சக்கரைவாசன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சக்கரைவாசன் |
இடம் | : தி.வா.கோவில்,திருச்சி |
பிறந்த தேதி | : 13-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 3109 |
புள்ளி | : 2213 |
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.
நேரிசை வெண்பா
சொன்னசொல்லில் மாற்றமின்றி சொக்கத்தங் கம்போல
மென்மையான எண்ணத்தால் மேவுகின்ற - நன்மதியாய்
ஊருடன் ஒட்டிவாழ் உன்வாழ்வில் என்றுமே
பேருடன் நற்புகழும் பெற்று!
- வ.க.கன்னியப்பன்
புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்
---ஒரு விகற்பஇன்னிசை வெண்பா
புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்இளம் மான்விழியே
அன்னமும் தோற்கும் அணிநடை எங்குகற்றாய்
மன்னன் நளனும் மிகவியந்து பார்த்திடுவான்
தென்னை மரத்தினில் பொன்மேனி யைச்சாய்த்து
என்னநினைக் கின்றாய்நீ எந்தனெழில் காதலி
என்னைத்தா னேசொல் எழில்
---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
கொலுசை அணிவிக்க கையினில் உந்தன்
மலர்பாதம் வைத்தபோது மென்பாதம் நொந்திட
வெல்வெட்டை கைமேல் விரித்தேன்நான் நோகாமல்
மெல்லச் சிரித்துநீ மெல்ல நடந்தபோது
மெல்லிய உன்கொலுசு மெல்ல ஒலித்திடயென்
சொல்லிலு மேகொலுசோ சைகேட் குதடிவெண்
மல்லிகை மேனிவண்ண மே
எதுகை--- கொலு மலர்-- ஒருவிகற்பம் வெல் மெல் மெல் சொல் மால் ---இன்னொரு விகற்பம்
இருவிகற்ப ஏழு அடி பஃறொடை வெண்பா
மோனை 1 3 ஆம் சீரில் ---கொ கை ம மெ வெ வி மெ மெ மெ மெ சொ சை ம மே
பொழுதுபோகாத் தென்றலுன் கூந்தலிலே தங்க
அழுது புலம்பியது அந்திமலர்த் தோட்டம்
தழுவியது போதுமே தென்றலேயென் கூந்தல்
விழுமிய நின்கடமை வண்ணப்பூங் காவில்
பழுதிலா பூங்காற்றே செல்லமாய் சொன்னாய்
அழகு மலரெலாம் ஆரவாரம் செய்ய
எழுதினேன்நான் நின்னன்பை இங்கு !
---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
யாப்பு அலங்காரம் -- பலவகைப் பாக்கள்
**********
1) கலிவிருத்தம் ( மா விளம் விளம் மா)
வெள்ளை உடைதனில் வீரமாய் உலவி
கள்ளச் சிரிப்பினைக் காந்தமாய்ப் பரப்பி
உள்ள மணலையும் ஊரினில் கடத்திக்
கொள்ளை யடித்திடும் கூற்றினைத் துரத்து!
( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை )
2.) நேரிசை வெண்பா
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனை,
கொள்ளையர் என்றுநீ கூறு!
( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை)
3.) நேரிசை ஆசிரியப்பா
வெள்ளை அங்கியில் வெளிவரும
கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******
வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா
******************
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்கு அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்காது ஒடுக்கிடுவோம்!
விளக்கம் : குடிமகனை = சிடிஸன்ஸ், நாட்டின் பிரஜைகள்
படிப்பகங்கள்= பள்ளி மற்றும் கல்லூரி
(அனைத்து சீர்களும் கலித்தளை பயின்று வந்துள்ளது)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
அடி எதுகை)
பாவகை மூன்று கருத்து ஒன்று
********
1. கலிவிருத்தம் --- ( காய் 4 )
******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்று ஆர்ப்பரிப்போர் ;
ஊக்கமிலாச் செய்முறைகள் ஊர்முழுதும் சேர்த்தபின்பு ;
நாக்கினிடை தேன்குழைத்து நாலுவிதம் பொய்பரப்பி;
வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி போடுவதேன்!
(அனைத்து சீர்களும் கூவிளங்காய் ஆக உள்ளது.
ஒவ்வொரு அடியும் நேரசையில் தொடங்க 16எழுத்துக்கள்)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை)
2. வஞ்சி விருத்தம் -- (காய் 3.)
*******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்றோர்
வாக்குறுதிப் பொ
நேரிசை வெண்பா
சமயச்சார் பற்றதோர் சட்டமென்றார் என்ன
சமயசாதி காத்திடும் சட்டம் -- சமயசாதி
இங்கொழிக்கா காக்க இயற்றிய சட்டமடா
அங்கதம் பாட அழுத்து
மூடர்காள் மதச் சார்பற்ற அரசு என்றால் சாதிமதம் கூடாது என்று அர்த்தம் கற்பிக்காதீர்.
சாதி இருக்கும் மதம் இருக்கும். ஆனால் அரசு அவர்களிடம் பாரபட்சம் ஓரவஞ்சனை காட்டாது
செயல் பட வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. சட்டத்தை முறையாய் ஆய்ந்து படித்து செயல்
படடுதல் சிறந்தது..
...
கற்றவர் திரிவது காணு
*****
உற்றது தவிர்த்து ஒவ்வாமை பற்றியே
கற்றவர் திரிவது காணு !
கட்டளைக் கலித்துறை
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ ளாலபி ராமி கடைக்கண்களே
ஒன்று மூன்றில் ஐந்தில் மோனை அமைந்த பாடல்
நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)
முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே