இ க ஜெயபாலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இ க ஜெயபாலன்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  03-Sep-1948
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2021
பார்த்தவர்கள்:  682
புள்ளி:  353

என்னைப் பற்றி...

சுயசரிதை.rnபிறப்பு மலேசியா.rnஆரம்பக் கல்வியும் குறும்புகளும் யாழ்பாணம் சண்டிலிப்பாய்.rnமேல் படிப்பு + காதல் + திருமணம் + வேலை எல்லாம் வெளியூர். rnவேலை:- ஆராய்ச்சி + கற்பித்தல்.rnமனைவி மலேசிய இந்திய வம்சாவளி. தங்கம் விரும்பாத தங்கம் அவள்.rnபிள்ளைகள் சுயம்வரம் கண்டவர்கள். இப்போ உடல் மலேசியாவிலும் உள்ளம்rnசண்டியூரிலும் என்று வாழ்பவன்.. இதற்கு இடையில் நிலவாய் (இதமாய்) வந்து நிற்பது தான் எழுது.கொம் அவர்களுக்கு மிக்கவும் நன்றி.rnஅந்த நிலவில் நீங்கள் பார்ப்பவர் சண்டியூர் பாலன். முழுப் பெயர் Ramalingam Kandiah Jeyapalan. rnrn"கிறுக்கன் நான்,rnகவிதை என rnஎண்ணி,rnஎழுது.கொம்rnஏற்றுகிறேன்,rnகவிதை எனில்,rnகை தட்டுங்கள்,rn ❌,rnமறந்திடுங்கள.

என் படைப்புகள்
இ க ஜெயபாலன் செய்திகள்
இ க ஜெயபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2025 12:42 pm

இந்தியா... ஹிந்தியா

அம்மா எனக்கு
இந்த பெயர் வேண்டாம்!

அம்மாவின் பெயர்
பூமாதேவி
மகளின் பெயர்
இந்தியா

தேவி சொன்னாள்!
இந்தியா என்றால்
இந்து நதி நாகரீகம்
இந்தியா என்றால்
இந்து மதம்
உன் பெயரில் உனக்கு
பெருமை இல்லையா!

நீ சொல்வது சரி
ஆனால்
யார் சொன்னது
இந்தியா என்றால்
"இ(ஹி)ந்தி". .. என்று?
அதற்கு பதில் சொல்
என்றாள் மகள்.

சண்டியூர் பாலன்.

மேலும்

இ க ஜெயபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2025 9:42 am

இன்று இருப்பவர்!
நாளை...?

ஒரு பரபரப்பான
நாள் கழிந்தது
சீக்கிரம் தூங்க சென்றேன்

பூமித் தாய்
அவசரமாக என்னைக் கடந்து சென்றாள்
என் கட்டில் வழியாக.

கடைசியாக எனக்கு நினைவிருக்கிறது அவளுடைய உறுமல்.

என் கட்டில்?
அது அவளின்
7.4 உறுமலில்
புதைந்து கிடக்கிறது
நானும் தான்.

சண்டியூர் பாலன்.

மேலும்

இ க ஜெயபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2025 7:21 am

படம்.

நான் எடுத்த
படம் அது
நான் எனக்காக
எடுத்த படம் அது.

அதில்
மலைகள் இல்லை
மரங்கள் இல்லை
ஆறு இல்லை
கடல் இல்லை
நிலாவும் இல்லை

அதில்
நகைகள் இல்லை
பட்டு சேலை இல்லை
பங்களோ இல்லை
கார் இல்லை

அதில்
அவள் இருந்தாள்
அழகிய கண்களுடன்
அழகிய புன்னகையுடன்
இன்று காலை விரிந்த
மலரென.

சண்டியூர் பாலன்.

மேலும்

இ க ஜெயபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2025 8:51 am

மனம் பேசியது.

காற்று அடித்தால்
காடு சாயும்
கள் அடித்தால்
கால் சாயும்.

கன்னியர் கண் அடித்தால்?
கன்னியர் கண் அடித்தால்
காளையர் மனம் சாயும் .

சண்டியூர் பாலன்.

மேலும்

இ க ஜெயபாலன் - இ க ஜெயபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2024 10:30 am

வெறியன்

கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு

கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?

இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?

கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.

சண்டியூர் பாலன்.

