கிருஷ் குருச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கிருஷ் குருச்சந்திரன்
இடம்
பிறந்த தேதி :  24-Dec-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  5718
புள்ளி:  3366

என்னைப் பற்றி...

-

என் படைப்புகள்
கிருஷ் குருச்சந்திரன் செய்திகள்
கிருஷ் குருச்சந்திரன் - அருண்ராஜ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2016 9:46 pm

தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைப்பது தமிழகத்துக்கு நல்லதாக அமையும் ??

தேமுதிக பற்றி உங்கள் எண்ண ஓட்டம் ??!!!

மேலும்

தமிழகத்துக்கு எது நல்லது என தெரியவில்லை. ஆனால் தேமுதிக வுக்கு நல்லது திமுக கூட்டணிதான். 28-Feb-2016 3:39 pm
பாஜக ஒரு தேசிய கட்சி ..அவ்வளவே .. தமிழ்நாட்டில் பாஜக என்பது மத சார்பான காட்சிகளில் இதுவும் ஒன்று ...அப்படி தான் நிலைமை .. கம்யூனிஸ்ட் என்ன செய்தார்கள் ??!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகம் கேரளம் ..இதற்கு பெயர் இந்தியாவாம் நான் தேச துரோகியா ??? கேள்வி எழுப்புவது எப்போதும் தவறில்லை ..அதற்கு தகுந்த பதில் சொல்லாது தான் தவறு... கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்புகிறார்கள் ..பாஜக பதில் சொல்லவேண்டும் ... 23-Feb-2016 8:45 pm
பாஜக இல்லேன்னு யாரும் சொல்ல முடியாது.. இந்த கேள்வி எம்.பி தேர்தலில் தற்போது மக்கள் நல கூட்டணியில் உள்ள வைகோ தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி வைத்தாரே அப்போ கேட்டு இருக்கணும் தமிழ்நாட்டில் பா ஜ க உள்ளதா என்று? இருபெரும் கட்சிகள் ஊழலில் திளைத்தவை.. மக்கள் நல கூட்டணியில் கம்யூனிஸ்ட் இருந்தால் அது கொஞ்சம் கூட சோபிக்க வாய்ப்பே இல்லை.. இன்றைய நிலையில் JNU விவகாரம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேச விரோத கட்சியாக தான் பார்க்கபடுகிறது.. இப்போதே மக்கள் நல கூட்டணி மேடைகளில் கம்யூனிஸ்ட் சேர்ந்தவர்களை பார்க்க முடியவில்லை.கவனியுங்கள்.. தே மு தி க தனித்து தெரிய ஒரு கட்சி தேவை அவ்வளவே.. அதற்கு இதான் சரியான கூட்டணியாய் இருக்கும்.. தமிழக ஆட்சியை தற்போது பிடிக்கும் நிலையில் தேமுதிக இல்லை. அதே நேரம் தன் கட்சியை அடையாளப்படுத்திகொள்ள வேண்டும். 23-Feb-2016 12:53 pm
அன்புமணி அமைச்சராக இருந்தபோது என்று குறிபிட்டீர்கள்.. அவர் வெறும் அமைச்சராக இருக்கும் பொழுது அதுவும் மத்தியஅமைச்சராக இருக்கும் பொழுது தன் சாதி சுயநலம் சார்ந்து சாதியம் பற்றியான முடிவுகளை எடுக்க முடியாது .. அவர் கையில் முதலமைச்சர் பதவி கொடுத்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் அறிவீர்கள் !!! ஸ்டாலின் அவர்கள் ஊழல் படிந்த கட்சியின் செல்லபிள்ளை ... அவர் மட்டும் எப்படி ஊழல் செய்யாமல் இருப்பார் /// இலங்கை படுகொலை நடந்த போது நமக்கு நாமே என்று பயணம் ஏதாவது போனாரா ! தான் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார் ...!!! 22-Feb-2016 10:12 pm
அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Feb-2016 9:46 pm

தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைப்பது தமிழகத்துக்கு நல்லதாக அமையும் ??

தேமுதிக பற்றி உங்கள் எண்ண ஓட்டம் ??!!!

மேலும்

தமிழகத்துக்கு எது நல்லது என தெரியவில்லை. ஆனால் தேமுதிக வுக்கு நல்லது திமுக கூட்டணிதான். 28-Feb-2016 3:39 pm
பாஜக ஒரு தேசிய கட்சி ..அவ்வளவே .. தமிழ்நாட்டில் பாஜக என்பது மத சார்பான காட்சிகளில் இதுவும் ஒன்று ...அப்படி தான் நிலைமை .. கம்யூனிஸ்ட் என்ன செய்தார்கள் ??!! தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகம் கேரளம் ..இதற்கு பெயர் இந்தியாவாம் நான் தேச துரோகியா ??? கேள்வி எழுப்புவது எப்போதும் தவறில்லை ..அதற்கு தகுந்த பதில் சொல்லாது தான் தவறு... கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்புகிறார்கள் ..பாஜக பதில் சொல்லவேண்டும் ... 23-Feb-2016 8:45 pm
பாஜக இல்லேன்னு யாரும் சொல்ல முடியாது.. இந்த கேள்வி எம்.பி தேர்தலில் தற்போது மக்கள் நல கூட்டணியில் உள்ள வைகோ தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி வைத்தாரே அப்போ கேட்டு இருக்கணும் தமிழ்நாட்டில் பா ஜ க உள்ளதா என்று? இருபெரும் கட்சிகள் ஊழலில் திளைத்தவை.. மக்கள் நல கூட்டணியில் கம்யூனிஸ்ட் இருந்தால் அது கொஞ்சம் கூட சோபிக்க வாய்ப்பே இல்லை.. இன்றைய நிலையில் JNU விவகாரம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேச விரோத கட்சியாக தான் பார்க்கபடுகிறது.. இப்போதே மக்கள் நல கூட்டணி மேடைகளில் கம்யூனிஸ்ட் சேர்ந்தவர்களை பார்க்க முடியவில்லை.கவனியுங்கள்.. தே மு தி க தனித்து தெரிய ஒரு கட்சி தேவை அவ்வளவே.. அதற்கு இதான் சரியான கூட்டணியாய் இருக்கும்.. தமிழக ஆட்சியை தற்போது பிடிக்கும் நிலையில் தேமுதிக இல்லை. அதே நேரம் தன் கட்சியை அடையாளப்படுத்திகொள்ள வேண்டும். 23-Feb-2016 12:53 pm
அன்புமணி அமைச்சராக இருந்தபோது என்று குறிபிட்டீர்கள்.. அவர் வெறும் அமைச்சராக இருக்கும் பொழுது அதுவும் மத்தியஅமைச்சராக இருக்கும் பொழுது தன் சாதி சுயநலம் சார்ந்து சாதியம் பற்றியான முடிவுகளை எடுக்க முடியாது .. அவர் கையில் முதலமைச்சர் பதவி கொடுத்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் அறிவீர்கள் !!! ஸ்டாலின் அவர்கள் ஊழல் படிந்த கட்சியின் செல்லபிள்ளை ... அவர் மட்டும் எப்படி ஊழல் செய்யாமல் இருப்பார் /// இலங்கை படுகொலை நடந்த போது நமக்கு நாமே என்று பயணம் ஏதாவது போனாரா ! தான் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார் ...!!! 22-Feb-2016 10:12 pm
கட்டாரி அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2016 4:53 am

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க

மேலும்

அனைத்தும் மிக அருமை...! காதல் வாய்க்கப்பெறாதவர்களின் நிலவறை அலமாரிகளுள் இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு கைக்குட்டை...! - அருமை 20-Mar-2016 12:19 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!! 09-Mar-2016 5:27 pm
ஹைக்கூ தாெடர் கவிதை பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:47 am
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. 25-Feb-2016 6:58 pm
கட்டாரி அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 12 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Feb-2016 4:53 am

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க

மேலும்

அனைத்தும் மிக அருமை...! காதல் வாய்க்கப்பெறாதவர்களின் நிலவறை அலமாரிகளுள் இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு கைக்குட்டை...! - அருமை 20-Mar-2016 12:19 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!! 09-Mar-2016 5:27 pm
ஹைக்கூ தாெடர் கவிதை பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:47 am
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. 25-Feb-2016 6:58 pm
கிருஷ் குருச்சந்திரன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2016 1:25 am

மவுனத்தின் புன்னகை 8: மன்னிப்பு

அசோகமித்திரன்

மனிதர் அனைவரின் அறிவும் மூன்று விதமாக வளர்கிறது என்கிறார்கள். முதலில், நேரடி அனுபவம்; இரண்டாவது, அனுமானம் அல்லது ஊகித்து அறிதல். மூன்றாவது, நம்பிக்கைக்குரியவர் சொன்னது. எனக்குப் பல எழுத்தாளர்கள் பற்றிச் சொன்னவர் அற்பாயுளில் போய்விட்டார். உண்மையில் என்னைத் தீவிரத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அவரும் தவறு செய்யக்கூடியவர் என்று நினைக்க வருத்தமாக இருக்கிறது.தவறு நடந்துவிட்டால் மன்னிப்புக் கோருவதுதான் முறை. சிறுவயது முதலே நான் தவறை ஒப்புக்கொள்ளத் தயங்கியது இல்லை. சிலர் வேதாந்தம் பேசலாம், ‘யார்தான் தவறு செய்யவில்லை’ என்று. முன்னாள் அமெரிக்க ஜனாபதி கிளிண்டன் நினைவு எனக்கு வருகிறது. அவர் ஒரு விஷயத்துக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டவர்.நான் எழுத்தாளர் அகிலனுடன் பல கருத்தரங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த நாளில் நேரில் போய் நலம் விசாரித்து வந்திருக்கிறேன். அவர் தலைமை தாங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளனாக இருந்திருக்கிறேன். அவர் காலமான செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் இல்லத்துக்குச் சென்று என் இறுதி மரியாதையைச் செலுத்தியிருக்கிறேன். அகிலன் விருது பெற்ற சம்பவத்தை இந்தத் தொடரின் ஆரம்ப கட்டுரைகளில் எழுதும்போது நேர்ந்த தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சன் அபிப்பிராயங்களை வாரிக் கொட்டுவார். அன்று அவர் ஆகிருதிக்கு அவரை யாரும் மன்னிப்புக் கேட்க வைத்தது இல்லை. ஆனால், அவருடன் ஓர் ஊழியன் போல இருந்த பாஸ்வெல் திடீரென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். முதலில் ஜான்சனுக்குப் புரியவில்லை.அப்புறம் அவரே பாஸ்வெல்லைப் போய்ப் பார்த்தபோது பாஸ்வெல் இப்படி சொன்னாராம்: “தனியே இருக்கும்போது என்னைத் திட்டுங்கள். கிண்டல் செய்யுங்கள். நான் ஸ்காட்லண்ட்காரன் என்று கேலி செய்யுங்கள். இதெல்லாம் மண்தரையில் தள்ளுவதைப் போல. ஆனால், பிறர் இருக்கும்போது நீங்கள் இப்படிப் பேசினால் என்னைக் கூழாங்கற்கள் மீது தள்ளுவது போலிருக்கிறது.”