இரா சுந்தரராஜன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : இரா சுந்தரராஜன் |
| இடம் | : வீரசிகாமணி, சங்கரன்கோவில |
| பிறந்த தேதி | : 16-Jan-1965 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Oct-2016 |
| பார்த்தவர்கள் | : 3153 |
| புள்ளி | : 318 |
வாழ்வெனும் ஓவியம்rnவரையக் கற்றுக்கொண்டவன்rnஆனாலும் இதுவரைrnவரைந்த ஓவியம்rnசில இடங்களில் மிகையாகவும்rnசில இடங்களில் குறைவாகவும்rnஇருப்பதை தெரிந்து கொண்டவன்rnrnஇதுவரை நான் வாழ்ந்த rnவாழ்க்கை எனும்rnவெற்றி தோல்வி புத்தகத்தில்rnநான் எடுக்கும்rnஅழகிய குறிப்புகள் rnஇனி வாழும் வாழ்விற்கு rnவழி காட்டட்டும்...rnவெற்றி இருப்பது rnசேரும் இடத்திலல்லrnவாழும் விதத்தில்...rn rn
சங்கர சுப்பிரமணியன்...
அன்று நீ தொழில் நுட்பக்
கல்லூரி ஒன்றின் கதிரவன்...
இன்று உற்றார் உறவினர்
நட்பு உலகின் சந்திரன்..
நீ வழிகாட்டிய மாணவச்
செல்வம்.. வசந்தங்களின்
பாதைகளில் பயணிக்கும்..
உலகம் அதனால் ஒளிரும்..
இந்த உணர்வில் உந்தன்
உள்ளம் என்றும் குளிரும்..
தேர்ந்த இசைக் கலைஞன்..
அவனது நேர்த்தியான
நெளிவு சுளிவுகளில்
இசைக்கருவிகள் இன்பம் தரும்..
தொழில் நுட்பக் கல்வியில்
இதனை இப்படி செய்ய
வேண்டும் என்பதில் நீ
காட்டும் நேக்குப் போக்குகள்
இந்தியாவின் திராவிட மாடல்
உலகத்தின் இந்திய மாடல்..
அன்பில் நிலா அறிவில் சூரியன்
நண்பன் சங்கர சுப்பிரமணியன்
வசந்
நவம்பர் 13, 2025
குரு பகவானுக்கு உகந்த வியாழன்
அன்று வந்துதித்த பேரன்..
அவன் பெயர் கிருத்திக்
பால சுப்பிரமணியன்
அழகிய வசீகரன்...
இன்று 14 டிசம்பர் 2025 ஞாயிறு
கிருத்திக் பாலசுப்பிரமணியன்
இன்று உனக்கு பெயர்
சூட்டும் வைபோகம்
வாழ்த்தட்டும் இந்த வையகம்..
இனி இந்த உலகம் உனதானது
இனி வரும் நூறாண்டு காலம்
இனிதானது புதுமையானது
இதுவரை யாரும் காணாதது..
கல்வி செல்வம் வீரம்
ஆகியவற்றில் சிறந்து
விளங்கி வாழ்வாங்கு வாழ
தாத்தாவின் வாழ்த்துக்கள்..
கிருத்திக் பாலசுப்பிரமணியன்
யாரையும் நீ ஜெயித்து வாழ
வேண்டும் என்பதில்லை உன்னை
நீயே ஜெயித்துக் கொண்டிரு..
சர
௦௩௧௨௨௦௨௫
செல்வவிநாயகம்..
பெற்றோர்.. ஆசிரியர்.. உற்றார்
உறவினர்.. நண்பர்கள்
யாவரும் இவரைப் பற்றி
கூறுவர் இவர் போல யாரென்று..
செல்வ விநாயகம்.. இவர்
எப்போதும் நடுநாயகம்
இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர் நாண
செய்வார் நன்னயம்...
தனது கருத்துக்களில்
தீர்க்கம்.. இருந்தும் பிறர்
உணர்வுகளுக்கு மதிப்பு
அளிப்பது இவரது வழக்கம்...
வெள்ளைப் புறாக்களை
கைகளில் வைத்துக்கொண்டு
வாக்குவாதம் செய்வார்...
இவரது அணுகுமுறையில்
வெள்ளைக் கொடிகளே
இவரை நாடி வரச் செய்வார்..
அமைதியும் ஆனந்தமும்
உற்சாகமும் உத்வேகமும்
நண்பர் எவருக்கும் தேவை
எனில்.. அவர்கள் இவரோடு
பயணிக்கலாம்..
வினைத்திட்பம் என்பது
ஒருவ(ன்)ள் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற...
கல்லூரிக் காலந்தொட்டே
நடையில்.. உடையில்
உரையாடலில்.. துணிவில்..
பார்ப்பவர் மூக்கில் விரல்
வைத்து வியக்கும் அளவு
வசீகரம்.. அது ராஜ்ஜியம்
ஒன்றின் இளவரசி என
மாதரசி தோழி சங்கமேஸ்வரி..
ஆகஸ்ட் பதினைந்து.. அது
இந்தியாவின் ஆனந்தம்..
ஆகஸ்ட் ஐந்து.. அது சங்கரி
பெற்றோரின் பேரானந்தம்..
முத்து ஒன்று கெத்தாகப்
பிறந்த புது அத்தியாயம்..
சங்கம் அமைத்து
செந்தமிழ் வளர்த்தனர்
சங்கப் புலவர்கள்...
சங்கரி பெற்று
தங்கமாய் வளர்த்தனர்
இவர்தம் பெற்றோர்...
குன்னூர் குறிஞ்சி நிலம்
வாழ்ந்த இந்த குறிஞ்சி மலர்
இன்று நெ
சங்கமேஸ்வரி...
கடற்கரை நகரம்
வீரத்தின் விளைநிலம்
முத்து நகரில் தொடக்கம்
அவரது நல்ல காலம்...
குன்னூர் மலைப் பிரதேசம்..
மக்கள் அவ்வப்போது
சென்று வரும் சுற்றுலா ஸ்தலம்
வருஷம் முழுமையும்
அங்கு வசந்த காலம்...
எப்போதும் அங்கேயே குடியிருந்து
குதூகலித்து விளையாடிய
பொன் மாலைப் பொழுதுகள்
வசீகர காலம்...
அது சங்கரியின் இனிமைக் காலம்
காடுகள் மலைகள்
மேடுகள் பள்ளங்கள்
செடிகள் கொடிகள் மரங்கள்
தேயிலைத் தோட்டங்கள்...
தலைமை தாங்கிய பச்சை நிறம்
மலர்களின் கண்கவர் நிறம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உத்வேக காலம்..
வாழ்ந்திருந்த இல்லம்
பூக்களின் வாசம்..
படித்த
தமிழ் பேசும் நல்லுலகம்
வையகத்தின் வசந்த தேசம்.. அது
அர்த்தங்களின் அனாயாசம்...
ஆனந்த சுவாரசியம்...
முழு உலகத்தின் கூறுகளைத்
தனக்குள் கொண்ட
இனிப்புப் பிரதேசம்...
இனிதாய் வாழ இன்பமாய் வாழ
வழிகள் சொல்லி வரங்களை
அள்ளித் தருவதால்...
தமிழைத் தாய்மொழியாய்க்
கொண்டு பிறக்கும் குழந்தைகள்
யாவும் இங்கு செல்வந்தர்களே..
ஒட்டு மொத்த உலகம்
தமிழ் உலகைப் பார்க்கிறது.. அதன்
நேர்த்தி கண்டு வியக்கிறது...
மொழியால் சிந்தனையும்
சிந்தனையால் மொழியும்
வளரும் அதிசயம்
இங்குதானே நிகழ்கிறது...
அறுபது வயதிற்குள்
முதன் முதலாய்...
அறுபதைத் தாண்டியவர்க்கு
இரண்டாம் முறையாய்...
வந்துதித்த பிலவ வருடத்தில்
மகிழ்ச்சி.. என்றும்
உங்களது அனைத்து
குறுஞ்செய்திகளுக்கும்
எனது பதில்
ஒற்றை ரோஜா....
உங்களது அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும்
எனது மறுப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
கோபங்களுக்கும்
எனது சமாளிப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
சோகங்களுக்கும்
எனது ஆறுதல்
ஒற்றை ரோஜா
உங்கள் பார்வைக்கேற்ப
உங்கள் நேரத்திற்கேற்ப
நேசத்திற்கேற்ப
தேவைக்கேற்ப வழியும்
வண்ணங்களை
பூசிக்கொள்ளும்
எந்தன் ஒற்றை ரோஜா வின்
நிறம் என்றென்றும்
கறுப்பு வெள்ளை தான்!
- மதிஒளி சரவணன்
இமைக்கும்
இடைவெளியை
குறைத்துக் கொள்
இதயத்துடிப்பு
அதிகமாகிறது
காதலில்
கரைந்தவர்
பல கோடி
இமைக்கும்
இமைகளால் சிலர்
இழுக்கும்
பார்வையால் சிலர்
மயக்கும் மாய
புன்னகையால் சிலர்
இசையோசை குரலால் சிலர்
திங்கள்
முக ஒளியால் சிலர்
கார் நிற கூந்தலால் சிலர்
மலர் பாதம்
பதிந்த
சுவடுகளால் சிலர்
பருவ வனப்பால் சிலர்
ஆனால்
இவை அனைத்தும் இருந்தும்
கரைந்து போனேன்
கபடம் அற்ற
ஒருதுளி கண்ணீரால்
டாக்டர் லதா கிறிஸ்டி...
அற்புத பதிவை பதிவிட்டமைக்கு
தங்களுக்கு நன்றி...
தமிழிலும் தங்களின் பேச்சு
சிறப்பாக இருக்கிறது...
மதிப்புள்ள பதிவு
இரண்டு காரணிகளில் மேலும்
மதிப்புக் கூட்டல் பெறுகிறது...
ஒன்று... சாதனை விஞ்ஞானி
சாமானியர்களின் வேதனைகளை
அலசி ஆராய்வது...
இன்னொன்று.. பெண்கள் பலரின்
துயரங்கள் சொல்லி
தீர்வுகளும் சொல்லியிருப்பது...
கொஞ்சும் தமிழ் கவர்கிறது...
பெண்களின் மாண்பு சொல்ல
பாரதி வந்து போகிறார்...
சமநீதி தந்து போகிறார்...
பெண்கள் சுதந்திரத்தை
வேர்கள் முதல் விழுதுகள் வரை
விசாரிக்கும் உங்கள் உரை
பெண் சுதந்திரம் மறுக்கும்
தடைகளை உடைக்கும்
அதே வேளையில் எல்லைகளை
வரையறுக்கவும் தவறவில
ஊருவிட்டு ஊர் மட்டுமல்ல..
நாடுவிட்டு நாடு மட்டுமல்ல..
கண்டம்விட்டு கண்டம்...
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தைந்து ஆண்டுகள்..
சென்று... அங்கு வென்றது
நண்பன் ராஜ்குமாரின்
திறமைக்குச் சான்று..
அது மிக்க நன்று...
திறமை இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
தாய்த் திருநாட்டில்...
திறமை இருந்தால் மட்டுமே
வாழமுடியும் அயல்நாட்டில்...
அமெரிக்கா... அது
ராஜ்குமாரின் திறமையில்
விசா சல்லடை இனி உனக்கு
வேண்டாம் என்றது...
கிரீன் கார்டு தந்து தன்னோடு
தக்க வைத்துக் கொண்டது...
சூரியன் இவனுக்கு
இருபத்துநான்கு மணி நேரமும்
சொந்தமாகிப் போனது... அதனால்
பந்தங்கள் கூடிப்போனது...
இந்திய
நட்பு
நேசித்தது !!
நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ...