பாரதி பிறந்த நாள்

முண்டாசு கவிஞன், முத்தமிழ் அறிஞன்
பிறந்தான் எட்டயபுரத்திலே
முப்பத்தி இரண்டு மொழிகள் கற்று
முதிர்ந்தான் மொழியாற்றலிலே
படித்தான் நெல்லையிலே
பின் வசித்தான் சென்னையிலே
புசிக்க வழியின்றி, தவித்தான் வறுமையிலே
மனதில் உறுதி வேண்டுமென்று முழக்கமிட்டான்
மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டான்
பெண் சுதந்திரம் போற்றினான்
பேரன்பு கொள்ள சொன்னான்
நெஞ்சில் உரமுண்டு, நேர்கொண்ட பார்வையுண்டு
நிமிர்ந்த நடையுண்டு, நேர்மையுண்டு
தளராத மனஉறுதியுண்டு
தமிழன் என்ற திமிர் உண்டு
தாடியுடன், முறுக்கு மீசையும் உண்டு
சிங்கத்தின் பிடரியை பிடித்தாட்டிய வீரமுண்டு
சிதம்பரனார், சிவா உடன் நட்பும் உண்டு
படைப்பாற்றல் திறன் உண்டு
பராசக்தி பக்தியும் உண்டு
செங்கோலை வீழ்த்த, அவன் எழுதுகோலுக்கு சக்தியுண்டு
புலவனாய், பத்திரிகையாளனாய்,
சுதந்திர போராட்ட வீரனாய், பன்முக தோற்றம் கொண்ட
அவன் புகழ் பாட ஆயிரம் காரணங்கள் உண்டு
பார் போற்றும் எங்கள் பாரதி பிறந்த நாள் இன்று
அவன் புகழ் பாடி, வாழ்த்தி வணங்குவோம்.

எழுதியவர் : பாரதிகேசன் என்கிற பஞ்சாபகேசன் (11-Dec-25, 10:38 am)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 4

மேலே