சந்தோஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்தோஷ்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  17-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2015
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  29

என்னைப் பற்றி...

எமக்கு தொழில் கவிதை....
எழுத்தால் வாழ்பவன்...
உறுமீன் வர காத்திருக்கும் கொக்காய் காத்திருக்கும்... தமிழ் காதலன்.........

என் படைப்புகள்
சந்தோஷ் செய்திகள்
கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) கவித்தாசபாபதி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Nov-2015 9:27 pm


நண்பர்களே என்னுடைய கவிதை இன்றைய ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளது...

மேலும்

வாழ்த்துக்கள் தோழி :-) 27-Dec-2015 6:31 pm
வாழ்த்துக்கள் கிருத்திகா... 17-Nov-2015 7:35 pm
வாழ்த்துகள் !!!! 14-Nov-2015 8:10 am
வாழ்த்துக்கள் கிருத்திகா..!! 13-Nov-2015 9:59 pm
ஜனனி விஜய் அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Nov-2015 11:07 am

காடு மலை மேடெல்லாம்
அலைந்து திரிந்த மேகம்...
தென்றல் அவளைக் கண்டு
மையல் கொண்டதாலே..
சிந்திச் சென்ற சாரல்..

சின்னச் சின்ன சிதறல்கள்
சில்லென்று பட்டுத் தெறிக்க..

அதன் விரல் நுனிப் பற்றிக் கொண்டு
'போகதே போகதே.. நீ பிரிந்தால்...
நான் அழுவேன்'... என்று
செல்லச் சண்டை பிடித்துக்
கொண்டு சினுங்குகின்றது - என்
சன்னல் கண்ணாடி...

அதை ரசிக்கக் கூட எனக்கு
அவகாசம் கொடுக்காமல்...
சில்லிட்டு இருந்த என் இதழ்களில்
இதமாய்.. இனிமையாய்..
படிந்த ஸ்பரிசம்..

இதழ் தொட்டுத் தொடங்கிய
இதமான உஷ்ணம்...
என் உடலுக்குள் மிதமாகப் பரவி..
சொர்கத்தின் வாயில் வரை
இழுத்துச் சென்று..
இயல்பு மற

மேலும்

கருத்துக்கு நன்றி தோழி.. தங்களது வரவால் மகிழ்ந்தேன் :) 22-Nov-2015 12:44 am
அழகான ரசனை தங்களுக்கு.... 20-Nov-2015 10:46 pm
வருக வருக தோழி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி... 18-Nov-2015 11:52 pm
ஆஹா .....,, அழகு நிறைந்த வரிகள் ஜனனி சூப்பர் தோழி வாழ்த்துக்கள் தொடருங்கள் 12-Nov-2015 3:19 pm
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 8:50 am

கடலலை ரசிக்க
கடற்கரை மணல் தேடி
காலாற நடந்து வந்தேன்…

சுற்றிவிட்ட மயக்கத்தில்
நின்றுவிட்ட பூமி
தடுமாறி நடுங்க
சட்டென சீறி பாய்ந்து
திட்டென அழித்தது
கடல் அலை…

ஈறாரு அடி பாய்ந்து
ஈன்றெடுத்த பிள்ளைகளை யெல்லாம்
ஓரிரண்டு மணித்துளியில்
ஒத்தி எடுத்துக்கொண்டு
எஞ்சிய பேரை எல்லாம்
எச்சமாய் விட்டு வைக்க
எஞ்சி நிற்கின்றது
கடற்கரை மணல்
எங்கள் கடைவாயில் வரை…!

மறுபடியும் வேண்டாம்
கடல் தாயே
கருவறை கருவழிக்க உனக்கும்
உரிமை இல்லை…

மேலும்

அருமை நண்பரே 10-Nov-2015 6:49 pm
மறுபடியும் வேண்டாம் கடல் தாயே கருவறை கருவழிக்க உனக்கும் உரிமை இல்லை… கண்ணீருடன்... 06-Nov-2015 12:26 pm
சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 8:44 am

அறிவைத்தேடும்
பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
அலைகின்ற அறிவுக்கோவில்
சாதி மதம் துறந்த
சமத்துவுப்பூங்கா…

எங்கெங்கோ பிறந்து
மழை மேகக்கூட்டம் போல்
ஒன்றாகி நின்ற
எங்கள் சொர்கமும்
இதுதான்
எவ்வளவு துன்பமும்
எள்ளளவு ஆகும்…
நண்பனின் முகம் பார்க்க

ஆசிரியர் சொன்ன கதைகள்
அரண்டு போன பின்னே
நம் மேசைகள் ஒவ்வொன்றும்
நம் கதை சொல்ல
நகைத்துக்கொள்கிறது
அவ்வப்போது கரும்பலகை….
.
காலமெல்லாம் கடந்து போக
நான்காண்டு முடிவில்
எங்கள் இதயம் கணக்க
நட்புக்கினிய நண்பனையும்
மகிழ்ச்சி பொங்கிய
நான்கு வருடங்களையும்-விட்டு,

எடுத்துச்செல்கிறோம்
கைக்குட்டையில்
கண்ணீர்த்துளிகளை மட்ட

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 8:39 am

வெண்ணிலவின்
வருகை பார்த்து
வெட்கப்பட்டு சிவக்கிறது
சூரியன்...

கண்ணே நீ
என்னை பாரடி
நானும் சிவக்க ......

மேலும்

சந்தோஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2015 1:22 pm

நபர்1: இப்பலாம் பருப்பு குழம்ப பாத்தாலே பிடிக்கமட்டேன்குது...
நபர்2: ஏன்?
நபர்1: பருப்பு விலை அதிகமா இருக்குன்னு ரசத்துல காய்கறி அறுத்து போட்டு
குழம்புன்னு குடுக்குறாங்க...!!!!

மேலும்

சந்தோஷ் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2015 11:42 am

சின்ன பூக்களை
சில்லரைகளுக்காக
மடலொடித்து பொட்டுவிட்டனர்
அவர்களின் கனவை
காற்றில் விட்டனர்..

பிஞ்சுப்பிரபஞ்சங்கள்
அறிவுக்கோவிலில்
அடைக்கலம் பெறாமல்
தெநீர் வளாகத்தில்
பென்ச் துடைக்கும் பணியில்....

வெடிவைக்கப்போகும் போது
வெடுக்கென உதரும் கரங்களில்
வெடிமருந்து கொடுத்து
பட்டாசு படைக்கச்சொல்கின்றனர்...

சோலையில் வாழவேண்டிய
அழகு மலர்கள்
சாலையோரம் கல்லுடைக்கும் பணியில்...

சிரிப்பை தொலைத்த இந்த
சின்ன மேகங்கள்
கண்ணீர் வடிக்கின்றன...

இந்த கருப்பு மலர்களின்
கண்ணீரை துடைக்க கைகுட்டை வேண்டாம்

கைகொடுத்து வாழ்வில்
கரைசேர்த்து
கையசைத்து
அனுப்பி வையுங்கள்
இந்த கருப்பு மலர்கள

மேலும்

ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன் தோழரே நன்றி.... 05-Nov-2015 1:08 pm
நல்ல சமூகச்சிந்தனை பதிப்பு !! எழுத்துப்பிழைகள் நேராமலும் மாற்று மொழி வார்த்தைகள் பயன்பாட்டையும் கூடுமானவரை தவிர்க்கப்பாருங்கள் !! 05-Nov-2015 12:24 pm
யார் தான் முன்வருவாரோ? 05-Nov-2015 11:48 am
சந்தோஷ் - சந்தோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2015 11:53 am

வானமே வெறிச்சோடி
போய்விட்டது...
நிலவே நீ இல்லாத
இரவில்...

நீ இல்லா குறை
போக்க விசும்பும்
விண்மீன்களால்
வடியும் இருள்...
போர்வைக்குள் நான்...

மேலும்

நன்றி தோழரே 05-Nov-2015 12:02 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2015 11:57 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) நிலாகண்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Oct-2014 7:22 pm

கதிரவனுக்கு முன்
கண்விழித்தாய்
கைப்பிடி அரிசி தனில்
கஞ்சி வைத்தாய்

உன் இன்முகம்
பார்த்து தானே
இன்றைய விடியலும்
வந்ததம்மா

கையில் தேநீர்
கண்ணில் பாசம்
அன்னையே உன்னை
அணைத்துக்கொண்டேன்

குட்டி செல்லம் என
கொஞ்சியே நீ என்னை
குளிக்க வைத்தாய்
குழந்தையாக


பள்ளிக்கு செல்லவென்று
பதறிய என் பையில்
பகல் உணவு கஞ்சிதனை
பக்குவமாய் எடுத்து வைத்தாய்


உச்சி முகர்ந்தென்னை
முத்தமிட்டு அனுப்பி வைத்தாய்
அனுப்பும் போதே அறிந்தாயா
தாயே
என்னை நீ பிரிவாய் என்று...?

நான் கண் மறையும் முன்
உன்னை மண் மறைத்ததை
கனவாக இருந்திடவே
வேண்டுதம்மா என் உள்ளம்

சின்ன

மேலும்

நன்றி நன்றிகள் 05-Nov-2015 11:52 am
பிரிந்த தாயின் குழந்தையின் குமுறல் இக் கவிதையில் குமுறுகிறது ... இக் கவிதை படிக்கும் அனைவர்க்கும் அவர்களது தாயின் குமறல் நினைவில் குமுறுகிறது... 05-Nov-2015 11:47 am
நன்றி நன்றிகள் . 05-Nov-2015 6:57 am
நன்றி நன்றிகள் . 05-Nov-2015 6:56 am
சந்தோஷ் அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Nov-2015 6:49 pm

என் நினைவுகளில்
சூல் கொண்ட
எண்ணங்கள்

எழுதுகோலின்
வெப்பத்தால்
மை தீர்ந்துபோகும் வரை
கொட்டி
தீர்த்துவிடுகிறது
அனல் பறக்கும்
எழுத்துப்பிரபஞ்சங்களை......

மேலும்

நன்றி நண்பரே... திருத்திக்கொள்கிறேன்.... 05-Nov-2015 7:53 am
எழுதுகோள் - எழுதுகோல் எழுத்து பிரபஞ்சங்களை.- எழுத்துப்பிரபஞ்சங்களை 05-Nov-2015 6:49 am
நன்றி தோழரே...... பாராட்டுக்களை விட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.. 05-Nov-2015 6:33 am
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Nov-2015 12:17 am

தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும்
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் !
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் !
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால்
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் !
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா )

மேலும்

சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?கண்டிப்பா இல்லை அம்மா..... அழகிய பாடல் மிகவும் அழகு அம்மா......! 05-Nov-2015 10:50 am
சேய் போல மகிழ்வுதரும் சொந்தம் இல்லை..அடித்து சொல்ல இயலும்.. அழகான சொல்லாடல் என்பதைத் தவிர மரபுக் கவிதை இலக்கணம் பற்றி யாமறியேன் பராபரமே.. தாலாட்டு எந்த வகைமைக் கவிதையில் இருப்பினும் அருமையே.. 05-Nov-2015 10:08 am
தாய் பாடும் ஆராரோக்கு நிகரில்லை .....பாடல் அருமை அம்மா.... 05-Nov-2015 10:05 am
என்ன சொல்வது தாய்க்கு உலகில் ஏதும் இணை உண்டா? 05-Nov-2015 12:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (113)

தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
நிலாநேசி

நிலாநேசி

தமிழ்நாடு
அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (113)

இவரை பின்தொடர்பவர்கள் (114)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே