நன்னாடன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : நன்னாடன் |
இடம் | : நன்னாடு, விழுப்புரம் |
பிறந்த தேதி | : 30-May-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 7045 |
புள்ளி | : 1287 |
என்னுடைய படிப்பு : M. Sc(Cs), B. A.. (His), D. C. Tech. கவிதை, ஹைக்கு எழுதுவதில் மிகுந்து ஆர்வம் உள்ளதால் எழுதுகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கவிதை போட்டிகளில் கலந்துக் கொண்டு கவிதை வாசிப்பு வாசித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.
இன்னிசை வெண்பா
மரபுக்கவிதை
மகளீர் தினக்கவிதை (08.03 2025)
முருகன் பரமன் முயலன் தருமன்
அருகன் தெரியவன் ஆனை முகத்தன்
கருவிழிக் காட்டிடும் காளி இறையை
உருவமாய் தந்தவள் பெண்
திடமுடல் கொண்ட திருமகள் பெண்டீர்
உடலுள் உயிரை உயிராய் வளர்த்து
திடமாய் கொடுத்த திரவியப் பிள்ளை
இடரைக் களைத்ததே அன்று.
இன்றோ இவைகள் இளைத்து சிறுத்தன
மென்மை குலைந்து மெதுவாய் அழியவும்
வன்மை மனமுள வல்லவர் ஆயினர்
நன்மையும் சென்றதே பாழ்.
எல்லாம் இதுபோல் சென்றிடக் காரணம்
செல்லம் கொடுத்திடும் பெற்றோர் அதனால்
செல்லாக் காசென பிள்ளையும் மாறிட
நல்லவர் மாறினர் பாதை.
பெண்களே ஞாலப் பெரியதாய் ஆற்றலாம்
புதுக்கவிதை -
பிறக்கும் யாவிற்கும் பெண்ணினமே தாயாம்
அரக்கர் தேவர் அனைத்துப் பிறப்புக்கும்
உருவம் தந்தது பெண்ணின எண்ணமே
நல்லதும் தீயதும் அவள்வகுத்த பாதையே
கல்விக்கும் படிப்பிற்கும் அவளே ஆதாரம்
உண்மையும் பொய்யையும் காட்டுபவளும் அவளே
பெண்மையை உணர்ந்த பிள்ளைகள் உலகில்
நல்லவராய் உயர்ந்து வாழ்கிறார்கள் சிறப்பில்
பெண்மைக்கு வேண்டும் நிதான பொறுமை
ஆத்திரமும் கோபமும் இருளாக்கும் வாழ்வை
அடங்காத கோபம் அழித்துவிடும் நம்மை
அதித பொறுமையும் ஆபத்தைத் தந்திடும்
பெண்களால் புவியும் பெருமையாய் சுழலுது
பெண்களின் அறிவால் அரசாங்கம் சிறக்குது
விஞ்ஞானத்தைப் பெண்கள் விரும்பி கற்பதால்
விண்ணுலகம்
குறள்வெண்பா*
கானலை மெய்யென நம்பி மகிழ்ந்திடும்
கன்னல் தமிழருக்கு வாழ்த்து.
– - நன்னாடன்.
கன்னல் - கரும்பு
அனைவருக்கும் வணக்கம், அலுவகப் பணியின் பொருட்டு இத்தளத்தில் கவிதைப் பதிவையிடாமல் இருந்தேன் இன்று குறள்வெண்பாவில் மூன்று குறள்களை பதிவிட்டுள்ளேன், வாசித்து விமர்சிக்கவும்.
உழைப்பை உணர்ந்து உழைத்தால் உழைப்பது
ஊழை விரட்டும் உழை
அண்டிப் பிழைத்தவர் ஆளும் நிலையிலே
தண்டனைக்கு சட்டங் களே
இருப்பின் இருப்பை இருப்பாய் இறுத்தின்
இருப்பிற்கில் லையே இடர்
-- நன்னாடன்
கலிவிருத்தம்
(கூவிளம் / காய் 3)
கேளடி கண்ணம்மா! கேட்டபடி நடப்பாயோ;
சூளுரை நானுன்னைச் சுற்றிவந்து தானளித்தேன்!
ஆளுமை நீயென்னை யனுசரித்து வாழ்வாயோ;
நாளிது தான்நமக்கு நன்மையெலாம் பெருகிடுமே!
– வ.க.கன்னியப்பன்
சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!
கலித்துறை
படிப்பது பாவ மெனச்சொல் லிடும்மாந் தரையும்
அடிப்பதில் பாவமில் லைதான் உணர்வீர் எவரும்
படிப்பது யாவருக் கும்பொது பூமியின் சொத்து
தடுப்போர் இடுப்பை தவிடென செய்திடு வெற்றியே – (க)
மதஞ்செய் ததைப்புகுத் திட்ட அயலக நாட்டின்
கதையைப் படித்து நமது குலத்தை மறந்து
உதவா வகையில் பிரிவைத் தொடரும் பலரும்
மதகரி ஒப்பக் குணங்கொண் டவரே உணரு – (உ)
ஆதவன் காலும் அனலும் புவியும் நிலையிலே
மாதவம் செய்யும் மரமும் கொடியும் உறுதியாய்
பேதமே காட்டா உணவும் உறக்கம் பொதுப்படை
தோதிலா பிரிவை மதத்தால் புனைந்தவன் பொய்யே – (ங)
இதனால் அறிவு குறையும் எனவும் உரைக்கும்
பதப்படா மக்கள் குழுவை ஒதுக்கி நிறுத
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உதட்டு சாயம் வேண்டும் உயர்த்தி பெண்ணை காட்டி மகிழ்த்தும்
மதங்கள் இதனில் என்றும் மறந்தும் பேதம் காட்டு வதில்லை
பதிகம் படித்ததைப் போல பெண்கள் அழகில் ஆர்வங் காட்டி
அதிக ஒப்பனைப் பொருட்கள் ஆதிக் கம்செய் வதனா லேயே.
— நன்னாடன்.
துன்பம் தருவதே
******
(நேரிசை ஆசிரியப்பா)
குடிகளோ போதைக் குழுவிடை ; நாடதின்
குடியர சுமிங்கு கொள்ளை வழியிடை ;
முடிவிலா இலவசம், உணவிடல்,
தொடரும் இவைகள் துன்பம் தருவதே!
******
(ஈரசைச் சீர்கள் நாற்சீரடி ஈற்றயலடி மட்டும்
முச்சீர் அடி தோறும் எதுகை ஒன்று மற்றும்
மூன்றாம் சீரில் மோனை முடிவெழுத்து
ஏகாரம்)
கயல்கள் அரங்கேறும் மன்றம் விழிகள்
விழிநீலத் தில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழிதழ்கள் இன்னொரு மன்றம்
இதயமோ காதல்மன் றம்
கவிதை அரங்கேறும் மன்றம் இருகண்கள்
கண்ணிரண் டில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழினால் நீயே தமிழ்மன்றம்
பேசுமோ காதல்கொஞ் சம்
----ஒரு பா இருவடிவில்
தேடும் விடயங்களின் தொகுப்பே!!
புகல் அழகுச் சித்திரமே!
விரல் கொஞ்சும் தாரகையே,,,,
உனை வர்ணிக்க!
உயிர்மெய்யாலே கவி பாடுகிறேன் ,,,,,
கேளாயோ கணினிமொழியே!
*அ*ண்டங்களையும் கண்டுவிட்டேன்;
*ஆ*ராய்ந்தும் பார்க்கிறேன்;
*இ*ரவும்பகலும் சுற்றியே;
*ஈ*கைப் பண்பை ஏற்றாய் நீ!
*உ*லகமே உனை இயக்க;
The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.
௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்