மேலும்

சகோதரர் ஜீவன் நீங்கள் கூறுவதுபோல் உலகில் நடக்கும் அநியாயங்கள் எல்லாவற்றிற்கும் மனிதர்களே காரணம். கடவுள் இல்லையோ இருக்கிறாரா அது எனக்கு தெரியாது. இந்த கவிதையில் நான் மறைமுகமாக சொல்லவருவது கோவில்கள் கட்டுவதாலோ சடங்குகளாலோ இறைவன் எங்களை காப்பாற்றமாட்டான். மனிதநேயமும் ஒற்றுமையுமே இந்த உலகில் காப்பாற்றும். நான் ஒரு ஆழந்த இறைபக்தன். ஆனால் எந்த சடங்குகளையோ கோவிலுக்கோ போவதில்லை. மனதால் தினம் அன்னையை வழிபடுவேன் 14-Sep-2024 9:30 am
நியாமான கோபம் தோழரே... ஆனால் இந்த கோளாரெல்லாம் தெய்வத்தால் வந்ததோ இல்லை பிசாசினால் வந்ததோ தெரியாது. நான் அறிந்தவரை மனித மிருகங்களினால் வந்தது என்று ஆணித்தரமாக சொல்லுவேன். கண்ணில் தெரியும் சக மனித உயிரை கொல்லும் உரிமை யார் கொடுத்தது? ஏற்றத் தாழ்வுகள் யார் படைத்தது? இப்படி ஒரேயடியாய் தெய்வத்தை குறை கூறமுடியாது. இதில் நம் பங்குதான் அதிகம் என்பது என் கருத்து. இதே கோபம் எனக்கும் இருக்கிறது. தெய்வம் இருக்கிறதா? இல்லையா?.தெரியவில்லை. புரியவில்லை. அன்புடன் சுப.மகேந்திரன். 13-Sep-2024 8:37 pm
இ க ஜெயபாலன் - இ க ஜெயபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2023 7:08 pm

நல்லவன் ஆனேன்.

முருகன் வந்தான்
என் மனதில்,
மயிலேறி உழுதான்
என் மனதை.

வள்ளி விதைத்தாள்
நல்லெண்ணெம்.
மாரி ஆனாள்
தெய்வானை.

நல்லவனாய் நான்
வாழ என்று
அமரந்து விட்டான்,
முருகன் என்மனதில்
வள்ளி தெய்வானை
உடன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

மேலும்

பழனி ராஜன் அவர்கட்கு வணக்கம். எனது நல்லவன் ஆனேன் என்ற கவிதைக்கு நீங்கள் வரைந்த பாராட்டு ( என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை) பாக்கள் படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எனது நன்றிகள் உங்களுக்கு. 28-Jun-2023 12:39 pm
பாலன் அவர்களுக்கு நன்றி குறள் வெண்பா இங்கார் கதைப்பர் இறைபுகழ் பாலனார் இங்குரைத்தார் போற்றுதுயாம் இன்று குறள் venbaar வள்ளிப்பங் கன்தான் வழங்கும் தமிழ்க்கடவுள் அள்ளித் தருவதும் அன்பு வேறென்ன வேண்டும் 28-Jun-2023 12:15 pm
இ க ஜெயபாலன் - பபரமகுரு பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2023 8:56 am

பனிப்பொழியும் காலை
அழகான சாலை..!!

தனிமை தலைவிரித்து
ஆடும் பகுதி..!!

மெது மெதுவான
ஓசை எழும்பியது..!!

மாடுகளின் சலங்கைகள்
இதமாய் செவிகளுக்கு..!!

இன்னொரு முறை இக்காட்சி கிடைக்குமோ..!!

அழகிய தருணங்கள்
அவ்வப்போது வருகிறது..!!

அங்கங்கே இதயங்கள் தொலைகிறது என்னிடமிருந்து..!!

அருமையான சூழல்
ஆசை கொண்டேன்..!!

மேலும்

நன்றி ஐயா 20-Apr-2023 10:49 pm
கிராமம் சமுதாயத்தின் இதயம். அது வேலை செய்தால் தான் நகர (ரக)த்தில் உள்ளவர்களின் நாடி நரம்புகளில் ரத்தம் ( உணவு) ஓடும் ( கிடைக்கும்). இந்த உண்மையை உணர்ந்தால் எல்லோரும் வாழலாம். உங்கள் கவிதையில் காணும் ஏக்கம் இந்த உண்மையை உணர்த்தி நிற்கிறது. 20-Apr-2023 9:08 am
இ க ஜெயபாலன் - ஜவ்ஹர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2023 6:50 am

அங்கீகரிக்கப்பட்ட
அடிமை
சீடன்

கொலைகளை
பயமின்றிச் செய்பவன்
வேடன்

கருங் கற்களின்
அழகை சிதைக்கிறான்
சிற்பி

செய்யாத பாவத்திற்காய்
நெருப்பில் வேகுறது
களிமண் பாண்டங்கள்

தூரங்களை
விரட்டிச் செல்கிறது
வண்டிகள்

தன்னையே ஏமாற்றிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறது
ஒப்பாரி

மேலும்

மிக்க நன்றி தோழமையே 17-Feb-2023 5:05 pm
ஐயா உங்கள் கவிதையை படிக்கும் போது... " உலகம் இதில் அடங்கிது, உண்மையும் பொய்யும்...என்ற படப் பாடல் வரிகளே என் மனதில் ஞாபகம் வந்தது. உங்கள் கவிதை உண்மையை அழகாக சொல்லி நிற்கிறது. அதுவும் ஒப்பாரி பலே பலே. 16-Feb-2023 8:13 am
இ க ஜெயபாலன் - இ க ஜெயபாலன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2021 10:26 am

மிஞ்சியது  2.


பெரியவர் வேதநாயகத்தின் பின்புலம் வறுமை. தன் முயற்சியால் தன்னையும் தன் குடும்பத்தவர்களையும் வாழவைத்து மகிழ்ந்தவர். ஏன் தான் பிறந்து வளர்ந்த ஊரையோ மக்களையோ மறக்காதவர்.

ஊரில் உள்ளபோது நண்பர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு யாரும் இருந்ததில்லை. ஏழ்மையோடு எதுவும் ஒட்டாது. வாழ்வில் வெற்றி நடை போட்ட காலகட்டத்தில் நண்பர்கள் சேர்ந்தார்கள். எழுத்தாளர்கள் அரசியல் வாதிகள் அவரை உதாரணம் காட்டி எழுதினார்கள் பேசினார்கள். அவர் எல்லாவற்றையும் புன்புறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.


காலம் ஓட அவர்கள் கலைந்தார்கள். முதல் அவரின் அன்பு மனைவி. பின்பு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள். இப்போ அவருக்கு அவருடைய காய்கறித் தோட்டமே

பொழுது போக்கு. இது அவருக்கு வறுமையிலும் அன்பாக இருந்த அவரின் பெற்றோர்களை ஞாபகப்   படுத்தியது. டேய் " வேதம்" வாடா சாப்பிட என்று அவரையும் பக்கத்தில் வைத்து ஏதோ கஞ்சியோ கூழோ அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒரு நாள் தன் தோட்டத்தில் நின்ற கத்தரிக்காய் செடியைப் பார்த்தார். நன்றாகக் காய்த்த அந்த செடி ஏனோ இப்போ அதில் இரண்டே இரண்டு காய்கள்.

அறுக்கப்போனவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இருக்கட்டும் என்று விட்டு விட்டார். அது அவருக்கு அவரோடு மிஞ்சி நிற்கும் இரண்டு நண்பர்களை ஞாபகப் படுத்தியது போலும். ஒருவருடைய பெயர் இறைவன். இவர் அவருக்கு ஞாபகம் வந்த நாள் முதல்  வள்ளுவன் ஈரடியை  ஞாபகப் படுத்தி நின்றார். மற்றவருடைய பெயர் மனம். இவரும்  அவரை விட்டு விலகவே இல்லை. இவர்கள் இருவரும் அவரைத் தனியே விட்டு சென்றிருந்தால் தன் நிலை இப்போ எப்படி இருக்கும் என்று நினைத்தார் போலும். தான் நின்று கொண்டு இருந்த இடத்திலேயே மண்டி இட்டு அன்னையே! என்று அந்த கத்தரிப் பூவை கையால் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். கண்களை கசக்கியபடியே எழுந்து போய் கட்டிலில் படுத்தவர் கண் அயர்ந்துவிட்டார்.  மதியம் உணவுடன் வந்த அன்னம் வெளியில் நின்றபடியே ஜயா என்று அவரை அழைத்தாள். பதில் இல்லை. எட்டிப் பார்த்தாள். அவர் கட்டிலில் படுத்திருப்பது அவளுக்கு தெரிந்தது. அருகே சென்று பார்த்தாள். அவரின் முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை தெரிந்தது. தான் கட்டி இருந்த சேலைத் தலைப்பால் கண்களை துடைத்தபடி அயல் வீட்டுக்காரரை கூப்பிட்டு

சொல்லி விட்டு அன்னம் கிளம்பிவிட்டாள். அவளுக்கு இன்னும் சில வீடுகளுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டிய வேலை இருந்தது.


ஆக்கம்

சண்டியூர் பாலன்.

மேலும்

இ க ஜெயபாலன் - இ க ஜெயபாலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2021 10:35 pm

அழகிய பாப்பாத்தி,
அதன் இறகில் பல வர்ணம்,
பறக்கிறது பார் இறகடித்து, பார்ப்போர் எல்லாம் மனம் மயங்க.

அழகிய கயல்விழியாள், அவள் உடையில் பல வர்ணம்,
ஆடுகிறாள பார் ஆடை அசைத்து,
ஆடவர் எல்லாம் மதி மயங்க.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே