சக்கரைவாசன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சக்கரைவாசன்
இடம்:  தி.வா.கோவில்,திருச்சி
பிறந்த தேதி :  13-Sep-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2015
பார்த்தவர்கள்:  3109
புள்ளி:  2213

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.

என் படைப்புகள்
சக்கரைவாசன் செய்திகள்
சக்கரைவாசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2025 2:25 pm

நேரிசை வெண்பா

சொன்னசொல்லில் மாற்றமின்றி சொக்கத்தங் கம்போல
மென்மையான எண்ணத்தால் மேவுகின்ற - நன்மதியாய்
ஊருடன் ஒட்டிவாழ் உன்வாழ்வில் என்றுமே
பேருடன் நற்புகழும் பெற்று!

- வ.க.கன்னியப்பன்

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம் பல. தங்களின் படைப்புகளுக்கு கருத்து கூற எனக்கு அருகதை இல்லை. தலைப்பு பிரமாதம். நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ வாயைத் திறக்காமல் ஊரோடு ஒத்துப்போக எவ்வித கலகமோ களங்கமோ இல்லை. நன்றி ஐயா 13-Mar-2025 10:37 pm
சக்கரைவாசன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2024 10:38 am

புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்

---ஒரு விகற்பஇன்னிசை வெண்பா

புன்னகை பூவதனம் பூக்களின் நந்தவனம்
மின்னும் நயனங்கள் மானினம் தந்தவரம்
கன்னம் இரண்டுமோ காஷ்மீர்ஆப் பிள்தோட்டம்
தென்றலின் ஊஞ்சலோகே சம்இளம் மான்விழியே
அன்னமும் தோற்கும் அணிநடை எங்குகற்றாய்
மன்னன் நளனும் மிகவியந்து பார்த்திடுவான்
தென்னை மரத்தினில் பொன்மேனி யைச்சாய்த்து
என்னநினைக் கின்றாய்நீ எந்தனெழில் காதலி
என்னைத்தா னேசொல் எழில்

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

இப்படியும் ஒரு பாட்டா ? வரி நல்லா இருக்கு நவம்பர் 24 ன் கருத்தா அமெரிக்கன் க்ரீன் கார்டு போல் bag log நிறையவே இருக்கிறது மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 13-Mar-2025 9:52 pm
" தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி " நன்றி ஐயா 13-Mar-2025 7:03 pm
சக்கரைவாசன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2024 10:36 am

கொலுசை அணிவிக்க கையினில் உந்தன்
மலர்பாதம் வைத்தபோது மென்பாதம் நொந்திட
வெல்வெட்டை கைமேல் விரித்தேன்நான் நோகாமல்
மெல்லச் சிரித்துநீ மெல்ல நடந்தபோது
மெல்லிய உன்கொலுசு மெல்ல ஒலித்திடயென்
சொல்லிலு மேகொலுசோ சைகேட் குதடிவெண்
மல்லிகை மேனிவண்ண மே

எதுகை--- கொலு மலர்-- ஒருவிகற்பம் வெல் மெல் மெல் சொல் மால் ---இன்னொரு விகற்பம்

இருவிகற்ப ஏழு அடி பஃறொடை வெண்பா

மோனை 1 3 ஆம் சீரில் ---கொ கை ம மெ வெ வி மெ மெ மெ மெ சொ சை ம மே

மேலும்

கேட்டிருக்கிறேன் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 13-Mar-2025 9:44 pm
" வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணு மணி " நன்றி ஐயா 13-Mar-2025 7:01 pm
சக்கரைவாசன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2024 8:45 am

பொழுதுபோகாத் தென்றலுன் கூந்தலிலே தங்க
அழுது புலம்பியது அந்திமலர்த் தோட்டம்
தழுவியது போதுமே தென்றலேயென் கூந்தல்
விழுமிய நின்கடமை வண்ணப்பூங் காவில்
பழுதிலா பூங்காற்றே செல்லமாய் சொன்னாய்
அழகு மலரெலாம் ஆரவாரம் செய்ய
எழுதினேன்நான் நின்னன்பை இங்கு !

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

பூங்காற்று திரும்புமா என் பாட்டை கேக்குமா --சிவாஜி பின்னாளில் நடித்த சிறப்பான படம் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 13-Mar-2025 9:41 pm
" பூங்காற்று புதிரானது " நன்றி ஐயா 13-Mar-2025 6:59 pm
சக்கரைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2024 7:39 am

யாப்பு அலங்காரம் -- பலவகைப் பாக்கள்
**********
1) கலிவிருத்தம் ( மா விளம் விளம் மா)

வெள்ளை உடைதனில் வீரமாய் உலவி
கள்ளச் சிரிப்பினைக் காந்தமாய்ப் பரப்பி
உள்ள மணலையும் ஊரினில் கடத்திக்
கொள்ளை யடித்திடும் கூற்றினைத் துரத்து!

( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை )

2.) நேரிசை வெண்பா
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனை,
கொள்ளையர் என்றுநீ கூறு!
( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை)

3.) நேரிசை ஆசிரியப்பா

வெள்ளை அங்கியில் வெளிவரும

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 07-Apr-2024 1:49 pm
ஒரே கவிதை யாப்பின் பல் வடிவங்களில் மிக மிக அருமை பாராட்டுக்கள் பகிர்ந்தளித்தேன் ***** 07-Apr-2024 9:21 am
ஐயா, தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் திருத்தம் செய்து காண்பித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா 31-Mar-2024 9:04 am
அனைத்துப் பாக்களும் சிறப்பு! கட்டளைக் கலித்துறை வெள்ளை உடையில் அலையும் அரசியல் வித்தகரை கள்ளச் சிரிப்பும் உதிர வலம்வரும் காதகரை உள்ள கனிமம் முழுதும் களவாடும் உத்தமரை கொள்ளை யரென்றே கருதி ஒதுக்கிடு ஓர(த்)திலே! ஓர(த்)திலே என வரலாம்; த் ஒலி குன்றி கூவிளங்காய் என்றே கொள்ள வேண்டும். வாழ்த்துகள். 31-Mar-2024 7:59 am
சக்கரைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2024 6:13 am

கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********

வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 29-Mar-2024 4:25 pm
நல்ல கருத்து, நல்ல வெண்பா வாழ்த்துக்கள்.நண்பரே சக்கரை வாசன் 29-Mar-2024 2:30 pm
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 29-Mar-2024 6:16 am
சரியே 28-Mar-2024 8:19 pm
சக்கரைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2024 6:53 pm

வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா
******************
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்கு அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்காது ஒடுக்கிடுவோம்!

விளக்கம் : குடிமகனை = சிடிஸன்ஸ், நாட்டின் பிரஜைகள்
படிப்பகங்கள்= பள்ளி மற்றும் கல்லூரி

(அனைத்து சீர்களும் கலித்தளை பயின்று வந்துள்ளது)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
அடி எதுகை)

மேலும்

ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 25-Mar-2024 9:29 pm
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ; படிப்பதற்(கு) அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே, குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ; வடிவமைத்த அரசியலை வணங்கா(து) ஒடுக்கிடுவோம்! கலித்தளை 13 (87%) வணங்கா(து) ஒடுக்கிடுவோம்! = மா முன் நிரை - கொச்சகக் கலிப்பா எனலாம்! 25-Mar-2024 8:53 pm
சக்கரைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2024 7:29 am

பாவகை மூன்று கருத்து ஒன்று
********
1. கலிவிருத்தம் --- ( காய் 4 )
******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்று ஆர்ப்பரிப்போர் ;
ஊக்கமிலாச் செய்முறைகள் ஊர்முழுதும் சேர்த்தபின்பு ;
நாக்கினிடை தேன்குழைத்து நாலுவிதம் பொய்பரப்பி;
வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி போடுவதேன்!
(அனைத்து சீர்களும் கூவிளங்காய் ஆக உள்ளது.
ஒவ்வொரு அடியும் நேரசையில் தொடங்க 16எழுத்துக்கள்)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை)

2. வஞ்சி விருத்தம் -- (காய் 3.)
*******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்றோர்
வாக்குறுதிப் பொ

மேலும்

ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் திருத்தம் கொண்டு அருளியதற்கும் மிகவும் நன்றி ஐயா 21-Mar-2024 8:20 am
மூன்றும் நல்ல பாடல்கள்! ஆட்சியுற்றே ஆர்ப்பரிப்போர் ஊரார்க்கும் -- ஆக்கமிலா 21-Mar-2024 7:53 am
சக்கரைவாசன் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2023 7:21 am

நேரிசை வெண்பா

சமயச்சார் பற்றதோர் சட்டமென்றார் என்ன
சமயசாதி காத்திடும் சட்டம் -- சமயசாதி
இங்கொழிக்கா காக்க இயற்றிய சட்டமடா
அங்கதம் பாட அழுத்து


மூடர்காள் மதச் சார்பற்ற அரசு என்றால் சாதிமதம் கூடாது என்று அர்த்தம் கற்பிக்காதீர்.
சாதி இருக்கும் மதம் இருக்கும். ஆனால் அரசு அவர்களிடம் பாரபட்சம் ஓரவஞ்சனை காட்டாது
செயல் பட வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. சட்டத்தை முறையாய் ஆய்ந்து படித்து செயல்
படடுதல் சிறந்தது..


...

மேலும்

சக்கரை வாசனாருக்கு வணக்கம் கடவுளை மறுத்து கட்சி கட்டுவரை தன்குலந் தழைக்க அவனை ஏற்பர் நாட்டு மக்களை மடையராக்கி அரசியல் நுழைதல் வளமதை பெருக்கவே ! கட்டுவரை வளமதை வளம் என்பது நிரையசை கலியாகி தொக்கி நிற்கிறது தவறு என்பது சகஜம் --- காரணம் சீக்கிரமாக பாடலை பதியும் நோக்கமே. பரவாயில்லை உண்மையை சொல்லிட ஆசிரியப்பா பாராட்டுக்கள் 03-Nov-2023 2:37 pm
ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் இந்த பதிவு என்னை மற்றும் ஒரு கோணத்தில் பின்வருமாறு நினைக்கத் தூண்டியது :-- கடவுளை மறுத்து கட்சி கட்டுவோர் தன்குலந் தழைக்க அவனை ஏற்பர் நாட்டு மக்களை மடையராக்கி அரசியல் நுழைவர் வளம் பெருக்கவே ! (நேரிசை ஆசிரியப்பா) 02-Nov-2023 11:02 am
அங்கதம். -- பழிசொல் 02-Nov-2023 7:22 am
சக்கரைவாசன் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2023 12:30 pm

கற்றவர் திரிவது காணு
*****
உற்றது தவிர்த்து ஒவ்வாமை பற்றியே
கற்றவர் திரிவது காணு !

மேலும்

சர்க்கரை வாசனாருக்கு வணக்கம் கீழே பிரித்து எழுதி யுள்ளதைப் பாருங்கள் உற்றத் தவிர்த்துப்பின் ஒவ்வாமை பற்றியே உற்/றத். தவிர்த்/துப்/பின் ஒவ்/வா/மை. பற்/றியே நேர்.நேர். நிரை நேர். நேர். நேர் நேர் நேர். நேர் நிரை தேமா. புளிமாங்காய். தேமாங்காய் கூவிளம் நன்றி கற்/கான். திரி/வதைக். கா/ணு நேர் நேர். நிரை நிரை. நேர் நேர் தேமா. கருவிளம் கா. சு 24-May-2023 7:34 pm
ஒரு விகற்பக் குறள் வெண்பா உற்றதை நாம்தவிர்த்(து) ஒவ்வாமை பற்றியே கற்றவர் தாம்திரியக் காண்! ’காணு’ என்றாலும் சரியே! காண் என்றாலே போதும். 24-May-2023 1:10 pm
சக்கரைவாசன் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2023 8:32 am