பாஸ்வெல்லின் வாழ்க்கை லட்சியமே ஜான்சன் சொன்னதை எல்லாம் உடனுக்குடன் குறிப்பு எடுப்பதுதான். அப்படிப்பட்டவர் மனம் நொந்து போய்விடும்போது, அதைக் கண்டு ஜான்சன் வருந்தி மன்னிப்பு கேட்டுவிடுவாராம்.நான் படித்த பள்ளிக்கூடம் சோமசுந்தர முதலியார் என்பவரால் நிறுவப்பட்டது. பிரின்சிபால் மட்டும் முதலியார். மற்ற ஆசிரியர்கள் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாவது வகுப்புக்கு என்.ஆர்.கே.எல். நரசிம்மன் என்ற பெயர் கொண்டவர் ஆசிரியராக வந்தார். அவரை நாங்கள் ‘பெங்கால் டைகர்’ என்று அழைப்போம். எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. வகுப்பு ஆசிரியர்தான் ஆங்கில வகுப்பு எடுக்க வேண்டும் என்பது அந்தப் பள்ளியின் மரபு.என்.ஆர்.கே.எல் ஆங்கிலத்தைப் புது மாதிரியாகக் கற்றுக் கொடுத்தார். எந்தக் கேள்விக்கும் அதன் பதிலுக்கும் முதலில் மனதில் தமிழில் வடிவம் கொடுத்துக் கொண்ட பின் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பார். நான் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன். ஆங்கிலத்தில் பிழைகள் குறைவாகவே நேர்ந்தன. நான் அவரை நினைத்துக் கொள்ளாத நாளே கிடையாது.அப்படிப்பட்ட அவர் ஒருமுறை என்னை நையப் புடைத்துவிட்டார். அந்த நாளில் ஆசிரியர்கள் அடிப்பது சர்வ சாதாரணம். சில நேரங்களில் தண்டனைக்குப் பிரின்சிபால் அறைக்கு அனுப்புவார்கள். அவர் அறையில் ஒரு மூலையில் மூன்று நான்கு பிரம்புகள் இருக்கும். மாணவன் கையை நீட்டவேண்டும். பிரின்சிபால் மூன்று முறை அல்லது நான்கு முறை அடிப்பார். ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் மாணவர்களை அடிப்பதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் அன்று பெங்கால் டைகர் என்னைக் கன்னத்தில் அடித்திருந்தார். ஒரு பக்கம் வீங்கிவிட்டது. அம்மாவின் வற்புறுத்தலில் அப்பா ஒரு புகார் கடிதம் எழுதினார். எனக்கு அதைக் கொடுக்கவே மனசில்லை. மாலையில் எல்லா வகுப்புகளும் முடிந்த பிறகு பெங்கால் டைகரிடம் கொடுத்தேன். “ஏண்டா, இதெல்லாம் போய் வீட்டில் சொல்வார்களா?” என்று கேட்டார். “நான் சொல்லவில்லை சார். ஆனால், கன்னம் கொஞ்சம் வீங்கியிருந்தது.” என்றேன்“நான் பதில் எழுதணுமா?”“வேண்டாம் சார். நான் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன்” என்றேன்.தெலுங்குநரசிம்ம ராவ் என்று ஓர் ஆசிரியர் எனக்கு ஓராண்டு வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவருக்கும் பல தருணங்களில் அடிக்கத் தோன்றும். ஆனால், அவர் அடித்தால் அவருக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும். அவர் பன்ஸிலால்பெட் என்ற இடத்தில் ஒரு சிறு வீட்டை இன்னொரு ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். நான் பல முறை நோட்டு புத்தகக் கட்டுகளை அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். அவர் வீட்டுக்குச் சென்றால் பரிதாப உணர்ச்சியே தோன்றும். அவரோடு அந்த வீட்டைப் பகிர்ந்துகொண்ட இன்னொரு ஆசிரியர் அடுப்படியில் சமையல் செய்துகொண்டிருப்பார்.அந்த நாளில் சமையல் செய்ய விறகுதான். அடுப்பை மூட்டுவது எப்படி? காகிதத்தை சுருட்டி கொளுத்தி விறகைப் பற்ற வைக்க வேண்டும். நரசிம்ம ராவ் ஒருமுறை அவர் திருத்தி மதிப்பெண் தரவேண்டிய விடைத்தாள்களில் சிலவற்றை அடுப்புப் பற்றவைக்க எடுத்துக் கொண்டுவிட்டார். அப்படி அக்னிப்பிரவேசம் செய்த விடைத்தாள்களில் என்னுடையதும் ஒன்று. நான் சிறு பையன். 13 வயதிருக்கும். என்னிடம் தனியாக “என்னை மன்னித்துவிடு. வீட்டில் மூன்று நான்கு விடைத்தாள்கள் தொலைந்துவிட்டன. கவலைப்படாதே உனக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.அந்த நாளில் 60 மதிப்பெண்கள் வாங்கினால் ஃப்ர்ஸ்ட் கிளாஸ். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் அடி வாங்கினால்தான் என்ன என்று தோன்றும்.நான் ஐந்திலிருந்து ஆறாம் வகுப்புக்குப் போயிருந்தேன். விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்த நாளில் நான் பள்ளிக்குப் போகவில்லை. அந்த நாளில் முதல் நாளில் வகுப்புக்கு வராத மாணவர்களை விலக்கிவிடுவார்கள். அந்த வகுப்பு வாத்தியார் வடிவேலு என்பவர். என் அப்பா போட்டுக்கொள்வது போல ஒரு தொப்பி போட்டுக் கொள்வார்.அடுத்த நாள் அவர் என்னை பள்ளி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, நான் கட்ட வேண்டிய அபராதம், மாதச் சம்பளம் எல்லாம் சேர்த்து ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார். நான் வீட்டுக்கு ஓடினேன். அங்கிருந்து என் அப்பா அலுவலகத்துக்குச் சென்று “நான் இவ்வளவு பணம் கட்டினால்தான் சேர்த்துக்கொள்வார்களாம்” என்றேன். எல்லாம் 10 ரூபாய்க்குள்தான். அந்தப் பணம் அப்பாவிடம் இல்லை. அவருடைய அதிகாரியிடம் கடன் வாங்கிக் கொடுத்தார். நான் மறுபடியும் பள்ளிக்கு ஓடினேன். வடிவேலு வாத்தியார் சாப்பிடக் கூடப் போகாமல் எனக்காகக் காத்திருந்தார். அந்தப் பணத்தை அலுவலகத்தில் கட்டி, என் பெயரை ஆஜர் பட்டியலில் சேர்த்த பிறகுதான் சாப்பிடப் போனார்.வடிவேலு வாத்தியாரும் அடிப்பார். ரொம்பக் கடுமையான தண்டனை முழங்காலில் நிற்க வைப்பது. அவருடைய வகுப்பில் எப்போதும் இரண்டு மாணவர்களாவது முழங்காலில் நின்று கொண்டிருப்பார்கள்.“என்ன காட்டுமிராண்டித்தனம்?’’ என்று இன்று கேட்கலாம். ஆனால், நான் பள்ளியில் படித்த ஆறு ஆண்டுகளில் எனக்கு வகுப்பு எடுத்த எந்த ஆசிரியரையும் மறக்க முடியவில்லை. ஒருவர் மீதும் கோபம் வரவில்லை.“நீங்கள் அப்படி முதுகெலும்பு இல்லாமல் இருந்தால் எல்லாரும் அப்படியிருக்க வேண்டுமா?” என்று சிலர் கேட்கக் கூடும். இது வெறும் முதுகு சம்பந்தப்பட்டது அல்ல. என் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் நிழலாகத்தான் நினைவில் இருக்கிறார்கள். ஆனால், என் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.- புன்னகை படரும்…

மேலும்

கிருஷ் குருச்சந்திரன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2016 1:47 am

கல்கியின் எண்ணம். கல்கி ஒரு பாடலுடன்   ---செய்தி 

    தொகுப்பு: மு. பவித்ரா
    கோ. நந்தினி படங்கள்: கோ. நந்தினி  
தற்சமயத்தில் பாலிவுட்டின் ‘லேடி' ரா.பார்த்திபன், க‌ல்கி கேக்லான்! காரணம், அவரின் சமீபத்திய வீடியோ ‘தி பிரின்டிங் மிஷின்' யூடியூபில் வெளியான சமயத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.‘மார்கரிடா வித் எ ஸ்ட்ரா' உள்ளிட்ட பல வித்தியாசமான படைப்புகள் வழியாக ‘பாம்பேவாலா'க்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.பெண்கள், இன்றைய செய்தித்தாள்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எவ்வாறு வியாபரம் ஆக்கப்படுகின்றன என்பன போன்ற விஷயங்களை, 'டக். டகடக.. டக்...' என 'டைப்ரைட்டர்' ஒலியின் பின்னணியில் ‘பசக்'கென நம் மனதில் பதியவைக்கிறார் கல்கி.இந்த வீடியோவைப் பற்றிச் சில பெண்களிடம் கேட்டபொது அவர்கள் தங்கள் கருத்துகளையும் உணர்வுகளையும் அள்ளித் தெளித்தனர்.ஸ்ரீலதா, பேராசிரியர்வன்கொடுமையினால பெண்களுக்கு எற்படுற மனம் மற்றும் உடல் சார்ந்த கஷ்டங்களைப் பத்தி யாருமே நினைச்சுப் பார்க்கிறதில்ல. பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் பெரிசுபடுத்திக்காட்டுற மீடியா, அந்தக் கொடுமையினால பெண்களுக்கு ஏற்படுற உணர்வுகளைச் சொல்றதேயில்ல. காலையில நியூஸ்பேப்பர் படிக்கிறப்போ காபி சூடு மறையறதுக் குள்ள இந்த மாதிரி நியூஸோட சூடும் மறைஞ்சுடுது. இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் கல்கியின் எண்ணம். என் எண்ணமும் கூட அதேதான்.பாரதி, கல்லூரி மாணவிமீடியா எப்படி இரக்கமே இல்லாம ‘இன் சென்ஸிடிவ்'வா நடந்துக்குதுனு சொல்லுற வீடியோதான் இது. இந்த மாதிரியான வீடியோலாம் இங்கிலீஷ்ல மட்டுமே வருது. இதை தமிழ்ல பண்ணுறதுக்கு யாரு இருக்கா? நாம‌ முன்வருவோமா?அபிராமி, இதழியல் மாணவிஇப்ப இருக்குற அவசர உலகத்துல நியூஸ்பேப்பர் படிக்கிறவங்கள்ல எத்தனை பேர், பிரின்ட் செய்யப்பட்ட நியூஸ் உண்மைதானான்னு பார்க்கிறவங்களா இருக்காங்கன்னு பார்த்தா அந்த எண்ணிக்கை ரொம்பவும் குறைவு. மத்தவங்க எல்லாரும் நியூஸ்பேப்பர்ல போடுற நியூஸ் உண்மைதான்னு ஆணித்தனமா நம்புறாங்க. கல்கி சொல்லியிருக்கிற‌ மாதிரி நம்ம‌ அடுத்த தலைமுறையினர் இதையெல்லாத்தையும் ஒரு ‘ஹிஸ்ட்டிரியா'தான் படிப்பாங்களே தவிர ஆராய்ச்சி செஞ்சி பார்க்க மாட்டாங்க.நிர்தியா, பின்னணி பாடகர்கல்கி கேக்லான் எப்போதும் கேமராக்களுக்கு மத்தியில் இருப்பவர். அதனால ஊடகங்களைப் பற்றி அவருக்கு அதிகமா தெரிஞ்சு வெச்சிருப்பார். இந்த வீடியோவுல குறிப்பா ‘ரீரிட்டன் ஹிஸ்ட்டிரிஸ்’ங்கிற‌ வரி எனக்குத் தனிப்பட்ட முறையில ரொம்ப‌வும் பிடிச்சிருந்தது.Keywords: க‌ல்கி கேக்லான், தி பிரின்டிங் மிஷின், யூடியூப் வீடியோ, மார்கரிடா வித் எ ஸ்ட்ரா

மேலும்

மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jan-2016 3:01 am

காட்சிப் பிழைகள் - கசல் தொடர் - மணிமீ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(1)
பிள்ளையிவன் வணங்குதமிழ் கோலோச்சும் உலகே
பிரித்தறிந்தால் வார்த்தைகளைக் கசலிதுவும் அழகே -1

வள்ளுவரும் ஒளவையுமே சொன்னதமிழ் புதியவை
வாங்கியதை வாழ்ந்திடவே உள்மனதில் பதியவை -2

வாசமுண்டு கேட்டதுண்டோ வயலுழுதோர் பாட்டும்
வயிற்றில்பசி கொடுத்தவரை விரட்டியதோர் கூட்டம் -3

சோதனைகள் மனிதருக்கு வாழ்வினிலோர் கட்டம்
சோறுநிலம் அழித்தோர்க்கு வாழ்வேபேர் நட்டம் -4

தொலைப்பதுவோ கிராமங்களை மாற்றமென்ற பெயரால்
துயருருமே சந்ததிநீ செய்யுகின்ற தவறால் -5

நாகரிகம் என்றுசொல்லும் நாடகத்தை நிறுத்து
நலமென்ன பெருக்கிவிட்டாய் பழ

மேலும்

நன்றி ... தங்களின் ரசனைக்கு வணக்கம் ... வெள்ளை மனப் பாராட்டில் துள்ளுகிறது உள்ளம் வாழ்க வளமுடன் 03-Feb-2016 11:35 am
நன்றி ... தங்களின் பாராட்டில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 03-Feb-2016 11:33 am
ஒவ்வொரு வரிகளும் ரசனை.. ஒருவித துள்ளல் வரிகளை வாசிக்கையில் மனதுள் இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது.. இசையும் இலக்கணமும் கலந்த தத்துவ கசல் அழகு, வாழ்த்துக்கள் நண்பா. 02-Feb-2016 7:21 pm
அசத்தல்!அத்தனையும் மிகச் சிறப்பு.....மிளிரும் வரிகள் ....அற்புதம் நட்பே... 02-Feb-2016 6:59 pm
கிருஷ் குருச்சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2016 3:37 am

குழந்தையின் தவிப்போடு என் காதல் சொன்னேன்
தாயின் பேரன்போடு ஏற்றுக்கொண்டாய்

===========================

என்னுடைய பிறந்தநாள் கேக்கில்
நீ ஏற்றிவைத்த அந்த ஒற்றை மெழுகுவர்த்தி
இன்னும் அணையவேயில்லை தெரியுமா

===========================

உன்னுடன் இருக்கும்போது மட்டும்
வந்து கையேந்துவான் ஒரு பிச்சைக்காரன்
தொழில் நுணுக்கம் தெரிந்தவன் அவன்

===========================

எத்தனை கிளிஷேக்கள் இருந்தாலும்
போரடித்ததேயில்லை நமது காதல்

===========================

கஸல் இலக்கணம் உனக்குத் தெரியுமா என்றாய்
காதல் இலக்கணம் மட்டுமே எனக்குத் தெரியும் என்றேன்

=======================

மேலும்

//ஜவுளிக்கடையில் உன்னுடைய சாயலில் யாரோ தெரிந்தார்கள் கூப்பிடவில்லை காரணம் அது நீயாகவும் இருந்துவிடலாம் // தங்களின் இயல்பில் மிளிர்கிறது கஜல் நட்பே..... 02-Feb-2016 6:50 pm
நீங்கள் எழுதும் அனைத்துமே ஆகச் சிறந்ததுதான் நண்பா... இதில் நான் என்ன சொல்ல... வாழ்த்துக்கள்... 31-Jan-2016 12:47 am
அம்மா பற்றி நீ எழுதிய கவிதை மனதை விட்டு அகலவில்லை . அற்புதமாய் எழுதுகிறாய் . பேரும் புகழும் பெற்று வாழ்க அன்பு மகனே ! 29-Jan-2016 11:03 am
// ஒரு ஆகச்சிறந்த கவிதை ஒன்றை // பாருங்கள் எவ்வளவு பிழையான வாக்கியம். நீங்கள் கருத்துப் போட்ட உற்ச்சாக உணர்ச்சி வெள்ளத்தில் எனது திக்கு முக்காடலையே இது காட்டுகிறது 29-Jan-2016 3:42 am

சில நேரங்களில் புரட்சி கூட வறட்சி நிவாரணமாகிப் போகும் அளவுக்கு  
இந்தச் சமூகம் சீர்கெட்டு நிற்கிறது


- ஜின்னா

மேலும்

சில வெற்றிடங்களை காற்று நிரப்பாது
காலம்தான் நிரப்பும் 


- ஜின்னா 

மேலும்

நேற்று ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் எழுத்து நண்பர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்கு மிகுந்த தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால் அரங்கத்திற்கு உள்ளே சென்றதும் உறவினர் ஒருவரின் சுபநிகழ்ச்சிக்கு வந்துவிட்டோமோ என்பதான சூழல் நிலவியது. எழுத்து நண்பர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். புகைப்படத்தில் பார்த்ததை விட அவர்கள் நேரில் சற்று வேறுமாதிரி இன்னும் நன்றாகவே இருந்தார்கள். 

