கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 433 |
புள்ளி | : 248 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
அம்மாவின் தன்னலமற்ற அன்பு
அந்த சிறிய கிராமத்தில் வானொலி பெட்டியில் வானிலை அறிக்கை கூறிய செய்தி
எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியது.அந்த செய்தி ஒரு பலமான காற்றழுத்த மண்டலம்
கடலில் உருவாகி அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்கும் அதன் விளைவாக வரும் நான்கு
தினங்களுக்கு பலத்த மழை பெய்யும். கடலில் யாரும் மீன் பிடிக்க செல்லவேண்டாம். தாழ்வான
பகுதிகளில் மழை நீர் தேங்க கூடும். எல்லோரும் விழிப்புடனும் மிகவும் கவனமாகவும் இருக்க
வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி தான் அது. அடுத்த நாள் விடியக் காலையில் ஆரம்பித்த
மழை ஓயாமல் பொழிந்து கொண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் நிரம்பி குன்றும், குழியும்
நிறைந்து போ
இராமனை துதிப்போம்
அடைக்கலம் புகுந்தவருக்கு அபயம் தரும் உள்ளம்
ஆருயிர் துணையை தூக்கிச் சென்ற அரக்கனை நோக்கி
இன்று போய் நாளை வா எனக் கூறிய வீரத்தின் உருவம்
ஈசனுக்கு கையினால் வடிவம் கொடுத்து தொழும் பக்தி
உள்ளத்தின் தூய்மையும் முகத்தில் புன்னகையும் ஏந்தி
ஊனின்றி வனங்களில் நடந்த போதும் வாய்மை காத்து
எந்த நிலையிலும் மனம் தளராமல் இருந்த மனித தேவன்
ஏங்கிய முனிவர்களுக்கு காவல் நின்ற கருணை வடிவம்
ஐம்புலனையும் அடக்கி பிதுர் வாக்கை பரிபாலித்த மகன்
ஒரே அம்பு ஒரே மனைவி ஒன்றே செயல் என வாழ்ந்து
ஓங்கி வளர்ந்த அரக்கர் கூட்டத்தை வேரறுத்து உலகம் காத்து
மனிதர்களுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்து காட்டிய
உலகம் என்ற எலிப்பொறி
உலகத்தில் நாம் பிறந்தவுடன் நம் அன்னை நம்மை நன்றாக கவனித்துக் கொண்டு அலங்காரம் செய்து உணவளித்து வேண்டியவைகள் யாவையும் நாம் கேட்காமலே செய்து கொடுத்து நம்மை ஆசையோடு வளர்க்கிறார். அப்படி வளரும் பொழுது பல நீதிக் கதைகளையும் அதில் தோன்றும் சந்தேகங்களையும் விளக்கி அது எவ்வாறு உலக வாழ்க்கையில் நமக்கு உதவும் என அறிவூட்டுகிறாள். நாம் வளர்த்து பெரியவனாகிப் படிக்கும் பொழுதும் அவள் நம்மை அவளது குழந்தையாகவே எண்ணி தவறுகளைச் சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துகிறார். சில நேரங்களில் நமக்கு அது கோபத்தை வரவழைக்கிறது அவளைக் கடின வார்த
வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணம்
அன்பு என்பது வார்த்தைகளில் மட்டும் தான் வாழ்க்கையில் இல்லை
ஆதாயம் இல்லாமல் அடுத்து வந்து உதவ ஆட்களும் இல்லை
இதயம் நோக பேசிவிட்டு சென்ற பின்னும் வருத்தம் இல்லை
ஈன்றவர்சொத்துக்கு வழக்கு செய்யும் மக்களுக்கு பஞ்சம் இல்லை
உறவுகளின் உண்மை நிலை கண்டு வருந்திட கண்ணீரும் இல்லை
ஊரெல்லாம் பாராட்டினாலும் உன் சொந்தங்கள் உனக்கு இல்லை
எவ்வளவு அள்ளி கொடுத்தாலும் திருப்தி அடையும் உள்ளம் இல்லை
ஏங்கிய இந்த இதயத்திற்கு ஒரு நாளும் மகிழ்ச்சி வருவது இல்லை
ஐயங்கள் பல உள்ளன இப்பிறவில் ஊழ்வினை தீருமோ இல்லையோ
ஒன்றும் அறியாமல் உழன்று திரியும் இந்த வாழ்க்கைக்கு ஏத
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome
நண்பர்கள் (15)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

J K பாலாஜி
அவனியாபுரம்,மதுரை
