அமுதன் பரிமளசெல்வன் - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : அமுதன் பரிமளசெல்வன் | 
| இடம் | : கலிபோர்னியா | 
| பிறந்த தேதி | : 08-Nov-1986 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 17-Jan-2014 | 
| பார்த்தவர்கள் | : 410 | 
| புள்ளி | : 135 | 
தமிழறிவு தேடி தஞ்சம் புகுந்தவன்.... !
அரை மணிக்கொருதரம் 
அலறும் அலைபேசி 
சிணுங்குகிறது செல்லமாய்..
காலையில் நீ 
ஊட்டிய பூரி 
தொண்டைக்குழியில் 
இன்னும் தித்திப்பாய்..
கொஞ்சம் கொஞ்சமாய் 
சிரிப்பை நீளமாக்குகிறேன்.....
நன்றியிலும் மன்னிப்பிலும்..
தவறி விழுந்த 
குறிப்பேட்டை எடுத்து 
முத்தமிட்டு கைச் சிறையாக்குகிறேன்..
உன் பெயர் எழுதி இருப்பதாலோ!
காலை வணக்கம் 
சொல்லிக் கொண்டே இருக்கிறேன் 
சூரியன் கடந்து போன பின்னும் 
உன் குரல் கேட்டு 
துயில் கலைந்ததால்!
நீ கொடுத்த 
சாக்லேட்களை எறும்புக்கு 
கொஞ்சம் தந்துவிட்டேன் 
அமிர்தம் ருசிக்கட்டும் அவை!
யாரங்கே !
நட்சத்திரங்கள் கோர்த்த
வானவில் மாலைகள்  
இரண்டு தய
இலையுதிர் மரமொன்றின் 
தவத்தினால் சிறுகிளைகளை
பறித்த காற்று 
மிச்சம் விட்டு வைத்தது 
பூக்கொய்த தழும்புகளை..
பிடிக்குமென்றும் பிடிக்காதென்றும் 
நீங்கள் மறுதலிக்கும் கணங்கள் 
எங்கள் அகராதியில் வடிக்கப்படாதவை 
நீங்கள் சொல்லும் நிறத்தால் 
இந்த பூமி சாயம் கொண்டிருந்தால்
வெளுத்து வெற்றிடத்திற்கே 
வேலை இல்லாது 
கண்ணடைத்திருக்கும்
உயரங்கள் கொண்டு 
பெண்ணை அளப்பீர் என்றால் 
குறை(வு) எங்கே?
அழகும் இளமையும் 
போதுமென்றால் 
வயதிற்கல்லவா 144 
இட வேண்டும் 
நிறங்களாலும் உடலமைப்பாலும் 
இழிவு சொல்லும் பேயரை
ஒரு கணம் ஒரே ஒரு கணம்
 
தசையினுள்ளே 
குருதி நாளங்களின் கொதிப்பில் 
இரைப்பையும் குடல்களும்  
இணைந்த திரவ நிலையை 
திறந்து உயிர்க்கச் 
செய்தல் அவசியமே!
எப்போதும் போல் 
பொறுமையோ சகிப்போ 
கொண்ட அதி தீவிரத்துடன் 
நடந்து கொண்டிருந்தபோது 
அது நடந்தே விட்டது!
கச கச 
காய்கறிச் சந்தையில் 
ஊட்டி காரட் வந்திறங்கியதாய் 
மணந்தாள் வண்ணப் பூச்சில்..
அவளுக்கும் கூட  
அது புதிதாய் 
இருந்திருக்கலாம்..
எப்போதும் போல் 
கூச்சத்திற்கும் 
நெளிவுகளுக்கும்  
பழகி இருந்திருப்பாள்.....
அவள் தாய் சொல்லி இதை 
அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்..
பக்கத்து கோவிலில் 
சாமி கும்பிட வந்தவளை   
நவ கிரகமாய் ஒதுக்கப்பட்டதில்  
கூட்டத்திலிருந்து 
விலகியே தெரிந்தாள்..
"இன்னைக்கு ஏதும் 
சவாரி கிடைக்கலையோ இதுக்கு?"
என் யோசனையில் இடறி 
அவசர வாகனத் த
உம்மிடம் 
பேசிக்கொண்டிருக்க 
நேக்கு  நேரமில்லை !
ஒரு காரியமாக 
போய்க்கொண்டிருக்கிறேன் !
மடிப்பசு
எதிரே வருகிறது !
போகிற காரியம் 
ஜெயம் தான் !
நிறை சுமங்கலி 
குழந்தையுடன் !
பேஷ் ! பேஷ் !
காளை மாட்டுவண்டியும் 
எதிரே !
ஜோர் !
கன்னியொருத்தி 
புன்னகையுடன் !
ஷேமமா இரு 
கொழந்தே !
பிஹி பிஹி பிஹி !
குதிரையா ...........
அடிசக்கை ! 
எண்ணைத் தலையன் 
இல்லை !
பூனை 
இடம் போகவில்லை !
விதவை எவளும்
வரவில்லை !
நேக்கு இன்னைக்கு 
அனைத்தும் 
சுபமே !
கஹ்ஹ்ஹ்ஹ் 
அதென்ன 
சத்தம் ?
திரும்பினேன்
என்னைக் கடந்து போன 
ஒருவனை 
வண்டி அடித்திருந்தது !
ஆணுக்கு அழகு எது ?
பணம் 
வெறும் காகிதம் தான்
கையில் கிடைத்தால் 
கசக்கி கிழித்தெறியும்
குழந்தைக்கு மட்டும்.  
காதல் ஆத்திச்சூடி !
அ ன்பே 
ஆ ருயிரே
இ தயத்தை 
ஈ ரமாக்கிப்போன
உ றவே 
ஊ டல் கொள்ளும் 
எ ன்னுயிர் 
ஏ ந்தலே !
ஐ ந்தவம் புரிந்தேன் 
ஒ ன்றாய் 
ஓ ருயிராக !
ஔ டதமடி உன்
கஃடு(கள்) ஊறிய
க ண்கள் என் 
கா தல் நோய்க்கு !
கி றுக்காகிக்  காதல் 
கீ ச்சிடும் 
கு ரங்காய் உன்
கூ டல் வேண்டி
கெ க்கலி கொண்டேனடி !
கே ட்ட வரம்
கை யூட்டின்றி 
கொ டுக்கும்
கோ தையே !
கௌ த்துப திருமாலின் 
ச ங் கொத்த கழுத்தும் 
சா மவேதக் குரலும் 
சி றைவைக்குமடி என் 
சீ ற்றத்தை !
சு டர்மதிச் 
சூ ரியன் மகளே 
செ ங்கை 
சே ர்த்து 
சை த்தியம் சென்று 
சொ ர்கத்துச் 
சோ தியாய் மாறிவிடவேண்டுமடி!
சௌ க்கியமா நீ
இனிப்பியலின் இயல் அழகே, 
என் தோழியே ! உன்னோடு 
என் நட்பு பூத்ததெப்படி?
மொழிகிறேன் கேள்....
என்னோடு பேச 
ஒரு கோடி வார்த்தைகளிருந்தும் 
உதட்டோடு பூட்டிக்கொண்ட உன் 
வார்த்தைகளில் பூத்ததோ ?
இல்லை..
நீ கைமூடி, இதழ் திறந்து, 
என் மேல் வீசிய 
பஞ்சுமிட்டாய் புன்னகையால் பூத்ததோ ?
இல்லை...
நான் அழைத்து 
தொலைவுக்கு அப்பால் இருந்த 
அலைபேசி அழைப்பின் 
தனிமையில் பூத்ததோ  ?
இல்லை..
உப்பு ஒளிந்த கடல்காற்று 
கருணையின்றி உன் கன்னம் வருட,   
காரமாய் நீ சுவைத்த
மீன் துண்டால் பூத்ததோ ?
இல்லை..
நீ சோகத்திலே கிடந்தாலும் 
நான் ரசிப்பேன் என்பதற்க்காய் 
நீ அனுப்பிய ஒரு கூடை 
சிரிப்பி