santhosh bhavan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  santhosh bhavan
இடம்:  chennai
பிறந்த தேதி :  24-Apr-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  37

என்னைப் பற்றி...

http://putthiyakavithaigal.blogspot.in

என் படைப்புகள்
santhosh bhavan செய்திகள்
santhosh bhavan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2023 4:47 pm

நீல வானம் இல்லை, எனது
மதிக்கு தெரியும்,மனம் தான் நம்பவில்லை,..
உன்னை நினைப்பது போலவே.

மேலும்

santhosh bhavan - எண்ணம் (public)
15-Mar-2023 9:29 pm

நான்

............


மழை நின்ற பின் வெயிலும்

வெயில் தாக்கம் போக்கும் மழையும் - நான்

தாமரை இலைக்கும் நீருக்கும்

இடையே உள்ள இடைவெளி இல்லா இடைவெளி நான்


உறவுக்கு பிரிவுக்கும் நடுவில் உள்ள

பிரபஞ்சம் கண்ட  மௌனம்  நான்.


நான் காணும் யாவும் நீ ஆதலால்

நீ யாகிய நீயும் நான்

எதில் எல்லாம் நான் என்னும் கர்வம் இல்லையோ அவை எல்லாம் நான்


பிறக்காத கனவும்,என்றும் இறக்காத

நினைவும் நான்


நான் என்றும் நான் அல்ல நீயாகிய நானே நான்.

மேலும்

santhosh bhavan - santhosh bhavan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2023 7:26 pm

மழை மேகம் கருமையாகவும்
மழை விழுதுகள் வெண்மையாகவும் - காண்போர் காணலாம்,
மேகம் வெண்மையாகவும்
விழுதுகள் கருமையாகவும்-உன்னை கண்போரே காணலாம் .

மேலும்

தவறுகளை திருத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி. 15-Mar-2023 9:25 pm
விதி விலக்கா. விதி விளக்கா ? தலைப்பைச் சொன்னேன் நீர் எழுதுவது வேடிக்கை வரிகள் கவிதை யில்லை கவிதைக்கு இலக்கணம் வேண்டாமா ? வஞ்சித்துறை மழைமேகமும் கருமைதானே மழைவிழுதலும் வெண்மையே , மேகவெண்மையை காண்போரும் மழைகருமையா மென்பரே இப்படி எழுத கவித முயன்று எழுதவும் 11-Feb-2023 9:37 am
santhosh bhavan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2023 7:26 pm

மழை மேகம் கருமையாகவும்
மழை விழுதுகள் வெண்மையாகவும் - காண்போர் காணலாம்,
மேகம் வெண்மையாகவும்
விழுதுகள் கருமையாகவும்-உன்னை கண்போரே காணலாம் .

மேலும்

தவறுகளை திருத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி. 15-Mar-2023 9:25 pm
விதி விலக்கா. விதி விளக்கா ? தலைப்பைச் சொன்னேன் நீர் எழுதுவது வேடிக்கை வரிகள் கவிதை யில்லை கவிதைக்கு இலக்கணம் வேண்டாமா ? வஞ்சித்துறை மழைமேகமும் கருமைதானே மழைவிழுதலும் வெண்மையே , மேகவெண்மையை காண்போரும் மழைகருமையா மென்பரே இப்படி எழுத கவித முயன்று எழுதவும் 11-Feb-2023 9:37 am
santhosh bhavan - janani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2020 2:37 pm

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

மேலும்

வான்கோழி என்று வாசிக்கவும். 21-Sep-2023 11:40 am
1...கள்ளம் என்பது கல்ல மாகியுள்ளது. 2. தன், அவள், இவர். தன், நான், நம்,, போன்ற ஓரசை சீர்கள் கவிதையில் என்றால் வரக்கூடாது... அப்படி ஏழுத அது உரைநடைவே ஆகும். 3. நீங்கள் இரண்டு அல்லது 3.சீரில் எழுதுவதால் வஞ்சி விருத்தம் வஞ்சித் துறை எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு எழுதலாம். புதுக் கவிதைள் எல்லா. மே உரை நடைதான்.. பன்மொழி மயிலாகாது தமிழ் இலக்கணம் படியுங்கள் எழுதுங்கள்.பாராட்டுப் பெறுங்கள். 21-Sep-2023 11:39 am
அற்புதம் 14-Oct-2020 7:15 pm
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பாராட்ட, குறை சொல்ல, என் தவறை திருத்த உங்களுக்கும் அனுமதிஉண்டு 13-Oct-2020 2:41 pm
santhosh bhavan - shanthi-raji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2020 3:30 pm

வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...

ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே

இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......

மேலும்

சிறப்பு , வளம் பெறுக. 14-Oct-2020 7:12 pm
கருத்து பதிவிற்கு நன்றி தோழமையே 07-Oct-2020 4:27 pm
அன்புத்தாய் வளர்க்கும் அன்புச்சிட்டு!! 29-Sep-2020 12:42 pm
santhosh bhavan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2020 3:41 pm

உணவேதும் இல்லாமல்
இருந்தாலும் உண்ணாமல்,
காரணங்கள் தோணாமால்,
உடலோடு வயிறு செய்யும்- போர்
பசியும் கொடிதல்ல

கண்ணீர் ததும்பும் முகங்கள் சூழ
காற்றோடு மனம் கலக்க
இமை இரண்டும் தான் கலக்க
உயிர் பிரியும் தருணமும் கொடிதல்ல.

காற்றில் கானம் படி, கவிதையாய்மொழிகள் கூறி
கைகோர்த்து நடந்த கடற்கரை துறந்து,
உனக்கு பிடித்த பாடல் கேட்டு ,
மனதில் உன்னை சுமந்து, கொட்டும் மழையில்
கண்ணீர் கரைய, என் மகிழ்ச்சியும்
மெதுவாய் குறைய
நானிருக்கும் தனிமையே கொடிது.

மேலும்

santhosh bhavan - santhosh bhavan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2014 7:09 pm

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது

மேலும்

நன்றி திருத்திகொள்கிறேன்.,மற்றும் கவிதை என்பதே அழகன பொய்கள்தான். நான் முடிச்சி என்று குறிப்பிட்டது இணைப்பைத்தான். 27-Dec-2014 3:47 pm
நன்று ..... சிறிய பிழை தோழரே .. தொப்புள் கோடியில் முடிச்சு எல்லாம் விழ கூடாது தோழரே , சிசுவின் மூச்சு அடங்கி விடும் .. 12-Dec-2014 7:11 pm
santhosh bhavan - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2014 8:41 am

நம்பிக்கை

மேலும்

உண்மை. 22-Jun-2014 12:06 pm
மிகச் சரிதான் நண்பரே!! 22-Jun-2014 11:50 am
நிச்சயமாய் ஐயா!! 22-Jun-2014 11:50 am
விழுவேன் என்று என்னதே.....! விழுந்தால் மீண்டும் எழுவேன் என்று என்னு அதுவே நம்பிக்கை.......................!!!!! 22-Jun-2014 9:19 am
santhosh bhavan - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 8:33 pm

அறிவுரை

மேலும்

உண்மைதான் நண்பரே!! 22-Jun-2014 12:31 pm
அருமை தோழி ... கை கொடுக்க தோழன் இருக்கும் போது-எழ மனம் இல்லாமல் இருக்குமா? 22-Jun-2014 12:28 pm
நன்றி தோழி! 22-Jun-2014 11:23 am
நன்றி அம்மா !! 22-Jun-2014 11:22 am
santhosh bhavan - Bala Prasath அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 11:39 am

சொல்ல நினைத்த வார்த்தைகளை
cellல் அனுப்பினேன் SMS ஆக.

எழுதி வைத்த கவிதைகளை
இணைத்து அனுப்பினேன் Email ஆக.

முகம் பார்த்து பேச கூட நேரமில்லை
முகநூல் statusல் பகிர்ந்துவிட்டான்.

சந்தித்து பேசவும் சாவுகாசமில்லை- அதனால்
சாயும்காலம் chatting சொல்லி விட வேண்டும்.

நான் உன்னை காதலிக்கிறேன்,
எனக்கு எல்லாமே நீ தான்,
ஒவ்வொரு நொடியும் உன் நினைப்பிலே வாழ்கிறேன் என்று.

மேலும்

நன்றி தோழி.... 21-Jun-2014 4:12 pm
அடடா !!நவீன காதல் அழகு நண்பரே!! 21-Jun-2014 4:09 pm
அப்பாடா நீங்க ஒருத்தராவது சொன்னீங்களே... 21-Jun-2014 4:07 pm
:)நன்று... 21-Jun-2014 4:05 pm
santhosh bhavan - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2014 8:04 am

காய்ந்து வற்றிய குளத்திலும்
கால் முளைத்த தாமரைப்பூ..!
பூமிக்காகிதத்தில்
புதுக்கவிதை நடக்கிறது..
ராமனின் பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்கினாள் அகலிகை
உனது பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்குகின்றன
சாலையோர பூக்கள் ...!!

மேலும்

நல்ல சிந்தனை ...... 05-Apr-2014 7:24 pm
பூக்களில் பாதம்பட்டால் மோட்சம் பூக்களுக்கு நிச்சயமாக ...! 05-Apr-2014 12:23 am
அருமை... 04-Apr-2014 9:16 am
அருமை நண்பரே 04-Apr-2014 8:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே