இ க ஜெயபாலன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இ க ஜெயபாலன் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 03-Sep-1948 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 472 |
புள்ளி | : 270 |
சுயசரிதை.rnபிறப்பு மலேசியா.rnஆரம்பக் கல்வியும் குறும்புகளும் யாழ்பாணம் சண்டிலிப்பாய்.rnமேல் படிப்பு + காதல் + திருமணம் + வேலை எல்லாம் வெளியூர். rnவேலை:- ஆராய்ச்சி + கற்பித்தல்.rnமனைவி மலேசிய இந்திய வம்சாவளி. தங்கம் விரும்பாத தங்கம் அவள்.rnபிள்ளைகள் சுயம்வரம் கண்டவர்கள். இப்போ உடல் மலேசியாவிலும் உள்ளம்rnசண்டியூரிலும் என்று வாழ்பவன்.. இதற்கு இடையில் நிலவாய் (இதமாய்) வந்து நிற்பது தான் எழுது.கொம் அவர்களுக்கு மிக்கவும் நன்றி.rnஅந்த நிலவில் நீங்கள் பார்ப்பவர் சண்டியூர் பாலன். முழுப் பெயர் Ramalingam Kandiah Jeyapalan. rnrn"கிறுக்கன் நான்,rnகவிதை என rnஎண்ணி,rnஎழுது.கொம்rnஏற்றுகிறேன்,rnகவிதை எனில்,rnகை தட்டுங்கள்,rn ❌,rnமறந்திடுங்கள.
வியாபாரம்.
" தங்கம் " என்று மிகவும் குழைவான குரலில் கூப்பிட்டபடி தன் முன்னால் வந்து நின்ற தன் கணவன் இளங்கோ(வன்)வை தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் மனம் பேசியது.......
இவனையா நான் காதலித்தேன்.
வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி
இவனோடு குடும்பம் நடத்த
புறப்பட்டேனே என் புத்தியை
செருப்பால் அடி, தனக்குள்ளே
எண்ணிக்கொண்டாள்.
தங்கத்தையும் ஒரு விதத்தில்
பிழை சொல்லமுடியாது.
இளம் வயதில் அவள் வசித்த
கிராமத்தில் அங்கிருந்த இளம்
பெண்கள் பலருக்கு இளங்கோ
மீது ஒரு வித மயக்கம்.
பார்ப்பதற்கு இளங்கோ வாட்ட
சாட்டமாக இருந்தான். மற்ற
இளம் வட்டங்கள் போல்
சோலி சொட்டுக்கு போகாதவன்.
அவன் உண்டு அவன்
Origin of MAN.
Sakthi ...the cosmic energy
After a long contemplation
............. drew two lines
One straight and the other
not so straight
She said they shall represent the
characters of a human being.
Sakthi ....the cosmic energy
after another long contemplation
lasting several millennium
............. drew a circle.
Circle has no beginning
and no end.
She said it shall represent the
presence of divine in every human.
Mary ( Mari or Sakthi in Hinduism)
after another very long contemplation
drew two ellipses
(imperfect c
என் மனதில். என் மனதில்
அவள் ஒரு அழகி,
திரை உலகை (50 - 60ல்)
அலங்கரித்த அழகி.
அவளுடைய படங்களில்
கத்திக் குத்து இல்லை,
சண்டைகள் இல்லை.
பாடல்கள் எல்லாம்
" இன்பமான இரவிதுவே...."
போன்ற தெவிட்டாத தேனமுதம்.
அவள் கண்கள்
ஒரு காந்தம்,
அவள் புன்னகை
ஒரு மயக்க மாத்திரை,
அவள் முடி என்னை
கட்டி இழுக்கும் கயிறு.
அவள் அழகோ என்னை
ஒரு ஓவியன் ஆக்கிவிடும்,
என் மனதின் இந்த அழியா
அஜந்தா ஓவியம் யார்?
இந்திய காவியத்தில்
இரு நதிகள்
"கங்கை - ஜமுனா"
இதில் ஒன்றை அவளுக்கு
சூட்டி மகிழுங்கள்
மர்மம் நீங்கிவிடும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
சண்டியூர் கண்ணகி.
என் கண்முன் தெரிவது
எல்லாம்
சண்டியூர் வயல்கள்
அங்கு நான் காண்பது
எல்லாம்
சண்டியூர் கண்ணகியே
வானத்தில் பறந்து செல்லும்
பறவைகளும்
குளத்தில் மீன்பிடிக்கும்
கொக்குகளும்
அவளே
கதிர் சுமந்து தலை குனிந்து
நிற்கும் பயிர்களும்
அவளே
என் வாழ்வில் களை
புடுங்கியவளும்
அவளே
வெற்றிக் கதிர்களை அறுத்து
வழங்கியவளும்
அவளே
ஓடத்தில் என்னை அக்கரைக்கு
அழைத்து செல்பவளும்
அவளே
அக்கரையில் என்னை
வரவேற்க நிற்பவளும்
அவளே
என் மனதை நிரப்பி
நல்லவன் ஆனேன்.
முருகன் வந்தான்
என் மனதில்,
மயிலேறி உழுதான்
என் மனதை.
வள்ளி விதைத்தாள்
நல்லெண்ணெம்.
மாரி ஆனாள்
தெய்வானை.
நல்லவனாய் நான்
வாழ என்று
அமரந்து விட்டான்,
முருகன் என்மனதில்
வள்ளி தெய்வானை
உடன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
பனிப்பொழியும் காலை
அழகான சாலை..!!
தனிமை தலைவிரித்து
ஆடும் பகுதி..!!
மெது மெதுவான
ஓசை எழும்பியது..!!
மாடுகளின் சலங்கைகள்
இதமாய் செவிகளுக்கு..!!
இன்னொரு முறை இக்காட்சி கிடைக்குமோ..!!
அழகிய தருணங்கள்
அவ்வப்போது வருகிறது..!!
அங்கங்கே இதயங்கள் தொலைகிறது என்னிடமிருந்து..!!
அருமையான சூழல்
ஆசை கொண்டேன்..!!
அங்கீகரிக்கப்பட்ட
அடிமை
சீடன்
கொலைகளை
பயமின்றிச் செய்பவன்
வேடன்
கருங் கற்களின்
அழகை சிதைக்கிறான்
சிற்பி
செய்யாத பாவத்திற்காய்
நெருப்பில் வேகுறது
களிமண் பாண்டங்கள்
தூரங்களை
விரட்டிச் செல்கிறது
வண்டிகள்
தன்னையே ஏமாற்றிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறது
ஒப்பாரி
இரவு இதமானது
இதயத்திற்கு சுகமானது
சுற்றும் என் விழியானது
சிறு புன்னகை மலரனாது
அவள் உறங்குவது அழகானது
பேசும் புத்தகம் அவள் மனமானது
நிலவே நீ இங்கு சிறு பிறையானது
நித்தம் வரும் கனவு அவள் ஆனாது
நிலையான காதல் அழியாதது
நீயே என் வாழ்வை
முழுமையாக்கியாது
மிஞ்சியது 2.
பெரியவர் வேதநாயகத்தின் பின்புலம் வறுமை. தன் முயற்சியால் தன்னையும் தன் குடும்பத்தவர்களையும் வாழவைத்து மகிழ்ந்தவர். ஏன் தான் பிறந்து வளர்ந்த ஊரையோ மக்களையோ மறக்காதவர்.
ஊரில் உள்ளபோது நண்பர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு யாரும் இருந்ததில்லை. ஏழ்மையோடு எதுவும் ஒட்டாது. வாழ்வில் வெற்றி நடை போட்ட காலகட்டத்தில் நண்பர்கள் சேர்ந்தார்கள். எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள் அவரை உதாரணம் காட்டி எழுதினார்கள் பேசினார்கள். அவர் எல்லாவற்றையும் புன்புறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
காலம் ஓட அவர்கள் கலைந்தார்கள். முதல் அவரின் அன்பு மனைவி. பின்பு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இப்போ அவருக்கு அவருடைய காய்கறித் தோட்டமே
பொழுது போக்கு. இது அவருக்கு வறுமையிலும் அன்பாக இருந்த அவரின் பெற்றோர்களை ஞாபகப் படுத்தியது. டேய் " வேதம்" வாடா சாப்பிட என்று அவரையும் பக்கத்தில் வைத்து ஏதோ கஞ்சியோ கூழோ அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் தன் தோட்டத்தில் நின்ற கத்தரிக்காய் செடியைப் பார்த்தார். நன்றாகக் காய்த்த அந்த செடி ஏனோ இப்போ அதில் இரண்டே இரண்டு காய்கள்.
அறுக்கப்போனவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இருக்கட்டும் என்று விட்டு விட்டார். அது அவருக்கு அவரோடு மிஞ்சி நிற்கும் இரண்டு நண்பர்களை ஞாபகப் படுத்தியது போலும். ஒருவருடைய பெயர் இறைவன். இவர் அவருக்கு ஞாபகம் வந்த நாள் முதல் வள்ளுவன் ஈரடியை ஞாபகப் படுத்தி நின்றார். மற்றவருடைய பெயர் மனம். இவரும் அவரை விட்டு விலகவே இல்லை. இவர்கள் இருவரும் அவரைத் தனியே விட்டு சென்றிருந்தால் தன் நிலை இப்போ எப்படி இருக்கும் என்று நினைத்தார் போலும். தான் நின்று கொண்டு இருந்த இடத்திலேயே மண்டி இட்டு அன்னையே! என்று அந்த கத்தரிப் பூவை கையால் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். கண்களை கசக்கியபடியே எழுந்து போய் கட்டிலில் படுத்தவர் கண் அயர்ந்துவிட்டார். மதியம் உணவுடன் வந்த அன்னம் வெளியில் நின்றபடியே ஜயா என்று அவரை அழைத்தாள். பதில் இல்லை. எட்டிப் பார்த்தாள். அவர் கட்டிலில் படுத்திருப்பது அவளுக்கு தெரிந்தது. அருகே சென்று பார்த்தாள். அவரின் முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை தெரிந்தது. தான் கட்டி இருந்த சேலைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி அயல் வீட்டுக்காரரை கூப்பிட்டு
சொல்லி விட்டு அன்னம் கிளம்பிவிட்டாள். அவளுக்கு இன்னும் சில வீடுகளுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டிய வேலை இருந்தது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
அழகிய பாப்பாத்தி,
அதன் இறகில் பல வர்ணம்,
பறக்கிறது பார் இறகடித்து, பார்ப்போர் எல்லாம் மனம் மயங்க.
அழகிய கயல்விழியாள், அவள் உடையில் பல வர்ணம்,
ஆடுகிறாள பார் ஆடை அசைத்து,
ஆடவர் எல்லாம் மதி மயங்க.