கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 355 |
புள்ளி | : 218 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
உன் அளவில்லாத அன்பு
தூயவளே நீ வழங்கும் உண்மை அன்பை
துயிலும் வேளையிலும் உணர்கிறேன்
இப்பந்தம் எத்தனை ஜென்மம் கடந்து
இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்று
மனதில் நினைத்துப் பார்த்து வியக்கிறேன்
கண்முன் இருக்கையில் நீ அமரும் நேரம்
தனிமையை மறந்து இனிமையை உணர
உள்ளத்தில் எப்பொழுதும் இன்பம் நிறைந்து
உரிமை கொண்டு உன்னை கடிந்து பேசிட
உன் மனம் புண்பட்டு என்னைக் கோபிக்க
கோபத்திலும் உன் அன்பு வெளிப்படுகிறது
முற்றிய கோபத்தில் தீயாக நானும் எரிந்திட
எல்லாம் முடிந்ததோ என உள்மனம் தவிக்க
என்றும் போல் சகஜமாய் நீ என்னை அழைக்க
இனியவளின் அன்பை மீண்டும் உணர மனமும்
அமைதியாகி ஆசுவாசத்துடன
இனிய நினைவுகள்
துபாய் நகரில் தூக்கம் விழித்த அதிகாலை வேளை
தும்பைப்பூ இட்லியோடு பொடியையும் சேர்த்து
தூய தண்ணீரைத் துணைக்கு வைத்துக் கொண்டு
தூய்மையாக்கிய கைகளால் எடுத்து உண்ணுகையில்
பயணத் துன்பம் மறந்து என்னவளின் அன்பை உணர்ந்து
தூயவளுக்கு நன்றி கூறக் கைபேசியை எடுத்தவேளை
துயில் வேளை என்று கணக்கிட்டு தூங்கட்டும் என எண்ணி
தேன்மொழியாளை அழைக்காமல் மனதை திசை திருப்பி
இல்லாளின் சிரித்த முகத்தை நினைத்து இன்புற்று சாய்ந்து
கண்களை மெல்ல மூடினேன் அடுத்த அறிவிப்பு வரும்வரை.
அம்மா என்னும் அதிசயம்
அம்மா என்ற சொல் கேட்டு அன்புடன் அணைத்து
ஆற்றிய சேவைகள் பலவற்றை நினைவில் இருப்பினும்
இன்பம் கண்டது தன் மகவு பேசிய மழலை மொழியிலே
ஈன்ற இதயம் அதைச் சுவைத்து கண்மூடி இருக்கையில்
உணர்வுகளை அடக்கி உண்மை பரம்பொருளை உள்ளம் நாடிடும் வேளை
ஊமையாய் அமைதியை தேடி அரங்கனின் பாதத்தில் ஒன்றிட நினைக்கையில்
எங்கும் நிறை மாயவனின் மாயம் மணிகண்டனாய் பவனி வர
ஏன் என்று கேளாமல் தத்தி தத்தி நடந்து மறுமுறை மழலையை பார்க்கையில்
ஐயனை மறந்து அவன் விரித்த மாயவலையில் மீண்டும் சிக்கிட
ஒருமுறை தான் பெற்ற இன்பத்தை மனம் மீண்டும் சுவைக்க
ஓங்கி உலகளந்த பெருமானின் லீலைகளை நினைத்தவாறு நிற்க
அன்பு
தூயவளே உன் அன்பை
துயிலும் வேளையிலும் உணர்கிறேன்
இப்பந்தம் எத்தனை ஜென்மம் கடந்து
இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்று
மனதில் நினைத்து பார்த்து வியக்கிறேன்
கண்முன் இருக்கையில் நீ அமரும் நேரம்
தனிமையை மறந்து இனிமையை உணர
உள்ளத்தில் எப்பொழுதும் இன்பம் நிறைந்து
உற்சாகமாக பேசும் நேரம் ஒரு வார்த்தை தவற
உரிமையோடு உன்னை கடிந்து பேசிட
உன்மனம் புண்பட்டு என்னை நீ கோபிக்க
கோபத்திலும் உன் அன்பு வெளிப்படுகிறது
முற்றிய கோபத்தில் தீயாக நானும் எரிந்திட
எல்லாம் முடிந்ததோ என உள்மனம் தவிக்க
என்றும் போல் சகஜமாய் நீ என்னை அழைக்க
இனியவளின் அன்பை மீண்டும் உணர மனமும்
அமைதியாக ஆசுவாசத்
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome
நண்பர்கள் (15)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

J K பாலாஜி
அவனியாபுரம்,மதுரை