விழா அரங்கத்திற்கு வழிதெரியாமல் ரோட்டில் ஒருமணிநேரமாக சுற்றிக்கொண்டிருந்த என்னை ஆற்றுப்படுத்தி அரங்கத்திற்கு வழிகாட்டிய பொள்ளாச்சி அபி சார் அவர்களுக்கும், விழாவிற்கு வந்தே ஆகவேண்டும் என்றும் பாதியிலேயே வேறுஒரு அலுவல்  காரணமாகக் கிளம்ப இருந்த என்னை தடுத்து நிறுத்தி விழாவின் கடைசிவரை  இருக்க வைத்த ஜின்னா அவர்களுக்கும், விழா முடியும்வரை கூடவே இருந்த குமரேஷன் கிருஷ்ணன், கனா காண்பவன், மனோ ரெட், அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 

அகன் சார், ராஜன் சார், திரு கருணாநிதி அவர்கள், திரு முரளி அவர்கள், திரு பழனிகுமார் அவர்கள் , புதிய கோணங்கி, சந்தோஷ் குமார், கவிஜி, ஆசை அஜித், சுஜய் ரகு, சேகுவேரா கோபி,   சியாமளா மேடம், சாந்தி மேடம், புலமி, இவர்களைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
 
பேராசிரியர் க அன்பழகன் அவர்களையும் இனமான தலைவர் கி வீரமணி அவர்களையும் ஈரோடு தமிழன்பன் அவர்களையும் மற்றும் சில பிரபல்யங்களையும் அருகே பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில் பெருமகிழ்ச்சி. 

கவிக்கோ அரங்கத்தில் இருந்து குமணன்சாவடிவரை தன்னுடைய பைக்கில் ட்ராப் பண்ணினார் ஆசை அஜித். அவருக்கும் நன்றிகள்.

நண்பர் ராம்வசந்த் அங்கே வந்திருந்தால் விழா எனக்கு இன்னும் முழுமை பெற்றிருக்கும். ஆனால் அவர் ஹைதராபாத்தில் இருந்துகொண்டு அடம் பிடிக்கிறார். 

ரொம்பநாட்கள் கழித்து நேற்றிரவு நல்ல வெளிச்சமான ஓர் உறக்கம் வாய்த்தது`

மேலும்

அவ்வளவு உடல்நலக் குறைவிலும் அவ்வளவு உற்சாகமாக இருந்தீர்கள் மேடம் , கிரேட் 20-Oct-2015 10:27 pm
விழாவில் அனைவரையும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி க்ரிஷ்ணதேவ். நான் எனது உறக்கத்தை விழாவின் முன் நாள் இரவு தொலைத்துவிட்டிருந்தேன். வெளியூர் பயணம். நள்ளிரவுதான் சென்னை திரும்பினேன். பிரயாண களைப்பு. மதியம் 2 மணி அளவில் அரங்கம் எங்கிருக்கிறது வந்து பார்த்துவிட்டு சென்றேன். விழா துவங்கும் முன்பாக வரவேண்டும் என்று நினைத்தேன். உடல் நலக் குறைவால் என்னால் நேரத்திற்கு வர இயலாமல் போய்விட்டது குறித்து எனக்கு வருத்தம். 20-Oct-2015 8:59 pm
நான் வர வில்லை தோழரே வர முடியா சூழ் நிலை ... அடுத்த சந்தர்ப்பத்தில் வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்போம் நன்றி 19-Oct-2015 11:17 pm
வைத்திருந்தால் = வாய்த்திருந்தால் 19-Oct-2015 10:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (469)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (470)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (470)

user photo

jmn1990

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே