கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 583 |
புள்ளி | : 375 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
நம்பிக்கை மாறும் நேரம்
சிதம்பரத்துக்கும் சாரதாவிற்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆனபின் குழந்தை ராம் பிறந்தான்.அவர்களது செல்ல மகனாக அவன் வளர்ந்து வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.படிக்கும் வயது வந்தவுடன் அவன் ஒரு பள்ளியில் சேர்ந்து முதல் ஐந்து வகுப்புகளை முடித்ததும்,அவனைச் சிதம்பரம் ஒரு பெயர்பெற்ற பள்ளியில் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும் வகுப்பில் சேர்த்தார். அவனும் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்தான். பின் சென்னையில் பிரபலமான கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பை தொடர்ந்து பட்டமும் பெற்றான்.
ராம், பட்டப் படிப்பை முடித்த பின் மேலும் ப
காற்றிற்கு ஒரு தூது
காற்றே காற்றே வீசாமல் கொஞ்சம் நிற்பாய்
காதலனுடன் சேர எனக்கு ஒரு வழி வகுப்பாய்
கார்மேகத்தைத் தள்ளி நீ கொண்டு வந்தால்
காண்பவை அனைத்தும் காரிருளில் மூழ்கும்
கருமேகமும் நீயும் சேர்ந்து குளிரும் பொழுது
கடுமழையும் வந்து பார்ப்பவைகள் மறையும்
கண் மறைந்து காரிருளில் நான் காதலனைத் தேட
காலமும் கடந்திடும் அவனை காண்பதும் தடைபடும்
கருணை கொண்டு செவி மடுப்பாய் கொஞ்சம் நின்று
ஒரு சிறிது காலம் கழித்து பின்னால் வருவாய்
என் காதலனை நான் காண உதவி புரிவாய்
அன்பு உள்ளங்களைத் தேடி
சாமிநாதன் சென்னையில் பிறந்து வளர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிப்பை முடித்தபின் கல்லூரி படிப்பைத் தொடரும் வேளையில் எதிர்பாராமல் ஒரு ரயில் விபத்தில் பெற்றோரை இழக்க நேரிட்டது.இதனால் அம்மாவின் வழியில் உள்ள ஒரு உறவின் உதவியால் பம்பாயில் சென்று படிக்க நேரிட்டது. அங்கு கல்லூரியில் பட்டப் படிப்பையும் பின் விற்பனைக்கு வேண்டிய சிறப்பு படிப்பையும் படித்து
பம்பாய் நகரில் வேலை செய்து வந்தார்.விற்பனை பிரிவில் வேலையானதால் வெளியூர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் ஏற்படும். இவ்வாறு அலைந்து திரிவதால் சாமிநாதனுக்கு திருமணம் ச
மனம் மயங்கும் மாலைவேளை
அழகான நிறத்தோடு அந்தி சாயும் வேளை
ஆதவனும் அமரனாகி மெல்ல மறையும் வேளை
அவனியாவும் அயனைப் போற்றும் வேளை
ஆம்பல் அரும்பு அமைதியாக மலரும் வேளை
ஆற்று வெள்ளம் குளிர்ச்சியாக மாறும்வேளை
ஆனந்தம் மனதில் உருவாகும் அந்த வேளை
உயிரினங்கள் அமைதியை நாடிடும் வேளை
உடல்கள் சலித்து ஓய்வு பெற துடிக்கும் வேளை
உறவுகளைப் புதுமையாகக் காணும் வேளை
உணர்வுகள் உள்ளே ஊமையாக புணரும் வேளை
தாயுடன் சேய்கள் வந்து ஒன்று சேரும் வேளை
மண்ணினங்கள் மதி மயங்கி மகிழும்வேளை
மெல்லிடையாள் காதலுடன் கண்மூடி கனவோடு
காத்திருக்கும் அந்த இனிமையான வேளை
மாலை மயங்கும் வேளை என அறிவாய் மானிடனே
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome