நன்னாடன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நன்னாடன் |
இடம் | : நன்னாடு, விழுப்புரம் |
பிறந்த தேதி | : 30-May-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 4387 |
புள்ளி | : 938 |
என்னுடைய படிப்பு : M. Sc(Cs), B. A.. (His), D. C. Tech. கவிதை, ஹைக்கு எழுதுவதில் மிகுந்து ஆர்வம் உள்ளதால் எழுதுகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கவிதை போட்டிகளில் கலந்துக் கொண்டு கவிதை வாசிப்பு வாசித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.
கலித்தாழிசை பா
மிகை நகை உயிருக்கு பகையாம்
வகை வகை மிகுஉணவும் அதுவாம்
பதை பதைப்பு இதயத்திற்கு கேடாம்
மத மதப்பு உழைப்பிற்கு எதிராம்
நச நசப்பு ஈரத்தின் தொடராம்
சல சலப்பு பெருங்கூட்டக் குவிவாம்
பட படப்பு பயத்தின் அதிர்வாம்
விறு விறுப்பு தெளிவின் நிலையாம்
குறு குறுப்பு குரும்பின் முதலாம்
பர பரப்பு நேரத்தின் நிகழ்வாம்
வள வளப்பு அறியாத அறிவாம்
கிறு கிறுப்பு தெளியாத பொருளாம்
கிடு கிடுப்பு பெரியவோசை ஒலியாம்
கட கடப்பு மகிழ்ச்சியின் உச்சமாம்
நெடு நெடுப்பு வளர்வின் உயர்வாம்
இவ்வார்த்தைகள் தமிழின் உரமாம்
இது போல் பற்பெருமை மிக்கவள் தமிழ் தாயாம்.
----- நன்னாடன்.
நெடும்பயணப் பேருந்து
நிறைந்தது பயணிகளால்
நின்றுக்கொண்டும் பயணிகள்
இரண்டுமணி பயண தூரத்திற்கு
இரண்டு இடத்திலே நிறுத்தம்
பேருந்தின் உயர்ந்த வேகமோ
களைத்த குதிரை வண்டியைப்போல்
நின்றது பேருந்து இடை நிறுத்தத்தில்
இறங்கிய பயணிகளைப் போல்
ஏறியோர் இரண்டு மடங்கு
அங்கு ஏறிய பயணியில் ஒருவர்
ஒரு நிமிடத்திலேயே நடத்தினரிடம் கெஞ்சினார்
மனசு சரியில்லை நீள் பயணத்திற்கு
தொடர இயலாது இறக்கி விடக்கூறி
கேட்ட எங்களுக்கெல்லாம் பிரமிப்பு
நொடியில் மாறும் மாய மனதிற்கு
பணிந்த மனிதரின் நிலை கண்டு
கதிர் திங்கள் புவிக்கு மனம் இல்லை….
----- நன்னாடன்.
பாறையை பாறையின் மேல்
படுக்க வைத்து சென்றது யாரோ?
குண்டான கரும்பாறை எந்நாளும்
அழுகாமல் மக்காமல் இருப்பது ஏனோ?
பெருங்காற்று மழைக்கும் அஞ்சாமலும்
கரையாமல் சிதையாமல் இருப்பது எப்படி?
கல்லெல்லாம் மண்ணாக மாறாமலும்
மண்ணெல்லாம் கல்லாக மாறாதது ஏனோ?
பல வகை மரங்கள் புவியில் இருப்பினும்
கல்லைக் காய்க்கின்ற மரம் இல்லை ஏனோ?
கருங்கல்லின் உறுதியைப் போல்
மனித உடல் படைக்கப்படாதது ஏனோ?
தேங்கும் தண்ணீரை பாறை தன்னுள் சேமிக்காமல்
உழைக்காத மாந்தர் போல் ஆனது ஏனோ?
----- நன்னாடன்.
கண்டேன் உன்னை கல் சிலை போலே
கண்ட நாள் முதல் கண்மூடவில்லை
நெஞ்சத்தில் பளு யானை எடைபோலே
வஞ்சி நீ வந்தால் பஞ்சாகும் நிலை
கருங்குயிலும் கூட பேடோடே இணைந்தே
காதல் கீதம் பாடி ஆசையைத் தூண்ட
கந்தர்வ பெண்ணே காந்தமென வந்து
காதல் கொண்ட என்னை கவர்ந்து செல்லடி
மார்கழி அடர்பனியும் அனலாய் இருக்க
மனமெல்லாம் உன் நினைப்பால் நிறைந்ததடி
கொடி சுற்றும் .இடை கொண்ட பேரழகே
கொஞ்சி உன்னை அணைக்கும் ஆசையிலே
நீரின் மேல் படுத்துக் கொண்டே மிதக்கிறேனே
நீள்விழி கண்ணுடைய மரகத மயிலே
நிறைந்த இன்பம் பெற்றிடுவோம் வாடி அருகில்.
