சுரேந்தர் கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேந்தர் கண்ணன் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 05-Dec-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 705 |
புள்ளி | : 49 |
*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன
தேரை இழுத்து
தெருவில் விட்டதுபோல்..
உன்னை இழுத்து
என் இதயத்தில்
விட்டுவிட்டாய்!!
இணையத்திலும்
கிடைக்கவில்லை!!
உன் இதயத்தில்
நுழையும் வழி!!!
இணையத்திலும்
கிடைக்கவில்லை!!
உன் இதயத்தில்
நுழையும் வழி!!!
அடைப்புக்குறிகளுக்குள்
அடைந்திடாத
ஆச்சரியக்குறி!!
கால்கள் நனைத்துச்செல்லும்
கடல் அலைபோல்..
காதல் நனைத்துச்செல்கிறது
இதயத்தை...
கங்கை நீரெடுத்து
கண்ணே உன்னை நீராட்டி!
காசி புண்ணியமெல்லாம்
என் மகராசி உனைசேர!
குறிஞ்சி மலரெடுத்து
உன் கூந்தலிலே சூடி!
கோஹினூர் வைரம் எடுத்து
உன் நெற்றியிலே சுட்டியாய்!
தூத்துக்குடி முத்தெடுத்து
உன் கழுத்துக்கு மாலையிட்டு
குமரி அம்மன் மூக்குத்தி
என் துணைவி
உன்னை அலங்கரிக்க!
திருச்சானூர் வளையல்கள்
உன் கரங்களில் குலுங்கிட
திருபுவனம் பட்டு
உன் திருமேனியில் ஜொலித்திட
கும்பகோணம் வெற்றிலையாய்
குலம் செழிக்க வந்தவளே!
சிரபுஞ்சி மழைபோல
அன்பைக் கொட்டி நின்னவளே!
சித்தமெல்லாம் குடியிருக்கும்
என் அம்மாவின் மருமகளே!
உன் திட்டமெல்லாம் ஈடேறி
திக்கெட்டும் பெருமை
கலித் தொகையும்
கலாபத் தோகையும்
சேர்த்த கூட்டுத் தொகைதான்
அவளின் கூந்தல் தொகை
மார்கழி அதிகாலை
பனி பொழிந்துகொண்டிருந்தது
அவள் கண் விழித்ததும்
கனி பொழிய ஆரம்பித்தது
இவளின் பாதம்
ஒரு மைல் தூரம்
கடந்ததும்
அந்த மைல் கல்
இரண்டும்
மயிகள் ஆனது
இவள் பெண் குலத்தில்
பிறக்காது மின் குலத்தில்
பிறந்தவள்
இதை அறிந்தால்
போராட்டம் நடக்காது
கூடங்குளத்தில்
அவள் தாமரை
நான் மோடி
நான் ராகுல்
அவள் என் கை
பிடிப்பாளா ?
அவள் மாம்பழம்
தின்றால் நான்
பா ம க
அவள் மாம்பலத்தில்
நின்றால் நான்
தி மு க
அவள் இலையில்
உண்டால் நான் அதிமுக
அவள் குக்கரில் வடித்தால்
நான் அ ம மு க
எனக்கும் வேண்டும்
அவள் ஞாபகப் பரவல்
தடைச்சட்டம்!!!