கே என் ராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கே என் ராம்
இடம்:  டல்லாஸ்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  315

என்னைப் பற்றி...

அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.

என் படைப்புகள்
கே என் ராம் செய்திகள்
கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2024 10:08 am

குறள் வழி நடப்போம்

என் பெயர் விஸ்வநாதன்.என்னை எல்லோரும் விசு என அழைப்பார்கள்.
என் தந்தையின் கிராமம் சுந்தரபாண்டியம்.
நான் பட்டம் பெற்றது மதுரையில் அந்த நகரிலேயே ஒரு பெயர் பெற்ற அலுவலகத்தில் மேல் அதிகாரியாக வேலை செய்ப்பவன். எனக்கு எப்பொழுதும் நகரத்தில் படித்தவர்களைக் காட்டிலும் கிராமத்தில் இருக்கும் எளியவர்களை பார்த்து பரவசம் அடைவதில் தான் இன்பம்.
என் தந்தை விட்டு சென்ற வீட்டை சரி செய்து நாகரிகமாக்கி பூட்டி வைத்து ஒரு வேலைக்காரனையும் அதை சுத்தம் செய்ய வைத்திருக்கிறேன். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என் தந்தை வாழ்ந்த

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2024 10:06 am

நற்செயல்

காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.

மேலும்

நன்று! 11-Mar-2024 4:31 am
கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2024 9:01 am

மனதில் உறுதி வேண்டும்

உறுதி இருக்கும் மனதில் உண்மை இருக்கும்
உண்மை இருக்கும் உள்ளத்தில் உரிமை இருக்கும்
உரிமை இருக்கும் மனதினில் கடமை இருக்கும்
கடமை இருக்கும் இடத்தில் கண்ணியம் இருக்கும்
கண்ணியம் இருக்கும் இடம்முழுதும் இனிமை இருக்கும்
இனிமை கொண்ட இதயத்தில் கருத்துக்கள் தோன்றும்
கருத்துக்கள் தோன்றும் இடம் கனவுகளுக்கு இடம் கொடுக்கும்
கனவுகள் நிறைவடைந்தால் இன்பங்கள் பிறக்கும்
இன்பங்கள் உருவானால் இனிய வாக்குகள் வளரும்
இனிய வாக்குகள் வளர்ந்தால் மகிழ்ச்சி பொங்கிடும்
மகிழ்ச்சி பொங்கிட வாழ்க்கை நலமாகும்
வாழ்க்கை நலமாகிட விடுதலையும் வந்திடும்
இதனால் மனதில் உறுதி வேண்டும்

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2024 1:16 pm

மகாத்மாவை நினைப்போம்

வட்ட கண்ணாடிக்கு பின் வலிமையான கண்களடா
வாய்மையே வெல்லும் என்று உரைத்த வாய்களடா
வழங்கிய அடிகளை அகிம்சையால் வென்றவரடா
வளைந்த தடியும் கதர் ஆடை ராட்டினமும் வைத்தவரடா
வந்தே மாதரம் என்று கூறி எழுச்சியை செய்தவரடா
வர்த்தகம் செய்ய வந்து நாட்டை பிடித்தவரை விரட்ட
வெள்ளையனே வெளியேறு எனக் கோஷமிட்டு மிரட்ட
அடிபணிந்து அவனும் வெளியேறிட சுதந்திரம் பெற்று தந்து
நம்மையெல்லாம் நம்மை நாமே அரசாள வைத்து இம்மண்ணில்
புகழோடு வாழ வழி செய்த அந்த மகானை இன்னாளில்
நினைவு கூர்ந்து நெஞ்சில் இருத்தி நன்றியை நவில்வோம்

மேலும்

கே என் ராம் - செநா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2017 12:25 pm

உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 06-Dec-2017 10:26 pm
ஒருதலைக் காதலில், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது, ஒரு வித உணர்ச்சியை,வலியை உள்ளுக்குள் தந்து கொண்டே இருக்கும். அருமையான வரிகள்... தோழா 06-Dec-2017 9:50 am
கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே........ 22-Nov-2017 2:58 pm
ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ... அருமையான கவிதை 22-Nov-2017 2:51 pm
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 1:49 pm

அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...

அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...

பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.

மேலும்

மீண்டும் படிக்க தூண்டும் ஒரு நல்ல நடை வாழ்க கற்பனைகள் மீண்டும் ஒரு கதை வரும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:05 pm
மிக்க நன்றி சார், தட்டச்சுப்பிழை திருத்த உதவியதற்கு கூடுதல் நன்றி! 28-Sep-2015 4:42 pm
இந்த கதைப் பின்னல் தங்கட்கு கை வந்த கலை ஆகி விட்டது . நானும் "சைன்ஸ் பிக்சன்" எழுதலாம் என இருந்தபோது தங்கள் கதையைப் பார்த்து அடக்கி கொண்டென் . ஆராய்ச்சி எனும் இடங்களில் அராய்ச்சி என உள்ளது தட்டச்சு பிழை திருத்தலாம். வாழ்த்துக்கள் . . 28-Sep-2015 3:57 pm
மிக்க நன்றி திரு தர்மன்... தங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், இனிய கருத்துக்கும்..... 28-Sep-2015 7:47 am
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 1:33 pm

6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"

கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..

அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome

மேலும்

நன்றி அய்யா! (எங்க மழை....? எங்க மழை....? எங்கே மழை...?) 27-Oct-2015 12:06 pm
ம்ம்ம் ! நன்றாக நனைந்தேன் 27-Oct-2015 11:57 am
மிகவும் அருமை . கிராமத்தை கண் முன் நிறுத்திய பெருமை உமக்கு வாழ்க நின் தொண்டு தொடர்க .. கே என் ராமசந்திரன் 18-Oct-2015 9:02 pm
மிக்க நன்றி....! ஸ்ஸ்ஸ் ..... அந்த எழுத்துப் பிழைகள்.... என் பார்வையில் இருந்து எப்படித் தப்புகின்றன......! நன்றி.... 07-Sep-2015 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரமணி

ரமணி

chennai
மேலே