கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 487 |
புள்ளி | : 248 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
புதையல்
உனக்கே தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் பொக்கிஷம்
வித்திடாத கற்பக விருட்ஷம்
விதியை மாற்றிடும் விசித்திர பெட்டகம்
கற்பனையில் காணத் துடிக்கும் பொருள்குவியல்
நிலத்தின் அடியில் கிடக்கும் நித்திய அதிசயம்
நிலை கொள்ளாமல் ஆடவைக்கும் நிரந்தர போதை பொருள்
பொறாமையாலும் பேராசையலும் மனிதரை மிருகமாக்கும் மாயை
இதை கண்டவர் களிப்புறுவர் காணாதவர் தேடி அலைவர்
கற்றவர் கடல்காணா இக்கற்பனையை எண்ணி (எள்ளி) நகையாடுவர்
பல்லி தந்த படிப்பினை
முதுமையடைந்தவர்களை அன்புடன் நடத்தி அவர்களது தேவைகளை
அறிந்து செயல் பட வேண்டும் என்பதை ஒரு எடுத்துக் காட்டாக நம் குழந்தைகளுக்குக் கற்பிக்க அவர்களும் நம் முதுமை காலத்தில் அதே போல் நம்மை நடத்துவார்கள். பணம் செலவழித்ததைக்கொண்டு நம் முதியோர் பராமரிப்பைக் கணக்கெடுக்கலாகாது,அன்பினால் எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் என்பது.
நமது குழந்தைகள் நம்மை பார்த்து நாம் செய்வதை அவர்களும் செய்கிறார்கள்.நம் செய்கைகளை அவர்கள் கவனித்து அதையே பின்பற்றி வளர்கிறார்கள். அப்பா நீ இதை செய்தயே என நாம் அவர்களைக் கண்டிக்கும் வேளையில் அவர்கள் கூறுவது பலவீடுகளில் நடக்கிறது. அது நமக்குக் கேட்கிறது.
ஆகவ
நன்றி அறிவித்தல்
அமெரிக்க மக்களுக்கு ஒரு சிறந்த தினம்
அறுவிடை நன்றாக இருந்ததை போற்றும் தினம்
ஆவலோடு யாவரும் நன்றி கூறும் தினம்
இல்லம்தோறும் இன்பமாக ஒன்று கூடும் தினம்
ஈன்றவளை கண்டு ஆசையோடு கழிக்கும் தினம்
உயரிய பொருள்களில் உணவு தயாரிக்கும் தினம்
ஊரெல்லாம் வான் கோழி சமைத்து சாப்பிடும் தினம்
எல்லோரும் சிரித்து உல்லாசமாய் இருக்கும் தினம்
ஏழை எளியோருக்கு உணவளித்து மகிழும் தினம்
ஐஸ் பெட்டியில் வைத்த மது வெளியே வரும் தினம்
ஒன்றாக சிறுவரும் பெரியவரும் கலந்து களிக்கும் தினம்
ஓயாத விருந்தோம்பலை காணும் ஒரு உயர்ந்த தினம்
நாட்டின் செழுமையை கொண்டாடி நன்றி அ
மயிலை தரிசனம்
அங்கமெல்லாம் தங்கமாய் மயிலை கற்பகாம்பாள் இருக்க
ஆயிரம் நாமங்களைக் கூறி அர்ச்சித்து பூக்களால் அலங்கரித்து
இறைவியாக நிற்கும் அவள் அழகை காண இரு கண்கள் போதாது
ஈசன் அருள் பாலிக்கும் இடமெல்லாம் ஏற்றிய தீபங்கள் ஒளிவிட
உள்ளிருக்கும் கடவுளை காட்டிட ஒரு உருவமாக அமைத்திருக்கும்
ஊகிக்க இயலாத பரம்பொருளை மனதில் இருத்தி கண்களில் காண
எங்கும் சங்கொலி ஒலிக்க கற்பூரத்தில் இறைவன் முகம் ஜொலிக்க
ஏகாந்தமான உணர்வுகள் உணர்ச்சிகளாகி கண்களில் நீராக சொரிய
ஐம்புலனையும் அடக்க வழி வேண்டும் என கைகூப்பித் தொழுது
ஒரே நினைவாக இறைவனோடு மனதால் ஒன்றிட நினைக்கையில்
ஓம்மெனும் பிரணவ மந்திரத்தைக் கூறி பக்தி
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome
நண்பர்கள் (15)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

J K பாலாஜி
அவனியாபுரம்,மதுரை
