Narthani 9 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Narthani 9 |
இடம் | : Toronto ,Ontario |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 529 |
புள்ளி | : 214 |
என் பிடிப்புகள்
உங்கள் பிடிப்பற்றவையில் உங்கள் உவப்புகள்
என் உவப்பற்றவையில்
இதில்...
நீங்களும் நானும் ஒன்றென்கிறீர்கள்!
பசியற்றுப் போனது
பாலையில்
காளை மனதும்!
ஞாபகத்துளி!
🌻🌻🌻🌻🌻
வான் பிளந்து தார் உருக்கும் உச்சி வெயில் நண்பகல்.
ஆளரவமற்ற வீதி.
காற்றின்றின்றி அசைவற்று நின்றிருந்த இருபக்க நிழல்தரு மரங்கள்.
நிசப்தம் கிழித்து நடக்கின்ற என் பாதங்களின் ஓசை கேட்டபடி விரைந்து கொண்டிருந்தேன் வீடு நோக்கி.
வெயிலின் தன்மைக்கேற்ப, தண்மைக்காகவே அணிந்திருந்திருந்தது போன்றே கரும் நீல ஸ்கேட் அண்ட் பிளவுஸ்.
அடர்ந்து நீண்ட கூந்தலை ஒற்றைப் பின்னலிட்டு முன்விட்டிருந்தேன்.
தொடைவரை நீண்டு படிந்திருந்த அப்பின்னலின் பாரத்தை தூக்கிச் சுமப்பது கூட என் அந்நாளைய ‘ராஸ்க்’இல் ஒன்றாக இருந்தது.
கால்களில் எனக்குப் பிடித்த கறுப்பில் பொன்னிற வார் கொண்ட சிறு உயரங்கொண
நற்செயல்
காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.
உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்
ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ
உன் உள்ளம் கண்டேன் !
புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !
சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!
ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!
-யாதுமறியான்.
துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.