Narthani 9 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Narthani 9 |
இடம் | : Toronto ,Ontario |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 465 |
புள்ளி | : 196 |
தடுமாறி எழு! தத்தி நட! இடறி விழு! மீண்டும் எழு! நிலை நில்! உளம் உந்தப் பற! உயர உயர ஊர்! புவியும் வானும் ஆழ ஆள்! மிதப்பில் மீள்! உலகை உன் விழி அலகில் அளக்க விரும்பும் சகி
நான்.
நர்த்தனி
முன்னிரவு 6
…………………
இருள் சூழ்ந்த தன்னுலகை கைகளினால் துழாவிய படி அவள் நின்றிருந்தாள்.
அவளது மலைப்பு எதுவென்றால்; இன்னும் தான் ஆதாரம் பற்றி நிற்கின்றேனா இல்லை மிதக்கின்றேனா என்பதுதான்.
கும்மிருட்டில் இரவுப் பூச்சிகளினதும் வண்டினங்களினதும் இரைச்சல் கேட்கத் தொடங்கின.
நொடிகள் நகரத் தொடங்கின.
நகர நகர… அவை பேரிரைச்சல் ஆகியதை உணர்ந்தாள். இடையிடையே தவளைகளின் பாய்ச்சல் சத்தம் ‘கிளக் கிளக்’க்கென. ஓரடி கூட நகர விருப்பின்றி மிரண்டு நின்றிருந்தாள்.
‘எதற்காக இத்தனை தூரம் வந்தேன்….?’
‘புத்தகத்திலுள்ள கதையை எதற்கு நிஜத்தில் தேட முயற்சித்தேன்?’
‘கண்ணுக்கெட்டிய சித்திரமான அக்குடிலையும் மணல் மேட்ட
அந்திப் பந்தல்-5
.......................
தாத்தன் வந்த சுவடு தெரியாமல் வந்து நிற்க கதையின்று மீண்டவளாய்ப் புன்னகைப் பூவொன்றைப் பூத்தவளாய் நின்றிருந்தாள்.
வந்தவர் கையலம்புவதற்காய் ஆற்றில் இறங்க தானும் அவருடன் ஆற்று நீரில் கால் படர்ந்தாள். சில்லென்ற குளிர்நீர் தரும் ஸ்பரிசம் மனம் வரை புத்தூக்கம் கொடுக்க கதை தந்த சோர்வு நீங்கப் பெற்றவளாய் அவருடனேயே மறு கரையேறி முன் பரந்து விரிந்து கிடந்த அசையும் பச்சை நெல்நாற்று சதுர வரவைகளாலான வயல்வெளியை தென்றல் தழுவ ரசித்து நின்றாள்.
சூரியன் மேற்கில் தஞ்சம் புகுந்து தன் ஒளியின் தீவிரத்தை அங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்தான். நாற்றிலிருந்த கண்கள் மெல்ல நேர் நோ
அந்திப் பந்தல்-4
.......................
பழைய புத்தக அடுக்குகளை ஆராய்வதில் நாட்டமுடையவள் அவள். அன்றும் அப்படித்தான்.
பரண் மேலிருந்த பெட்டியொன்றை யாரோ வேறேதோ எடுக்க வந்து கீழிறக்கி, மீண்டும் மேலேற்ற மறந்து விட்டுப் போயிருந்தனர். அதன் கனமும் அதில் எழுதியிருந்த அடையாளமும் அது புத்தகப்பெட்டி தான் என சிறு உற்சாகத்தைத் தர அதைத் திறந்து பார்க்க ஆர்வம் மேலிட்டது.
அதன் தடித்த காகித அட்டையாலான மேற்பாகத்தை மெதுவாகப் பிரித்தாள். அட்டை உளுத்துப் போயிருந்தது திறக்கவும் சரசரவென மாபோல உதிர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது.
சின்ன சிலந்தி ஒன்று விருட்டென வெளிவந்து ஓடி மறைந்தது. சற்றுப் பயமாகவே இருந்தது அவளுக
நற்செயல்
காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.
உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்
ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ
உன் உள்ளம் கண்டேன் !
புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !
சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!
ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!
-யாதுமறியான்.
துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.