Narthani 9 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Narthani 9 |
இடம் | : Toronto ,Ontario |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 554 |
புள்ளி | : 220 |
எங்கும் கொஞ்சம் இருக்கிறேன்.
எங்கும் எல்லாமாக இல்லாதிருக்கிறேன்
நான்.
தோள் வரை புரண்டு காற்றில் பறந்த வண்ணம் இருக்கும் சுருள் கேசம். கைவேலையின் விசையினாலான காற்றின் சிறகடிப்பாய் அதனை உணரத் தலைப்படுகிறேன். இன்றும்...
மரம் சீவிக்கொண்டிருக்கும் அந்த மனிதரைத் தான் சொல்கிறேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தச்சு வேலைக்கு வருபவர் அவர்.
முள் வேலி தாண்டிய பகுதிக்கு இடையே ஒரு திறப்பு ; திறந்த இடைவெளி. சிறுவயதில்
அதனூடு நான் பக்கத்து வீட்டு உறவினர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அந்த வாயிலின் அருகே கிளைபரப்பிய அன்னமின்னா மரமொன்று அப்படியே சற்று மணலில் கால் புதைய நடந்து போனால் ஆறடி உயரத்தில் ஒரு தென்னைமரம். அவ்வீட்டின் அருகே தகரத்தினால் ஆன ஒரு சரிவான சிறிய இ
ஏதோவொரு சிறு நிகழ்வு ஏதோவொன்றை ஞாபகமூட்டிவிடுகின்றது.
இன்று தீர்ந்து போயிருந்த தக்காளி 'சல்சா' போத்தல் சிங்கில் ஊற வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக தீர்ந்து போய்விட்ட உணவுக் கொள்கலன்களை எறிந்து விடுவது என் வழக்கம். இன்று ஊற வைத்திருந்த இந்தப் போத்தலை நான் கழுவிக் கொண்டிருந்தேன். காரணம் அது அளவில் சிறியதும் கையடக்கமானதாக இருந்தது அதுமட்டுமல்ல அது கண்ணாடியால் ஆனது.
சிறிய கண்ணாடியாலான பொருட்கள் என் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து விடுபவை. அவற்றை உபயோகிக்கிறேனோ இல்லையோ அவற்றைச் சுத்திகரித்து வைத்துக் கொள்வேன்.முன்னரும் இது போன்றே குங்குமப்பூ வாங்கிய சின்னஞ்சிறு தூய கண்ணாடிக் கொள்கலன் ஒன்று;
பார்த
தேர் பார்க்கப் போய்விடும் ஒரு வீட்டில், ஒரு சிறுமி வீட்டிலுள்ள ஒரு வயதான மூதாட்டியுடன் தனித்து இருக்கின்றாள். அவள் அவ்வீட்டில் வேலைக்காக அமர்த்தப்படிருக்கின்ற பெண், அவள் மனப்பார்வை வழி விரிகின்றது தேரோட்டம். அவள் அனுபவத்தில் அறிந்த தேரோட்டத்தை அவள் அன்றாடத்தில் செய்ய நியமித்திருக்கும் வேலைகளினூடே சிலாகித்துக் கொள்கிறாள்.
இருந்தும் சிறுமியவள் தேரோட்டம் இம்முறை பார்க்கவில்லையே எனத் தவிக்கின்றது மனது. அன்றாட வேலைகளினூடே தந்தையை ஒருமுறை சாலை வழியூடாகவேனும் கண்டுவிடத் துடிக்கும் அவள் ஏக்கம் மனதில் ஈரம். அதற்கு மருந்து தடவுகின்றது அவ்வீட்டின் கன்றுக்குட்டியும் அவள் கால்களைக் குளிர்விக்கும் தொழுவத
நற்செயல்
காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.
உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்
ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ
உன் உள்ளம் கண்டேன் !
புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !
சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!
ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!
-யாதுமறியான்.
துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.