கண்ணா வாராய்

கண்மாய்கள் தழும்பி வழிகிறதே
கண்ணன் வரும் நாளோ

கடல் அலைகள் ஆர்பரிக்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

குயிலினங்கள் கூவி மகிழ்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

காக்கைகள் கூடி கரைகின்றதே
கண்ணன் வரும் நாளோ

கன்றுகள் துள்ளி விளையாடுகின்றதே
கண்ணன் வரும் நாளோ

களிறுகள் ஆராவாரமாய் பிளிர்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

குழந்தைகள் ஆனந்தமாய் குதூகலிக்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

கயவரும் கள்வரும் ஓடுகின்றனர்
கண்ணன் வந்தே விட்டான்

கண்ணனை பாடி கும்மியடி
கண்ணனை போற்றி கூத்தாடு

கைப்பிடி அவல் கண்ணனுக்கு
கவளமாய் வெண்ணை கண்ணனுக்கு

கண்ணா நீ வாராய்
கருணை வள்ளலே வாராய்

குடிகள் காக்க வாராய்
குலம் தழைக்க வாராய்

படைப்பு
ராம்கி

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (26-Aug-24, 9:31 am)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : kannaa vaaraai
பார்வை : 39

மேலே