நெஞ்சில் நிற்கும் நிழற்படம்

வகுப்பாசிரியரை
நடுவில் வைத்து...

கட்டையர்களை
முன்னால் விட்டு...

நெட்டையர்களை
பின்னால் விட்டு...

அனைவரையும்
சிரிக்கச் சொல்லி...

வெள்ளை உள்ளங்களை
கருப்பு வெள்ளையில்
புகைப்படமாயும்...
எடுத்த...

பள்ளிப் புகைப்படமே
நினைவில் நின்ற
நீங்காத புகைப்படம்...

இதில் சிலபேர்
இன்று இல்லையே
என... நினைக்கும் போதும் ...

சிலர் ...எங்கிருக்கிறார்களோ?
என... எண்ணும் போதும்...

ஒரு சிலரோ ...
யாரும் நெருங்க முடியா
உயரத்தில் இருப்பதை
நினைக்கும் போதும்...

ஏதோ ... நினைவுகள்...
பள்ளியின்... மாணவர்கள்
சப்தத்தோடும் ...
பள்ளியின் மணி சப்தத்தோடும்...

கேட்டுக்கொண்டே
இருக்கிறது.

மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (9-Jul-21, 11:13 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 100

மேலே