கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 576 |
புள்ளி | : 370 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
கஸ்டமர் கேர்
என் பெயர் சந்திரன் நான் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒரு அதிகாரி என்னுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பலர் வேலை செய்கின்றனர். வீட்டில் வாங்கும் முக்கிய பொருள்களான வாஷிங் மெஷின்,அடுப்பில் இருந்து வரும் புகையை எடுத்து வெளியே விடும் மெஷின்,குளிர் சாதன பெட்டி, டிஷ் வாஷர் முதலியவற்றை வாங்குபவரிடம் மூன்று வருடங்கள் பராமரிக்க வேண்டிய அக்ரீமெண்ட் எழுதி அதற்கு பணமும் பெற்றபின் அதன் செயல்பாடுகளில் எதாவது குறை வந்தால் அதைப் பழுது பார்க்கவும் தேவைப்பட்டால் அதை மாற்றி புதியதைக் கொடுக்கவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கூறி விட்டு அவர்களிடம் எனது பிரிவின் அலுவலக தொலைபேசி எண்ணைய
பஞ்ச பூதங்கள்
நெருப்பு
அக்னி என்ற பெயர் கொண்ட என்னை குவலயம் நெருப்பாக காணும்
ஆகாயத்திற்கும் பூமிக்கும் தொடர்பு கொண்டவன் என்பதால்
இறைவனுக்கோ தேவர்களுக்கோ வேண்டினால் கொடுக்க என்னை அழைப்பர்
ஈசன் கொடுத்த சக்தியால் நான் அதை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பேன்
உன்னதமான இந்த தன்மையால் என்னை சாட்சியாக கொண்டு மானிடர் எதையும் செய்வார்கள்
ஊர் வளமடைய செய்யும் வேள்வி திருக்கோயில் குடமுழுக்கு முதல் மானிடரின் திருமண வைபவம் மற்றும் பூஜைகளில் எனக்கு முக்கியத்துவம் உண்டு.
என்னை அடக்க முடியாமல் போனால் நான் பெரும் அழிவை கொடுப்பேன்
ஏழையோ பணக்காரனோ தெரிந்தோ தெரியாமலோ என்னை தொட்டால் அவர்களை சுட்டு பொசு
குடியரசுதினம் வந்தது
மூவர்ண விளக்குகளால் நாடு ஜொலிக்க
முப்படை வீரர்கள் அணிவகுத்து நடக்க
மூத்த தலைவர்கள் யாவரும் கண்டு களிக்க
முதல் பிரஜை வணக்கங்களை ஏற்று கொள்ள
மூன்று காவல்படை தலைவர்களும் இருக்க
முக்கிய பிரமுகர்கள் பலர் அமர்ந்து ரசிக்க
மூவர்ண கொடி பெருமிதத்துடன் பறக்க
முடிவாக அலங்கரித்த வாகன அணி வந்து
மூவேந்தர் வாழ்த்த நாடு சுதந்திரத்தை கொண்டாட
முழு நாளும் மகிழ்வோடு சென்றதம்மா
மகளின் திருமணம்
அன்னநடைநடந்து வந்த அழகிய பெட்டகம்
ஆடல் கலையினை கசடற கற்று அருமையாக
இன்னிசையோடு காலில் சதங்கையும் கையில் அபிநயமும் ஒரு சேர
ஈன்றவளையும் காண்போரையும் தனது முகபாவத்தால் சொக்கவைத்து
உள்ளோரையெல்லாம் கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து
ஊடகமும் ஊர்மக்களும் வியந்து பாராட்டுகள் வழங்கிட
என் கன்னிமயில் இன்று காரிகையாகி கனவுகளுடன் நிற்க
ஏற்ற காளை ஒருவனைக் கண்டு களிப்பெய்தி ஆசையுடன்
கண்கள் கலந்திட காதலித்துக் கைபிடித்து அன்புடன்
கன்னிமகள் கைபிடித்து நடைபயின்று வருவதைக் கண்டு
கண்கள் இரண்டும் குளமாகிட காலமெல்லாம் அவள்வாழ்க
என உள்மனம் நிறைந்து ஆசியளித்து வளமும் நலமும்
பெற்று பெருவா
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome