PASALI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PASALI
இடம்:  களக்காடு, நெல்லை மாவட்டம்
பிறந்த தேதி :  04-Mar-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2021
பார்த்தவர்கள்:  241
புள்ளி:  160

என்னைப் பற்றி...

மருத்துவர்.
தமிழ் ஆர்வலர்

என் படைப்புகள்
PASALI செய்திகள்
PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2022 7:56 pm

பெண்ணே !
இலக்கணம்
சரியல்ல... என்று
ஏன் என் கவியை
நிராகரித்தாய்...

நான்
வேண்டுமென்றே
"சீர் "...ஒழுங்காக
இடவில்லை....
உனக்குத்தான்
"சீர் "என்பதே
பிடிக்காது
என்பதால் ...

வேண்டுமென்றே
அசைகளை இடவில்லை...
உன் கண் அசைவே
எனக்குப்
போதுமென்றதால்...

வேண்டுமென்றே
எதுகை இடவில்லை...
உனக்குத்தான்...
என் கையைத் தவிர
வேறு கை பிடிக்காதே
என்பதனால் ...

ஒழுங்கற்ற
அடிகளை இட்டுவைத்தேன்...
ஏனெனில் ...
நானே
உன் அடியைப்
பற்றியே கிடந்ததாலே ...

முற்றுப்புள்ளி
வைக்க மறந்தேன்...
ஏனெனில் ...
விரைவில்...
நெற்றிப்புள்ளி
வைக்க வேண்டும்
என்பதற்காக...

இப்போது சொல் ...
நான் எழுதிய

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2022 7:43 pm

கட்சித் தாவல்
அடிக்கடி நடக்கும்
என்ற காரணத்தால் ...
"காதலர் சங்கம்"...
என்ற ஒன்று
இங்கில்லை.

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2022 10:42 am

காதலுக்காய்
உயிரைக் கொடுக்காதீர்கள்....

கொடுத்த பின் ...

அவள்
வேறொருவரின்
மனைவியா யிருக்கலாம்...

அது உங்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2022 8:02 am

ஒற்றுமையாய்...

நீங்கள் இடும்
ஒரு "மை"...

ஆளப்போவது
யாரென்ற
உரிமையை... வழங்கும்...

அதன் பெயர்
"ஓட்டு".

உரிமையாய்...

நீ இடும்
ஒரு "மை"...

அவளை
உனக்கு மட்டும்
உரிமையாக்கும்...

அதன் பெயர்
"பொட்டு ".

மையையே
இட்டிடச் செல்லாது...

உரிமை கொள்ள
முடியுமா?

மேலும்

PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2021 11:13 am

வகுப்பாசிரியரை
நடுவில் வைத்து...

கட்டையர்களை
முன்னால் விட்டு...

நெட்டையர்களை
பின்னால் விட்டு...

அனைவரையும்
சிரிக்கச் சொல்லி...

வெள்ளை உள்ளங்களை
கருப்பு வெள்ளையில்
புகைப்படமாயும்...
எடுத்த...

பள்ளிப் புகைப்படமே
நினைவில் நின்ற
நீங்காத புகைப்படம்...

இதில் சிலபேர்
இன்று இல்லையே
என... நினைக்கும் போதும் ...

சிலர் ...எங்கிருக்கிறார்களோ?
என... எண்ணும் போதும்...

ஒரு சிலரோ ...
யாரும் நெருங்க முடியா
உயரத்தில் இருப்பதை
நினைக்கும் போதும்...

ஏதோ ... நினைவுகள்...
பள்ளியின்... மாணவர்கள்
சப்தத்தோடும் ...
பள்ளியின் மணி சப்தத்தோடும்...

கேட்டுக்கொண்டே
இருக்கிறது.

மேலும்

நன்றி ஐயா. 09-Jul-2021 11:36 am
பள்ளிக்கூடப் புகைப்படம் விவரிக்கும் தங்கள் கவிதை நினைவுகளையும் படம் பிடித்துக் காட்டுவது மிக அழகு... வாழ்த்துக்கள்... 09-Jul-2021 11:28 am
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2021 7:35 am

பசியோடு இருப்பவனை
விரட்டுவதும் ...

பெரும் பணக்காரனை
வரவேற்று ...
அவன் ஏறிட்டுப்
பார்க்காத போதும்...
பெரும் விருந்திட்டு
சாப்பிட அழைப்பதும் ...

வயலை அழித்து
மனையாக்கி ....
மனையின் மேலே
செடி, கொடிகள் வைத்து
அழகு பார்ப்பதும் ...

பாலின்றி...
ஏங்கும்... பல
பச்சிளங் குழந்தைகள்
இருக்க ....
பாலை...
தலைவர்களின் சிலைகளுக்கு விட்டு
விரயமாக்குவதும் ...

அம்மாவை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு ...
பிறந்தநாள் வந்த போது
அனாதை இல்லத்திற்கு
சோறு போடுவதும் ...

தன்னுடைய
தொழிலாளி...
கடன்பட்டிருக்கிறான்
எனத் தெரிந்தும்...
கட்டாகப் பணத்தை
உண்டியலில்
இடுவதும் ...

உயிரைக்

மேலும்

நன்றி 09-Jul-2021 6:01 am
ஆரம்ப வரியை படிக்கவே கண்கலங்க வைக்கும் வரி. பாராட்டுக்கள் 08-Jul-2021 11:07 pm
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2021 7:42 am

கால் மேல்
கால் போட்டு
தூங்குகிறது குழந்தை
தொட்டிலுக்குள் ...

அவ்வப்போது
சிரிப்பும்...
சிணுங்கலுமாக
தொட்டிலுக்குள்ளிருந்து
சப்தம்...

எட்டிப் பார்த்தால் ...
சிறுநீர் கழித்திருந்தது ...

குழந்தை
ஏதாவது கனவு
கண்டிருக்கும்...

அதன் பயத்தில்
இப்படிச் செய்கிறது
என்கிறாள் பாட்டி...

குழந்தைகள் கனவில்
நரிகள் வருவதாய்
பாட்டி சொல்ல
கேட்டிருக்கிறேன் ...

அப்படி ஏதும்....
கனவுகள் காணுமா?
அறிந்தவர் இருந்தால்
கூறுங்களேன்?

மேலும்

உண்மைதான். மீண்டும் பிறக்க எவராலும் முடியாது. 30-Jun-2021 5:52 am
அதற்கு தாங்கள் குழந்தை ஆக பிறக்க வேண்டும் ஆயினும் அதனை அறிய அனுபவம் வாய்க்க வேண்டும் .ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை...திரும்ப வராத என ஏங்கும் பருவம் இது. 29-Jun-2021 6:32 pm
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2021 6:05 pm

வீட்டிற்கு வெளியே ...

புது செருப்புக்
கடித்தது ...
பொறுத்துக் கொண்டேன்...

பக்கத்து வீட்டு
வளர்த்த நாய்
கடித்தது ...
பொறுத்துக்கொண்டேன்...

வாங்கிய வண்டியில்
சக்கரங்கள்
சரியாக பிடிக்காமல்
கடித்தது....
பொறுத்துக்கொண்டேன் ...

வீட்டிற்குள் நுழைந்ததும்...
ஏன் இவ்வளவு
தாமதமென்று ...
மனைவி கடி(ந்)த்தாள் ...
கோபம் வந்தது.

மேலும்

மிக்க நன்றி 27-Jun-2021 8:49 pm
அருமை 27-Jun-2021 5:58 pm
PASALI - PASALI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2021 9:30 am

" *மீண்டுவா... நண்பா !"*

(5 காய் மா புளிமா)

சென்றநாளில் தொற்றோடு
சீர்கெட்ட என்நண்பா !
...செயலதிலே சோம்பல் முறையா?

வென்றுவிட்டாய் ! தேறிவிட்டாய் !
வீழ்த்திவிட்டாய் ! என்றிருந்தோம்
... வேதனையில் வீழ்தல் அழகா?

கொன்றிடத்தான் வந்தஇந்தக்
கொரோனாவில் மீண்டுவந்தாய்!
... குழம்பிடத்தான் இன்று தகுமா?

சென்றிடுநீ தினமுந்தான்
செய்கின்ற தொழில்நோக்கி !
... சேர்ந்திடுமே மாற்றம் அதிலாம் !


( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்* )


மரு... ஆதம் சேக் அலி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே