சுக மதுவும் வழியும்

என்னையே நானிங்கு நினைத்தேன்-அதில்
உன்னையும் துணையென இணைத்தேன்
அன்பினால் இங்குனைப் பிணைத்தேன்-அந்த
உணர்வினால் உன்னையும் அணைத்தேன்.

சொல்லிடச் சொல்லிட இனிக்கும்-அந்த
சொர்க்கமே வந்திங்கு கிடக்கும்
மெல்லிடை தன்னையும் அணைக்கும்-ஒரு
மோகமே சூழ்தங்கு பிணைக்கும்.

கண்ணோடு கண்ணங்கு பேசிடும்-அந்தக்
காதலால் பெண்ணங்கு கூசிடும்
பண்போடு பாசத்தைக் காட்டிடும்-ஒரு
பரிவோடு உறவினைக் கூட்டிடும்.

இன்பத்தேன் என்றென்றும் பொழியும்-அந்த
இனிமையில் பெண்னென்றும் நெழியும்
துன்பங்கள் எல்லாமும் அழியும் -தினம்
திகட்டாத சுக மதுவும் வழியும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (28-Nov-15, 10:43 pm)
பார்வை : 105

மேலே