கூலி இல்லை

" *கூலி வேறு ,சோறு வேறு"*

சுடுசோறும் கூடவே
சுண்டைக்காய் கூட்டும்,
விடும்ரசமும் மாவடுவும்
விட்டுக் - கொடுத்தாள் ,
தொடுகறியும் நற்சுவையாய்த்
தோன்றட்டு மென்று ,
கடும்உழைப் பாளியைக் கண்டு .

( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி.
களக்காடு.

எழுதியவர் : மரு.ப.ஆதம் (21-Aug-24, 1:49 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 26

மேலே