பாளை பாண்டி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாளை பாண்டி |
இடம் | : விழுப்புரம |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-May-2021 |
பார்த்தவர்கள் | : 410 |
புள்ளி | : 73 |
தமிழ் பிரியன்
அந்திப் பொழுதில் அழகிய காவிரியில் தோணிகள் ஒட்டியே
சுந்தரத் பூந்தமிழில் பாட்டிசைப்பேன் சோழநன் டிளம்பெண் ணுடனே
மந்திரப் புன்னகை மங்கையின் பாண்டியன் முத்துச் சீர்வரிசை
எந்தன் மார்பினில் எழிலாய்ச் சாய்ந்தே அவளும் பாடிடுவாள்
மண்ணிலே புறப்பட்டு
விண்ணிலே கோலமிடச்
சென்ற சந்திராயனே 3 யே
சிம்ம முகம் கொண்ட நான்முக
பாரத இலட்சனையை பாதத் தடமாக
பாட்டி வடை சுட்ட நிலாவில் நீ பதி
விக்ரம் என்றால் வெற்றி
இந்தியா என்றால் அமைதி
சாப்ட் லேண்டிங் இல் சாதனை
செய்து புதுச் செய்தி தருவாயாக
புன்னகையால் பூவுலகிற்கு.
காத்துக் கிடைக்கிறோம்
காணொளியில் காண நீ காற்றில்லா
சந்திரனில் தந்திரமாக தரை இறங்குவதைக் காண
அடேய் சந்திராயன் 3 எனும் எம் மந்திரமே ...
நீ இதுவரை சாதித்தது ஏராளம்
நீ இனி சாதிக்க இருப்பது தாராளம்
உனை மகனாக பெற்ற இஸ்ரோ
தாயும் இந்தியா எனும் தந்தையும்
உளம்மகிழ உன்னதம் கொள்வாயா
மண்ணிலே புறப்பட்டு
விண்ணிலே கோலமிடச்
சென்ற சந்திராயனே 3 யே
சிம்ம முகம் கொண்ட நான்முக
பாரத இலட்சனையை பாதத் தடமாக
பாட்டி வடை சுட்ட நிலாவில் நீ பதி
விக்ரம் என்றால் வெற்றி
இந்தியா என்றால் அமைதி
சாப்ட் லேண்டிங் இல் சாதனை
செய்து புதுச் செய்தி தருவாயாக
புன்னகையால் பூவுலகிற்கு.
காத்துக் கிடைக்கிறோம்
காணொளியில் காண நீ காற்றில்லா
சந்திரனில் தந்திரமாக தரை இறங்குவதைக் காண
அடேய் சந்திராயன் 3 எனும் எம் மந்திரமே ...
நீ இதுவரை சாதித்தது ஏராளம்
நீ இனி சாதிக்க இருப்பது தாராளம்
உனை மகனாக பெற்ற இஸ்ரோ
தாயும் இந்தியா எனும் தந்தையும்
உளம்மகிழ உன்னதம் கொள்வாயா
விழிபேசி னாலங்கே வெல்லுமுன் காதல்
மொழிபேசி னால்முத்து மோகராகம் பாடும்
குழியும்கன் னம்மாங் கனிகுலுங்கும் தோட்டம்
எழில்கூந்த லுக்கிணை ஏது
"புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்"
கவின் சாரலன் ஐயா எழுதிய வெண்பாவின் முதலடி, எனை ஒரு வெண்பாவை எழுதத் தூண்டியது.
**************
நேரிசை வெண்பா :
பொன்னிலவாள் கண்மருளும் பொய்யிடையாள் உட்பறந்து
கன்மனத்தில் தேன்குடிக்கும் கார்விழியாள் - புன்னகைத்தாள்
மெய்வெளியில் புள்ளினங்கள் மென்சிறகில் பண்ணெழுப்பும்
வெய்யவனும் தண்ணளிப்பான் வீழ்ந்து.
மருளும் - மயங்கும், இடை - இடுப்பு, கன்மனம் - கல் மனம், கார் - கருமை, புள்ளினங்கள் - பறவைகள், பண் - இசை, வெய்யவன் - சூரியன், தண் - குளிர்ச்சி.
பொருள் :
அவள் பொன் நிலவைப் போன்று இருப்பவள். அவளுக்கு இடை இருக்கிறதா? இல்லையா? என்று, பார்க்கும் கண்களை மயங்க வ
தன்உயிரில் இருந்து ஓர்அணுவை தந்து, அவ்வணுவை அடைகாக்கும்
அன்பு மனையாளை மனதில் தாங்கி
ஆதரவாக கரம் பற்றி, சிரம் கோதி
சீக்கிரம் வருவேன் அந்தியிலே யென தினமும் பொய் உரைத்து
அலுவலில் அகிலம் மறந்து, மசக்கை
மனைவி ஞாபகம் தாமதமாக வர
தனை மறந்து காத்து கிடக்கும் கண்
அப்பெண் யென ஓடி வந்தாயோ
யெனை நாடிவந்தாயே ,நான் கருவாக இருக்கையில்
உள்ளம் மகிழ்ந்த நான் உதைத்தேன்
யென் அன்னையை ஓர் உந்தலில்
அடிவயிற்றில் கைவைத்து அணைத்தாய் எனையையே
அகமகிழ்ந்தாள் அன்னையே
பேணிக் காப்பதில் பெற்றவளுக்கு
இணை நீயே ... ஆயினும் வலி வந்து
யெனதுஅன்னை தான் துடிக்க
ஒன்றுமில்லை... அச்சம் வேண்டாம்
உனைக் காண்கையில் உள்ளம் கொள்ளை போகையில் நின்
கள்ளச் சிரிப்பைக் காட்டி காக்க
வைக்காதே, உருகும் என் மனம்
என்னிடம் நிற்காதே, உறவை கூட்டி
ஊரறிய கைத்தலம் பற்ற
கனவு கண்டேன் மாமனே
மையல் என்மேல் இலையோ,
மாதம் உருள்வது தெரியலையோ,
மங்கை நாணுவது புரியலையோ
பந்தலிட்டு தட்டுமாற்ற தயக்கம் தான்
ஏனோ , தகவல் தந்து நாள் ஆச்சு
மாமன் இன்னும் வரலையே,
மனசுக்கு ஒன்றும் புரியலையே,
மாமனே, யென்வாழ்வென ஆனவனே, நீ வரும் வரை வாசல்
காணும் என் விழிகளின் இமைகள்
இமைக்கா ...
இமைக்கா இமைகள் கொண்டு
தேவலோக அழகியாக காத்துக்
கிடைப்பேன் காலமெல்லாம்...
எங்கும் அவன்
எதிலும் இவன்
பாதி அவன்
மீதி இவன்
அவன் இவன்
இவன் எவன்
எவனும் அவனே
எல்லாம் இவனே
அவன் அரன்
இவன் மால்
ஆம் இவர்கள் தான்
நம் நோயை மாயை
தீர்க்கும் மாலரன்
அரவணைக்கும் அரண்
தமிழ் ஞானி ஆன ஔவையார் ஒரு முறை தமிழ்தொன்டு புரிய நடைபயணம் மேற்கொண்டிருந்தார்...
அப்போது வயல்வெளி வழியாகக் நடந்து சென்று கொண்டிருந்தார்.அச்சமயத்தில் ஓர் உழவன் தன் வயலுக்கு ஏத்தம் (ஏற்றம்) மூலம் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார் .
ஏத்தம் என்பது பழங்காலத்தில் சால் எனப்படும் பெரிய மண் பாத்திரம் ஒருபுறம் கயிறு கொண்டு மரத்தில் கட்டி மறுபுறம் ஆள் ஏறி காலால் மிதிக்க (2 மரத்தை ஏறக்குறைய கூட்டல் குறிபோன்று அமைத்து அழுத்தம் கொடுக்க) சால் நீர்நிலையின் உள்சென்று தண்ணீர் மோந்து வரும் அதை இன்னொரு ஆள் வாங்கி வாய்க்காலில் ஊற்றி வர நீர் வயலுக்கு சென்று பாயும்.
அந்த விவசாயி தன் களைப்பை போக்க பல பாடல்கள் பா