வசிகரன்க என்கிற சிவகுமார் க - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : வசிகரன்க என்கிற சிவகுமார் க |
| இடம் | : Hosur |
| பிறந்த தேதி | : 01-Jun-1973 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Apr-2011 |
| பார்த்தவர்கள் | : 1398 |
| புள்ளி | : 239 |
எழுதப் பழகுகிறேன் , எழுதிப் பழகுகிறேன் . உலாப் போகும் நிலாக் காலம் என்னுடைய முதல் கவிதை புத்தக தொகுப்பு . வெளிவந்தது 2012 ஜனவரி திங்களில் . உணர்ச்சிகளை என்னக்கு தெரிந்த தமிழில் அந்த புத்தகத்தில் சொல்லி இருந்தேன் . கவிதை எனக்கு சுவாசம் என்றால் கதை எனக்கு ஒளி .இந்த இரண்டையும் இணைத்தே பயணிக்கிறேன் .என் எழுத்து மீதான உங்கள் கருத்துகள் என்னை மேலும் மெருகேற்றும் .நல்ல அல்லது அல்ல கருத்துக்கள் என்று எதுவாயினும் அது என்னை மேலும் மேலும் மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை . என்னை தொடருங்கள் அதன் மூலம் என்னை மென்மேலும் துலக்குங்கள் . எழுத்தை சுவாசிப்போம் ,எழுத்தாய் வாழ்வோம்,எழுத்தோடு வாழ்வோம் . rnrnrnஇதுவரை நான் எழுதியுள்ள புத்தகங்கள் rnrn 1 . உலாப்போகும் நிலாக்காலம் --௨௦௧௨ ஜனவரி ,நிவேதிதா பதிப்பகம் சென்னை ,சென்னை புத்தக விழாவில் வெளியிடப்பட்டது -- கவிதை தொகுப்பு rnrn2 .இப்படிக்கு "நான்" ஜனவரி 2020 இ-புக் அமேசான் , கவிதை தொகுப்பு . என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு " யாரோ சில மனிதர்கள் " 29th ஏப்ரல் 2020 அன்று வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
என்னுடைய ப்லோக் ஸ்பாட் https://vasikarapriyan.blogspot.com/ , குழலோசை . விவரங்களுக்கு விரிவான ஆக்கங்களுக்கு என் ப்ளாக்கை பின் தொடர்க . நன்றி !
நான் எழுதிய நூல்கள் :
உலாப் போகும் நிலாக் காலம் -- கவிதை தொகுப்பு
இப்படிக்கு நான் -- கவிதை தொகுப்பு
யாரோ சில மனிதர்கள் -- சிறுகதை தொகுப்பு
கருங்கோள்
குறுங்கோள்
கடுங்கோள்
கொடுங்கோள்
உச்சி உடைக்கும்
அச்சம் கொடுக்கும்
எச்சம் கூட
மிச்சம் வைக்காத
நீச்சக்கொள்
குச்சி ஊனும்
வயதிலும்
வச்சு செய்யும்
நச்சுக்கோள்
உச்சிக் கொட்டத்தான்
முடியும்
மெச்ச ஏதுமில்லை
நீள சோதனை
மீளா வேதனை
மாளா தீதினை
தாளா சோர்வினை
தினம்தினம் தந்திடும்
நீலா க் கோள்..
..
எதிரெதிரே தொடரிகள்
எதிரெதிரே அருகருகே
அவனும் அவளும்
காட்சி பிம்பமாயவள்
கண்ணீர் தெப்பமாயவன்
அவனின் நினைவலைகள்
அவளுள் வளர்ப்பிறைகள்
அவளின் உணர்விழைகள்
அவனிதயத்தை துளைத்தன
பல முறைகள்
பெண்ணின் வலிகள்
கண்ணீர் துளிகள்
ஆணின் மௌனம்
ஊமை மொழிகள்
உலவும் புலனம்
நகரும் தொடரிகள்
தளரும் முளரிகள்
தகருமா இடறுகள்
ஆ ..
காயம்
வானத்தின் (ல் )
ஓலம்
கூக்குரல்
கேட்பார்
யார் ..
ஒசோனில்
ஓட்டை
எதிரெதிரே தொடரிகள்
எதிரெதிரே அருகருகே
அவனும் அவளும்
காட்சி பிம்பமாயவள்
கண்ணீர் தெப்பமாயவன்
அவனின் நினைவலைகள்
அவளுள் வளர்ப்பிறைகள்
அவளின் உணர்விழைகள்
அவனிதயத்தை துளைத்தன
பல முறைகள்
பெண்ணின் வலிகள்
கண்ணீர் துளிகள்
ஆணின் மௌனம்
ஊமை மொழிகள்
உலவும் புலனம்
நகரும் தொடரிகள்
தளரும் முளரிகள்
தகருமா இடறுகள்
சமையலறை
சாமியறை
அலமாரி
அடுக்கிய
உடைகள்
வீட்டின்
விட்டங்களிலும்
திட்டுத்திட்டாய்
உன்னினைவுகள்
அம்மா...
நீ ..
என்னைவிட்டு
எங்கேபோனாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீண்டும்
தொலைக்காமலிருக்க
சைவத் திருமுறை பனிரெண்டு என்பது நாமறிந்த செய்தி . அந்த திருமுறைகளின் வரிசை கிரமம் மற்றும் அதன் ஆசிரியர்கள் விவரங்கள் இதோ .
முதல் திருமுறை : தேவாரம் -- ஆசிரியர் -- திருஞானசம்பந்தர் , மொத்தமுள்ள பாடல்கள் 1469
இரண்டாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1331
மூன்றாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருஞானசம்பநதர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1358
நான்காம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1070
ஐந்தாம் திருமுறை -- தேவாரம் ---ஆசிரியர் -- திருநாவுக்கரசர் -- மொத்தமுள்ள பாடல்கள் 1015
ஆறாம் தி
திருமந்திரம் ஒரு வாழ்வியல் நூலாகும் . இதில் கூறப்பட்டுள்ள அளவிற்கு சூட்சும உலக ரகசியங்கள் குறித்த தகவல்கள் வேறு எந்த நூலிலும் இல்லை . சிவயோகம் என்ற புதிய யோகா முறையையே உருவாக்கித்தந்திருக்கிறார் திருமூலர் . திருமந்திரம் அள்ள அள்ள குறையாத ஒரு அமுதசுரபி . வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் ஒரு வாழ்வியல் நூல் . யோக நெறிகளை விளக்கும் யோக சூத்திரம் . தந்திர வழிகளை உணர்த்தும் தந்திர நூல் . சூட்சும செயல்களை கூறும் ஒரு மறை நூல் .
" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லவும்
ஊன் பற்றி நின்ற உணர்வது மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே "
குட்டிப் பெண்ணே ..
சுட்டிப் பெண்ணே ..
சற்று நில்லேன்
என்னை இறுக
கட்டிக் கொள்ளேன் ..
நீ தவழும் அழகு
உன் உமிழும் உதடு
மழலை இதழு - அது
மலரும் உலரும் தமிழு
எல்லாம் அழகோ அழகு ..
இரவு இரவு - அது
தந்த புதுவரவு வரவு
நீ உறவு உறவு
புத்தம் புதுவுறவு உறவு
நிறைவு நிறைவு மனதுக்கு
நிறைய நிறைவு நிறைவு
பருகு பருகு - மழலை
இன்பம் பருகு பருகு
பழகு பழகு - மகளேநீ
அழகு அழகு - உந்தன்
இதழு இதழு அதுபேசும்
தமிழு தமிழு - பார்க்கும்
இதயத்தில் பழுது பழுது ..
பிள்ளைக்கனி அமுது அமுது
அதை தினம் பருகினால்
இல்லை பிணி - இனி
நல்ல கனி - அடிமனதில்
நனியது அழகுக்கு அணி ..
தமிழ் போன்று வளமிக்க பழமையான வாழும் மொழி வேறொன்று இருக்கும் என்று நான் நம்பவில்லை . லட்சக்கணக்கான சொற்களை கொண்ட தமிழ் மொழியின் பல ஆயிரக்கணக்கான அருமையான வாழ்த்தைகளை நாம் இன்று பயன்படுத்தவில்லை அல்லது அடுத்ததலைமுறைக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம் என்பது வேதனையான ஒரு செய்தி . வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் பேசுங்கள் , அவர்களுக்கு தமிழ் வார்த்தைகளை தமிழின் பெருமையை , தாய் மொழியின் இன்றியமையாமையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக்கொண்டே இருங்கள் . மற்ற மொழிகளை கற்பதில் எந்த தவறும் இல்லை , அதே நேரத்தில் தமிழர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான எல்லா செயல்களும் தமிழில் தான் இருக்க வேண்டும
தொல்காப்பியத்தில் , தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , எத்தனை வகை பேச்சுகளை குறிப்பிடுகிறார் என்பதை கீழே பாருங்கள் .
பேசு ( Speak )
பகர் (speak with data )
செப்பு (speak with answer )
கூறு ( speak categorically )
உரை ( speak meaningfully )
நவில் ( speak rhymingly )
இயம்பு ( speak musically )
பறை ( speak to reveal )
சாற்று ( speak to declare )
நுவல் ( speak with introduction )
ஓது (speak to recite )
கழறு ( speak with censure )
கரை ( speak with calling )
விளிம்பு ( speak with a message )
தமிழ் மொழியின் சொல்லாக்கங்கள் -- ச
தற்கால தமிழ்ப் படைப்புலகின் தலை சிறந்த எழுத்தாளர் திரு எஸ் ரா . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .
சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது .
வாழ்க்கைக் குறிப்பு :
விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணற்றை சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி என்போராவர் . இவரது தந்தை வழி தாத்தா திராவிட
நட்பென்ற ஒன்று அதற்கு,
விருப்பில்லை வெறுப்பில்லை
வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்லை
எனக்கில்லை உனக்கில்லை
என்ற கணக்கு அதற்கில்லை
கட்டியணைக்கலாம் நண்பனோடு
கன்னம் தொட்டு உரசலாம்
தோள் தட்டி பேசலாம்
துன்பந்தனை கொட்டி யழலாம்
ஆறுதல் தேறுதல் பெறலாம்
பட்டுவிடாத மொட்டை மரமொன்று
பற்றுகொண்டு பல்லாண்டு கழித்து
மொட்டு விடலாம் மலரும் வரலாம்
கனியும் தரலாம் கூடுதல் பலமும் பெறலாம்
அரிய வரமென்பது நட்பு
அதை தொடர்வதில் எதுதப்பு
நட்பு என்பது கற்பு
உள்ளார்ந்த உள்ளங்களின் தொகுப்பு
நெஞ்சமும் நெஞ்சமுந்தனே அதனுருப்பு
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தானே
அதன் உயிர்ப்பு
இறப்பு என்ன