கே என் ராம் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 537 |
புள்ளி | : 334 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
கவியரசரை கண்ணதாசனைக் கொண்டாடுவோம்
கண்ணதாசன் பாடல்களைக் கேட்டுகண்கள் மூடி ரசிக்கையில்
கண்ணீரை வரவழைத்து நெஞ்சினுள் உணர்வைத் தூண்டியதே
காலம் செல்வது அறியாமல் அக்கவிதைகள் இதயத்தை வருடிட
கண்ணியமாக கவி காதலையும் கடவுளையும் வர்ணித்ததை
காதில் கேட்டு மனதில் இருத்தி பாராட்டும் வேளையில்
கற்பனைகள் பல மனதில் தோன்றி கண்முன்னே ஆட்டம் போட
காண்பது நிஜமோ நிழலோ என்று எண்ணி நெஞ்சம் துடித்திட
கனவுதான் என்று உள்மனம் கூறிடும் அந்த சில நிமிடங்களில்
கனவு அளித்த அந்த சுகத்தை அனுபவித்து உள்ளன்போடு
கவியரசரை எண்ணி உங்கள் இதயம் துடிக்காமல் இருக்கலாம்
காலமெல்லாம் எங்கள் இதயம்
தனியே ஒரு ரயில் பயணம்
என் பெயர் சங்கரன் என் அப்பா சிதம்பரத்தில் அரிசி வியாபாரம் செய்து வந்தார்.அரிசி வேம்பு ஐயர்
என்றால் எல்லோருக்கும் நன்றாக தெரியும். விவசாயிகள் யாவரும் அவரிடம் வந்து அவரது
அறிவுரைகளைக் கேட்டு அதன் படி என்ன அரிசி வகை பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்து
கொண்டு அதை அறுவிடை செய்த உடனே அப்பாவிடம் வந்து மொத்தமாகக் கொடுத்து விடுவார்கள்.
இதனால் அப்பாவிடம் பல வகையான அரிசி வகைகள் கிடைக்கும்.சிதம்பரத்தில் மட்டும் இல்லாமல்
கேரளாவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பல வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள்.
அப்பாவுடைய பால்ய நண்பர் ஆறுமுகம் மதுரையில் இருந்து சிதம்பரம் வந்து எங்கள
கொடுத்தவனை மறந்தோமே
நாம் கடவுளை காண்பது கோவில் கல்லிலும்
நாம் கவலையை முழுதும் சுமப்பது மனதிலும்
நாம் காண்பவை யாவும் எடுப்பது கையிலும்
நாம் காண்பவர் வியக்க அணிவது உடலிலும்
நாம் காசு வேண்டி வாங்குவது கடன்களிலும்
நாம் கடமை என நேரம் கழிப்பது வேலையிலும்
நாம் காலப்பருவம் கண்டு உடல் மறைப்பது உடையிலும்
நாம் கள்வர் பயத்தால் பொருள் வைப்பது வங்கியிலும்
நாம் கல்யாண பந்தத்தால் இணைவது குடும்பத்திலும்
நாம் அன்பு செலுத்தி மதி மயங்குவது குழந்தையிலும்
நாம் வாழும் நாள் முழுதும் நமது கவனத்தை செலுத்தி விட்டு
நாம் அதைக் கொடுத்த அந்த இறைவனை நினைக்க மறந்தோமே
-- அழகின் துயில்
காரிருள் கண் மறைக்க
கண்மை தான் களை இழக்க
கரு விழிகள் கனா காண
கண்ணிமை தான் தலை சாய
கன்னியவள் துயில் கொள்ள
கார் முகிலும் திரை விலக்க
தண்ணிலவும் வந்ததம்மா
தன் அழகை தான் இழந்தம்மா
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome