சபா வடிவேலு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சபா வடிவேலு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  09-Sep-1950
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2011
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  27

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உடையவன். தமிழ்க் கவிதைகள் அவ்வப்பொழுது இயற்ற இயலும். பிறர் புனைந்த கவிதைகளை சுவைக்கும் இயல்புடையவன். மதுரை கமராசர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் . டாடா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அலோசகர். நான் எழுதியுள்ள நான்கு நூல்கள் : 1.சுற்றமும்,நட்பும், நானும் 2. குறள் தரும் சிந்தனைகள் 3. வீழ்க சாதி சமயம் ! வெல்க மனிதநேயம் ! 4 மன ஊஞ்சல்

என் படைப்புகள்
சபா வடிவேலு செய்திகள்
சபா வடிவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2022 2:26 pm

உரம் தரும் உழைப்புண்டு இளமைக்கு

அனுபவம் தரும் ஆற்றலுண்டு முதுமைக்கு

உற்சாகம் தரும் ஊக்கமுண்டு இளமைக்கு

அமைதி தரும் தனிமையுண்டு முதுமைக்கு

உள்ளம் தரும் துணிவுண்டு இளமைக்கு

அவகாசம் தரும் ஆலோசனையுண்டு முதுமைக்கு

உயர்பயிற்சி தரும் சாதனையுண்டு இளமைக்கு

அடக்கம் தரும் அறமுண்டு முதுமைக்கு

உறுதுணை தரும் உவப்புண்டு இளமைக்கு

அயர்வு தரும் ஓய்வுண்டு முதுமைக்கு

இளமையே இயங்கு, இயற்று!

முதுமையே முனைவோர்க்கு உதவு!

மேலும்

சபா வடிவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2021 12:21 pm

அவரவர் கடன்

ஈன்று புறந்தந்து வளர்த்தல் தாயின் தலைக் கடன்
நன்று வளம் பெறக் காத்தல் தந்தையின் கடன்
அறமே தலையென அறிவித்தல் ஆசான் கடன்
கல்வி கேள்வி கலைகள் தேர்தல் மகவின் கடன்
கள்ளம் களவு கபடு நினையாது நட்டல் நண்பர் கடன்
கற்ற வித்தை ஒப்பவே பணி யமைத்தல் அரச கடன்
பழியும் பாவமும் படராது பேணல் சமூகக் கடன்
போர் மறந்து பேதம் துறந்து மனிதம் மலர்த்தல்
மண் மீது என்றும் மன்பதையின் கடனாம்
வழாத மாரியும் வருத்தா இயற்கையும் ஈந்து
உலகெலாம் புரத்தல் எம் இறைக் கடனே!

மேலும்

சபா வடிவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 11:53 am

தலைப்புச் செய்தி:

வாக்குப் பதிவு தமிழகத்தில்
வரிசையில் நின்றனர் நடிகர்கள்
வளைத்து வளைத்துப் படப்பிடிப்பு

தவிப்பு:
நாட்டோரைச் சந்திச்சாச்சு
நா வறளப் பேசியாச்சு
நாளை முடிவு யாருக்காச்சோ!

மேட்டுக்குடி மெத்தனம்:

குடிசை வாசிகளே,
காசு வாங்கினாலும்
கறாராய் வாக்களித்தீர்!

மாளிகை வாசிகளே,
வக்கனையாய் விமர்சிப்பீர்
வாக்களிக்க வரமாட்டீரோ?

மேலும்

சபா வடிவேலு - எண்ணம் (public)
13-Jan-2016 9:56 am

                           பொதுநலத்தார்   பொங்கல் 


பொதுநலம் பேணுவோரெலாம் பொங்குக இவ்வண்ணம்:        
     
புன்செயல் புரியும் புல்லரைப் புரட்டிடவே பொங்குக
வன்செயல் விளைக்கும் வம்பரை வறுத்திடவே பொங்குக
திருடித் தின்னும் தீயரைத் தீய்த்திடவே பொங்குக
வருடி வாழும் வீணரைத்தான் வாட்டிடவே பொங்குக

பொய்யே புனையும் புளுகரைப் போக்கிடவே பொங்குக
மக்களை ஏய்க்கும் மாயங்கள் மாய்த்திடவே பொங்குக
அரசியல் பிழைக்கும் எத்தரைஎற்றிடிடவே பொங்குக
கல்வி கரக்கும் சிறார்தொழில் சிதைத்திடவே பொங்குக 

அம்பலத்தில் உலாவும் ஆபாசம் அழித்திடவே பொங்குக                                                                                 வல்லுறவு துணியும் வல்லூறு வதைத்திடவே பொங்குக
வெற்று விவாத விஷமங்கள் வீழ்த்திடவே பொங்குக
தமிழ் தாழ்த்தி அயல்மொழி தாங்கல் தகர்த்திடவே பொங்குக 

பொதுநலத்தார் பொங்கிடின் அவ்வண்ணம்,பொங்கலும் பொங்கிடும் இவ்வண்ணமே : 

நேயம் நீண்டிட,  நீதிநிலைத்திடப் பொங்கிடுமே பொங்கல்
பெண்மை சிறந்திட, பெருநெறி ஒழுகிடப் பொங்கிடுமே பொங்கல்
பயிர்கள் செழித்திட, பல்லுயிர் காத்திடப் பொங்கிடுமே பொங்கல்
தொழில்கள் செறிந்திட, உழைப்பு உயர்ந்திடப் பொங்கிடுமே பொங்கல் 

இளையோர் ஆக்கம் நல்வழிப்படப் பொங்கட்டும் பொங்கல்
முதியோர் ஏக்கம் முற்றும் தீர்ந்திடப் பொங்கட்டும் பொங்கல்
பன்முகமாய்த் தமிழ் பொலிந்திடவே பொங்கட்டும் பொங்கல்    
புதுமைகள் புலர மேன்மைகள் மேவிட பொங்கட்டும் பொங்கல்

மேலும்

சபா வடிவேலு - சபா வடிவேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2015 10:32 am

மீண்டும் மீண்டும் வேண்டுமடி
(மெட்டு: கும்மி)
கும்மியடி கூடி கும்மியடி – நல்ல
பண்டிகை நாளினில் கும்மியடி – அகப்
பகைமைத் தீய்ந்திட கும்மியடி- உயர்
பண்புகள் மேலிடக் கும்மியடி

நல்லவை எண்ணிட வேண்டுமடி – நம்
நலங்களை மீட்டிட வேண்டுமடி – நாளும்
அல்லவை தவிர்த்திட வேண்டுமடி – வாழ்வில்
தொல்லைகள் போக்கிட வேண்டுமடி

உயிர்களை நேசிக்க வேண்டுமடி – நம்
உடைமைகள் பகிர்ந்திட வேண்டுமடி – என்றும்
உண்மையாய் உழைத்தே உ

மேலும்

நன்றி நண்பரே ! 16-Nov-2015 9:45 am
சிறப்பான படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:45 am
சபா வடிவேலு - சபா வடிவேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2015 10:44 am

கல்வி தருவாள் கலைமகள்

கண்ணினும் மேலாம் கல்வி – நமது
கறைகள் களைவது கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்வி – எங்கள்
கவலைகள் போக்கிடும் கல்வி ….. (கண்ணினும்)

அறிவைப் பெருக்கிடும் கல்வி – ஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி – என்றும்
ஈயக் குறையாக் கல்வி ….. (கண்ணினும்)

உலகை உய்த்திடும் கல்வி – நமக்கு
உண்மை உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வது கல்வி – எவரும்
நாடிப் பெறுவது கல்வி ….. (கண்ணினும்)

பல்துறை கொண்டிடும் கல்வி – திறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது கல்வி – எளியோர்
தாழ்வ

மேலும்

நன்றி நண்பரே ! 16-Nov-2015 9:43 am
நல்ல பாடல்.. நல்ல சிந்தனை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:45 am
சபா வடிவேலு - சபா வடிவேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2015 6:17 pm

இறையே இலக்காய்க் கொண்டு
அன்பும் அருளும் ஈகையும்
இணக்கமும் இயல்பாய்க் கண்டு
இனிது வாழவே மதங்களாம் !

உயரிய நோக்கம் மடிந்து
உண்மை முற்றிலும் மறந்து
உள்ளம் குறுகிய மாந்தருள்
உட்பகை மூண்டதுதான் என்னே ?

மனுநீதியாம் ஒருகுலத்திற்கு ஒருநீதி
மண்ணில் வேற்றுமைகள் மண்டியதென்னே ?
‘மதம்’கொண்ட மதவாதிகள் இன்று
மனிதரைப் பிரித்தாள்வது என்னே ?

எத்தனை பிறவிகள் எடுத்தோமோ
எத்தனை மதங்கள் கொண்டோமோ
அத்தனை மதங்களும் நமதன்றோ
அதனைப் பகைப்பது அறிவாமோ ?

மத மாச்சரியங்கள் மாளுவதெப்போ
சாதி சச்சரவுகள் சாவதெப்போ
சகலரும் சமமென்பது சாத்தியமே
சாதித்துக் காட்டுவோம் இளையோரே

சாதிமதம் துறந்த கலப்புமணங்க

மேலும்

நன்றி சகோதரி 10-Jan-2015 11:37 am
அருமை !கவிதை தலைப்பை (போட்டியாளர் அறிவித்தது)சரிவர பின்பற்றி எழுதினால் நன்மை ! 09-Jan-2015 11:23 pm
சபா வடிவேலு - மங்காத்தா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2014 5:54 pm

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152

மேலும்

sms ல் கதைக்க இயலாது. எனக்கு விரல்கள் கொஞ்சம் தடிமமாய் உண்டு. அத்தோடு செல்பேசியில் sms படிக்க இயலாது, கண்களில் வலுவில்லை. ஆன்லைன் அரட்டையில் நீங்கள் வந்தால் உங்களுடன் கதைக்கிறேன், சரியா? 24-Feb-2015 11:41 am
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே. 21-Feb-2015 6:08 pm
கிடைப்பது அரிதுதான். இதுவரை கிடைக்கவில்லை. 17-Feb-2015 4:38 am
நன்றி. 17-Feb-2015 4:37 am
சபா வடிவேலு - மங்காத்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2014 5:54 pm

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152

மேலும்

sms ல் கதைக்க இயலாது. எனக்கு விரல்கள் கொஞ்சம் தடிமமாய் உண்டு. அத்தோடு செல்பேசியில் sms படிக்க இயலாது, கண்களில் வலுவில்லை. ஆன்லைன் அரட்டையில் நீங்கள் வந்தால் உங்களுடன் கதைக்கிறேன், சரியா? 24-Feb-2015 11:41 am
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே. 21-Feb-2015 6:08 pm
கிடைப்பது அரிதுதான். இதுவரை கிடைக்கவில்லை. 17-Feb-2015 4:38 am
நன்றி. 17-Feb-2015 4:37 am
சபா வடிவேலு - சபா வடிவேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 12:07 pm

மீண்டும் வானம்பாடி

சிறகின்றிப் பறந்தோம் சிறாராய்ப் பள்ளியில்
கட்டவிழ்ந்த காளையராய்க் களித்திருந்தோம் கல்லூரியில்
பாடத்தில் திளைத்து மேடையில் முழங்கி
திடலில் விளையாடி கனவில் மிதந்து

காலடி வைத்தேன் நனவுலகில் நானும்
விழைந்தே ஏற்றேன் பயிற்றும் தொழிலை
உழைத்தே பெற்றேன் பணியினில் ஏற்றம்
உலகியல் கற்றேன் விழுந்தும் எழுந்தும்

இன்பமும் துன்பமும் இல்லறத்தில் துய்த்து
மனையாள், பிள்ளைகள், சுற்றமும் சூழ்ந்திட
சுமைகள் சுமந்து கடன்கள் முடித்து
காலச்சுவடுகளில் கற்ற பாடங்கள் பலவாம்

பணியில் ஓய்வொடும் வயதில் மூப்பொடும்
நினைவுச் சிறகுகள் விரித்தேன் மனவானில்
பாடிடலானேன் மீண்டும் வா

மேலும்

நன்றி 08-Jul-2014 9:55 am
நன்றி 08-Jul-2014 9:53 am
நன்றி தோழரே 08-Jul-2014 9:53 am
மகிழ்ச்சி , நன்றி 08-Jul-2014 9:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

a.vignesh

a.vignesh

madurai
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

a.vignesh

a.vignesh

madurai
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
மேலே