Narthani 9 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Narthani 9 |
இடம் | : Toronto ,Ontario |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 439 |
புள்ளி | : 154 |
ஓயாத மணிக்கூண்டாய்
உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறாய்
அகமுடைத்தால்
அனைத்தும் புரியுமென்று
அலைந்து திரிந்ததில்
அரைவாசியாகிப் போனது வாழ்வு.
நர்த்தனி
உன் ஒருபக்க நியாயங்களும்
இருபக்கக் கதவடைப்பும்
நீங்குவதற்காக நீ சொன்ன அபாண்டங்களும்
வாழ்வில் நீ எங்கு சென்றாலும் மன்னிப்பதற்கானவையல்ல.
எழுதிச் சிரிக்கையில்
எழுதாச் சறுகல் எதிர் நின்று சிரிக்கிறது
சிரிக்கவியலா சறுக்கலில்லா ஒன்றை எழுதென்று.
நர்த்தனி
துன்பியலுக்கு
நகுதலும்
மகிழ்வுக்கு
கடுங்கோபமும்
ஹாஸ்யத்துக்கு
கண்ணீரையும் பரிசளிக்கும்
உங்களுக்கு என் வெறுப்பின் (அருவருப்பபின்) சாயை புரியாதது ஒன்றும்
வியப்பளிக்கவில்லை எனக்கு.
நர்த்தனி
உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்
ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ
உன் உள்ளம் கண்டேன் !
புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !
சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!
ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!
-யாதுமறியான்.
இருளில்,நிழலை தேடும்,நிலை இல்லா சிந்தனையில்,நாட்களை,எண்ணிக்கொண்டே,சீரற்ற பாதை எங்கும்,வலியை மறந்த,பாதங்களின்,நடைபயணம்...,
துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.