கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 585 |
புள்ளி | : 378 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே ஆண்டவனுக்கு கண் இல்லையோ என நினைத்து நம்பிக்கை இழக்காதீர்கள்
நாங்கள் எல்லோரும் வாழும் கிராமம் ஒரு அமைதி நிறைந்த இடம்.அதில் குடியிருக்கும் மக்கள் எல்லோரும் விவசாயத்தை நம்பி வாழ்கிறவர்கள்.அங்குள்ள பலர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து முதலாளியிடம் சென்று அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். சிலர் தங்களது நிலத்திலேயே பயிர் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தனர். எல்லோரும் கூடி பேசுவது ஒன்று தான் அக்கிரமம் செய்பவர்கள் மிக நன்றாக வாழ்கிறார்கள் கடவுளுக்கு கண்ணில்லையா இவர்களை தண்டிக்காமல் ஏன் விட்டு
நற்செயல்
காலம் கடந்ததால் அழியாதது
கண்ணீர் வழிந்ததால் கரையாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
வரம்பினால் அடக்க முடியாதது
உள்ளத்தால் மட்டுமே அறியப்படுவது
உண்மை அன்பினால் உருவாகியது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் என்றும் போற்றப்படுவது
காலமறிந்து நாம் செய்யும் நற்செயலே.
வாழ்க்கை ஒரு முடிவில்லாத சீரியல்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரள நாட்டில் பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி கிராமத்தில். அங்குள்ளவர்கள் யாவரும் அங்குள்ள நதியில் நீராடி கோவிலுக்கு சென்று காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்து குழந்தைகளையும் அதே வழியில் வளர்த்ததால் என் குழந்தை பருவம் தெய்வ பக்தியால் நிறைந்து இருந்தது. என் அப்பா வருடம் தோறும் என்னை சபரிமலைக்கு அழைத்து செல்வார். அப்பா அங்குள்ள கிராம அதிகாரி ஆகவே அவருக்கு எங்கள் கிராமத்திலும் சுற்று புறம் உள்ள கிராமங்களிலும் மதிப்பு அதிகம்.
நான் பள்ளியில் சேர்த்து படிக்க செல்லுகையில் அங்குள்ள ஆசிரியர்களும் என்
நம்பிக்கை மாறும் நேரம்
சிதம்பரத்துக்கும் சாரதாவிற்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆனபின் குழந்தை ராம் பிறந்தான்.அவர்களது செல்ல மகனாக அவன் வளர்ந்து வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.படிக்கும் வயது வந்தவுடன் அவன் ஒரு பள்ளியில் சேர்ந்து முதல் ஐந்து வகுப்புகளை முடித்ததும்,அவனைச் சிதம்பரம் ஒரு பெயர்பெற்ற பள்ளியில் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும் வகுப்பில் சேர்த்தார். அவனும் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்தான். பின் சென்னையில் பிரபலமான கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பை தொடர்ந்து பட்டமும் பெற்றான்.
ராம், பட்டப் படிப்பை முடித்த பின் மேலும் ப
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome