறுமையெனும் நோயதனைக் கிள்ளி !
தாங்கிதாங்கி வ

மேலும்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா ! பொதிகை 28-Feb-2022 10:44 pm
நல்ல கனவு... அப்துல்கலாம் சொன்னதுபோல் கனவு காணுங்கள்.கனவு நனவாக வாழ்த்துக்கள் 28-Feb-2022 10:36 pm
பொதிகை முசெல்வராசன் - பொதிகை முசெல்வராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2022 12:16 pm

விழியினை மூடிக் கிடந்தது போதும்
வெற்றியை த் தழுவிட உயர்த்திடு தோளும் !
விழித்து எழுந்து வீரத்தைக் காட்டு
வீழினும் எழுவோம் என்பதை நாட்டு !
பழிப்பவர் தம்மை விழித்துநீ பாரு
பார்தவன் தாழ்த்துவான் விழியினை கீழு!
இழிசெயல் செய்வான் செயலினைத் தூற்று
எழுந்து ஓடுவான் எதிரியும் தோற்று !

அன்பை விதைத்து அறுவடை பண்ணு
அறமதும் உன்னை அணைத்திடும் கண்ணு !
பண்புடன் நின்றால் பாரே போற்றும்
பாதகம் செய்யின் புல்லும் தூற்றும் !
கண்ணாய் பாரதம் காத்து நில்லு
காலமும் அதற்கென உழைத்து வெல்லு !
எண்ணம் தன்னை உயர்வாய் கொள்ளு
என்றும் ஏற்றம் பெறுவதால் துள்ளு !

மூடத் தனத்தை மூலையில் கொட்டு
மூள

மேலும்

ஐயா, தங்களின்லபாரட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி. பொதிகை மு.செல்வராசன் 27-Feb-2022 11:49 pm
அன்பு பொதிகையாரே...வாழ்த்துக்கள். ' உழைத்தால் மட்டுமே பிழைப்பென எண்ணு' மற்றும் 'பள்ளம் பார்த்து பயணம் செல்லு...பகைவனும் பதுங்குவான் பார்த்துநீ வெல்லு' நன்று. தொடர்ந்து எழுதவும்.தொடர்பில் இருக்கவும் . 27-Feb-2022 9:23 pm

நாட்டுக்கு நாளும் உழைத்தவர்-பல
நன்மைகள் நாட்டிலே விதைத்தவர்
வீட்டையும் மறந்து வாழ்ந்தவர்-பல
விந்தைகள் செய்தே உயர்ந்தவர்.

கல்விச் சாலைகள் அமைத்தவர்-நல்
இலவசக் கல்வியும் தந்தவர்
கொல்லும் பசியினைப் போக்கிட-மதிய
உணவுத் திட்டமும் அளித்தவர்.

தொழிலால் நாடு உயர்ந்திட –தொழிற்
சாலைகள் பலவும் அமைத்தவர்
வழிவழித் தொழிலை மாற்றிட-பல
வழிவகை அமைத்துக் கொடுத்தவர்.

பதவி ஆசையைத் துறந்தவர்-வரும்
பணத்தையும் வாழ்வினில் மறந்தவர்
உதவிடும் எண்ணங்கள் கொண்டவர்-அந்த
உணர்வினை மனத்தினில் நிறைத்தவர்.

படிக்காமல் மேதை ஆனவர்-பலர்
படித்திட வழிவகைச் செய்தவர்.
துடித்திடும் இளைஞர்கள் முன்னேற-பல
திட்டங்கள்

மேலும்

தஙுகள் பாராட்டுக்கு நன்றி அன்பரே! 17-Mar-2016 6:27 pm
அருமை, தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் - 15-Mar-2016 5:15 pm
மிக நல்ல படைப்பு 24-Feb-2016 2:30 pm

என்னையே நானிங்கு நினைத்தேன்-அதில்
உன்னையும் துணையென இணைத்தேன்
அன்பினால் இங்குனைப் பிணைத்தேன்-அந்த
உணர்வினால் உன்னையும் அணைத்தேன்.

சொல்லிடச் சொல்லிட இனிக்கும்-அந்த
சொர்க்கமே வந்திங்கு கிடக்கும்
மெல்லிடை தன்னையும் அணைக்கும்-ஒரு
மோகமே சூழ்தங்கு பிணைக்கும்.

கண்ணோடு கண்ணங்கு பேசிடும்-அந்தக்
காதலால் பெண்ணங்கு கூசிடும்
பண்போடு பாசத்தைக் காட்டிடும்-ஒரு
பரிவோடு உறவினைக் கூட்டிடும்.

இன்பத்தேன் என்றென்றும் பொழியும்-அந்த
இனிமையில் பெண்னென்றும் நெழியும்
துன்பங்கள் எல்லாமும் அழியும் -தினம்
திகட்டாத சுக மதுவும் வழியும்.

மேலும்

உண்மைதான் .அனுபவத்தால் சில உண்மைகள் பேசப்படும் பாராட்டுக்கு நன்றி 29-Dec-2015 10:46 pm
திருமணத்திற்கு முன் காதலித்திருந்தால் உம்மால் இவ்வரிகள் வடித்திருக்க இயலாது இல்லறம் புகுந்து காதலித்ததால் உம்மை பெற்றதில் அன்னையாரும் வரம் பெற்றவர் அன்பரே....... வாழிய பல்லாண்டு இல்லறக் காதல் அதுவும் நிலைத்திடவே..... 29-Dec-2015 11:26 am
ஆஹா வியந்தேன் மயங்கினேன் அழகான சொல்லாட்சி இக்கவிக்குள் தமிழ் பானம் பருகினேன் காதல் எனும் சக்கரை போட்டு இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 11:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே