நன்னாடன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  நன்னாடன்
இடம்:  நன்னாடு, விழுப்புரம்
பிறந்த தேதி :  30-May-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  6771
புள்ளி:  1283

என்னைப் பற்றி...

என்னுடைய படிப்பு : M. Sc(Cs), B. A.. (His), D. C. Tech. கவிதை, ஹைக்கு எழுதுவதில் மிகுந்து ஆர்வம் உள்ளதால் எழுதுகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கவிதை போட்டிகளில் கலந்துக் கொண்டு கவிதை வாசிப்பு வாசித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.

என் படைப்புகள்
நன்னாடன் செய்திகள்
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2024 8:05 am

வெண்கலிப்பா

பயமில்லை உன்மீது பக்தியும் இல்லையாண்டும்
பயன்பெற உன்னையும்நான் பார்த்திடவும் வரவில்லை
அயர்ச்சியுறுந் தோறும்நீ அருகினில் வந்துகாத்தே
அயர்நீக்க அழைக்கிறேன் உனை.
— நன்னாடன் (அ) தி.புருஷோத்தமன்

மேலும்

நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2023 2:24 pm

வெள்ளைத்தாழிசை

படைப்பும் பிறப்பும் படைத்தவனின் வண்மை
கடைசியில் வைப்பான் கடைத்தேறும் பாதை
இடையில் வருமே துயர்

நடையில் செயலில் நடைமுறை வாழ்வில்
தடைகள் பலவாய் தடுமாறச் செய்யும்
திடமே விலக்கும் துயர்

உடலின் பலங்கள் உதிர்ந்திடும் போதும்
மடமையை நீக்கி மனவுறுதிக் கொண்டால்
உடனே விலகும் துயர்
— நன்னாடன்.

மேலும்

நன்னாடன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2023 9:35 am

கலிவிருத்தம்
(கூவிளம் / காய் 3)

கேளடி கண்ணம்மா! கேட்டபடி நடப்பாயோ;
சூளுரை நானுன்னைச் சுற்றிவந்து தானளித்தேன்!
ஆளுமை நீயென்னை யனுசரித்து வாழ்வாயோ;
நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே!

– வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

மேலும்

அழகாய். அருமை ஐயா. 09-Oct-2023 3:29 pm
நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2023 12:41 pm

கலித்துறை

படிப்பது பாவ மெனச்சொல் லிடும்மாந் தரையும்
அடிப்பதில் பாவமில் லைதான் உணர்வீர் எவரும்
படிப்பது யாவருக் கும்பொது பூமியின் சொத்து
தடுப்போர் இடுப்பை தவிடென செய்திடு வெற்றியே – (க)

மதஞ்செய் ததைப்புகுத் திட்ட அயலக நாட்டின்
கதையைப் படித்து நமது குலத்தை மறந்து
உதவா வகையில் பிரிவைத் தொடரும் பலரும்
மதகரி ஒப்பக் குணங்கொண் டவரே உணரு – (உ)

ஆதவன் காலும் அனலும் புவியும் நிலையிலே
மாதவம் செய்யும் மரமும் கொடியும் உறுதியாய்
பேதமே காட்டா உணவும் உறக்கம் பொதுப்படை
தோதிலா பிரிவை மதத்தால் புனைந்தவன் பொய்யே – (ங)

இதனால் அறிவு குறையும் எனவும் உரைக்கும்
பதப்படா மக்கள் குழுவை ஒதுக்கி நிறுத

மேலும்

ஐயா மரு.கன்னியப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான். எடுத்துக்காட்டு 1 நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே.... சம்பந்தர் தேவாரம், ௧௦௫௮ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் என்பதை அன்புடன் கூறுகிறேன் அன்புடன் நன்னாடன். 28-Sep-2023 9:47 pm
பொதுவாக நீங்கள் நல்ல கருத்துகளைச் சொல்ல வருகிறீர்கள் என்றாலும், மரபுக் கவிதைக்குள் வரும்பொழுது இன்னும் சற்று தகுந்த இலக்கணத்துள் வந்தால் நன்று! அடிக்கு ஐந்து சீர்கள் நான்கடிகள் எதுகையும், வெண்டளையும் வைத்து எழுதியிருக்கிறீர்கள். வெண்டளை வெண்பாவிலும் ஒருவகை கலிவிருத்தத்திலும் காணலாம். (திருமூலர் திருமந்திரம்) கலித்துறை (மா விளம் 4) இதனால் கூறுவ தியல்புடன் கூறினே னெனச்சொலி மதுவை விலக்கியும் மனத்துயர் நீங்கியும் உழைப்பினில் பதமி லாரையே பரிவுட னொருபுற மொதுக்கியும் பொதுவாய் மகிழ்வினைப் பொருத்தியே வைத்திடில் அரசனே 27-Sep-2023 5:27 pm
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2023 12:41 pm

கலித்துறை

படிப்பது பாவ மெனச்சொல் லிடும்மாந் தரையும்
அடிப்பதில் பாவமில் லைதான் உணர்வீர் எவரும்
படிப்பது யாவருக் கும்பொது பூமியின் சொத்து
தடுப்போர் இடுப்பை தவிடென செய்திடு வெற்றியே – (க)

மதஞ்செய் ததைப்புகுத் திட்ட அயலக நாட்டின்
கதையைப் படித்து நமது குலத்தை மறந்து
உதவா வகையில் பிரிவைத் தொடரும் பலரும்
மதகரி ஒப்பக் குணங்கொண் டவரே உணரு – (உ)

ஆதவன் காலும் அனலும் புவியும் நிலையிலே
மாதவம் செய்யும் மரமும் கொடியும் உறுதியாய்
பேதமே காட்டா உணவும் உறக்கம் பொதுப்படை
தோதிலா பிரிவை மதத்தால் புனைந்தவன் பொய்யே – (ங)

இதனால் அறிவு குறையும் எனவும் உரைக்கும்
பதப்படா மக்கள் குழுவை ஒதுக்கி நிறுத

மேலும்

ஐயா மரு.கன்னியப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம் நான். எடுத்துக்காட்டு 1 நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே.... சம்பந்தர் தேவாரம், ௧௦௫௮ என்ற பாடலை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் என்பதை அன்புடன் கூறுகிறேன் அன்புடன் நன்னாடன். 28-Sep-2023 9:47 pm
பொதுவாக நீங்கள் நல்ல கருத்துகளைச் சொல்ல வருகிறீர்கள் என்றாலும், மரபுக் கவிதைக்குள் வரும்பொழுது இன்னும் சற்று தகுந்த இலக்கணத்துள் வந்தால் நன்று! அடிக்கு ஐந்து சீர்கள் நான்கடிகள் எதுகையும், வெண்டளையும் வைத்து எழுதியிருக்கிறீர்கள். வெண்டளை வெண்பாவிலும் ஒருவகை கலிவிருத்தத்திலும் காணலாம். (திருமூலர் திருமந்திரம்) கலித்துறை (மா விளம் 4) இதனால் கூறுவ தியல்புடன் கூறினே னெனச்சொலி மதுவை விலக்கியும் மனத்துயர் நீங்கியும் உழைப்பினில் பதமி லாரையே பரிவுட னொருபுற மொதுக்கியும் பொதுவாய் மகிழ்வினைப் பொருத்தியே வைத்திடில் அரசனே 27-Sep-2023 5:27 pm
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2023 1:21 pm

பூமியில் வாழ்க்கை பொதுவாய் நமக்கு பூவினம் போன்றே இருக்கின்றதே
ஆவலினாலே ஆசைகள் பெருகி ஆபத்துள் மனமும் அமிழ்கிறதே
தேவைக்கு மேலே திரவியம் சேர்த்து தினந்தினம் உடலும் அலுக்கிறதே
உள்ளதைப் பகிர்ந்து உறவுகளோடு உரையாட உள்ளம் மறுக்கிறதே
நல்லதை எல்லாம் சொல்லும் எதையும் நாடிட மனமும் வெறுக்கிறதே
பணத்தை மட்டும் ஈட்டிட மனமும் பலவகைத் திருட்டினைச் செய்கிறதே
வெள்ளை நிலையைத் தொல்லைச் செய்தே விதவித பிரச்சனை பெருகிறதே
அல்லலும் அவதியும் அதனாலேயே அவதாரமாய் பிறப்பை எடுக்கிறதே
கள்ளமும் கயமையும் இல்லா ஞாலமும் இனியேனும் உருவானால்
காற்றும் நீரும் கவிமிகு புவியும் அழற்ச்சி இன்றி பலப்படுமே.
— நன்னாடன்

மேலும்

நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2023 8:15 am

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உதட்டு சாயம் வேண்டும் உயர்த்தி பெண்ணை காட்டி மகிழ்த்தும்
மதங்கள் இதனில் என்றும் மறந்தும் பேதம் காட்டு வதில்லை
பதிகம் படித்ததைப் போல பெண்கள் அழகில் ஆர்வங் காட்டி
அதிக ஒப்பனைப் பொருட்கள் ஆதிக் கம்செய் வதனா லேயே.
— நன்னாடன்.

மேலும்

தகவலுக்கு நன்றி அய்யா. 21-Sep-2023 1:14 pm
பைந்தமிழ்ச் சோலை முகநூல் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். முகநூலாக இருக்கட்டும், இலக்கியவுலகாக இருக்கட்டும்... தமிழிலக்கணத்தை,யாப்பு வடிவங்களை முழுமையாகக் கற்பித்த,கற்பித்துக் கொண்டிருக்கும் குழுமம் தான் முகநூலிலேயே முதன்முதலாக மரபுகவிதை வகுப்பைச் சிறப்பாகத் தொடங்கி இன்றுவரை 600 பேருக்குமேல் மரபு பாவலராக உருவாக்கிய தனிச்சிறப்புடையது. பல மரபு ஆசான்களுக்கும் தாய்மடியாக, குருகுலமாக இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. இன்றைக்கு முகநூலில் மரபிலெழுதும் 80 விழுக்காடு கவிஞர் பைந்தமிழ்ச் சோலையின் மாணவராகவே இருப்பார். ஆசான்களும் அப்படியே. 2023/24 ஆம் ஆண்டிற்குரிய #பாட்டியற்றுக பயிற்சிகள் அடுத்த வாரம் 26.09.2023 திங்கட்கிழமையன்று தொடங்கப்படுகிறது. மகிழ்ச்சியான செய்தி... 1.மீண்டும் பைந்தமிழ்ச்சோலையிலேயே பொதுவில் நடைபெறும். யார் வேண்டுமானாலும் இணையலாம். கற்பிக்கப்படும். 2. #கட்டணம்_ஏதுமில்லை* 3. 25 வாரங்கள் 25 பயிற்சிகள் என ஐவகைப்பாக்கள்,நால்வகைப் பாவினங்கள் அடங்கிய இயற்றமிழ்ப் பாவகைகள் முழுமையாக நடத்தப்படும் பயிற்சிகள் #முதனிலைப் பயிற்சி என்ற தலைப்பில் நடைபெறும். இந்தப் பயிற்சிகள் அனைத்துமே இலவசமாகவே நடத்தப்படும். 20-Sep-2023 7:19 am
நன்றாய் உள்ளது ஐயா. பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி ஐயா. 16-Sep-2023 8:55 am
உதட்டுச் சாயம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (1, 5 சீர்களில் மோனை) உதட்டுச் சாயம் பூசிப் பூசி ..யுயர்த்திப் பெண்ணைக் காட்டி மதங்கள் இதனில் தோன்றி என்றும் ..மறந்தும் பேதம் நீக்கி பதிகம் படித்தப் போலப் பெண்கள் ..பழக ஆர்வங் காட்டும் அதிக வழகுப் பொருட்கள் தாமே ..ஆதிக் கம்செய் வதுவோ! இது எப்படி இருக்கிறது? தாங்கள் நினைத்த பொருள் இருக்குறதா? 15-Sep-2023 8:38 pm
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Sep-2023 7:05 pm

துன்பம் தருவதே
******
(நேரிசை ஆசிரியப்பா)

குடிகளோ போதைக் குழுவிடை ; நாடதின்
குடியர சுமிங்கு கொள்ளை வழியிடை ;
முடிவிலா இலவசம், உணவிடல்,
தொடரும் இவைகள் துன்பம் தருவதே!
******

(ஈரசைச் சீர்கள் நாற்சீரடி ஈற்றயலடி மட்டும்
முச்சீர் அடி தோறும் எதுகை ஒன்று மற்றும்
மூன்றாம் சீரில் மோனை முடிவெழுத்து
ஏகாரம்)

மேலும்

பைந்தமிழ்ச் சோலை முகநூல் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். முகநூலாக இருக்கட்டும், இலக்கியவுலகாக இருக்கட்டும்... தமிழிலக்கணத்தை,யாப்பு வடிவங்களை முழுமையாகக் கற்பித்த,கற்பித்துக் கொண்டிருக்கும் குழுமம் தான் முகநூலிலேயே முதன்முதலாக மரபுகவிதை வகுப்பைச் சிறப்பாகத் தொடங்கி இன்றுவரை 600 பேருக்குமேல் மரபு பாவலராக உருவாக்கிய தனிச்சிறப்புடையது. பல மரபு ஆசான்களுக்கும் தாய்மடியாக, குருகுலமாக இருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது. இன்றைக்கு முகநூலில் மரபிலெழுதும் 80 விழுக்காடு கவிஞர் பைந்தமிழ்ச் சோலையின் மாணவராகவே இருப்பார். ஆசான்களும் அப்படியே. 2023/24 ஆம் ஆண்டிற்குரிய #பாட்டியற்றுக பயிற்சிகள் அடுத்த வாரம் 26.09.2023 திங்கட்கிழமையன்று தொடங்கப்படுகிறது. மகிழ்ச்சியான செய்தி... 1.மீண்டும் பைந்தமிழ்ச்சோலையிலேயே பொதுவில் நடைபெறும். யார் வேண்டுமானாலும் இணையலாம். கற்பிக்கப்படும். 2. #கட்டணம்_ஏதுமில்லை* 3. 25 வாரங்கள் 25 பயிற்சிகள் என ஐவகைப்பாக்கள்,நால்வகைப் பாவினங்கள் அடங்கிய இயற்றமிழ்ப் பாவகைகள் முழுமையாக நடத்தப்படும் பயிற்சிகள் #முதனிலைப் பயிற்சி என்ற தலைப்பில் நடைபெறும். இந்தப் பயிற்சிகள் அனைத்துமே இலவசமாகவே நடத்தப்படும். 20-Sep-2023 8:03 am
அருமை. புரவி வேகத்தில் பயணிக்கவும். 15-Sep-2023 2:54 pm
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் அறிவுரைக்கும் மிகவும் நன்றி ஐயா 15-Sep-2023 6:31 am
சக்கரை வாசனாருக்கு வணக்கம் ஆசிரியப்பா வெகு அருமை.நல்ல கருத்தமைந்த கவிதை ஆசிரியப்பா விற்கு இவ்வளவு மெனக் கெடத் தேவைஇல்லை.. எதுகை ஒன்று மூன்று மோனையும் கட்டாய மில்லை அதே அடியிலோ அடுத்த அடியிலோ மோனை இருந்தால் போதும். காரணம் நாம் நினைத்த எதையும் எடுத்துக் கூறுவதே இந்தப்பாவின் அம்சம். ஆகையால் தான் புறனாநூறு இப்பாவில் வடித்துள்ளார்.. நீங்கள் எழுத்து போலும் எழுதலாம். பெரிய கருத்துக்கள் சொல்ல முடியாது. 15-Sep-2023 5:16 am
நன்னாடன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2021 11:00 am

கயல்கள் அரங்கேறும் மன்றம் விழிகள்
விழிநீலத் தில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழிதழ்கள் இன்னொரு மன்றம்
இதயமோ காதல்மன் றம்

கவிதை அரங்கேறும் மன்றம் இருகண்கள்
கண்ணிரண் டில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழினால் நீயே தமிழ்மன்றம்
பேசுமோ காதல்கொஞ் சம்

----ஒரு பா இருவடிவில்

மேலும்

அருமை அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 03-Feb-2021 2:10 pm
மிக்க நன்றி கவிப்பிரிய நன்னாடன் 03-Feb-2021 2:09 pm
ஆஹா ஓஹோ அருமை ஐயா கண்களை மேடையாக்கி கவிதை யரங்-- கேற்றி வான்நீலத் தெளிவாக அவள்கண் களுற-- வாட பேசும்த மிழிடை அவளே தமிழ் மன்றம் -- இதிலென்ன காதல் கெஞ்ச பேசிக் கொஞ்ச!! 03-Feb-2021 12:28 pm
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய பல விகற்ப இன்னிசை வெண்பா - பாக்கள் இரண்டும் செழுமை - அழகு 03-Feb-2021 11:10 am
நன்னாடன் - சிம்மயாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2020 11:48 am

தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!

*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;

மேலும்

நன்றிகள் 08-Sep-2020 9:36 am
வணக்கம் சிம்மயாழினி அவர்களே. தங்கள் சிந்தனை கவி வரிகள் அருமை. மேலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஒளவையாரே படைத்தது போல் உள்ளது. வாழ்த்துகள். வாழ்க நலமுடன்..! ! 07-Sep-2020 6:22 pm
கூகுளை பாராட்டி உயிர் மெய்யாலே உங்கள் கவிதை உயர்வான வரிகள் . பரவசத்தில் நான் இன்று. பாராட்டுக்கள் கவி சிம்மயாழினி அவர்களே. 07-Sep-2020 3:51 pm
நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2020 6:24 pm

The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.

மேலும்

நன்னாடன் - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

இவர் பின்தொடர்பவர்கள் (43)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
பிரபாவதி

பிரபாவதி

ஈரோடு
AKILAN

AKILAN

தமிழ்நாடு
மேலே