சக்கரைவாசன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சக்கரைவாசன் |
இடம் | : தி.வா.கோவில்,திருச்சி |
பிறந்த தேதி | : 13-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 2972 |
புள்ளி | : 2202 |
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.
கலிவிருத்தம்
(காய் 4)
(1, 3 சீர்களில் மோனை)
தம்வேண்டும் ழைவேண்டும் தர்வேண்டும்
..என்பதுவோ;
இம்மட்டும் வகையுளியும் ஏற்படுத்த
..வேண்டாமே!
உம்பர்கோன் என்றாலு மொப்பிடுமோ
..யித்தவறு?
கொம்புத்தேன் வேண்டுமென்று கொற்றவனே
..ஆசையிதோ!
- வ.க.கன்னியப்பன்
பாவினம் மூன்று கருத்து ஒன்று
*********
1. ( நேரிசை வெண்பா )
நாயினை வைப்பராம் நன்றாக வீடுகளே,நல்
தாயினைத் தூற்றுவர் தாங்காது-- தூயவர்,
நேயமிகுந் தோரென நின்றிடும் நீசரை
பேயினம் என்றுநீ கூறு !
( தாங்காது = போற்றிப் பராமரிக்காது)
2. (கட்டளைக் கலித்துறை)
நேயமி குந்தோராய்ப் பூமியில் சேர்ந்திட்ட நீசரினம் ;
நாயினை வைப்பராம் சோடித்து வீட்டின் நடுவறையில்!
பேயின மாய்த்தி கழுமிவ் வரக்கப் பிறப்பினங்கள் ;
நாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் தரங்கெடவே !
3. (குறள் வெண்பா)
தாய்தனைத் தூற்றும் தரங்கெட்ட வாரிசோ
நாய்தனை வைப்பராமில் லத்து !
பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்
தேக்கின் உறுதிக்கு திண்ணியம ழைவேண்டும்
சேக்கிழார் காவியத்திற்க் கொப்பிலாபத் தர்வேண்டும்
வாக்கிற்கோ நம்வாணி யாம்
பாவினம் மூன்று கருத்து ஒன்று
*********
1. ( நேரிசை வெண்பா )
நாயினை வைப்பராம் நன்றாக வீடுகளே,நல்
தாயினைத் தூற்றுவர் தாங்காது-- தூயவர்,
நேயமிகுந் தோரென நின்றிடும் நீசரை
பேயினம் என்றுநீ கூறு !
( தாங்காது = போற்றிப் பராமரிக்காது)
2. (கட்டளைக் கலித்துறை)
நேயமி குந்தோராய்ப் பூமியில் சேர்ந்திட்ட நீசரினம் ;
நாயினை வைப்பராம் சோடித்து வீட்டின் நடுவறையில்!
பேயின மாய்த்தி கழுமிவ் வரக்கப் பிறப்பினங்கள் ;
நாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் தரங்கெடவே !
3. (குறள் வெண்பா)
தாய்தனைத் தூற்றும் தரங்கெட்ட வாரிசோ
நாய்தனை வைப்பராமில் லத்து !
ஆனைக்காவின் அருமை -- கலிவிருத்தம்
( மா / விளம் / விளம் / விளம்)
ஆனைக் காவுறை அண்ணலை நினைத்திட
ஏனை யயின்னலும் இலாதநி லையுறும் ;
வானைக் கேட்பினும் வரமது கிடைத்திட
ஆனைக் காவுறை அகிலம வளருளே!
ஆனைக்காவின் அருமை -- கலிவிருத்தம்
( மா / விளம் / விளம் / விளம்)
ஆனைக் காவுறை அண்ணலை நினைத்திட
ஏனை யயின்னலும் இலாதநி லையுறும் ;
வானைக் கேட்பினும் வரமது கிடைத்திட
ஆனைக் காவுறை அகிலம வளருளே!
அப்பனே அடக்கு அடங்காப் பேய்களை -- கலிவிருத்தம்
(கூவிளம் / மா / மா / கூவிளம் )
அப்பனை ஒதுக்கி அகத்தில் மாவிழா ;
சுப்பனுக் குப்பால் குடங்கள் அர்ப்பணம் ;
தப்படா இவைகள் ; தவழும் பாவமே ;
அப்பனே அடக்கு அடங்காப் பேய்களை !
*********
தகப்பனை வீட்டைவிட்டு வெளியேற்றி இல்லத்தில்
பெரிய கொண்டாட்டங்கள்.
சுப்பிரமணிய சுவாமிக்கு பால் குடங்கள் நீராட்டு
தப்பான இவைகள் அனைத்தும் சேரும் பாவங்களே
அப்பனே ((சிவபெருமான்) அடங்காத பேய்க்குணம்
கொண்டோரை கண்டிப்பாயாக.
பாவகை மூன்று கருத்தோ ஒன்று
**********
1. கலிவிருத்தம் ( விளம் /மா /காய் / விளம்)
வேலனைப் போற்றும் வேல்மாறல் துதித்திட ;
காலனும் நம்மைக் காணாது ஒதுங்குவன் !
ஆலடி ஆர்ந்த ஆசானை நினைத்திட ;
ஓலமிட் டோடும் ஓயாத வினைகளே !
**********
2. நேரிசை ஆசிரியப்பா
********
வேலனை நினைத்து வேல்மா றல்தனை ;
அனுதினம் கருத்தொடு துதித்து நிற்க ;
காலனும் ஒதுங்கி ஓடியே மறைவன் !
ஆலமர் கடவுளை நினைக்கவே ,
தடமின்றி அழியும் வாட்டிடும் வினைகளே !
*********
3. குறள் வெண்பா
நேரிசை வெண்பா
சமயச்சார் பற்றதோர் சட்டமென்றார் என்ன
சமயசாதி காத்திடும் சட்டம் -- சமயசாதி
இங்கொழிக்கா காக்க இயற்றிய சட்டமடா
அங்கதம் பாட அழுத்து
மூடர்காள் மதச் சார்பற்ற அரசு என்றால் சாதிமதம் கூடாது என்று அர்த்தம் கற்பிக்காதீர்.
சாதி இருக்கும் மதம் இருக்கும். ஆனால் அரசு அவர்களிடம் பாரபட்சம் ஓரவஞ்சனை காட்டாது
செயல் பட வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. சட்டத்தை முறையாய் ஆய்ந்து படித்து செயல்
படடுதல் சிறந்தது..
...
கற்றவர் திரிவது காணு
*****
உற்றது தவிர்த்து ஒவ்வாமை பற்றியே
கற்றவர் திரிவது காணு !
கட்டளைக் கலித்துறை
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ ளாலபி ராமி கடைக்கண்களே
ஒன்று மூன்றில் ஐந்தில் மோனை அமைந்த பாடல்
நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)
முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே