ஒரு கவிதை தருவாளோ

ஒரு கவிதை தருவாளோ!

எழுதுகிறேன்
ஒரு கவிதை எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
எழுதுகிறேன்.

" காற்று வெளி இடை
கண்ணம்மாவின்........"
காதலன் என எண்ணி
கவிதை ஒன்று எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
எழுதுகிறேன்

" துன்பம் நேர்கையிலே......"
யாழ் எடுத்தவன் போல்
ஒரு‌கவிதை எழுதுகிறேன்
அழித்து அழித்து அதை
நான் எழுதுகிறேன்

கவிதையும் வரவில்லை
பாரதியும் வரவில்லை
பாரதி தாசனும் வரவில்லை

வருவாளோ பராசக்தி

கவிதை ஒன்று

எழுதியவர் : சண்டியூர் பாலன் (11-Jan-26, 6:14 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 43

மேலே