மங்கல சகுனம்
#மங்கல சகுனம்
கோவிலுக்குள் நுழையும் போதெல்லாம் ஒலிக்கிறது
நல்ல சகுனமாய்
மணியோசை. !
கருவறைக் கடவுளை
வணங்கும்போதெல்லாம் விழுகிறது
நல்ல சகுனமாய்
மலர்கள்..!
வாசல் விட்டு வெளியில்
வரும் போதெல்லாம் காண்கிறேன்
நல்ல சகுனமாய்
பசுக்கள். !
நற்காரியங்கள் துவங்கும் போதெல்லாம்
கொட்டி விடுகிறது
நல்ல சகுனமாய்
மஞ்சள்..!
இப்படியான
நல்ல சகுனங்கள்
நிறையவே இருக்க
நல்லதே நடக்கும் பாக்கியம்
எல்லோருக்கும்
வாய்த்து விடுவதில்லை
மங்கல சகுனத்தில்
மஞ்சள் நதிக்குள்
நீந்திக் களிக்கின்றேன்
கடவுளின் ஆசீர்வாதங்களுடன். !
#சொ .சாந்தி

