ஊருடன் ஒட்டிவாழ் பேருடன் நற்புகழும் பெற்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சொன்னசொல்லில் மாற்றமின்றி சொக்கத்தங் கம்போல
மென்மையான எண்ணத்தால் மேவுகின்ற - நன்மதியாய்
ஊருடன் ஒட்டிவாழ் உன்வாழ்வில் என்றுமே
பேருடன் நற்புகழும் பெற்று!
- வ.க.கன்னியப்பன்