கட்டளைக் கலித்துறை


தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ ளாலபி ராமி கடைக்கண்களே


ஒன்று மூன்றில் ஐந்தில் மோனை அமைந்த பாடல்

மேலும்

கட்டளைக் கலித்துறை முன்னே எழுதியிருக்கிறேனா ? நினைவில்லை நான் இப்பொழுது எழுதிய கட்டளைக் கலித்துறை பாடலில் மோனையை பட்டரின் இப்பாடலை குறிப்பிட்டு மோனையுடன் அமைந்திருப்பது பற்றி குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்கள் நூற்றுக்கு நூறு உண்மை நான் சரிபார்க்கும் அவலோகிதத்தில் அது வலியுறுத்தப்படாததால் நானும் விட்டுவிட்டேன் மோனை பெய்தும் இன்னொன்று எழுதிடலாம் இன்னொன்று உங்கள் கற்பனையில் எழுதுங்களேன் தொல்காப்பியன் யாப்பு பள்ளியில் நானோ டாக்டரோ வாசனோ வாசவனோ ஏன் நீங்களும் மாணவர்தான் சரி "அடிக்குள் ஐந்தாம் சீர் விளங்காய்ச்சீராக இருத்தல் வேண்டும். அருகி விளங்காய்ச் சீருக்குப் பதிலாக மாங்கனி அல்லது மாந்தண்பூவும் வரலாம் இது அவலோகிதத்தின் விளக்கம் நாலசைச் சீரும் வரலாம் என்கிறது ஏற்புடையதா ?" என்று டாக்டரை கேட்டிருக்கிறேன் அவர் ஏதாவது நூலாதாரத்துடன் வரலாம் ணகர ஒற்று நீக்கி விளங்காயாகப் பார்க்கவேண்டும் என்கிறீர்கள் யாப்பு நூல் வழி அதைத்தானே சொல்கிறீர்கள் இதுவும் சிறந்த சமாதானமே இலக்கணத்தில் என் சொந்தக் கருத்தென்று ஒன்றும் இல்லை நான் படித்த தகவலை வைத்துச் சொல்கிறேன் அவ்வளவே நான் இலக்கண மேதாவி இல்லை விமரிசனம் வெகுண்டுரைத்தல் என்பதெல்லாம் என் இலக்கிய ஆன்மீகக் கோட்பாட்டிற்கு சரியில்லை உங்களக்கு எழுதிய கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள் 2017 ல் இணைந்திருக்கிறீர்கள் அதன் பின் தான் எப்பவோ என்னுடன் இலக்கியத் தொடர்பு கொண்டீர்கள் வலையில் புத்தகத்தில் படித்ததை வைத்துதான் எழுதுகிறேன் என்று நீங்கள் தான் சொன்னீர்கள் அதைவைத்துதான் அண்மையில் என்று குறிப்பிட்டேன் நானென்ன ஞான சம்பந்தரைபோல் உலகத்தாயின் முலைப்பாலுண்டு குழந்தைப் பருவத்திலே பாடல் எழுதினேனா ?மானிடத் தாயின் மார்பமுது உண்டு வளர்ந்த சாதாரண மனிதன் பெரியவரே 04-Apr-2023 10:53 am
கவின் சாரலரே நீங்கள் மூன்றாஞ் சீரில் இரண்டாம் சீரில் கனியும் பூவும் pottu எழுதிய காலத்தில் (சுமார் . இரண்டு வருடம் .முன்பு) கடைசி சீர் மாத்திரம் கனிச் சீர் வரலாம் என்று பாடல் உதாரன்ங்களுடன் கொடுத்திருந்தேன். அது மறந்து போய்விட்டது போலும். மற்ற இட களில் கனிச்சீர் புகா என்ற விளக்கமும் யாப்பு நூலில் உள்ளபடி எழுதியிருந்தேன். அப்போது தெரிவித்ததை ஏற்காது இன்று மீண்டும் கேட்கிறீர்கள். கடைசி சீர்களில் வரும் ஒற்று க்களை விட்டு கணக்கில் கொள்ள அது கனிச் சீர் ஆகா என்று யாப்பு இலக்கண நூலில் இருப்பதை பாட்டுடன் அன்றே விளக்கி இருக்கிறேன் . 03-Apr-2023 11:24 pm
இது என்ன புது விளக்கம் ண் ஐ அடைப்புக் குறிக்குள் போட்டு கடைக் கக ளே என்று ஆக்கி விளங்காயாக கொள்ளவேண்டுமா அடிக்குள் ஐந்தாம் சீர் விளங்காய்ச்சீராக இருத்தல் வேண்டும். அருகி விளங்காய்ச் சீருக்குப் பதிலாக மாங்கனி அல்லது மாந்தண்பூவும் வரலாம் இது அவலோகிதத்தின் விளக்கம் நாலசைச் சீரும் வரலாம் என்கிறது ஏற்புடையதா ? நான் வலையில் பார்த்த பழைய சூத்திர விளக்கப் புத்தகத்தில் இந்த EXCEPTIONS சொல்லப் படவில்லை அது விளங்காயாக வருவதன்றி சிறுபான்மை வேறுபட்டும் வரும் ...என்று சொல்கிறது நீங்கள் கனியை எப்படி காயாகப் பார்க்கிறீர்கள் ?ஏதாவது விதி இருக்கிறதா ? இந்த இலக்கண சர்ச்சை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன் உங்கள் மீதுள்ள மரியாதையில் இதை எழுதுகிறேன் உங்கள் எதுகை வினாவுக்கும் பதில் சொல்லியிருக்கிறேன் 03-Apr-2023 10:32 pm
டாக்டர் பாவலர் சிபா மணி அவர்களுக்கு ஐயா நாலாம் வரியின் ஈற்றுச்ச்சீர் கனியாக இருக்கலாம் நடுவில் கனிச்சீர் கூ டாதென்று காரிகையில் வந்த பாடலை நாம் நான் கைப்பிரதி எடுத்து கவின் சாரலனுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே எழுத்தில் போட்ட பிரச்சினை இன்று வரைத் தொடர்கிறது. நான் சமீத்தில் படித்த மாணவனாம். அவர் பிறகும்போதே அறிந்தவராம் எதுகை மோனை இஷ்டம் இருந்தால் மட்டுமே போடலாமாம் இல்லை என்றால் தேவை யில்லையாம். தொடர்கிறது இன்றும் வாதம.. நன்றி ஐயா 28-Mar-2023 1:04 pm
சக்கரைவாசன் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2023 6:21 am

நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)


முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (337)

இவர் பின்தொடர்பவர்கள் (344)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL

இவரை பின்தொடர்பவர்கள் (340)

ஆசிஷ் விஜய்

ஆசிஷ் விஜய்

உமரிக்காடு, தூத்துக்குடி
ராம்

ராம்

காரைக்குடி
மேலே