----- நன்னாடன்.
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
------------------------------------------------ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..25)
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
விரி பூ வான் பூ ஓர் சொல் உதிர்க்கும்.
அரவு அன்ன வீக்கொடி படர
முன்றில் ஆடு மைச்சிறை காக்கை
கரையும் பொழுதில் என் நெஞ்சு கிழிய
உமணர் மறுத்த சாகாட்டுப்பகடு
தும்பி தொடர நோன்றல் உகள
நெடிய கிடந்தாங்கு நீள் விழி புதைய
பிரிந்தனை என்னை எற்றுக்கு மன்னே ?
-----------------------------------------------------------------------
இது நான் எழுதிய சங்கநடைக்கவிதை.
ஆசிரியத்தாழிசை
தென்னை மரம் பனை மரம் பாக்கு மரம்
ஈச்சை மரம் பேரிச்சை மரம் தாளிப்பனை மரம்
நீண்டு வளர்ந்து நெருங்கிய மட்டை பல கொண்டதாய்
ஆண்மரம் பெண்மரம் என பனையில் வகைகள்
நுங்கான காய்கள் முதிர்ந்தால் வாசமான பழமாய்
கொட்டைகளை புதைத்தால் திறன்மிகு நீண்ட கிழங்கு
தென்னையின் காய்கள் முதிர்ந்தால் கொப்பரைக்காய்
உரலில் ஆட்டினால் எண்ணெய்க்கழிவே புண்ணாக்கு
கொப்பரையைப் புதைத்தால் அழகு .தென்னம்பிள்ளை
பாக்குக்கு இதுபோல் பல்நிலை இல்லையாயினும்
பக்குவப் படுத்தினால் பல்லாண்டுகள் வைக்கலாம்
மட்டையோ தற்போது தட்டுகளின் பல்வகையில்
ஈச்சை சுவையான சின்னபழம் கொட்டை இரு பிளவில்
பேரிச்சை அளவில் பெரியதாய் சுவையோ அற்புதமா
ஆறு ஓடும் வழி நெடுக உண்டாயின வாழிடங்கள்
வாழிடங்கள் அமைந்ததோ வற்றாத நீரினாலே
நீரின் ஓட்டத்தினாலே நிரந்தரமாய் உயர்களிருக்கும்
உயிர்களின் செழிப்பிற்கு பெருகுவோர் உழைப்போரே
உழைப்போரின் விடாமுயற்வால் செழிப்புகள் வளருமே
வளர்ந்த செழிப்பை நுகர வியாபரிகள் குவிவர் வந்து
வந்த பல நபர்களாலே வரைமுறைகள் வகுக்கப்படுமே
வகுக்கப்பட்ட பல விதிகளே குலமெனக் கொள்ளப்படும்
கொள்ளப்படும் பிரிவினாலே உழைத்தவன் பின் நிலையில்
நிலைத்தவன் விரட்டப்பட்டு வந்தவன் ஆளுவோனாய்
ஆளுவோர் அகந்தையினாலே அடிமை இனம் உருவாகும்
உருவான ஆளுமினம் உபத்திரங்கள் பல கொடுக்கும்
கொடுக்கின்ற துயர்வினால் புரட்சியும் தோன்றுமே
தோன்றும் கிளர்வி
ஆசிரியத்தாழிசை
பயிற்சி எடுத்துப் பழகு
கதிரை எளிதாய் தொடலாம்
பயமிகின் நகமும் பயங்காட்டுமே
எழுபத் திரெண்டு என்ற
மூச்சின் வீச்சையும் பத்தாக்க
உறுமிகு முயற்வே வெற்றித்தருமே
முகமும் வாடினால் அகத்தில்
களைப்போ பயமோ பொருந்தா
உணவோ புகுந்தது எனக்கொள்
தனிமையை மனம்நாடி தேடினால்
மனதினுள் பெருந்துயர் சூழ்துருக்கி
களைப்பாய் சிதைக்கிறது என்றுணர்
போதைப் பொருளால் உடலும்
மகிழ்ந்து எழுச்சிக் கொண்டால்
திடமதி குலைந்தே வீழ்வாய்
தெரியாத தொழிலில் நுழைந்தால்
இழப்பதை தடுக்கவே அறியாது
இருப்பதை சிதறவிட்டு ஓடுவாய்
----- நன்னாடன்.
கயல்கள் அரங்கேறும் மன்றம் விழிகள்
விழிநீலத் தில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழிதழ்கள் இன்னொரு மன்றம்
இதயமோ காதல்மன் றம்
கவிதை அரங்கேறும் மன்றம் இருகண்கள்
கண்ணிரண் டில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழினால் நீயே தமிழ்மன்றம்
பேசுமோ காதல்கொஞ் சம்
----ஒரு பா இருவடிவில்
தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!
*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;
The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்