முடமாக்காதே

நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)


முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே

எழுதியவர் : பழனி ராஜன் (13-Jan-23, 6:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே