இரா சுந்தரராஜன்- கருத்துகள்

வாழும் திருவள்ளுவர் நீங்கள்...
வார்த்தைகள் வரிந்து கட்டி வருகின்றன...
தமிழ் ஐசுவர்யம் கொள்கிறது தங்களின்
இனிய படைப்பில்... வாழ்த்துகள்...

பள்ளிக்கூடப் புகைப்படம்
விவரிக்கும் தங்கள் கவிதை
நினைவுகளையும் படம் பிடித்துக்
காட்டுவது மிக அழகு...
வாழ்த்துக்கள்...

நீர் கவிஞர்...
அள்ள அள்ளக் குறையாத
தமிழ் அட்சயபாத்திரம்
உம்மிடம் உண்டு...
வசந்தங்களை வாரி
வழங்குகிறது உமது
நேரிசை ஆசிரியப்பா...
மீண்டும் மீண்டும் படிக்கத்
தூண்டுகிறது உமது அழகிய பா...

உணர்ந்து பாராட்டிய நண்பர்
சங்கர் சேதுராமனுக்கு நன்றி...

பாடு நிலாவே...!
இறைவனிடம் உனக்காய் கையேந்தினோம்
இறைவன் எங்களிடம் கையேந்தி உன்னைப் பெற்றுக் கொண்டான்.....
என் செய்வோம்....?
தங்கள் கவிதாஞ்சலி நெஞ்சம் தொடுகிறது...

எஸ்பிபி புகழாஞ்சலி... நெஞ்சம் தொடுகிறது...

தங்களின் பாராட்டில் மனசு மகிழ்கிறது...
இன்னும் எழுதத் தூண்டுகிறது...
வார்த்தைகளில் சொல்ல முடியாத
சக்தி ஒன்று தங்கள்
வாழ்த்துக்களில் இருக்கிறது...
நன்றிகளை என் இதயம் சமர்ப்பிக்கிறது...

பூவினும் மெல்லியது
தங்களது இதயம்.. அதை
அழகாய் சொல்லியது
தங்கள் கவிதை...

அர்த்தங்கள் அருமை
வார்த்தைகள் கோர்வை
தமிழுக்குப் பெருமை...

இனிய பக்கங்கள்
சிலவாயினும்
அதன் இனிமை
படிக்கும் புத்தகத்தை
நிறைத்திருக்கும்...

தங்களின் கவிதையும்
அப்படியே...
வாசிக்கும் மனதை
நிறைக்கிறது...
மா... பலா.. வாழை போல்
இனிக்கிறது... ஈர்க்கிறது...

ஓரவிழிப்பார்வை ஒன்றை
நன்றாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்...
தேர்ந்தெடுத்த வார்த்தைகளில்
வசீகரத் தேன் தடவி...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...
பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்...

கருத்துகளும் வார்த்தைகளும்
தங்களிடம் கோர்க்கின்றன கரம்...
அது இறைவன் அளித்த வரம்...

தாங்கள் செதுக்கிய வார்த்தைகள் சேர்ப்பில்
அழகிய சிலையாய் நிலைக்கும் சிறப்பாய்..

தங்களுக்கு தடையில்லா தமிழ் அத்துபடி...
அதை இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளது உள்ளபடி... வாழ்த்துகள்!


இரா சுந்தரராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே