கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 588 |
புள்ளி | : 382 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
உறவு வளர சந்தேகத்தை தவிர்ப்போம்
உறவு என்பது ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கையிலே தான் உறுதியாகிறது. பல வேளைகளில் இந்த நம்பிக்கை சந்தேகத்தால் சிதைகிறது. சில நேரங்களில் தங்கள் துணை மீது கொண்ட நம்பிக்கை உடைந்து துணையைக் கொல்ல வேண்டும் என்ற அளவிற்கு சென்றுவிடுகிறது. இந்த சந்தேகத்தை விட்டு வைக்காமல் நன்றாக யோசித்து ஒரு நல்ல முடிவு எடுப்பது அவசியம். உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பிறருக்காக என்று வாழ்பவர்கள் உண்டு அவர்களது செயல்கள் சில நேரத்தில் நமக்கு சிறிய சந்தேகத்தைக் கிளப்பும் அதை விசாரிக்கையில்
நில அதிர்ச்சி பூகம்பம்
பூமலரும் செடிகள் கொண்ட பூமிதனில்
பூகம்பம் ஒன்று கடுமையாக வந்ததம்மா
பூமகளும் உடலெல்லாம் தான் சிலிர்க்க
பூமியும் பாளமாகி விரிந்து பிளந்தம்மா
பூவுலகமெல்லாம் திகிலோடு பார்த்திருக்க
பொன்னியவள் தான் உரக்கச் சிரிக்க
வாழ்க்கையின் முடிவுதனை அச்சிரிப்பு
வரும் துயரின் வரைபடத்தை வடிவமைக்க
காலன் அவன் களியாட்டம் அங்கு அரங்கேற
கண்ணீருடன் தன் அகமனைத்தும் நடுங்குதம்மா
நான் கொண்டிருந்த என் அகந்தையும் அழிந்ததம்மா
பொங்கும் கடல் நுரைபோல் துயரும் நெஞ்சினிலே
அனல்போல வெடிக்குதம்மா ஆவியும் துடிக்குதம்மா
நெஞ்சம் சங்கமித்த நேரம்
ஹரிஹரனும் தமிரரசனும் வசித்து வாழ்ந்தது புளியங்குடி என்ற ஒரு சிறிய ஊரில். இருவரும் ஒரே தெருவில் சில அடிகள் வித்தியாசத்தில் உள்ள வீடுகளில். இருவரின் குடும்பமும் நெருக்கம் அடைத்தது இவர்களால் தான்.
அரசியின் மடியில் கிடைக்கும் ஹரியை பார்க்க முடியாமல் கண்களை மூடிய பொழுது கண்களுக்குள் பழைய ஞாபகங்கள் திரைப்படம் போல் ஓடின.
"நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்." பள்ளிக்கூட வாசலில் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு அழுத அந்த சின்னப் பிள்ளை ஹரியின் நினைவு பொங்கிவர துக்கமான அந்த வேளையிலும் அரசியின் இதழ்களில் புன்னகை வந்தது
அன்னையை வணங்குவோம்
அன்பையும் அறிவையும் எனக்கு கொடுத்தவள்
ஆசையோடு ஆகாரத்தை எனக்கு ஊட்டியவள்
இன்பத்தைத் தந்து இன்னல்களை வைத்துக் கொண்டவள்
ஈடேதும் கேட்காமல் தன்னலத்தை பார்க்காமல் வாழ்ந்தவள்
உயிரினும் மேலாக என்னைக் கருதி அதனால் மகிழ்ந்தவள் ஊரெல்லாம் வியக்கும் வகையில் என்னை வளர்த்தவள்
என் வளர்ச்சியில் என்றும் தன்னை வருத்திக் கொண்டவள்
ஏமாற்றங்களை தள்ளி விட்டு என்னலத்தையே விரும்பியவள்
ஐம்புலனையும் அடக்கி எனக்காக இறைவனை வேண்டியவள்
ஒன்றாக வாழ்ந்து உயிரோடு கலந்து என்னையே நினைப்பவள்
ஓயாமல் ஓசையின்றி உழைத்து உடலை வருத்தி வாழ்பவள்
ஒளவையை போல் ஐங்கரனை வேண்டி நான் நலமோடு
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome