கே என் ராம் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : கே என் ராம் |
| இடம் | : டல்லாஸ் |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
| பார்த்தவர்கள் | : 607 |
| புள்ளி | : 412 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
சுமை தாங்கி
என் பெயர் பிரகலாதன் எனக்கு பின் இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் என் பெற்றோர்களுக்கு
பிறந்தனர்.நான் பள்ளியில் படித்து முடித்து கல்லூரியில் சேர்ந்து நன்றாக தேர்வில் மார்க் எடுத்து
கோவையில் உள்ள ஒரு பெயர்பெற்ற கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தபின் எனக்கு
திருமணமானது.என் மனைவியும் நன்றாக படித்தவள் அவளுக்கு கோவையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்
வேலை கிடைத்தது.அவளும் நானும் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில்
வாழ்ந்து வந்தோம்.என் மனைவி அதி காலையில் எழுந்து காலை கடன்களை முடித்தபின் பள்ளிக்கு 7
மணி அளவில் புறப்பட்டு சென்றுவிடுவாள்.நான் அலுவலகம் செல்லும் நேரம் காலை 10 மணி
இதுதான் வாழ்க்கை
சூரியன் மறையும் பொழுதில் நிழல்கள் நீளும்,
இருள் வந்தாலும் நட்சத்திரங்கள் வழிகாட்டும்,
மழை பெய்தாலும் வானவில் நம்பிக்கையை தரும்.
கண் பார்ப்பவை யாவும் மெய்யென நாம் அறிவது
ஆசை அகத்தைத் தூண்டி ஆவலைப் பெருக்கிட
அந்த ஆவல் கொண்ட மனதை திருப்தி செய்திட
நாளெல்லாம் வரும் பணத்தை எண்ணி உழைத்திட
உண்மை உறவுகள் ஊமையாகி நிழலாக மறைந்திட
கனவு என்றாவது நனவாகிடுமோ என மனம் ஏங்கிட
காலம் ஓடும் அந்த ஓடையில் நினைவுகள் மிதக்கும்,
அன்பின் நெருங்கிய தொடுதலில் காயங்கள் ஆறும்,
ஒவ்வொரு முடிவிலும் புதிய தொடக்கம் மலரும்.
புத்தாண்டு பிறந்தது
அதிகாலை கதிரவன் ஒளியோடு புத்தாண்டு பிறந்தது
ஆதவன் ஒளிகதிர்களினால் நாடு நலம் பெற
இனிமையும் நன்மையும் பொங்கி பெருகிட
ஈடேதும் எதிர்பார்க்காமல் நண்பர்கள் கூடிட
உல்லாசமாக நாளெல்லாம் கொண்டாடிட
ஊரார் உள்ளங்களில் சிறுமைகள் ஒழிந்திட
எல்லா இடங்களிலும் செழுமை ஓங்கிட
ஏற்றம் நிறைந்து சிறப்புக்கள் வளர்ந்திட
ஐயங்களும் சீர்குலைவுகளும் மறைந்திட
ஒற்றுமையுடன் வரும் ஆண்டை வரவேற்று
ஓசையுடன் புத்தாண்டும் பிறந்தது
புதுப்பொலிவும் வந்ததென ஆடிப் பாடி
மகிழ்ச்சியோடு அதை வரவேற்போம்...
காலம் கடந்து அம்மாவை அறிந்தேன்
என் பெயர் ஆனந்தன் நான் என் பெற்றோருக்கு முதல் பிள்ளை எனக்கு பின் இன்னொருவன் பிறந்தான். அவன் பிறந்ததும் என்னிடம் என் பெற்றோர்கள் சிறிது வேறு பட்டதாக எனக்கு தோன்றியது. ஒரு பக்கம் என்னிடம் அன்பை காட்டினாலும் தம்பிக்கு அவர்கள் காட்டும் பிரியமும் கொடுக்கும் செல்லமும் என்னை வெகுவாக பாதித்தது. நான் வளர்ந்து பெரியவனாகி பட்டம் பெற்று ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்தேன். எனக்கு கிடைத்த வேலை ஒரு பெயர்பெற்ற அலுவலகத்தில் ஆகவே மாதவருமானமும் நல்ல முறையில் அமைந்தது. என் பெற்றோர்களின் வறுமையை நான் போக்கி இருக்கலாம் ஆனால் என் மனதில் உள்ள காழ்ப்பு உணர
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome