Narthani 9 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Narthani 9
இடம்:  Toronto ,Ontario
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Mar-2021
பார்த்தவர்கள்:  560
புள்ளி:  223

என் படைப்புகள்
Narthani 9 செய்திகள்
Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2025 11:59 pm

பின்னிப் பிணைந்திருப்பதைப் பிரிப்பது கடினம்;
ஒரு முனை பிரிக்க மறுமுனை சிக்கிக் கொள்ளும்.

சிக்கல் பிரிக்க காலமும் நேரமும் பொறுமையும் அவசியம்.
அவை கைகூடும் நேரம்
அனைத்தும் பிரிந்து நேர்வழி ஆகும்.

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2025 7:02 pm

உணரும் இசை இறை.

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2025 1:15 pm

தினம்... ஒன்றைத் தொலைத்து
தேடி அலைபவனே மனிதன்
சமயங்களில் தன்னையே தான் கூட

தொலைத்தது மீளக் கிடைப்பதென்பது
வரம் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கூட

ஆனால்...

கிடைக்காவிடின்
கடந்துவிடும் திடம் என்பது
நிலையா அதிர்ஷடத்தை விட
உயர்வு.

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2025 12:18 am

எங்கும் கொஞ்சம் இருக்கிறேன்.
எங்கும் எல்லாமாக இல்லாதிருக்கிறேன்
நான்.

மேலும்

Narthani 9 - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2024 10:06 am

நற்செயல்

காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.

மேலும்

நன்று! 11-Mar-2024 4:31 am
Narthani 9 - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2022 2:22 am

உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்

மேலும்

மிக்க நன்றி 06-Oct-2022 2:18 am
அருமை! 05-Oct-2022 8:40 am
Narthani 9 - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2022 2:02 am

ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ

மேலும்

நன்றி 17-Aug-2022 2:16 am
நன்று! 16-Aug-2022 8:13 pm
Narthani 9 - யாதுமறியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2022 9:18 am

உன் உள்ளம் கண்டேன் !

புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !

சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!

ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!

-யாதுமறியான்.

மேலும்

நன்று! 02-Jun-2022 4:02 am
Narthani 9 - Narthani 9 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2021 4:58 pm

துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.

மேலும்

நன்றி 💐 21-Mar-2021 8:48 am
சிறப்பான சிந்தனை... 20-Mar-2021 2:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே